Untitled Document
September 19, 2024 [GMT]
அரசியலமைப்புத் திருத்தம் - மக்களின் கருத்தறிய 24 பேர் கொண்ட குழு நியமனம்!
[Tuesday 2015-12-29 08:00]

அரசியலமைப்பு மறுசீரமைப்பிற்காக மக்கள் கருத்தறிவதற்காக 24 பேரடங்கிய குழுவொன்றை அரசாங்கம் நியமித்துள்ளது. இதில் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூகத்தை பிரதிநிதிகள் உள்ளடங்குவதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்தது. அரசியலமைப்பை திருத்தி புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அரசியலமைப்பு மறுசீரமைப்பிற்காக மக்கள் கருத்தறிவதற்காக 24 பேரடங்கிய குழுவொன்றை அரசாங்கம் நியமித்துள்ளது. இதில் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூகத்தை பிரதிநிதிகள் உள்ளடங்குவதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்தது. அரசியலமைப்பை திருத்தி புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

  

இதற்காக பாராளுமன்றம் அரசியலமைப்பு சபையாக மாற்றப்பட இருப்பதோடு இது தொடர்பில் விசேட பாராளுமன்ற அமர்வு எதிர்வரும் 9 ஆம் திகதி நடைபெறுகிறது. அன்றைய தினம் பாராளுமன்றத்தை அரசியமைப்பு சபையாக மாற்றும் பிரேரணையை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன சமர்ப்பிப்பார். மக்களின் கருத்துக்களையும் உள்வாங்கியே அரசாங்கம் புதிய அரசியலமைப்பை தயாரிக்க இருப்பதோடு இதற்காக 24 பேரடங்கிய குழுவொன்றை நியமிக்க பிரதமர் ரணில் விக்ரமசிங்க அமைச்சரவை பத்திரமொன்றை சமர்ப்பித்திருந்தார். இதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியது.

இந்த குழு நாடுபூராவும் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வாய்மூலமும் எழுத்து மூலமும் மக்களின் கருத்துக்களை பெறும்.இவ்வாறு திரட்டப்படும் தகவல்களின் அடிப்படையில் மேற்படி குழு அறிக்கையொன்றை தயாரித்து அரசியலமைப்பு புனரமைப்பு தொடர்பான அமைச்சரவை உபகுழுவுக்கு வழங்க இருப்பதாகவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்தது. அரசியலமைப்பு திருத்தத்திற்காக பிரதமர் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இதே வேளை 24 பேரடங்கிய குழுவின் தலைவராக சட்டத்தரணி லால் விஜேநாயக்க நியமிக்கப்பட்டுள்ளதோடு ஏனைய உறுப்பினர்களாக ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா, பேராசிரியர் காமினி சமரநாயக்க,பேராசிரியர் ஏ.எம்.நவரத்ன பண்டார, பேராசிரியர் எல்.ஏ.காதர், என்.செல்வகுமாரன், எஸ்.தவராஜா, ஜனாதிபதி சட்டத்தரணி குசான் த அல்விஸ்,கலாநிதி ஹரினி அமரசூரிய, கலாநிதி குமுது குமாரி, சட்டத்தரணி சுனில் ஜயரத்ன, கலாநிதி உபுல் அபேரத்ன, தேமிய ஹுருள்ளே, வின்சண்ட் பதிராஜ,கலாநிதி எஸ்.விஜயந்திரன்,சட்டத்தரணி எம்.வை.எம்.பாயிஸ்,நதீகா தமயந்தி, சட்டத்தரணி காந்தி ரணசிங்க, எஸ்.சீ,சீ.இலங்கோவன் மற்றும் சிரிமசிரி ஹபுஆரச்சி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

  
   Bookmark and Share Seithy.com



திலீபன் நினைவேந்தலுக்கு தடைவிதிக்க நீதிமன்றம் மறுப்பு!
[Thursday 2024-09-19 17:00]

நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் அஞ்சலி நிகழ்வை நடத்த அனுமதிக்க கூடாது என பொலிஸார் விடுத்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.



அவசரமாக கூடியது பாதுகாப்புச் சபை!
[Thursday 2024-09-19 17:00]

தேசிய பாதுகாப்பு சபை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று காலை கூடியது.



வெளியில் நடமாடுவதை தவிருங்கள்!
[Thursday 2024-09-19 17:00]

வாக்களிப்பு தினத்தன்றும் வைக்களிப்பின் பின்னரும் வெளியில் நடமாடுவதை தவிர்க்குமாறும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்தது. வீடுகளிலேயே இருக்குமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அவசியமின்றி பெரிய திரைகளில் தேர்தல் முடிவுகளை அவதானிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.



ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பாளர்கள் 32 பேர் பணியில்!
[Thursday 2024-09-19 17:00]

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் அனைத்து மாவட்டங்களிலும் 32 குறுகிய கால தேர்தல் கண்காணிப்பாளர்களை கண்காணிப்பில் ஈடுபடுத்தியுள்ளனர்.



திருகோணமலை இளைஞன் சுவிசில் கொலை?
[Thursday 2024-09-19 17:00]

திருகோணமலையைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் சுவிசில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சுவிஸ் - சூரிச் நகரின் அடுக்குமாடி கட்டடத் தொகுதியில் வசித்து வந்த கோபிநாத் என்ற இளைஞன் வசித்து வந்த அறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும், சந்தேகத்தின்பேரில் அவருடைய அறையில் வசித்து வந்த சுவிஸ் நாட்டவர் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்த இளைஞன் திருமணமாகி, பெண் குழந்தை இருப்பதாகவும் தற்போது அவர் குடும்பத்தை பிரிந்து வாழ்ந்து வந்ததாகவும் தெரிய வருகின்றது.



கிளிநொச்சியில் டிப்பர் மோதி இளைஞன் பலி!
[Thursday 2024-09-19 17:00]

கிளிநொச்சியிலிருந்து வட்டக்கச்சி செல்லும் வீதியின் பன்னங்கண்டி பாலத்திற்கு அருகாமையில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்திலேயே இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.



24 மணிநேரத்தில் 4 பேர் சுட்டுக்கொலை!
[Thursday 2024-09-19 17:00]

குருநாகல், ரஸ்நாயக்கபுர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 30 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இனந்தெரியாத நபர்களால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் இடம்பெற்ற நான்காவது துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இதுவாகும்.



ரம்புக்வெல்லவின் மகனின் இரண்டு சொகுசு வீடுகளை முடக்கியது நீதிமன்றம்!
[Thursday 2024-09-19 17:00]

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்லவின் மகனும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரருமான ரமித் ரம்புக்வெல்லவுக்கு சொந்தமான இரண்டு அதிசொகுசு வீடுகளை கொழும்பு மேல் நீதிமன்றம் முடக்கியுள்ளது.



கிருமித் தொற்றினால் 16 நாள் குழந்தை மரணம்!
[Thursday 2024-09-19 17:00]

யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் கிருமி தொற்றினால் 16 நாட்களே ஆன குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.



500 ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் வைத்தியசாலையில்!
[Thursday 2024-09-19 17:00]

பொலன்னறுவை, பகமூன பிரதேசத்தில் உள்ள பிரதான தனியார் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் ஐநூறுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் இன்று காலை உணவு ஒவ்வாமை காரணமாக மிகவும் சுகவீனமடைந்த பகமூனை மற்றும் அத்தனகடலை கிராமிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பக்கமூன பொலிஸார் தெரிவித்தனர்.



கஜேந்திரன் பிணையில் விடுதலை!
[Thursday 2024-09-19 05:00]

தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் மற்றும் ஏனைய சந்தேகநபர்களும் நேற்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.



தமிழர்களின் ஒற்றுமையைப் பறைசாற்ற வேண்டும்!
[Thursday 2024-09-19 05:00]

தமிழ் மக்களின் பிரச்சினைகள் இன்னமும் தீர்க்கப்படாமல் இருக்கின்றன என்பதை சர்வதேசத்திடம் சொல்லும் அதேவேளை, தமிழர்களின் ஒற்றுமையைப் பறைசாற்றும் நோக்கில் இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் களமிறக்கப்பட்டிருக்கும் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு தமிழ் மக்கள் அனைவரும் திரண்டுவந்து வாக்களிக்கவேண்டும் என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் அறைகூவல் விடுத்துள்ளார்.



பொது வேட்பாளர் தேசிய அரசியலுக்கு எதிரான ஒன்று அல்ல!
[Thursday 2024-09-19 05:00]

தமிழ்ப் பொதுவேட்பாளர் அரியநேத்திரனுக்கு வாக்களிப்பது என்பது எதிர்ப்பு அரசியலும் அல்ல, இலங்கை தேசிய அரசியலுக்கு எதிரான ஒன்றும் அல்ல என சிவில் சமூக செயற்பாட்டாளர் க.அருந்தவபாலன் தெரிவித்துள்ளார்.



பொதுவேட்பாளர் - விஜயகலா வரவேற்பு!
[Thursday 2024-09-19 05:00]

2010 ஆம் ஆண்டிலேயே தமிழ் பொதுவேட்பாளரை களமிறக்கியிருக்க வேண்டும் என முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சரும் ஐக்கிய தேசிய கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளருமான விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.



எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டு- ஒன்றாவோம்!
[Thursday 2024-09-19 05:00]

இன்று ஐக்கிய நாடுகள் சபையின் 57 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பித்து இருக்கும் காலம். சிறி லங்காவின் தேர்தல் காலம் - உலகநாடுகளின் பார்வை அனைத்தும் சிறிலங்கா என்ற நாட்டை சுற்றி வலம் வந்து கொண்டிருக்கின்ற காலம்.



வாக்களிப்பு நிலையங்களுக்குள் நுழையக் கூடியவர்கள் யார்?
[Thursday 2024-09-19 05:00]

எதிர்வரும் செப்டம்பர் 21, 2024 அன்று நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின் போது வாக்களிப்பு நிலையங்களுக்குள் நுழைய அங்கீகரிக்கப்பட்ட நபர்களை இலங்கை தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.



2 வாக்காளர்களுக்காக ஒரு வாக்களிப்பு நிலையம்!
[Thursday 2024-09-19 05:00]

ஒன்பதாவது ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் 21 திகதி இடம்பெறவுள்ள நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் அனைத்தும் நிறைவு செய்யப்பட்டு வருவதாக மட்டக்களப்பு மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் மாவட்ட அரசாங்க அதிபருமாகிய திருமதி. ஜஸ்டினா முரளிதரன் தெரிவித்துள்ளார்.



சலுகைக்கான ஒப்பந்த அரசியல் அல்ல எமது தேவை கொள்கைக்கான அரசியலே எமது இலட்சியம்!
[Thursday 2024-09-19 05:00]

விடுதலைப்போராட்டம் அழிக்கப்பட்ட நிலையில் எம்மிடம் இருக்கக் கூடிய வாக்குரிமை என்ற ஜனநாயக ஆயுதத்தினை எமது இனத்தின் அரசியல் விடிவிற்காக நாம் பயன்படுத்தவேண்டுமே தவிர அதனை அதிகாரத்தினைக் கைப்பற்றுவதற்காக போலி உத்தரவாதம் தரும் பேரினவாதிகளுக்கு இரையாக்கக் கூடாது என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளரும் ரெலோவின் தலைமைக்குழு உறுப்பினருமான தியாகராஜா நிரோஸ் தெரிவித்தார்.



அமைதிக்காலம் தொடங்கியது!
[Thursday 2024-09-19 05:00]

ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் நேற்று நள்ளிரவுடன் நிறைவடைந்துள்ளது.இந்த நிலையில், செப்டெம்பர் 21ஆம் திகதிவரை அமைதியான காலப்பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்தார்.



அரியநேத்திரனுக்கு பாதுகாப்பு!
[Thursday 2024-09-19 05:00]

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. பொது வேட்பாளரின் பாதுகாப்பு தொடர்பாக அண்மையில் பிரதிப் பொலிஸ் மா அதிபரால் விடுக்கப்பட்ட எச்சரிக்கைக்கமைய குறித்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.


Airlinktravel-2020-01-01
NKS-Ketha-04-11-2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Karan Remax-2010
Rajeef sebarasha 2023/04/19
Mahesan-Remax-169515-Seithy
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா