Untitled Document
September 20, 2024 [GMT]
புதிய ஆண்டில் ஈழத்தமிழ் மக்களது சுயநிர்ணய உரிமைப் போராட்டம் முன்னோக்கி நகரும்! - பிரதமர் வி.உருத்ரகுமாரன்
[Friday 2016-01-01 09:00]

புதிய ஆண்டில் உலகில் தமது உரிமைகளுக்காகப் போராடும் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களது வாழ்விலும் முன்னேற்றங்கள் ஏற்படும் என்ற நம்பிக்கையுடனும் ஈழத்தமிழ் மக்களது சுயநிர்ணய உரிமைப் போராட்டம் முன்னோக்கி நகரும் என்ற எதிர்பார்ப்புடனும் நாம் இப் புதிய ஆண்டை வரவேற்றுக் கொள்வோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் அவர்கள் தனது புத்தாண்டுச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

புதிய ஆண்டில் உலகில் தமது உரிமைகளுக்காகப் போராடும் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களது வாழ்விலும் முன்னேற்றங்கள் ஏற்படும் என்ற நம்பிக்கையுடனும் ஈழத்தமிழ் மக்களது சுயநிர்ணய உரிமைப் போராட்டம் முன்னோக்கி நகரும் என்ற எதிர்பார்ப்புடனும் நாம் இப் புதிய ஆண்டை வரவேற்றுக் கொள்வோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் அவர்கள் தனது புத்தாண்டுச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

  

கடந்த 2015ல் சிறிலங்காவில் இடம் பெற்ற ஆட்சி மாற்றமும் அதன் விளைவாக அனைத்துலக அரசுகள் சிறிலங்கா அரசினைத் தாங்கிப் பிடிக்கும் அணுகுமுறை ஆகியன நாம் எதிர் கொள்ளப் போகும் சவால்களுக்குக் கட்டியம் கூறும் ஆண்டாக அமைந்திருந்ததெனத் தெரிவித்துள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன், அனைத்துலக சமூகத்தின் ஆதரவை ஈழத் தமிழ் மக்களாகிய நாம் எமது சுயநிர்ண உரிமையினை அடைந்து கொள்ளும் போராட்டத்தில் எவ்வாறு வென்றெடுக்கப் போகிறோம் என்பது புதிய ஆண்டில் நாம் எதிர் கொள்ளப் போகும் பெரும் சவாலாக அமையவுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் வி.உருத்திரகுமாரனின் புத்தாண்டுச் செய்தியின் முழுமையான அறிக்கை:

உலக மக்கள் அனைவரும் புத்தாண்டை மகிழ்வுடன் வரவேற்கும் இவ்வேளை உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில் எனது புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மலரும் இப் புதிய ஆண்டில் உலகில் தமது உரிமைகளுக்காகப் போராடும் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களது வாழ்விலும் முன்னேற்றங்கள் ஏற்படும் என்ற நம்பிக்கையுடனும் ஈழத்தமிழ் மக்களது சுயநிர்ணய உரிமைப் போராட்டம் முன்னோக்கி நகரும் என்ற எதிர்பார்ப்புடனும் நாம் இப் புதிய ஆண்டை வரவேற்றுக் கொள்வோம். இப் புதிய ஆண்டில் தமிழகத்தில் இயற்கையின் சீற்றத்தால் பாதிப்புக்குள்ளான எமது தொப்புள்கொடி உறவுகளாகிய தமிழக மக்களின் இன்னல்கள் நீங்கி அவர்களது வாழ்வு செழிப்பாக அமையும் எனவும் நாம் நம்புகிறோம்.

கடந்து சென்ற 2015 ஆம் ஆண்டு நாம் எதிர் கொள்ளப் போகும் சவால்களுக்;குக் கட்டியம் கூறும் ஆண்டாக அமைந்திருந்தது. சிறிலங்காவில் இடம் பெற்ற ஆட்சி மாற்றமும் அதன் விளைவாக அனைத்துலக அரசுகள் சிறிலங்கா அரசினைத் தாங்கிப் பிடிக்கும் அணுகுமுறையினைக் கடைப்பிடிக்கத் தொடங்கிய ஆண்டாகவும் கடந்த வருடம் அமைந்தது. சிறிலங்கா அரசினைத் தமது நலன்கள் சார்ந்து ஆதரித்து நிற்கும் அனைத்துலக சமூகத்தின் ஆதரவை ஈழத் தமிழ் மக்களாகிய நாம் எமது சுயநிர்ண உரிமையினை அடைந்து கொள்ளும் போராட்டத்தில் எவ்வாறு வென்றெடுக்கப் போகிறோம் என்பது புதிய ஆண்டில் நாம் எதிர் கொள்ளப் போகும் பெரும் சவாலாக அமையவுள்ளது. இச் சவாலை எதிர் கொள்ளும் வகையில்; புதிய ஆண்டில் நாம் எமது செயற்பாடுகளை அமைத்துக் கொள்ள வேண்டும்.

இப் புதிய ஆண்டில் சிறிலங்கா அரசுக்கான புதிய அரசியல் யாப்பு வரையப்படும் முயற்சிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இப் புதிய அரசியல் யாப்பின் ஊடாகத் தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சனைக்குத் தீர்வு காணப்பட முடியும் என்ற நம்பிக்கையும் வெளியிடப்படுகிறது. எமக்குக் கிடைக்கும் தகவல்களின்படி புதிய அரசியல் யாப்பு சிறிலங்கா அரச கட்டமைப்பின் பௌத்த இனவாத மேலாண்மையினை மாற்றியமைக்கும் வகையில் அமையப் போவதில்லை எனவும் மாறாக தற்போது இருக்கும் கட்டமைப்பின் ஒரு தொடர்ச்சியாகவே இது அமையும் எனவும் தெரிய வருகிறது.

சிறிலங்காவின் இப் புதிய அரசியல் யாப்பு ஈழத் தமிழ் மக்கள் ஒரு தேசம் என்பதனையோ, இலங்கைத் தீவின் வடகிழக்குப் பகுதி தமிழ் மக்களின் பாரம்பரியத் தாயகம் என்பதனையோ அங்கீரிக்காது என்பது இப்போதே தெளிவாகத் தெரிகிறது. இத்தகைய அங்கீகாரம் இல்லாதவொரு எந்தவொரு முன்னெடுப்பின் ஊடாகவும் தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சனைக்குத் தீர்வினைக் காணமுடியாது என்பதனை இவ்வேளையில் நாம் வலியுறுத்திக் கூற விரும்புகிறோம்.

அதே நேரம் கடந்த காலங்களைப் போலன்றி இத் தடவை இப் புதிய அரசியல் யாப்புக்குத் தமிழ் மக்களின் சம்மதத்தைப் பெறும் வகையிலான முயற்சிகள்; புதிய ஆண்டில் மேற்கொள்ளப்படும் எனவும்; தெரிகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சம்மதம் பெறப்படுவதற்கான முயற்சிகளும், இப் புதிய யாப்பின் மீது இலங்கை பூராக நடாத்தப்படும் மக்கள் வாக்கெடுப்பின் ஊடாக தமிழ் மக்களது சம்மதத்தினையும் பெற்றுக் கொள்ளும் முயற்சிகளும் தற்போதய ஆட்சியாளர்களால் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிகிறது. இவ் விடயத்தில் தமிழ் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் எனவே நாம் வேண்டுகிறோம்.

கடந்த வருட இறுதிப் பகுதியில் தாயகத்தில் தோற்றம் பெற்ற தமிழ் மக்கள் பேரவை தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்டதொரு வடிவத்தில் அமையக்கூடிய அரசியல் தீர்வு குறித்த கருத்துப்பரிமாற்றங்களை, விவாதங்களை மக்கள் மயப்படுத்தி, ஈழத் தமிழர் தேசத்தினை விழிப்புணர்வுள்ள ஓர் அரசியல் சமூகமாக வளரத்தெடுப்பதில் ஆக்கபூர்வமான பங்களிப்பு வழங்கும் என்பது எமது எதிர்பார்ப்பாக உள்ளது. தம்மை தேர்தல் அரசியலில் ஈடுபடும் அரசியல் கட்சியாக அல்லாது, அரசியல் முடிவுகளில் மக்களை, மக்கள் அமைப்புக்களைப் பங்காளர் ஆக்கும் வகையிலான, தேர்தல் அரசியலுக்கு அப்பாற்பட்டதொரு மக்கள் அமைப்பாகத் தமிழ் மக்கள் பேரவை உருவாகியுள்ளமையினை நாம் பெரிதும் வரவேற்கிறோம்.

இப் புதிய ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் 40 ஆவது ஆண்டின் நிறைவை எட்டும் ஆண்டாகவும் அமைகிறது. இப் புதிய ஆண்டில் தமிழ் மக்களின் அரசியற் பெருவிருப்பான சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரசுக்கான அரசியல் யாப்பை உலகத் தமிழ் மக்களது பங்கு பற்றலுடன் நாம் ஆக்கத் தீர்மானித்திருக்கிறோம். ஈழத் தமிழர் தேசத்தையும, தேசத்தின் தாயகபூமியையும் சிங்களம் ஆக்கிரமித்து, சிங்கள பௌத்த மேலாண்மையைக் கொண்ட சிறிலங்கா அரசியல் யாப்பினுள் தமிழ் மக்களைக் கட்டிப் போட்டுள்ள நடைமுறையினை நிராகரிக்கும் வகையிலும், தமிழ் மக்களின் அரசியற் கனவைப் பிரதிபலிக்கும் வகையிலும் தமிழீழ அரசுக்கான அரசியல் யாப்பை அமைக்கும் முயற்சியினை வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 40 ஆண்டுகள் நிறைவடையும் இவ் ஆண்டில் நாம் மேற் கொள்ளவுள்ளோம்.

சிறிலங்கா அரசின் தமிழ் மக்கள் மீதான இனஅழிப்புத் தொடர்பாக அனைத்துலகக் குற்றவியல் நீதி விசாரணை தேவை என்ற கோரிக்கையினை வலுப்படுத்தம் வகையில் சிறிலங்கா எவ்வாறு ஐக்கிய நாடுகள் மனித உரிபை; பேரவையின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துகிறது என்பதனைக் கண்காணிக்கும் வகையில் நிபுணர் குழுவை நாம் கடந்த ஆண்டில் அமைத்திருந்தோம். இந்த நிபுணர்குழு இவ் வருடத்தில் தனது செயற்பாடுகளை முனைப்புடன் மேற்கொள்ளும்.

மேலும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகளும் இப் புதிய ஆண்டில் மேலும் விரிவு படுத்தப்படும். பதிப்பகம், ஆவணக் காப்பகம், தமிழகத்தில் தமிழர் தகவல் மையம், Yes to Referendum பரப்புரை இயக்கம், நீதிக்காய் மரம் நாட்டும் இயக்கம், புலம் பெயர் நாடுகளில் தமிழ் மொழிக் கல்விக்கான வள ஆலோசனை மையம் உட்பட்ட வேலைத் திட்டங்களை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இப் புதிய ஆண்டில் முன்னெடுக்கும். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகளுடன் உலகத் தமிழ் மக்கள் இப் புதிய ஆண்டில் தம்மை மேலும் இணைத்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையுடன் இப் புதிய ஆண்டில் எமது பயணத்தைத் தொடர்கிறோம்.

நன்றி,

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

  
   Bookmark and Share Seithy.com



அசம்பாவிதம் நடந்தால் மீள் வாக்குப்பதிவு!
[Friday 2024-09-20 06:00]

ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பின் போது ஏதேனும் வாக்களிப்பு நிலையத்தில் ஏதேனும் அசம்பாவித நிலைமை ஏற்படுமாக இருந்தால் அந்த வாக்களிப்பு நிலையத்தின் வாக்குகளை சூனியமாக்க நேரிடும் என்பதுடன், அங்கே மீண்டும் வாக்கெடுப்பை நடத்தும் வரையில் நாடாளவிய ரீதியிலான இறுதித் தேர்தல் முடிவுகளை அறிவிக்க முடியாத நிலைமை ஏற்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.



ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பது எப்படி?
[Friday 2024-09-20 06:00]

ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்குகளை எண்ணும் பணி தேர்தல் தினத்தன்று பிற்பகல் 04.15 மணிக்கு ஆரம்பமாகும். எண்ணும் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து உரிய முடிவுகளை ஊடகங்களுக்கு வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.உத்தியோகபூர்வ முடிவுகள் கிடைக்கப்பெறும் வரை உத்தியோகபூர்வமற்ற முடிவுகள் வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும். என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.



தேர்தல் நாளன்று ஆறு தடைகள்!
[Friday 2024-09-20 06:00]

ஆறு முக்கிய விடயங்கள் தடை செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதனடிப்படையில், வாக்களிக்குமாறு இரந்து கேட்டல, எவரேனும் தேருநரின் வாக்கைப் பரிந்து கேட்டல், குறிப்பிட்ட எவரேனும் வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டாமென்று எவரேனும் நேருநரை தூண்டி வசப்படுத்த முயலுதல், தேர்தலில் வாக்களிக்க வேண்டாமென்று நேருநரை தூண்டி வசப்படுத்த முயலுதல் தடைசெய்யப்பட்டுள்ளது.



புதிய முதலீடுகள்,வேலைவாய்ப்புப் பெருக்கங்களுக்கு வழியேற்படுத்துகிறது ஒன்ராறியோ!
[Friday 2024-09-20 06:00]

புதிய வணிகங்களை ஈர்ப்பதற்கும், நல்ல ஊதியம் தரும் வேலைகளை உருவாக்குவதற்குமான களத்தினைத் தயார்ப்படுத்தும் பொருளாதார உயர்வுத் திட்டங்களுக்கென 75 மில்லியன் டொலர்களை ஒன்ராறியோ முதலீடு செய்துள்ளது. பெரும் முதலீட்டாளர்களை ஒன்ராறியோவை நோக்கி வரவைக்கும் இம்முன்முயற்சியானது தொழில் வளர்ச்சிக்கான களத்தைத் அமைத்துக்கொடுக்கும் திட்டமாக அமையும்.



யாழ்ப்பாணத்தில் தேர்தலுக்கு தயார்!
[Friday 2024-09-20 06:00]

யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூா்த்தி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தெரிவித்தாட்சி அலுவலரும் பதில் மாவட்ட செயலாளருமான மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார்.



சமூக ஊடகங்களில் வெளியிடத் தடை!
[Friday 2024-09-20 06:00]

எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் அன்று வாக்கெடுப்பு நிலையங்களில் வாக்களிக்கும் சந்தர்ப்பங்களையும் அடையாளமிடப்பட்ட வாக்குச் சீட்டுக்களையும் நிழற்படமெடுத்தல் மற்றும் வீடியோ எடுத்தல் அல்லது சமூக ஊடக வலைத்தளங்களில் வெளியிடுதல் தேர்தல் சட்டத்தை மீறும் செயல்கள் என தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.



சிஐடி விசாரணைக்குப் பின்னரே மீள் பரீட்சை குறித்து முடிவு!
[Friday 2024-09-20 06:00]

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாவது வினாத்தாள் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினை தொடர்பில் பரீட்சை திணைக்களம் மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களம் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



தமிழர் ஆதரவு மட்டுமல்ல சர்வதேசத்தின் ஆதரவும் கிடைத்துள்ளது! - நிரோஸ்
[Friday 2024-09-20 06:00]

போரின் பின்பாக நாட்டின் தேசிய இனங்களில் ஒன்றான தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை முன்வைக்காது ஏமாற்றிய சிங்களப் பேரினவாதத் தலைவர்கள் தமிழ் பொது வேட்பாளருக்கு தமிழ் மக்கள் அளித்துவரும் ஆதரவைப் பார்த்து அச்சமடைந்துள்ளார்கள் என்பதுடன் சர்வதேசம் பொதுவேட்பாளரின் நியாயப்பட்டை அங்கீகரிக்கின்றது. இந்நிலைமை எமது தேசியத்துக்குக் கிடைத்த வெற்றி. இவ் வெற்றியை எதிர்வரும் தேர்தல் முடிவுகளின் வாயிலாக எமது மக்கள் வரலாற்று வெற்றியாக்குவர் என்பதில் எந்தவித மாற்றமும் இல்லை என ரெலோவின் தலைமைக்குழு உறுப்பினரும் முனனாள் தவிசாளருமான தியாகராஜா நிரோஸ் தெரிவித்தார்.



அளவெட்டியில் மனைவியின் கையை வெட்டித் துண்டித்த கணவன்!
[Friday 2024-09-20 06:00]

தகாத உறவில் ஈடுபட்ட தனது மனையின் கையை இரண்டாக வெட்டி எடுத்த கணவன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் சந்தேக நபரான கணவன் யாழ்ப்பாணம், அளவெட்டி பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.



திலீபன் நினைவேந்தலுக்கு தடைவிதிக்க நீதிமன்றம் மறுப்பு!
[Thursday 2024-09-19 17:00]

நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் அஞ்சலி நிகழ்வை நடத்த அனுமதிக்க கூடாது என பொலிஸார் விடுத்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.



அவசரமாக கூடியது பாதுகாப்புச் சபை!
[Thursday 2024-09-19 17:00]

தேசிய பாதுகாப்பு சபை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று காலை கூடியது.



வெளியில் நடமாடுவதை தவிருங்கள்!
[Thursday 2024-09-19 17:00]

வாக்களிப்பு தினத்தன்றும் வைக்களிப்பின் பின்னரும் வெளியில் நடமாடுவதை தவிர்க்குமாறும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்தது. வீடுகளிலேயே இருக்குமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அவசியமின்றி பெரிய திரைகளில் தேர்தல் முடிவுகளை அவதானிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.



ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பாளர்கள் 32 பேர் பணியில்!
[Thursday 2024-09-19 17:00]

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் அனைத்து மாவட்டங்களிலும் 32 குறுகிய கால தேர்தல் கண்காணிப்பாளர்களை கண்காணிப்பில் ஈடுபடுத்தியுள்ளனர்.



திருகோணமலை இளைஞன் சுவிசில் கொலை?
[Thursday 2024-09-19 17:00]

திருகோணமலையைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் சுவிசில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சுவிஸ் - சூரிச் நகரின் அடுக்குமாடி கட்டடத் தொகுதியில் வசித்து வந்த கோபிநாத் என்ற இளைஞன் வசித்து வந்த அறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும், சந்தேகத்தின்பேரில் அவருடைய அறையில் வசித்து வந்த சுவிஸ் நாட்டவர் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்த இளைஞன் திருமணமாகி, பெண் குழந்தை இருப்பதாகவும் தற்போது அவர் குடும்பத்தை பிரிந்து வாழ்ந்து வந்ததாகவும் தெரிய வருகின்றது.



கிளிநொச்சியில் டிப்பர் மோதி இளைஞன் பலி!
[Thursday 2024-09-19 17:00]

கிளிநொச்சியிலிருந்து வட்டக்கச்சி செல்லும் வீதியின் பன்னங்கண்டி பாலத்திற்கு அருகாமையில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்திலேயே இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.



24 மணிநேரத்தில் 4 பேர் சுட்டுக்கொலை!
[Thursday 2024-09-19 17:00]

குருநாகல், ரஸ்நாயக்கபுர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 30 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இனந்தெரியாத நபர்களால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் இடம்பெற்ற நான்காவது துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இதுவாகும்.



ரம்புக்வெல்லவின் மகனின் இரண்டு சொகுசு வீடுகளை முடக்கியது நீதிமன்றம்!
[Thursday 2024-09-19 17:00]

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்லவின் மகனும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரருமான ரமித் ரம்புக்வெல்லவுக்கு சொந்தமான இரண்டு அதிசொகுசு வீடுகளை கொழும்பு மேல் நீதிமன்றம் முடக்கியுள்ளது.



கிருமித் தொற்றினால் 16 நாள் குழந்தை மரணம்!
[Thursday 2024-09-19 17:00]

யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் கிருமி தொற்றினால் 16 நாட்களே ஆன குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.



500 ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் வைத்தியசாலையில்!
[Thursday 2024-09-19 17:00]

பொலன்னறுவை, பகமூன பிரதேசத்தில் உள்ள பிரதான தனியார் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் ஐநூறுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் இன்று காலை உணவு ஒவ்வாமை காரணமாக மிகவும் சுகவீனமடைந்த பகமூனை மற்றும் அத்தனகடலை கிராமிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பக்கமூன பொலிஸார் தெரிவித்தனர்.



கஜேந்திரன் பிணையில் விடுதலை!
[Thursday 2024-09-19 05:00]

தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் மற்றும் ஏனைய சந்தேகநபர்களும் நேற்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.


Airlinktravel-2020-01-01
Logan-Kumaresh-Homelife-02-02-2021
NKS-Ketha-04-11-2021
Karan Remax-2010
Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா