Untitled Document
March 31, 2025 [GMT]
யுத்த குற்றவாளிகளிற்கு எதிராக வழக்குத் தொடுக்க வேண்டும்!
[Thursday 2025-03-27 17:00]


இலங்கையின் உள்நாட்டு போரின்போது யுத்த குற்றங்களில் ஈடுபட்டவர்களிற்கு எதிராக வெளிநாட்டு அரசாங்கங்கள் தொடர்ந்தும் இலக்குவைக்கப்பட்ட தடைகளை விதிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள  மனித உரிமை கண்காணிப்பகம், ஐக்கிய நாடுகள் சேகரித்துள்ள ஆதாரங்களை அடிப்படையாக வைத்து இலங்கையின் யுத்த குற்றவாளிகளிற்கு எதிராக வழக்கு தொடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

இலங்கையின் உள்நாட்டு போரின்போது யுத்த குற்றங்களில் ஈடுபட்டவர்களிற்கு எதிராக வெளிநாட்டு அரசாங்கங்கள் தொடர்ந்தும் இலக்குவைக்கப்பட்ட தடைகளை விதிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள மனித உரிமை கண்காணிப்பகம், ஐக்கிய நாடுகள் சேகரித்துள்ள ஆதாரங்களை அடிப்படையாக வைத்து இலங்கையின் யுத்த குற்றவாளிகளிற்கு எதிராக வழக்கு தொடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

  

இலங்கையின் உள்நாட்டுபோரின்போது மனித உரிமை மீறல்களில் யுத்த குற்றங்களில் ஈடுபட்டவர்களிற்கு எதிராக வெளிநாட்டு அரசாங்கங்கள் தொடர்ந்தும் இலக்குவைக்கப்பட்ட தடைகளை விதிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம்,ஐக்கியநாடுகள் சேகரித்துள்ள ஆதாரங்களை அடிப்படையாக வைத்து இலங்கையின் யுத்த குற்றவாளிகளிற்கு எதிராக வழக்குதொடுக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசியாவிற்கான பிரதிஇயக்குநர் மீனாக்ஷி கங்குலி இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது

இலங்கையின் உள்நாட்டு போரின்போது அட்டுழியங்களில் ஈடுபட்டனர் என குற்றம்சாட்டப்பட்டநால்வருக்கு எதிராக தடைகளைவிதித்துள்ளதன் மூலம் பிரிட்டன் பொறுப்புக்கூறலை முன்னோக்கி நகர்த்தியுள்ளது.

1983 முதல் 2009ம் ஆண்டுவரை தமிழீழ விடுதலைப்புலிகளிற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களின் போது இரு தரப்பும் பரந்துபட்ட மனித உரிமை மீறல்கள்யுத்த குற்றங்களில் ஈடுபட்டன.

எனினும் தொடர்ந்து வந்த இலங்கையின் ஆட்சியாளர்கள் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதை மறைப்பதற்கும்,அதற்கு காரணமானவர்களை பாதுகாப்பதற்கும் முயற்சிசெய்துள்ளனர்.

சமூகத்தின் மீது தொடர்ந்து தாக்கத்தை செலுத்தும,மனித உரிமை மீறல்களிற்கான பொறுப்புக்கூறல் உட்பட, இலங்கையில் மனித உரிமைகளை உறுதிப்படுத்துவது குறித்து பிரிட்டிஸ் அரசாங்கம் உறுதியாக உள்ளதாக அந்த நாட்டின் வெளிவிவகாரசெயலாளர் டேவிட் லாமி தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் பயணத்தடை சொத்துக்களை முடக்குதல் ஆகியநடவடிக்கைகளை அறிவித்துள்ளது.

தடை செய்யப்பட்டவர்களில் யுத்தத்தின் இறுதியில் 58வது படைப்பிரிவிற்கு தலைமைதாங்கிய ஓய்வுபெற்ற ஜெனரல்சவேந்திர சில்வாவும் உள்ளார்.பலவந்தமாக காணாமல்போகச்செய்தல் தமிழ்மக்களை கொலை செய்தமை போன்ற குற்றச்சாட்டுகள் இவருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளன.2025 ஜனவரி முதலாம் திகதி இவர் பாதுகாப்பு படை பிரதானியாக பதவி வகித்த பின்னர் ஓய்வு பெற்றார்.

தடை விதிக்கப்பட்ட மற்றுமொருவர் இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி வசந்த கரணாகொட.2008-2009ம் ஆண்டு காலப்பகுதியில் கொழும்பில் இலங்கை கடற்படையால் இளைஞர்கள் கப்பம் பெறுவதற்காக கடத்தப்பட்ட விவகாரத்தில் இவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

இலங்கை அரசாங்கம் இவர் மீதான குற்றச்சாட்டுகளை கைவிட்டு இவரை வடமேல்மாகாண ஆளுநராக்கியது.சில்வா கரணாகொட இருவருக்கும் எதிராக அமெரிக்காவும் தடைகளை விதித்துள்ளது

.முன்னாள் இராணுவதளபதி ஓய்வுபெற்ற ஜகத்ஜெயசூரிய வவுனியாவின் ஜோசப் முகாமிற்கு பொறுப்பாகயிருந்தவர்,இங்கு பலர் சித்திரவதைகள், பாலியல்வன்முறைகள், பலவந்தமாக காணாமலாக்கப்படுதல் ஆகியவற்றிற்கு உட்படுத்தப்பட்டனர்.

கேணல் கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்க தளபதி அந்த அமைப்பிலிருந்து விலகி, அரசசார்பு துணை இராணுவப்படையை2004 இல்உருவாக்கினார்.இரணடு தரப்பிற்காகவும் இவர் சிறுவர்களை படையணியில் சேர்த்தார்

படுகொலைகளில் ஈடுபட்டார், யுத்தத்தின் பின்னர் இவர் அரசாங்க அமைச்சரானார்.

ஐக்கிய இராச்சியத்தின் தடைகளிற்கு புதன்கிழமை பதிலளித்துள்ள இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூறலை உள்நாட்டு பொறிமுறைகள் ஊடாகவே முன்னெடுக்கவேண்டும் என தெரிவித்துள்ளதுடன் அதனை வலுப்படுத்துவதாக தெரிவித்துள்ளது.

இலங்கையில் உள்நாட்டு போரின்போது இழைக்கப்பட்ட சர்வதேச குற்றங்கள் தொடர்பாக பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கான, ஆதாரங்களை சேகரிப்பதற்கான தொடர்தீர்மானங்களை ஐக்கிய நாடுகள் மனிதஉரிமை பேரவையில் வெற்றிகரமாக நிறைவேற்றிய இணைத்தலைமை நாடுகளில் பிரிட்டனும் ஒன்று.

இலங்கை பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்காதவரை சர்வதேச நீதியே அவசியமானது.

  
   Bookmark and Share Seithy.com



பிரித்தானியாவின் நிலைப்பாடு சர்வதேச நீதிமன்றம் வரை செல்ல வேண்டும்!
[Monday 2025-03-31 06:00]

நான்கு பேர் தடை தொடர்பான பிரித்தானியாவின் நிலைப்பாடு சர்வதேச நீதிமன்றம் வரை செல்ல வேண்டும். அதன் ஊடாக நீதி கிடைக்க வேண்டும் என ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ரெலோ அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.



புலம்பெயர் தமிழர்களின் அழுத்தங்களால் நாட்டுக்கு பாரிய அச்சுறுத்தல்!
[Monday 2025-03-31 06:00]

தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்களான புலம்பெயர் தமிழர்களின் அழுத்தங்களால் நாட்டுக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். ஞாயிற்றுக்கிழமை (30) குருணாகலில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்தார்.



மோட்டார் சைக்கிள் மோதிய பெண் சிகிச்சை பலனின்றி மரணம்!
[Monday 2025-03-31 06:00]

யாழ்ப்பாணத்தில் துவிச்சக்கர வண்டியில் சென்ற வயோதிபப் பெண்ணொருவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் அவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் - அரசடி வீதி பகுதியை சேர்ந்த 70 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.



நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள் - நாளை சாதகமாக பரிசீலிக்கப்படும்!
[Monday 2025-03-31 06:00]

கடந்த 28ஆம் திகதி,வெள்ளிக்கிழமை, உயர் நீதிமன்ற அமர்வு, நீதியரசர் ச. துரைராஜா(PC), , நீதியரசர் மஹிந்த சமயவர்தன, மற்றும் நீதியரசர் சம்பத் பி. அபயகோன் ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இடம்பெற்றபோது, ஜனநாயக தேசிய கூட்டணியால் தாக்கல் செய்யப்பட்ட S.C. Writ No. 06/25 உட்பட, அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட உள்ளூராட்சி தேர்தலில் வேட்புமனுக்கள் சில நிராகரிக்கப்பட்டதை ஆட்சேபித்துத் தாக்கல் செய்யப்பட்ட 21 வழக்குகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.



தையிட்டியில் விகாரைக் காணிகளை அபகரிக்கவே போராடுகின்றனராம்!
[Monday 2025-03-31 06:00]

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள தொல்பொருள் சின்னங்களை பௌத்தம் மற்றும் இந்து மத அடிப்படையில் அடையாளப்படுத்த வேண்டாமென தொல்பொருள் திணைக்களத்துக்கு அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்து தொல்பொருள் சின்னங்களுக்கு எவரும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. பௌத்த சின்னங்களே திட்டமிட்ட வகையில் அழிக்கப்படுகின்றன என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.



2029 ஆம் ஆண்டு ஆட்சியை கைப்பற்றுவோம்!
[Monday 2025-03-31 06:00]

2029 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஆட்சியை கைப்பற்றுவோம். அதற்கான பணிகளை முன்னெடுத்துள்ளோம் என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.



வவுனியாவில் பூங்காவில் விளையாடிய சிறுமியின் சங்கிலி அறுப்பு!
[Monday 2025-03-31 06:00]

வவுனியா, நகரசபைப் பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி ஒருவரின் சங்கிலியை இரு பெண்கள் அறுத்துச் சென்றுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா, பூங்கா வீதியில் அமைந்துள்ள நகரசபை பூங்காவில் சிறுமி ஒருவர் விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.



சிறையில் உள்ள கணவனுக்கு உணவு கொண்டு சென்ற மனைவி விபத்தில் பலி!
[Monday 2025-03-31 06:00]

யாழ். சிறைச்சாலையில் இருந்த கணவனுக்கு உணவு கொண்டு சென்ற மனைவி விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். கைதடி - தச்சன்தோப்பு பகுதியைச் சேர்ந்த ஜெயரத்தினம் சுசீலா (வயது 57) என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.



தந்தை செல்வா விருது விழாவில் தேர்தல் விதிமீறல் என முறைப்பாடு!
[Monday 2025-03-31 06:00]

வலிகாமம் மேற்கில் நடைபெற்ற தந்தை செல்வா விருது வழங்கல் நிகழ்வில் உதவி திட்டங்கள் வழங்கிய பொழுது தேர்தல் விதிமுறைகளை மீறி நிகழ்வில் வேட்பாளர்கள் கலந்து கொண்டதாக தெரிவித்து வட்டுக்கோட்டை தொகுதியின் ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளரால் தேர்தல் திணைக்களத்திற்கு முறைப்பாடு வழங்கப்பட்டது.



சிறைக்குள் மெத்தை கேட்ட சாமர சம்பத்!
[Monday 2025-03-31 06:00]

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க, படுப்பதற்கு மெத்தை வழங்குமாறு விடுத்த கோரிக்கை வைத்தியர்களால் நிராகரிக்கப்பட்டுள்ளதாக வெலிக்கடை சிறைச்சாலை ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலை ஆணையாளருமான காமினி பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.



ஏப்ரல் 21ஆம் திகதிக்குள் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்து முக்கிய தகவல்கள் அம்பலப்படுத்தப்படும்!
[Sunday 2025-03-30 17:00]

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் விரைவாக முன்னெடுக்கப்படுவதாகவும், எதிர்வரும் ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னர் இந்த தாக்குதல்களுக்குப் பொறுப்பான பல நபர்கள் அம்பலப்படுத்தப்படுவார்கள் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.



காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம்- பிரித்தானிய தடைக்கு வரவேற்பு!
[Sunday 2025-03-30 17:00]

போர்க்குற்றங்களில் ஈடுபட்ட இராணுவத்தளபதிகளுக்கு பிரித்தானியா பயணத்தடை விதித்துள்ளதை நாம் வரவேற்பதோடு சில முன்னாள் ஜனாதிபதிகளுக்கு இவ்வாறு தடைகள் விதிக்கப்பட வேண்டும் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் தெரிவித்துள்ளது.



திருச்சி- யாழ்ப்பாணம் இடையே 47 ஆண்டுகளுக்குப் பின் தொடங்கியது விமான சேவை!
[Sunday 2025-03-30 17:00]

திருச்சி மற்றும் யாழ்ப்பாணம் இடையே 47 ஆண்டுகளுக்குப் பின்னர் நேரடி விமான சேவை இன்று முதல் தொடங்கியுள்ளது.



பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டிற்கு செல்கிறார் பிரதமர் ஹரிணி!
[Sunday 2025-03-30 17:00]

ஆறாவது பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு துணை அமைச்சர் அருண் ஹேமசந்திர ஆகியோர் இந்த வார இறுதியில் தாய்லாந்து செல்வார்கள் என சண்டே டைம்ஸ் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.



தையிட்டியில் சட்டவிரோத கட்டடம்- அறிக்கை கோரியிருக்கிறார் சுனில் செனவி!
[Sunday 2025-03-30 17:00]

தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரை வளாகத்தில் புதிதாக நிர்ணமாகிக்கப்பட்டுள்ள கட்டடம் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை தருமாறு புத்தசாசன திணைக்கள மற்றும் பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடத்தில் கோரிக்கை விடுத்துள்ளதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி தெரிவித்துள்ளார்.



ஸ்டிக்கர் ஒட்டிய இளைஞன் தீவிரவாதியாம்!
[Sunday 2025-03-30 17:00]

கொழும்பில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் பணிபுரிந்த 22 வயது இளைஞர் ஒருவர் 22/03/2025 அன்று கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சமூக ஊடகங்களில் ஒரு குழுவினர் தவறான தகவல்களைப் பரப்பி வருகின்றனர் என்று இலங்கை பொலிஸ் ஊடகப்பிரிவு அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



தேசபந்துவை நீக்கும் பிரேரணை அரசியலமைப்புக்கு விரோதமானது!
[Sunday 2025-03-30 17:00]

இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்குவதற்காக, ஆளும்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவினால் கொண்டுவரப்பட்ட பிரேரணை தொடர்பாக முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெளிவுபடுத்தியுள்ளார்.



எருமை மாடு மீது மோதியவர் மரணம்!
[Sunday 2025-03-30 17:00]

எருமை மாட்டுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் நெட்டாங்கண்டல் மூன்றுமுறிப்பு பகுதியைச் சேர்ந்த இராமலிங்கம் தங்கேஸ்வரன் (வயது -52) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தை ஆவார்.



மோடியைச் சந்திக்க அனுமதி வழங்கவில்லை!
[Sunday 2025-03-30 17:00]

அடுத்த வாரம் இலங்கை வரும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசுவதற்கு வாய்ப்பளிக்கும்படி தமிழரசுக் கட்சியினர் உட்பட தமிழர் தரப்பு பிரதிநிதிகள் கோரியிருக்கின்றோம். ஆனால், இன்னமும் சந்திப்புக்கு இணக்கம் தெரிவிக்கப்படவில்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.



கடையில் இருந்து வீடு திரும்பிய பெண் மயங்கி விழுந்து சாவு!
[Sunday 2025-03-30 17:00]

வீதியால் நடந்து சென்ற குடும்பப் பெண் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் முதலாம் வட்டாரம் புங்குடுதீவைச் சேர்ந்த சிறிக்காந்தன் வசந்தா (வயது-68) என்பவராவார்.


Latika-Gold-House-2025
Airlinktravel-2020-01-01
Asayan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா