Untitled Document
May 16, 2025 [GMT]
கெனிஷாவுடன் உறவா? - நடிகர் ரவி மோகன் வெளியிட்ட அறிக்கை!
[Thursday 2025-05-15 18:00]

நடிகர் ரவி மோகன் - ஆர்த்தி விவாகரத்து வழக்கு நீதி மன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், கெனிஷா என்பவருடன் ரவி மோகன் நெருக்கமாக பழகி வருவதாக கிசுகிசு எழுந்தது. சமீபத்தில் நடந்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மகள் திருமண விழாவில் ரவி மோகன் கெனிஷாவுடன் ஜோடியாக வந்திருந்தார். இதன்பின் இருவரும் காதலித்து வருவது உண்மை தான் என பலரும் உறுதியாகவும் கூறி வருகிறார்கள். இவர்கள் இருவரும் ஜோடியாக வந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன்பின் ஆர்த்தி தனது இன்ஸ்டா பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். பின், தனது மகன்கள் போட்டோவை பதிவிட்டு இருந்தார். இதன்மூலம் அவர் கடும் கோபத்தில் இருப்பது தெளிவாக தெரிந்தது.

நடிகர் ரவி மோகன் - ஆர்த்தி விவாகரத்து வழக்கு நீதி மன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், கெனிஷா என்பவருடன் ரவி மோகன் நெருக்கமாக பழகி வருவதாக கிசுகிசு எழுந்தது. சமீபத்தில் நடந்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மகள் திருமண விழாவில் ரவி மோகன் கெனிஷாவுடன் ஜோடியாக வந்திருந்தார். இதன்பின் இருவரும் காதலித்து வருவது உண்மை தான் என பலரும் உறுதியாகவும் கூறி வருகிறார்கள். இவர்கள் இருவரும் ஜோடியாக வந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன்பின் ஆர்த்தி தனது இன்ஸ்டா பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். பின், தனது மகன்கள் போட்டோவை பதிவிட்டு இருந்தார். இதன்மூலம் அவர் கடும் கோபத்தில் இருப்பது தெளிவாக தெரிந்தது.

  

மேலும் பல சினிமா பிரபலங்களும் ஆர்த்திக்கு ஆதரவு தெரிவித்தனர். இந்த நிலையில், தனது Girl friend-காக மும்பையில் ரூ. 10 கோடி செலவில் புதிய வீடு வாங்கி கொடுத்துள்ளாராம் ரவி மோகன். இந்த தகவலை பிரபல மூத்த பத்திரிகையாளர் அந்தணன் கூறியுள்ளார். தொடர்ந்து இதுபோன்ற சர்ச்சைகள் இணையத்தில் உலா வரும் நிலையில், அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ரவி மோகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதில், "எனது காயங்களை உணராமல் என்னை கேள்விக்குள்ளாக்குவதால், நான் பேசவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியால் எனது வாழ்க்கையை நான் உருவாக்கி இருக்கிறேன். சட்டத்தின் மீது முழு நம்பிக்கை வைத்து சட்ட நடவடிக்கைகளை எடுப்பதில் உறுதியாக இருக்கிறேன்" என குறிப்பிட்டள்ளார்.

மேலும் "இத்தனை ஆண்டுகள் முதுகில் குத்தப்பட்டேன், இப்போது நெஞ்சில் குத்தப்பட்டுள்ளேன்.எனது குழந்தைகளை வைத்து பொதுவான சித்தரிப்பு மூலம், நிதி ஆதாயம் அடைய முயற்சி. எனது குழந்தைகளை பார்க்க முடியாமல், பவுன்சர்கள் மூலம் தடுக்க முயற்சி நடக்கிறது" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன்பின் கெனிஷா குறித்து அந்த அறிக்கையில் ஜெயம் ரவி கூறியிருப்பது,

கெனிஷாவை பொறுத்தவரை, நீரில் மூழ்கும் ஒருவரை காப்பாற்ற தேர்ந்தெடுத்த ஒரு தோழி அவர். என்னை உடைத்து கொண்டிருந்த ஒரு வாழ்க்கையில் இருந்து விலகி செல்ல தைரியம் மட்டுமே இருந்த எனக்கு, அவர் ஒரு உயிர்நாடியாக மாறினார்.

எனது பயணம், வாகனம், ஆவணங்கள், ஏன் எனது அடிப்படை கண்ணியம் கூட பறிக்கப்பட்டு வெறுங்களுடன் என் சொந்த வீட்டை விட்டு வெளியேறிய போதும் கெனிஷா எனக்காக நின்றார். சூழ்நிலையை உணர்ந்து தயங்காமல் வந்த ஒரு அழகான துணை அவர். என் வாழ்க்கையில் ஒளியை கொண்டுவந்தவர்.

நான் சட்ட ரீதியாக, உணர்ச்சி ரீதியாக, நிதி ரீதியாக போராடும் அனைத்து போராட்டங்களையும் கெனிஷா நேரடியாக பார்த்தார். புளுக்காகவோ, கவனத்திற்காகவோ அல்லாமல், இரக்கத்துடன் வலிமையுடன் என்னுடன் இறக்க தீர்மானித்தார். நான் மகிழ்ச்சியாக இருக்க தகுதியானவன் என்பதை எனக்கு நினைவூட்டியதும் அவர் தான்.

உங்கள் வாழ்க்கையிலும் ஒரு ஒளியை காண்பீர்கள் என்று நம்புகிறேன். கெனிஷா எனக்கும் என் பெற்றோருக்கும், என்னை தொடர்ந்து வழிநடத்திய என் குழுவினருக்கும் செய்த காரியம் மிகவும் மரியாதைக்குரியது.

அவரின் நடத்தையையும் தொழிலையும் அவமதிக்கும் ஒரு சிறிய கிண்டலை கூட நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன். அவர் ஒரு தெரபிஸ்ட். அதைவிட அவர் அற்புதமான பாடகி. ஆரம்பத்தில் என் கதையை சுருக்கமாக கேட்ட நிமிடத்தில் இருந்து, எனக்கு ஒரு தோழியாக மட்டும் உதவுவேன் என்றும் தெரபிஸ்ட்டாக உதவ மாட்டேன் என்றும் உறுதியளித்தார். ஏனென்றால் அது சட்டத்திற்கு எதிரானது.

மிரட்டி பணம் புரிபவர்களின் குடும்பத்துடன் துன்பப்பட்டதை என்னைவிட வேறு யாரும் அதிகமாக புரிந்துகொள்ள முடியாது. கெனிஷா உடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு நியாயமே இல்லாதவாறு குற்றம் சாட்டப்படுகிறார்கள் என்பதை நான் புரிந்துகொள்கிறேன். ஆனால், எனக்கு உண்மை தெரியும்.

என்னை அறிந்தவர்கள் என் உணர்வு தெரியும். என்னை நீங்கள் மதிக்கிறீர்கள் என்றால், கெனிஷாவிற்கும் அதையே செய்வீர்கள் என நம்புகிறேன். என் வாழ்க்கையை யாரும் அழிக்க முடியாது. நான் என்ன செய்கிறேன் என்று எனக்கு தெரியுமா" என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

  
   Bookmark and Share Seithy.com



8 மாதத்தில் இத்தனை கிலோ எடை குறைத்தாரா அஜித்?
[Friday 2025-05-16 19:00]

நடிகர் அஜித் தற்போது படங்களில் நடிப்பதில் இருந்து பிரேக் எடுத்துக்கொண்டு கார் ரேஸில் மட்டும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் அவர் நடித்த குட் பேட் அக்லீ படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதற்கு பிறகு அஜித் எந்த படமும் அறிவிக்காமல் இருக்கிறார். இந்த வருடத்தின் இறுதியில் தான் அவர் மீண்டும் படங்கள் நடிக்க தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.



ரசிகர்கள் குறித்து சூரி ஆதங்கம்!
[Friday 2025-05-16 19:00]

நகைச்சுவை நடிகராக பிரபலமாகி, இன்று கதாநாயகனாக ஜொலித்து கொண்டு இருக்கிறார் சூரி. இவர் நடிப்பில் இன்று வெளிவந்த திரைப்படம் மாமன். எமோஷ்னல் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தை பிரஷாந்த் பாண்டிராஜ் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன் விலங்கு என்ற சூப்பர்ஹிட் வெப் சீரிஸ் இயக்கியிருந்தார்.



"என்னுடைது காதல் திருமணமாக இருக்கும்" - முதன்முறையாக கூறிய விஷால்!
[Friday 2025-05-16 19:00]

நடிகர் விஷால், தமிழ் சினிமாவில் நுழைந்து சில ஹிட் படங்கள் கொடுத்தவர். இவர் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் மயங்கி விழுந்த விஷயம் அனைவருக்குமே பதற்றத்தை ஏற்படுத்தியது, இப்போது நலமாக உள்ளார். அண்மையில் நடிகர் விஷால் நடிகர் சங்க கட்டடம், திருமணம் குறித்து ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.



திடீரென விஜய் டிவி அறிவித்த மாற்றம்!
[Friday 2025-05-16 06:00]

சன் டிவி சீரியல்களின் ராஜா என்றால் விஜய் டிவி ரியாலிட்டி ஷோக்களின் ராணி. விஜய் டிவி மக்களிடம் மிகவும் பிரபலம் ஆனதே ரியாலிட்டி ஷோக்கள் மூலம் தான் என்று சொன்னால் யாரும் மறுக்க மாட்டார்கள். விளையாட்டு, பாடல், நடனம் என எல்லா வகையான ஷோக்களும் இடம்பெற்றன.



"அவரை வைத்து ரமணா 2 படம் எடுக்க ஆசை" - ஏ.ஆர்.முருகதாஸ் பேச்சு!
[Friday 2025-05-16 06:00]

கேப்டன் விஜயகாந்த், தமிழ் சினிமா என்றும் மறக்க முடியாத நடிகர். படத்தில் நடிக்கும் போதே தன்னுடைய நாட்டுப்பற்று, எல்லோருக்கும் மனதார உதவி செய்வது போன்ற விஷயங்களை அதிகம் காட்டினார். இவரது மகனான சண்முக பாண்டியன் அவரது அப்பாவை போல சினிமாவில் களமிறங்கியுள்ளார். அன்பு இயக்கத்தில் சண்முக பாண்டியன் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் படைத்தலைவன். இசைஞானி இளையராஜா இசையில் உருவாகியுள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மே 15, அதாவது இன்று சென்னையில் நடந்தது.



"பல வருடங்களுக்கு பின் எனக்கு அது கிடைத்துள்ளது" - நடிகர் சசிகுமார் நெகிழ்ச்சி!
[Thursday 2025-05-15 18:00]

திரையுலகில் இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்டவர் சசிகுமார். பாலாவிடம் துணை இயக்குநராக பணிபுரிந்து பின் சுப்ரமணியபுரம் என்ற படத்தை இயக்கியும், நடித்தும் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தின் வெற்றிக்கு பின் நாடோடிகள், போராளி, சுந்தரபாண்டியன், குட்டிப்புலி, பிரம்மன், உடன்பிறப்பே, எம்ஜிஆர் மகன், அயோத்தி போன்ற பல படங்களில் நடித்துள்ளார். சில தினங்களுக்கு முன் டூரிஸ்ட் ஃபேமிலி என்ற படத்திலும் நடித்திருந்தார்.



45 வயது நடிகருக்கு ஜோடியாக நடிக்க அதிக சம்பளம் வாங்கும் தீபிகா படுகோன்!
[Thursday 2025-05-15 18:00]

பாலிவுட் திரையுலகிம் மூலம் பிரபலமாகி இன்று உலகளவில் புகழ் பெற்ற நடிகைகளில் ஒருவராக தீபிகா படுகோன் இருக்கிறார். ஆனால், இவர் முதன் முதலில் அறிமுகமானது கன்னடத்தில் வெளிவந்த ஐஸ்வர்யா என்கிற படத்தின் மூலம் தான் என்பது பலருக்கும் தெரிந்திருக்காது. இதன்பின், ஓம் ஷாந்தி ஓம் படத்தின் மூலம் ஹிந்தியில் அறிமுகமானார். தொடர்ந்து பாலிவுட்டில் கலக்கிய தீபிகா படுகோன் முன்னணி நடிகை எனும் அந்தஸ்தை பெற்றார். இவர் நடிப்பில் கடைசியாக கலக்கி திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.



கெனிஷாவுக்கு வீடு வாங்கி கொடுத்தாரா ரவி மோகன்?
[Thursday 2025-05-15 06:00]

நடிகர் ரவி மோகன் மற்றும் ஆர்த்தி இருவரும் பிரிந்து இருக்கும் நிலையில் நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு நடைபெற்று வருகிறது. சமீபத்தில் நடந்த வேல்ஸ் ஐசரி கணேஷ் மகள் திருமண நிகழ்ச்சிக்கு ரவி மோகன் அவரது புது கேர்ள் பிரெண்ட் கெனிஷா உடன் கைகோர்த்து வந்திருந்தார். அவர்கள் ஜோடியாக வந்தது சர்ச்சையாகி சமூக வலைத்தளங்களில் ரவி மோகன் மற்றும் கெனிஷா இருவர் மீதும் பல விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கிறது.



கோவிந்தா பாடல்: சந்தானத்திடம் 100 கோடி நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ்!
[Thursday 2025-05-15 06:00]

நடிகர் சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் படம் நாளை மறுநாள் ரிலீஸ் ஆகிறது. அந்த படத்தில் கவுதம் மேனன், செல்வராகவன், யாஷிகா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்து இருக்கின்றனர். இந்த படத்தை நடிகர் ஆர்யா தான் தயாரித்து இருக்கிறார். இந்த படத்தில் வரும் கிஸ்ஸா பாடலில் திருமலை திருப்பதியின் 'ஸ்ரீனிவாச கோவிந்தா' பாடல் வரிகள் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.



குட் பேட் அக்லி பட வாய்ப்பை தவறவிட்ட பிரபல நடிகர்!
[Wednesday 2025-05-14 18:00]

நடிகர் அஜித் - இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் குட் பேட் அக்லி. இப்படத்தை மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரித்திருந்தனர். த்ரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரசன்னா, பிரியா வாரியர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர். பெரிதும் எதிர்பார்ப்புடன் வெளிவந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.



மீண்டும் இணையும் விஜய் சேதுபதி நித்திலன்!
[Wednesday 2025-05-14 18:00]

கடந்த ஆண்டு தமிழில் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்த திரைப்படம் மகாராஜா. உலகளவில் இப்படத்திற்கு கவனம் கிடைத்தது. உலகளவில் ரூ. 200 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்திருந்த இப்படத்தை இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கியிருந்தார்.



ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த "7ஜி ரெயின்போ காலனி 2"!
[Wednesday 2025-05-14 18:00]

காவிய அந்தஸ்தைப் பெற்ற காதல் படங்களில் ஒன்றாக 7ஜி ரெயின்போ காலணி படம் இப்போதும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. கடந்த 2004ம் ஆண்டு வெளியான இப்படத்தை செல்வராகவன் இயக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். தமிழ் மற்றும் தெலுங்கில் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்திய இப்படம் விமர்சகர்கள் அனைவராலும் பாராட்டப்பட்டது. ஒரு தலை காதல், காதலின் பிரிபு, பிரிவின் வலி என அழுத்தமான திரைக்கதையோடு படத்தை எடுத்திருந்தார் செல்வராகவன்.



விஷால் உடல் இப்படி ஆக குடிபோதை தான் காரணமா?
[Wednesday 2025-05-14 06:00]

நடிகர் விஷால் மதகஜராஜா பட ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்கு வந்தபோது மேடையில் நடுக்கத்துடன் இருந்தது பரபரப்பாக பேசப்பட்டது. அவருக்கு வைரல் fever இருந்தது தான் அந்த நடுக்கத்துக்கு காரணம் என விளக்கம் கொடுத்தனர். இதை தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு விஷால் கூவாகம் கூத்தாண்டவர் திருவிழாவை முன்னிட்டு நடந்தபப்பட்ட திருநங்கை அழகி போட்டியில் விருந்தினராக கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சிகள் அவர் திடீரென மயங்கி விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் சாப்பிடாமல் இருந்தது தான் மயக்கத்திற்கு காரணம் என அவர் தரப்பு விளக்கம் கொடுத்தனர்.



சம்பளத்தை உயர்த்த போகிறேனா? - சசிகுமார் சொன்ன பதில்!
[Wednesday 2025-05-14 06:00]

நடிகர் சசிக்குமார், சிம்ரன் உள்ளிட்டோர் நடித்து இருந்த டூரிஸ்ட் பேமிலி படம் சமீபத்தில் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்த படம் ஹிட் ஆகி இருக்கும் நிலையில் வெற்றி விழா இன்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சசிக்குமார் "இந்த படம் முதல் நாளில் 2.5 கோடி ரூபாய் வசூலித்தது, என் முந்தைய படம் ஒன்று மொத்தமாகவே 2.5 கோடி தான் வசூலித்து இருந்தது என்பதை தெரிந்துகொண்டேன்" என கூறி இருக்கிறார்.



பிரபாஸ் உடன் நடிக்க தீபிகா படுகோன் வாங்கும் சம்பளம்!
[Tuesday 2025-05-13 18:00]

நடிகை தீபிகா படுகோன் இந்தியா மட்டுமின்றி உலக அளவில் பிரபலமான நடிகை. அவர் ஹாலிவுட் படங்களிலும் நடித்து இருக்கிறார். அவர் பிரபாஸ் உடன் கல்கி 2898 AD படத்தில் நடித்து இருந்தார். அதை தொடர்ந்து இரண்டாவது முறையாக ஸ்பிரிட் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.



ராஷ்மிகாவின் அடுத்த படம் இவருடனா?
[Tuesday 2025-05-13 18:00]

நடிகை ராஷ்மிகா தான் தற்போது இந்திய சினிமாவில் மோஸ்ட் வான்டட் ஹீரோயின். அவர் நடிக்கும் படங்கள் தொடர்ந்து 1000 கோடிகளுக்கு மேல் வசூலித்து சாதனை படைத்து வருகின்றன. அடுத்து அவர் தனுஷின் குபேரா, Thama, The Girlfriend போன்ற படங்களில் நடித்து வருகிறார்.



கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தின் சாட்டிலைட் உரிமம் இத்தனை கோடியா?
[Tuesday 2025-05-13 18:00]

தமிழ் சினிமாவில் 36 வருடங்களுக்கு பிறகு கமல்ஹாசன்-மணிரத்னம் கூட்டணியில் தயாராகியுள்ள படம் தக் லைஃப். இதில் கமல்ஹாசனுடன், சிம்பு, த்ரிஷா, ஜோஜு ஜாஜ், ஐஸ்வர்யா லட்சுமி, கவுதம் கார்த்திக் பாலிவுட் நடிகரான அலிபசல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.



வீட்டில் விருந்து வைக்கும் நடிகர் விஜய்!
[Tuesday 2025-05-13 06:00]

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவர். அவர் உச்சத்தில் இருக்கும் நேரத்திலேயே அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்து தற்போது அதிலும் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது நடித்து வரும் ஜனநாயகன் படத்திற்கு பிறகு அவர் நடிக்க மாட்டேன் என்றும் அறிவித்துவிட்டார்.



அட்லீ - அல்லு அர்ஜுன் படம் பற்றி வந்த முக்கிய தகவல்!
[Tuesday 2025-05-13 06:00]

இயக்குனர் அட்லீ ஜவான் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் உடன் கூட்டணி சேர்ந்து இருக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சுமார் 600 கோடி பட்ஜெட்டில் இந்த் படம் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் அறிவுப்பு வீடியோவிலேயே அட்லீ - அல்லு அர்ஜுன் இருவரும் அமெரிக்க VFX ஸ்டூடியோக்களுக்கு சென்று இருப்பதும் காட்டப்பட்டு இருந்தது. அதனால் ஹாலிவுட் தரத்திற்கு இந்த படம் பிரம்மாண்டமாக அட்லீ எடுக்கப்போகிறார் என எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.



ஷாருக்கானுக்கு நோ சொன்ன நயன்தாரா!
[Monday 2025-05-12 18:00]

நடிகை நயன்தாரா இந்திய சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த டெஸ்ட் திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு மக்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை. அடுத்ததாக மண்ணாங்கட்டி, ராக்காயி, டியர் ஸ்டுடென்ட்ஸ், டாக்சிக் என பல திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். அட்லீ இயக்கிய ஜவான் திரைப்படத்தின் மூலமாக தான் நயன்தாரா பாலிவுட் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார்.


Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
Latika-Gold-House-2025
Karan Remax-2010
Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா