Untitled Document
April 1, 2025 [GMT]
புலிகளுக்கு ஆதரவான குழுக்கள் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளன!
[Sunday 2025-03-30 05:00]


உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி 175 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறுவதோடு, ஏனைய கட்சிகளுடனும் இணைந்து சபைகளை நிறுவும்என பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி 175 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறுவதோடு, ஏனைய கட்சிகளுடனும் இணைந்து சபைகளை நிறுவும்என பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.

  

உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் பெரும்பாலான தொகுதிகளில் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெறும். அது மாத்திரமின்றி தேர்தல் முடிவுகள் வெளியானதன் பின்னர் ஏனைய கட்சிகளுடன் இணைந்தும் சபைகளை நிறுவுவோம். இதுவரை முன்னெடுக்கப்பட்டுள்ள மதிப்பீடுகளின் அடிப்படையில் சுமார் 175 உள்ளுராட்சிமன்றங்களில் நாம் வெற்றி பெறுவோம்.

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான குழுக்கள் தற்போது மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளன. எமது அரசின் இராஜதந்திர அணுகுமுறைகள் பலவீனமடைந்துள்ளன.

வெளிவிவகார அமைச்சின் செயற்பாடுகளும் பலவீனமடைந்துள்ளன. இந்த நிலைமையின் காரணமாகவே தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான குழுக்கள் தலைதூக்கியுள்ளன.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை அல்ஜசீரா செய்தி சேவை நெருக்கடிக்கு உள்ளாக்க திட்டமிட்டு செயற்பட்டிருந்தது. இதன் பின்னணியிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆதரவாளர்களே காணப்படுகின்றனர். மீண்டும் புதிதாக அதனை தோற்றுவிக்கச் செய்வதற்கு அவர்கள் முயற்சிக்கின்றனர்.

தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது. தமிழ் மக்களுக்கு எதிராக யுத்த குற்றம் இழைக்கப்பட்டதாகத் தெரிவித்து அதனை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் குழுக்கள் வெளிநாடுகளில் வாழ்கின்றன.

சிலர் தமிழீழ அரசைத் தோற்றுவிப்பதற்கும், மேலும் சிலர் தமிழ் மக்களின் பிரச்சினைகளை விற்று பிழைப்பு நடத்துவதற்கும் முயற்சிக்கின்றனர்.

அவ்வாறானவர்கள் பலம் மிக்க குழுக்களாகவும் உள்ளனர். உலகில் பல முக்கிய பதவிகளை வகிப்பவர்களாகவும் அவர்கள் காணப்படுகின்றனர். குறிப்பாக ஐரோப்பிய நாடுகளிலும், கனடா போன்ற நாடுகளிலுமே இவ்வாறு அவர்கள் உயர் பதவிகளை வகிக்கின்றனர்.

தற்போதைய அரசாங்கத்தின் இராஜதந்திர செயற்பாடுகளில் கவனயீனமான போக்கு மற்றும் அது குறித்த அனுபவமின்மையே பாதுகாப்பு படையினர் மீது தடை விதிக்கப்படுவதற்கும் ஏதுவாக அமைந்துள்ளது. இது மிகவும் பாரதூரமான நிலைமையாகும்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைத்துவத்தில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டிய தேவை தற்போது கிடையாது. சமூகத்திலும் அவ்வாறான நிலைப்பாடு இல்லை. கட்சிக்குள் அவ்வாறான மாற்று தலைமைத்துவமும் இல்லை.

ஐக்கிய தேசிய கட்சியுடன் நாம் இணைந்து பயணிக்க வேண்டும் என்ற நிலைப்பாடு சமூகத்தின் மத்தியில் காணப்பட்டது. நாமும் அதற்கு முயற்சித்தோம். எனினும் அந்த முயற்சியும் வெற்றியளிக்கவில்லை என்றார்.

  
   Bookmark and Share Seithy.com



இந்த ஆண்டு மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படாது!
[Tuesday 2025-04-01 16:00]

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுடன் ஆறு மாதங்களுக்குள் மூன்று தேர்தல்கள் நடத்தப்பட்டதால், இந்த ஆண்டு மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படாது என்று அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.



தேர்தல் செயற்பாடுகளை இடைநிறுத்த உத்தரவு!
[Tuesday 2025-04-01 16:00]

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பாக வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்துள்ள உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான தேர்தல் செயற்பாடுகளை நாளை வரை நிறுத்தி வைக்குமாறு சம்பந்தப்பட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



சொந்தமில்லாத வீட்டிற்கு இழப்பீடு பெற்ற ராஜபக்ச!
[Tuesday 2025-04-01 16:00]

அரகலயவின் போது செவனகலவில் மற்றொரு நபரின் வீடு எரிக்கப்பட்டதற்காக இழப்பீடு பெற்ற ராஜபக்ச உறுப்பினர்களின் பட்டியல் மிக விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க புத்தளவில் தெரிவித்தார்.



அச்சுவேலியில் வாள்வெட்டு - பெற்றோல் குண்டும் வீச்சு!
[Tuesday 2025-04-01 16:00]

அச்சுவேலி வடக்கு பகுதியில், திங்கட்கிழமை இரவு வாள்வெட்டு, பெட்ரோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அச்சுவேலி வடக்கு அந்தோணியார் கோயில் ஆலயத்துக்கு அருகில் உள்ள வீடு ஒன்றின் மீது இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் அடித்து உடைத்து நொறுக்கபட்டுள்ளதுடன் சொத்துக்களுக்கு சேதமும் விளைவிக்கப்பட்டுள்ளது



வியாழேந்திரன், சாமர சம்பத் விளக்கமறியல் நீடிப்பு!
[Tuesday 2025-04-01 16:00]

இலஞ்சம் பெற்றுக்கொள்வதற்கு உதவி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் ச.வியாழேந்திரனின் விளக்கமறியலை எதிர்வரும் 08ஆம் திகதி வரை நீடித்து, கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.



தமிழரசின் வேட்பாளர் வீடு மீது பெற்றோல் குண்டு வீச்சு!
[Tuesday 2025-04-01 16:00]

மட்டக்களப்பு - வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திக்கோடை பகுதியில் உள்ள இலங்கை தமிழரசுக்கட்சியின் வேட்பாளரின் வீட்டின் மீது திங்கட்கிழமை இரவு பெற்றோல் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.



மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள சேவைகளுக்கு ரின் எண் கட்டாயம்!
[Tuesday 2025-04-01 16:00]

மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்திலிருந்து (DMT) அனைத்து சேவைகளையும் பெறுவதற்கு வரி செலுத்துவோர் அடையாள எண் (TIN) கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 15 முதல் TIN சமர்ப்பிப்பதற்கான தேவை அமல்படுத்தப்படும் என்று DMT ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் அறிவித்தார். அதன்படி, தனிநபர்கள் DMT சேவைகளை அணுகும்போது அந்தந்த கருமபீடங்களில் தங்கள் TIN-ஐ சமர்ப்பிக்க வேண்டும்.



யாழ்.பல்கலைக்கழக பகிடிவதை- 4 மாணவர்கள் இடைநிறுத்தம்!
[Tuesday 2025-04-01 16:00]

யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான பீடப் புதுமுக மாணவன் ஒருவர் பகிடிவதைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் நான்கு இரண்டாம் வருட சிரேஷ்ட மாணவர்களுக்கு உடனடியாகச் செயற்படும் வகையில் வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் நிறுவனமயப்படுத்தப்பட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று விஞ்ஞான பீடாதிபதி பேராசிரியர் பு. ரவிராஜன் தெரிவித்துள்ளார்.



கொழும்பில் பாதுகாப்பு அதிகரிப்பு!
[Tuesday 2025-04-01 16:00]

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் கொழும்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதற்காக சுமார் 6,000 பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் எனவும் கூறியுள்ளனர்.



முழங்காவிலில் பாடசாலை முன் பெற்றோர் போராட்டம்!
[Tuesday 2025-04-01 16:00]

கிளிநொச்சி முழங்காவில் ஆரம்ப பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். குறித்த போராட்டமானது இன்று காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பாடசாலை அதிபர் ஆசிரியர்களுக்கெதிராக சமூகவலைத்தளங்களுடாக பரப்படும் அவதூறு பரப்புரைகளை தடுக்ககோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதனால் பாடசாலையின் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் ஸ்தம்பித்தமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



நாயாறு கடலில் நீராடிய இரு யுவதிகள் பலி!
[Tuesday 2025-04-01 05:00]

முல்லைத்தீவு- நாயாறு கடற்பகுதியில் மூழ்கிய நிலையில் முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மற்றுமொரு பெண் நேற்று மாலை உயிரிழந்துள்ளார்.



நீதிமன்றங்களுக்கு அழுத்தம் கொடுக்கிறார் ஜனாதிபதி!
[Tuesday 2025-04-01 05:00]

தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நீதிபதிகளை விமர்சித்து நீதிமன்றத்துக்கு நேரடியாக அழுத்தம் பிரயோகித்துள்ளார். எனது வழக்கு விவகாரத்திலும் பதவிக்கான கௌரத்தை மீறி நீதிமன்றத்துக்கு அழுத்தம் பிரயோகிக்க முயற்சித்துள்ளார். நீதிமன்ற விவகாரத்தில் ஜனாதிபதி முன்பிள்ளை பாடசாலை பிள்ளை போல் செயற்படுகிறார். ஆகவே ஜனாதிபதி சிறந்த சட்ட ஆலோசனைகளை வழங்க வேண்டும் என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.



பெற்றோல் விலை மட்டும் 10 ரூபாவினால் குறைப்பு!
[Tuesday 2025-04-01 05:00]

நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை திருத்த இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, 309 ரூபாயாக இருந்த ஒக்டேன் 92 ரக பெற்றோல் லிட்டர் ஒன்றின் விலை 10 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 299 ரூபாயாகும். 95 ஒக்டேன் பெற்றோல் லிட்டரின் விலை 10 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 361 ரூபாயாகும்.



இராணுவத்தினர் மீது கைவைக்க விடமாட்டோம்!
[Tuesday 2025-04-01 05:00]

இலங்கையின் முன்னாள் படை பிரதானிகளுக்கு விதித்துள்ள தடையை பிரித்தானியா உடனடியாக நீக்கிக் கொள்ள வேண்டும். பிரித்தானிய அரசாங்கத்தின் முன்பாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தலைக்குனிந்துள்ளமைக்காக ஒட்டுமொத்த இலங்கையர்களும் தலைகுனிய போவதில்லை. யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த இராணுவத்தினர் மீது கைவைப்பதற்கு இலங்கையின் இறையாண்மையை நேசிக்கும் மக்கள் இடமளிக்க போவதில்லை என தேசிய சுதந்திர முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர தெரிவித்தார்.



பால்மா, தேநீர் விலைகள் அதிகரிப்பு - சம்பா அரிசிக்கும் தட்டுப்பாடு!
[Tuesday 2025-04-01 05:00]

பால் மாவின் விலை அதிகரிப்பால், பால் தேநீரின் விலை மற்றும், பால் சார்ந்த பழச்சாறுகள், சீஸ் ஆகியவற்றின் விலைகள் திங்கட்கிழமை (31) நள்ளிரவு 12.00 மணி முதல் 10 ரூபாவால் அதிகரிக்கப்படும் என்று அகில இலங்கை சிற்றுண்டிசாலைகள் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் (AICROA) ஹர்ஷனா ருக்‌ஷன் தெரிவித்துள்ளார்.



குற்றத்தை வெளிப்படுத்த சுபநேரம் தேவையில்லை!
[Tuesday 2025-04-01 05:00]

ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தினத்துக்கு பின்னர் அரசாங்கத்துக்கு எதிராக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வீதிக்கு இறங்குவதை தடுப்பதற்காகவே ஏப்ரல் 21க்கு முன்னர் உண்மையை வெளிப்படுத்துவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். உண்மையை வெளிப்படுத்த சுபநேரம் பார்க்க வேண்டுமா என்று பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.



சிஐடியில் 5 ½ மணி நேரம் வாக்குமூலம் அளித்த டிரான்!
[Tuesday 2025-04-01 05:00]

2023 ஆம் ஆண்டு நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்த பின்னர், முன்னாள் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் 5 ½ மணி நேரத்திற்கும் மேலாக வாக்குமூலம் அளித்த பின்னர் சிஐடியிலிருந்து வெளியேறினார். 2023 ஆம் ஆண்டு வெலிகமவில் உள்ள ஒரு முக்கிய ஹோட்டலுக்கு முன்னால் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் அளிக்க முன்னாள் அமைச்சர் நேற்றுக் காலை குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜரானார்.



பாரிஸ் செல்கிறார் பிரதமர் ஹரிணி!
[Tuesday 2025-04-01 05:00]

உலக பாரம்பரிய சொத்துக்களில் ஒன்றான இலங்கையின் புனித நகரமான அனுராதபுரத்தையும் அதனுடன் தொடர்புடைய வாழ்வியல் பாரம்பரியத்தையும் பாதுகாப்பதற்கான ஒருங்கிணைந்த மற்றும் நிலையான அணுகுமுறை' என்ற தலைப்பில் சர்வதேச நிபுணத்துவ மாநாட்டின் உயர் மட்டப் பிரிவில் பங்கேற்பதற்காக இலங்கைப் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய பிரான்ஸ் தலைநகர் பாரிசிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.



யாழ். பல்கலைக்கழக மாணவன் பகடிவதையினால் செவித்திறன் பாதிப்பு!
[Tuesday 2025-04-01 05:00]

யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞான பீட புதுமுக மாணவன் ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள மிலேச்சத்தனமான பகடிவதை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள அம் மாணவனுக்குப் பாதுகாப்பளிக்குமாறும், பகடிவதைக்கெதிராக நீதியானதும், சுதந்திரமானதுமான விசாரணைகள் மேறகொள்ளக் கோரியும் அம் மாணவனின் தந்தை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.



நள்ளிரவில் உயர்த்தப்பட்டது லாஃப்ஸ் எரிவாயு விலை!
[Tuesday 2025-04-01 05:00]

லாஃப்ஸ் எரிவாயுவின் விலை திங்கள் நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி 12.5 கிலோ சிலிண்டரின் விலை 420 ரூபாய் அதிகரித்து புதிய விலை 4,100 ரூபாயாக இருக்கும். மேலும், 5 கிலோ சிலிண்டர் 168 ரூபாய் அதிகரித்து 1,645 ரூபாயாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது..


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Latika-Gold-House-2025
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
Airlinktravel-2020-01-01
Asayan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா