Untitled Document
September 18, 2024 [GMT]
அதிரடியாக தடைகளை அறிவித்தார் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர்!
[Friday 2024-09-13 05:00]

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்புக்கு இன்னும் ஒன்பது நாட்களே   இருக்கின்ற நிலையில், வாக்களிப்பை நடத்துவதற்கான ஏற்பாடுகள் பூர்த்தி அடைந்துள்ளது எனத் தெரிவித்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர்   ஆர்.எம்.ஏ.எல்.
ரத்நாயக்க, வாக்களிப்பு நிலையங்களுக்கு கையடக்க தொலைபேசிகளை எடுத்துச் செல்வது தடை செய்யப்பட்டுள்ளது என்றார்.

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்புக்கு இன்னும் ஒன்பது நாட்களே இருக்கின்ற நிலையில், வாக்களிப்பை நடத்துவதற்கான ஏற்பாடுகள் பூர்த்தி அடைந்துள்ளது எனத் தெரிவித்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க, வாக்களிப்பு நிலையங்களுக்கு கையடக்க தொலைபேசிகளை எடுத்துச் செல்வது தடை செய்யப்பட்டுள்ளது என்றார்.

  

வாக்காளர்கள் மட்டுமன்றி வேட்பாளர்களும் வாக்குச்சாவடிகளுக்கு கையடக்க தொலைபேசிகளை எடுத்துச் செல்ல முடியாது. என்றும், வாக்களித்ததன் பின்னர் யாருக்கு வாக்களித்தீர்கள் என்பதை பகிரங்கமாக சொன்னால், அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று கூறினார்.

‘சுதந்திரமானதும் மற்றும் நியாயமானதுமான ஜனாதிபதி தேர்தலில் ஊடகங்களின் வகிபாகம்’ எனும் தொனிப்பொருளில் இலங்கை பத்திரிகையாளர் சங்கத்தால் ஏற்பாடு செய்திருந்த விசேட கருத்தரங்கு, கொழும்பிலுள்ள இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் கேட்போர் கூடத்தில், வியாழக்கிழமைபிற்பகல் நடைபெற்றது.

அதில், கலந்துகொண்டு கருத்துரையை வழங்கியதன் பின்னர், கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து பதிலளித்து கருத்துரைக்கையில், வாக்களித்ததை கையடக்க தொலைபேசியில் படமாக எடுத்து பொதுவெளியில் பகிர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டு, சட்டத்தின் பிரகாரம் அவர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

வாக்களிப்பு நிலையங்களுக்குள் படங்களை எடுக்க தடை செய்யப்பட்டுள்ளது. வேட்பாளர்களை படம் பிடிக்க அனுமதி பெற்ற ஊடகவியலாளர்கள் படம் பிடிக்கலாம். எனினும், அதனை, 21 ஆம் திகதி பிற்பகல் 4 மணிக்கு பின்னரே பயன்படுத்த வேண்டும்.

தேர்தல் பிரசார நடவடிக்கைகள், 18ஆம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடையும். அதற்கு பின்னர் 48 மணி நேரம் மௌன காலம், அக்கால பகுதிக்குள் எவ்விதமான பிரசார நடவடிக்கைகளையும் முன்னெடுக்க முடியாது. ஊடகங்களும், தேர்தல்கள் ஆய்வு நிகழ்ச்சிகளை முன்னெடுக்க முடியாது.

தபால்மூல வாக்குபதிவில், தங்களுடைய வேட்பாளர்தான் முன்னிலையில் இருக்கின்றனர் என்ற செய்தி பரப்பப்பட்டுள்ளது. அது தவறானது. அவ்வாறான சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சில வலைத்தளங்களில் வெளிநாடுகளில் இருந்து இயக்கப்படுவதால், கட்டுப்படுத்துவது கடினமாக உள்ளது. எனினும், பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து போலி செய்திகளை தடுத்துள்ளோம் என்றார்.

வாக்களிப்பு நிலையங்களுக்கு மட்டுமன்றி, வாக்கெண்ணும் நிலையங்களுக்கு அலைபேசிகளை எடுத்துச் செல்ல முடியாது. ஒவ்வொரு வாக்கெண்ணும் நிலையங்களுக்கு ஒரு வேட்பாளருக்கு ஐவர் என்ற அடிப்படையில், 38 வேட்பாளர்களுக்கும் 190 பேரும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் 40 பேரும் பிரசன்னமாய் இருப்பார்கள்.

சாதாரண அறையொன்றில் வாக்கு எண்ணும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும். மேலே குறிப்பிட்ட அத்தனை பேரும், ஒருவர், மற்றொருவரின் தலைக்கு மேலே எட்டிப் பார்க்க வேண்டும். இவ்வாறு எட்டிப்பார்க்கும் ஒரு வேட்பாளரின் பிரதிநிதி அந்த அறையிலிருந்து வெளியே வந்து தான் பிரதிநிதித்துவப்படுத்தும் வேட்பாளர் பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கையை கூறலாம்.

அந்த எண்ணிக்கையில் இலக்கங்கள் மாறுபடலாம். ஆகையால், உத்தியோகபூர்வமாக பெறுபேறுகள் வெளியிடுவதற்கு முன்னரான உத்தியோகபூர்வமற்ற பெறுபேறுகளை வெளியிடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.

கருத்துக்கணிப்புகளை வெளியிட வேண்டாம் என கேட்டுக்கொண்ட அவர், விளம்பரம் தொடர்பிலும் அவதானமாக இருக்க வேண்டும். அத்துடன் போலி செய்திகளையும், மக்களிடையே குரோதங்களை ஏற்படுத்தும் செய்திகளையும் வெளியிடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.

வாக்கெண்ணும் போது 50 சதவீதமான வாக்குகளை பெற்றவர், ​ஜனாதிபதியாக அறிவிக்கப்படுவார். அதற்குப் பின்னர் வாக்குகள் எண்ணப்படாது. எனினும், 50க்கு குறைவான வாக்குகள் பெறப்படுமிடத்து, மூன்றாவது விருப்பு வாக்கு எண்ணப்படும். அவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டால், பெறுபேறுகளை வெளியிடுவது தாமதமாகும்.

யாருக்கு வாக்களித்தேன் என்பதை தெரிவித்தால் கைது செய்யப்படுவார்கள் என எச்சரித்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க, இரண்டு வாக்குகளை போட்டாலும் கைது செய்யப்படுவார்கள் என்றார்.

தபால் வாக்குப்பதிவை செய்திருந்த ஒருவருக்கு, வாக்காளர் அட்டை கிடைத்திருந்தால், அது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் கவனத்துக்கு கொண்டு வருமாறு கேட்டுக் கொண்ட ​அவர், இரண்டு வாக்குகளை அளித்தால் குற்றமாகும். எனினும், அவ்வாறு நடை பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாகும்.

வாக்காளர்கள் அட்டையில் பெயர்களில் தவறுகள் இடம் பெற்றிருப்பின், அதுதொடர்பில், கிராம சேவகர் அல்லது தேர்தல்கள் தெரிவத்தாட்சி அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவருமாறு கேட்டுக்கொண்ட அவர், வாக்களிக்க செல்லும் போது, வாக்காளர் அட்டை தேவைப்படாது. எனினும், வாக்களிப்பை இலகுபடுத்தவே வாக்காளர் அட்டை விநியோகிக்கப்பட்ட உள்ளது என்றார்.

நீங்கள் வாக்களித்து விட்டீர்களா? என எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், வெளிநாட்டுக்கு சென்றிருந்தமையால், இதுவரையிலும் வாக்களிக்கவில்லை எனத் தெரிவித்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க, போகும் வழியில் வாக்களிப்பேன் என்று, இந்த விசேட கருத்தரங்கின் கேள்வி பதிலை நிறைவுக்கு கொண்டு வந்து பதிலளித்தார்.

  
   Bookmark and Share Seithy.com



மட்டு. கல்லடியில் பொது வேட்பாளருக்கு ஆதரவாக திரண்ட மக்கள்! Top News
[Wednesday 2024-09-18 05:00]

மட்டக்களப்பு கல்லடி பகுதியில் தமிழ்ப்பொதுவேட்பாளர் பா. அரியநேத்திரனை ஆதரித்து மாபெரும் பொதுக்கூட்டம் நேற்று மாலை இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யோகேஸ்வரன், சிறிநேசன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினர்.



பொது வேட்பாளருக்கு ஆதரவாக எழுச்சி கொண்ட மலையகம்! Top News
[Wednesday 2024-09-18 05:00]

மலையகம் அக்கரப்பத்தனையில் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு ஆதரவாக நேற்று மாபெரும் பொது கூட்டம் இடம்பெற்றது. இதில் மலையகத்தை சேர்ந்த பல புத்திஜீவிகள் அரசியல் பிரமுகர்கள் முன்னாள் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் மற்றும் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் என பல்லாயிரக் கணக்கில் மக்கள் கலந்து கொண்டனர். வரலாற்றில் முதல் முறையாக ஒருமித்த தமிழ் இனமாக அனைத்து தமிழர்களும் ஒன்றிணைந்து நிற்பது சிறப்பம்சம் ஆகும். அனந்தி சசிதரன் சிறப்பு பேச்சாளராக பங்கேற்றிருந்தார்.



இன்று பிரசாரத்திற்கு கடைசி நாள் - நல்லூரில் பொது வேட்பாளரின் கூட்டம்!
[Wednesday 2024-09-18 05:00]

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான பிரசார நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவடையவுள்ள நிலையில், கொழும்பு, நுகேகொடை மற்றும் பிலியந்தலை ஆகிய பகுதிகளில் பிரதான வேட்பாளர்களின் இறுதி பிரசாரக் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.



அனுரவின் ஆட்சி காணி, பொலிஸ் அதிகாரங்களை வழங்காது!
[Wednesday 2024-09-18 05:00]

இலங்கைக் குடியரசு பௌத்த மதத்திற்கு முதன்மையான இடத்தை வழங்கும் என்று கூறுகின்ற அரசியலமைப்பின் 9 ஆவது சரத்தை எதிர்கால தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் மாற்றாது என தேசிய மக்கள் சக்தி உறுதியளித்துள்ளது.



ஜெனிவா தீர்மானம் ஒரு வருடத்துக்கு காலநீடிப்பு! - அனுசரணை நாடுகளின் வரைவு கூறுகிறது.
[Wednesday 2024-09-18 05:00]

இலங்கை தொடர்பில் பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகளால் தயாரிக்கப்பட்டு, எதிர்வரும் 19 ஆம் திகதி உறுப்புநாடுகளின் பங்கேற்புடன் ஆராயப்படவுள்ள முதல் வரைபில், இலங்கை தொடர்பில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட 51/1 தீர்மானத்தின் ஊடாக ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு வழங்கப்பட்ட ஆணையை நீடிக்குமாறு ஐ.நா மனித உரிமைகள் பேரவையிடம் கோரப்பட்டுள்ளது.



கலைக்கப்படுகிறதா நாடாளுமன்றம்?
[Wednesday 2024-09-18 05:00]

இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவுசெய்யும் தேர்தல் எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெற உள்ள நிலையில், இன்று நள்ளிரவுடன் பிரச்சார நடவடிக்கைகள் நிறைவடைவதால் பிரதான வேட்பாளர்கள் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.



30 இலட்சம் ரூபா கைமாறியது - விலைபோன தலைவர்கள்!
[Wednesday 2024-09-18 05:00]

தமிழரசு கட்சியினுடைய தலைவர் மாவை சேனாதிராஜா அவருடைய மகன் கலைஅமுதன் தென்னிந்திய நகைச்சுவை நடிகர் வடிவேல் பாணில் செயல்படுவதாக அடக்கு முறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் தம்பி தம்பிராஜா குற்றச்சாட்டினார். யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.



பொதுவேட்பாளரை ஆதரித்து தமிழரசின் வட்டுக்கோட்டை கிளையின் பொதுக்கூட்டம்! Top News
[Wednesday 2024-09-18 05:00]

இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதிக்கிளையின் ஏற்பாட்டில், தமிழ் பொது வேட்பாளரது மாபெரும் பரப்புரை கூட்டமானது நேற்று மூளாய் வேரம் பகுதியில் இடம்பெற்றது.



அனுரவும் ரணிலும் தோற்கடிக்க சூழ்ச்சி! - சஜித் புலம்பல்.
[Wednesday 2024-09-18 05:00]

ரணில் விக்கிரமசிங்கவும், அனுரகுமார திசாநாயக்கவும் தன்னை தோற்கடிக்கும் சதியில் ஈடுபட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கேகாலையில் இடம்பெற்ற மக்கள் பேரணியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.



ரணில் பக்கம் சாய்ந்தாரா சார்ள்ஸ்?- மக்களின் முடிவே தனது முடிவு என்கிறார்.
[Wednesday 2024-09-18 05:00]

மன்னார் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைக்காக வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனை அவரது இல்லத்தில் நேற்று சந்தித்திருந்தார்.



தனிவிரல் எழுச்சிக்கு தமிழர்கள் அடம்பன் கொடியாய் திரண்டிட வேண்டும்!
[Tuesday 2024-09-17 17:00]

"நமக்காக நாமே" என்று வேற்றுமையில் ஒற்றுமை கண்டு இனமாக ஓரணி நின்று, தனிவிரல் எழுச்சிக்கு தமிழர்கள் அடம்பன் கொடியாய் திரண்டிட வேண்டும் என குரலற்றவர்களின் குரல் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.



திலீபனின் தியாக ஒளி சுடர் அரசியல் இருளகற்றும்!
[Tuesday 2024-09-17 17:00]

பச்சோந்தி அரசியலில் குளிர்காய்வோர், வல்லாதிக்க அரசியலுக்குள் எம்மை இழுத்து செல்வோர் தோல்வி காண்பர். அதுவரை எமது இலக்கு நோக்கி இலட்சியத்தோடு பயணிப்போம் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.



தரம் 5 புலமைப்பரிசில் வினாத்தாள் கசிந்தது- 6 பேர் கைது!
[Tuesday 2024-09-17 17:00]

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் வினாத்தாளை கையடக்கத் தொலைபேசி மூலம் பகிர்ந்ததாக கூறப்படும் அனுராதபுரத்தில் உள்ள பரீட்சை நிலையமொன்றில் உள்ள பாடசாலை அதிபர் உட்பட 6 ஆசிரியர்கள் பரீட்சை திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.



மூன்று பிரதான வேட்பாளர்களையும் அதிகாரப்பகிர்வு குறித்த வாக்குறுதியைக் கொடுக்க வைத்திருக்கிறோம்!
[Tuesday 2024-09-17 17:00]

இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் போட்டியிடும் மூன்று பிரதான வேட்பாளர்களையும் அதிகாரப்பகிர்வு குறித்த வாக்குறுதியைக் கொடுக்க வைத்திருக்கிறோம். எனவே மூவரில் எந்த வேட்பாளர் வென்றாலும், தீர்வினைப் பெற்றுக்கொடுப்பதை முன்னிறுத்திய நடவடிக்கைகளில் தமிழரசுக்கட்சி தொடர்ந்து ஈடுபடும் என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.



ரணில் பக்கம் பாய்ந்தார் சசிகலா!
[Tuesday 2024-09-17 17:00]

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர்களான சசிகலா ரவிராஜ் மற்றும் கலைஅமுதன் சேனாதிராஜா ஆகியோர் யாழ் தேர்தல் பிரசாரத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து, வடமாகாண அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடினர் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.



நாளை போராட்டத்தில் குதிக்கும் மருத்துவர்கள்!
[Tuesday 2024-09-17 17:00]

நாடளாவிய ரீதியிலுள்ள வைத்தியசாலைகளை இலக்கு வைத்து நாளை புதன்கிழமை தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.



வாக்குப் பெட்டிகள் அனுப்பி வைப்பு!
[Tuesday 2024-09-17 17:00]

ஜனாதிபதித் தேர்தலில் வாக்குப் பெட்டிகளுக்கு பயன்படுத்தப்படவுள்ள அட்டைப் பெட்டிகள் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து தேர்தல் அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.



நாளை நள்ளிரவுடன் பிரசாரங்கள் முடிவு!
[Tuesday 2024-09-17 17:00]

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அனைத்து தேர்தல் பிரச்சாரங்களும் புதன்கிழமை நள்ளிரவு 12.00 மணிக்கு பின்னர் முடிக்கப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.



சம்மாந்துறையில் ஒருவர் சுட்டுக்கொலை!
[Tuesday 2024-09-17 17:00]

வீடொன்றில் ஏற்பட்ட துப்பாக்கி சூட்டில் இளம் குடும்பஸ்தர் மரணமடைந்த சம்பவம் ஒன்று சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.



புறாவினால் பதற்றமடைந்த அனுர!
[Tuesday 2024-09-17 17:00]

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திஸாநாயக்கவினை புறா ஒன்றின் மூலம் பதற்றமடைய காரணமான இருவர் எச்சரிக்கை செய்யப்பட்டு சம்மாந்துறை பொலிஸாரினால் விடுவிக்கப்பட்டுள்ளனர்.


 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Rajeef sebarasha 2023/04/19
Mahesan-Remax-169515-Seithy
Airlinktravel-2020-01-01
NKS-Ketha-04-11-2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Vaheesan-Remax-2016
Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா