Untitled Document
September 19, 2024 [GMT]
ஒரே ஒரு வதந்தியால் வெறிச்சோடிய நகரம்!
[Saturday 2022-08-13 16:00]

ஒரு வதந்தியை நம்பி நகரத்தையே விட்டு மக்கள் வெளியேறிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சுற்றுலா வாசிகளின் விருப்பமான இடத்தில் ஒன்று ஐரோப்பா. இவை இதமான காலநிலை, பழங்கால கட்டிடங்கள், எழில்கொஞ்சும் கடற்கரைகள் என உலக சுற்றுலா பயணிகளை பெருமளவில் ஈர்த்துவருகின்றன. இங்கே வரும் பயணிகளை திகைப்பில் ஆழ்த்தக்கூடியவை இங்குள்ள கைவிடப்பட்ட நகரங்கள். இப்படி ஐரோப்பா முழுவதும் பல நகரங்கள் இருக்கின்றன.

ஒரு வதந்தியை நம்பி நகரத்தையே விட்டு மக்கள் வெளியேறிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சுற்றுலா வாசிகளின் விருப்பமான இடத்தில் ஒன்று ஐரோப்பா. இவை இதமான காலநிலை, பழங்கால கட்டிடங்கள், எழில்கொஞ்சும் கடற்கரைகள் என உலக சுற்றுலா பயணிகளை பெருமளவில் ஈர்த்துவருகின்றன. இங்கே வரும் பயணிகளை திகைப்பில் ஆழ்த்தக்கூடியவை இங்குள்ள கைவிடப்பட்ட நகரங்கள். இப்படி ஐரோப்பா முழுவதும் பல நகரங்கள் இருக்கின்றன.

  

அதற்கு பின்னால் பல சுவாரஸ்ய கதைகளும் உள்ளது. அந்த வகையில், ஸ்பெயினில் உள்ள ஒரு நகரம் ஒரு வதந்தியால் மக்கள் நகரத்தை விட்டு வெளியேறியுள்ளனர்.

ஸ்பெயின் நாட்டின் மத்திய மேற்கு பகுதியில், அமைந்துள்ள கிரானடில்லா நகரத்தை 9ம் நூற்றாண்டில் முஸ்லிம்கள் இந்த நகரத்தை கண்டுபிடித்திருக்கிறார்கள்.

இங்கே வசிக்க துவங்கிய அவர்கள் வேளாண்மையில் ஈடுபட மெல்ல மெல்ல குடியேற்றங்களும் அதிகரித்திருக்கின்றன. இதன் பின் அடுத்த சில அண்டுகளில், நகரம் மக்களிடையே பிரபலமானதாக மாறியிருக்கிறது.

அதனை சுற்றி 17 நகரங்களும் உருவாகியிருக்கின்றன. ஆனால் காலங்கள் செல்ல செல்ல மக்கள் வெவ்வேறு இடங்களுக்கு இடம்பெயர ஆரம்பித்துள்ளனர். 1950 களில் இந்த பகுதியில் வசித்த மக்களின் எண்ணிக்கை சில ஆயிரம் தான்.

ஆனால், அடுத்த 17 வருடங்களுக்கு உள்ளாக அங்கிருந்த மக்கள் அனைவரும் முழுவதுமாக வெளியேறிவிட்டனர். இதற்கு காரணமே ஸ்பெயினை அப்போது ஆண்டு வந்த பிரான்சிஸ்கோ பிராங்கோ (Fransisco Franco) என்னும் சர்வாதிகாரிதான்.

மேலும், பிரான்ஸிஸ்கோ அப்பகுதியில் கேப்ரியல் ஒய் காலன் எனும் நீர்த்தேக்கத்தை கட்டினார். அதன் நீர்ப்பிடிப்பு பகுதிக்குள் இந்த நகரம் இருந்ததால் இங்கே இருக்கும் மக்களை வெளியேறுமாறு அரசு உத்தரவிட்டிருக்கிறது.

தொடர்ந்து, காலங் காலமாக வாழ்ந்து வந்த மக்கள் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்திருக்கிறார்கள். ஆனால், நீர்த்தேக்கம் கட்டப்பட்டுவிட்டால் மொத்த நகரமும் நீருக்குள் மூழ்கிப்போகும் என்பதால் மக்கள் அனைவரும் அப்பகுதியை காலி செய்திருக்கிறார்கள்.

அதன்பின் மனிதர்களே இல்லாத நகரமாக மாறியிருக்கிறது கிரானடில்லா. ஆனால் அரசு எச்சரித்ததுபோல் இந்நகரம் மூழ்கவில்லை. ஏனென்றால் அணை அமைந்திருந்த இடத்தை காட்டிலும் இந்த பகுதி மேடாக இருந்ததால் இந்த நகரம் பாதுகாப்பாகவே இருந்திருக்கிறது.

கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் இப்படியே இருந்திருக்கிறது. இன்றும் இந்த நகரத்தில் யாரும் வசிக்கவில்லை. சுற்றுலாவாசிகள் இந்த நகரத்துக்கு செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

  
   Bookmark and Share Seithy.com



கின்னஸில் இடம்பிடித்த உலகின் விலை உயர்ந்த உள்ளாடை!
[Saturday 2024-09-14 18:00]

உலகின் விலை உயர்ந்த உள்ளாடை என விக்டோரியாவின் சீக்ரெட் ஃபேண்டஸி ப்ரா கின்னஸில் இடம்பிடித்துள்ளது. உள்ளாடையின் மதிப்பு $15 மில்லியன் . இதில், 1,300 காரட் வைரம் மற்றும் மாணிக்கங்கள் பொறிக்கப்பட்டிருந்தன. இதுவரை தயாரிக்கப்பட்ட மிக விலையுயர்ந்த உள்ளாடைகளுக்கான கின்னஸ் புத்தகத்தில் இந்த ப்ரா இடம்பிடித்தது.



கடவுளுக்கு தண்டனை கொடுக்கும் வினோத மாநிலம்!
[Tuesday 2024-09-10 18:00]

மக்களின் வேண்டுதல்களை நிறைவேற்றாத கடவுள்களுக்கு இந்திய மாநிலம் ஒன்றில் தண்டனை வழங்கப்படுகிறது. பொதுவாகவே மனிதர்கள், தான் நினைத்தது ஏதாவது நடக்கவில்லை என்றாலோ, ஏதாவது ஒரு தேவை இருக்கிறது என்றாலோ, கஷ்ட காலம் ஏற்படும் போதெல்லாம் கடவுளிடம் தான் குறைகளை சொல்வார்கள். அதில் சில விடயங்கள் நடப்பதுண்டு, சில விடயங்கள் நடக்காமல் போகலாம். ஆனால், சத்தீஸ்கர் மாநிலத்தில் வேண்டுதல்களை நிறைவேற்றாவிட்டால் கடவுளுக்கு தண்டனை வழங்கும் வினோதமான பழக்கங்கள் பின்பற்றப்பட்டு வருகிறது.



சூரியனை விட 500 ட்ரில்லியன் மடங்கு பிரகாசமான் பொருள் கண்டுபிடிப்பு!
[Wednesday 2024-08-28 18:00]

பிரபஞ்சத்தில் சூரியனை விட 500 ட்ரில்லியன் மடங்கு பிரகாசமான ஒளிரும் பொருளை வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். சூரியனை விட 500 ட்ரில்லியன் மடங்கு பிரகாசமுடைய இந்த குவாசருக்கு J0529-4351 என்று பெயரிடப்பட்டுள்ளது. இதுவரை எங்கும் கண்டிராத அளவுக்கு இது மிகவும் பிரகாசமான உள்ளதாகவும் வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர். ஐரோப்பிய தெற்கு ஆய்வகத்தின் VLT எனப்படும் மிகப்பெரிய தொலை நோக்கி மூலம் இதை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.



பிறப்புறுப்பு உட்பட உடல் முழுவதும் டாட்டூ: கின்னஸ் சாதனை படைத்த பெண்!
[Saturday 2024-08-24 06:00]

அமெரிக்க பெண் ஒருவர் அதிக எண்ணிக்கையில் பச்சை (Tattoo) குத்தி கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். அவரது உடலில் 99.98 சதவீதம் அவரது பச்சை குத்தல்களால் நிரம்பியுள்ளது. கைகள் மற்றும் கால்கள், உச்சந்தலை, நாக்கு, ஈறுகள், கண் இமைகளின் வெள்ளை வெளிப்புற அடுக்கு மற்றும் பிறப்புறுப்புகள் உட்பட உடலின் எந்த பாகத்தையும் அவர் விட்டுவைக்கவில்லை.



பிரித்தானியாவில் 17 ஆண்களை தாக்கிய பேய் பிடித்த மணப்பெண் பொம்மை!
[Friday 2024-08-23 06:00]

உலகின் பயங்கரமான பொம்மை இங்கிலாந்தின் தெற்கு யார்க்ஷயரில் உள்ள ரோதர்ஹாமில் உள்ளது. பேய் பிடித்த இந்த பொம்மை இதுவரை 17 பேரை தாக்கியுள்ளதாக நியூயார்க் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. கணவரால் ஏமாற்றப்பட்ட எலிசபெத் என்ற மணமகளின் ஆவி இந்த பொம்மை இருப்பதாக நம்பப்படுகிறது. இந்த காரணத்திற்காக, இது மணப்பெண் பொம்மை (Bridal Doll) என்றும் அழைக்கப்படுகிறது.



கத்தரிக்கோல் காணாமல் போனதால் 36 விமானங்கள் இரத்து!
[Tuesday 2024-08-20 18:00]

ஜப்பான் விமான நிலையத்தில் கத்தரிக்கோல் ஒன்று ்காணாமல் போனதால் 36 விமானங்கள் பயணத்தை இரத்து செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கடந்த சனிக்கிழமை (17) ஜப்பானில் கொக்கைடோவின் நியூ சிட்டோஸ் விமான நிலையத்தின் உள் நுழையும் வாயிலின் அருகே இருந்த கடையொன்றில் கத்தரிக்கோல் காணாமல் போனதால் 36 விமானங்கள் இரத்து செய்யப்பட்டதோடு, 201 விமான சேவைகள் தாமதமடைந்துள்ளன.



கிணறு ஏன் வட்ட வடிவில் இருக்கிறது? பின்னணியில் இருக்கும் ஆச்சரிய காரணம்!
[Sunday 2024-08-18 16:00]

கிணறுகள் வட்ட வடிவில் ஏன் இருக்கிறது என்பதையும், அதற்கு பின்னணியில் இருக்கும் காரணத்தையும் இந்த பதிவில் பார்க்கலாம். பண்டைய காலங்களில் இருந்து கிணறுகளில் தண்ணீர் சேமிக்கப்பட்டு வருகிறது. கிராமங்களில் இன்றும் கிணறுகள் இருந்து வருகிறது. நகரங்களிலும் சில இடங்களில் நாம் கிணறுகளை பார்க்க முடியும்.



"வெறித்தனமாக காதலிக்கிறேன்" - மருமகளை திருமணம் செய்து கொண்ட மாமியார்!
[Wednesday 2024-08-14 18:00]

கணவரை விட்டு பிரிந்து தனது மருமகளை மாமியார் ஒருவர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் பேசுபொருளாகியுள்ளது. இந்திய மாநிலமான பீகார், கோபால் கஞ்ச் மாவட்டத்தில் உள்ள பெல்வா கிராமத்தைச் சேர்ந்தவர் சுமன். இவருடைய சொந்த மருமகள் ஷோபா. இவருக்கு கடந்த 3 ஆண்டுகளாக மருமகள் மீது காதல் ஏற்பட்டுள்ளது.



18 ஆண்டுகளின் பின்னர் வானில் நடக்கவிருக்கும் சனிசந்திர கிரகணம் எப்போது தெரியுமா?
[Monday 2024-08-12 19:00]

சந்திர கிரகணம் என்பது பூமி சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் வரும்போது, பூமியின் காரணமாக சூரியனின் ஒளி சந்திரனை அடைய முடியாது. இதன் காரணமாக பூமியின் நிழல் நிலவின் மீது விழுகிறது. இந்த வானியல் நிகழ்வு சந்திர கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. இந்து நாட்காட்டியின்படி, ஒவ்வொரு மாதமும் சுக்கில பக்ஷத்தின் கடைசி தேதியில் முழு நிலவு ஏற்படுகிறது. ஆனால் சனி சந்திர கிரகணம் என்பது முற்றிலும் வேறுபட்டது. இது எவ்வாறு நிகழும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.



ஏலியனுக்கு கோயில் கட்டி கும்பிடும் பக்தர்!
[Friday 2024-08-02 16:00]

குஷ்பு, ரஜினி உள்ளிட்டவர்களுக்கு ரசிகர்கள் கோயில் கட்டிய நிலையில், பக்தர் ஒருவர் ஏலியனுக்கு கோயில் கட்டி கும்பிட்டு வருகிறார். தமிழக மாவட்டமான சேலம், மல்லமூப்பம்பட்டியை அடுத்த ராமகவுண்டனூரைச் சேர்ந்தவர் லோகநாதன். இவர், வேற்றுகிரகவாசிகள் என்று கூறப்படும் ஏலியனுக்கு கோயில் அமைத்து வழிபாடு செய்து வருகிறார்.



திருமணம் ஆகாமல் 100 குழந்தைகளுக்கு தந்தையான பிரபலம்!
[Wednesday 2024-07-31 18:00]

நூற்றுக்கும் மேற்பட்ட தம்பதிகள் குழந்தை பெற எனது விந்தணுக்களை தானம் செய்து உதவியுள்ளேன் என திருமணமாகாத டெலிகிராம் நிறுவனத்தின் இணை நிறுவனர் பாவெல் துரோவ் (Pavel Durov) தெரிவித்துள்ளமை பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல சமூக வலைதளமான டெலிகிராம் நிறுவனத்தின் இணை நிறுவனர் பாவெல் துரோவ் (Pavel Durov) அதன் தலைமை அதிகாரியாகவும் உள்ளார்.



கனடா-கிரீன்லாந்து இடையே வெளியுலகுக்கு தெரியாத சிறிய கண்டம்!
[Sunday 2024-07-21 17:00]

கனடாவுக்கும் கிரீன்லாந்துக்கும் இடையே வெளியுலகுக்கு தெரியாத சிறிய கண்டம் இருப்பதாக புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. 'டேவிஸ் ஜலசந்தி'யின் (Davis Strait) கீழ் இந்த 'மைக்ரோ கண்டத்தை' ஆராய்ச்சியாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர். இது முதன்முறையாக உப்சாலா பல்கலைக்கழகம் (Sweden) மற்றும் டெர்பி பல்கலைக்கழகம் (UK) ஆகியவற்றின் புவியியலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.



44.6 மில்லியன் டொலருக்கு ஏலம் போன டைனோசர் எலும்புக்கூடு!
[Saturday 2024-07-20 19:00]

டைனோசர் எலும்பு கூட்டை 44.6 மில்லியன் டொலருக்கு வாங்கிய பில்லியனரின் பெயர் தற்போது தெரியவந்துள்ளது. 44.6 மில்லியன் டொலருக்கு வாங்கப்பட்ட இந்த stegosaurus டைனோசரின் எலும்புக்கூடு சுமார் 150 மில்லியன் ஆண்டுகள் பழமையானது என்று கருதப்படுகிறது. Apex என்ற பொருத்தமான பெயருக்கு ஏற்றவாறு கிட்டத்தட்ட 11 அடி (3.3 மீட்டர்) உயரம், 27 அடி (8.2 மீட்டர்) நீளமும் கொண்ட கிட்டத்தட்ட முழுமையான டைனோசர் எலும்பு கூடு இதுவாகும்.



கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த பர்கர்!
[Thursday 2024-07-11 17:00]

பிரபல சமையல் நிபுணரும், டி டால்டன்ஸ் என்ற உணவகத்தின் உரிமையாளருமான ராபர்ட் ஜான் டி வென் என்பவர் வித்தியாசமான பர்கரை உருவாக்கி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். அவர் உருவாக்கிய பர்கரின் விலை 5 ஆயிரம் யுரோக்கள் (இந்திய மதிப்பில் ரூ.4.5 லட்சம்) என தெரிவிக்கப்பட்டுள்ளது.



உலகில் முதன் முறையாக ரோபோ ஒன்று தற்கொலை!
[Wednesday 2024-07-03 18:00]

தென் கொரியாவில் அரச சேவையில் ஈடுபட்டிருந்த ரோபோ ஒன்று தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தென் கொரியாவில் உள்ள குமி நகர சபையில் சுமார் ஒரு வருடமாக பணியாற்றி வந்த ரோபோவே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



உயிருள்ள மனித தோலுடன் புன்னகைக்கும் ரோபோ: ஜப்பானிய விஞ்ஞானிகள் அசத்தல்!
[Friday 2024-06-28 06:00]

உயிருள்ள மனித தோல் செல்களிலிருந்து புன்னகைக்கும் ரோபோ முகத்தை ஜப்பானிய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். ஜப்பானிய விஞ்ஞானிகள் மனித தோல் செல்களைப் பயன்படுத்தி, ஓர் ஹ்யூமனாய்ட் ரோபோவுக்கு இயற்கையான புன்னகையை வழங்கும் முகத்தைக் உருவாக்கியுள்ளனர். இது மனிதர்களுடனான ரோபோக்களின் தொடர்பு திறனை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



மலேசியாவில் பேய் திருமணம்!
[Friday 2024-06-21 06:00]

மலேசியாவில் திருமண பந்தத்தில் இணைய தயாராக இருந்த நிலையில், கார் விபத்தில் சிக்கி உயிரிழந்த காதல் ஜோடிக்கு அவர்களது பெற்றோர் பேய் திருமணம் செய்து வைத்துள்ளனர். ஜிங்ஷன் என்ற இளைஞன், லீ என்ற பெண்ணை காதலித்து வந்தார். ஜூன் 2 ஆம் திகதி இருவருக்கும் திருமணம் நடைபெற இருந்தது.



இந்தியாவின் விலை உயர்ந்த திருமணம் எது தெரியுமா?
[Wednesday 2024-06-19 06:00]

பிராமணி மற்றும் ராஜீவ் ரெட்டியின் திருமணம் இந்தியாவின் மிக விலை உயர்ந்த திருமணமாக உள்ளது. திருமணங்கள் வாழ்க்கையில் மிக முக்கியமான நிகழ்வுகள் என்பது அனைவருக்கும் தெரியும். தங்கள் திருமணத்தை மறக்க முடியாததாக மாற்ற, பலர் தங்கள் சிறந்த முயற்சிகளை செய்கிறார்கள். பணக்காரர்கள் மற்றும் கோடீஸ்வரர்கள் தங்களின் செல்வத்தை தாராளமாக செலவிட்டு, மிகவும் பிரமாண்டமான திருமணங்களை நடத்துகிறார்கள்.



கனடாவில் உருவாகும் உலகின் மிகப்பெரிய ஐஸ் குச்சி!
[Tuesday 2024-06-11 18:00]

கனடாவில் அல்பர்ட் டா மாகாணத்தில் உலகின் மிகப்பெரிய ஐஸ் குச்சியை உருவாக்கும் சாதனை முயற்சி முன்னெடுக்கப்பட்டு வருகிறது. உலகில் மிகவும் உயரம் கூடிய ஐஸ் குச்சியை உருவாக்குவதற்கு தென் அல்பர்ட்டாவின் ஹட்டரைட் மக்கள் முயற்சி எடுத்து வருகின்றனர். மியாமி ஹட்ரைட் பாடசாலையின் மாணவர்கள் இந்த மிகப்பெரிய ஐஸ் குச்சி வடிவமைப்பில் ஈடுபட்டுள்ளனர்.



பெண்ணின் வயிற்றில் சுரக்கும் மதுபானம்: ஆச்சர்யத்தில் மருத்துவர்கள்!
[Wednesday 2024-06-05 18:00]

கற்பனை செய்து பாருங்கள், ஒரு துளி மது கூட அருந்தாமல் போதையை உணர்வது என்பதை! இதுதான் கனடாவின் Toronto-வை சேர்ந்த 50 வயது பெண்ணுக்கு சமீபத்தில் கண்டறியப்பட்ட அரிய நோயின் விசித்திரமான யதார்த்தம். இந்த அரிய வகை நோயில் (Auto-Brewery Syndrome), குடல் நுண்ணுயிரிகள் கார்போஹைட்ரேட்டுகளை மதுவாக மாற்றுகின்றன.


NKS-Ketha-04-11-2021
Airlinktravel-2020-01-01
Vaheesan-Remax-2016
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Rajeef sebarasha 2023/04/19
Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Asayan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா