Untitled Document
April 8, 2025 [GMT]
ஒற்றையாட்சிக்குள் தீர்வு சரிவராது!
[Sunday 2025-04-06 17:00]
ஒற்றையாட்சிக்குள் அதிகாரப் பகிர்வோ, தீர்வோ சரிவராது என்ற நிலைப்பாட்டை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எடுத்துரைத்தோம்.

ஒற்றையாட்சிக்குள் அதிகாரப் பகிர்வோ, தீர்வோ சரிவராது என்ற நிலைப்பாட்டை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எடுத்துரைத்தோம்." - என்று இந்தியப் பிரதமரைச் சந்தித்த பின்னர் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி. தெரிவித்தார்.

  

சந்திப்பு குறித்து அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

"இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இந்தியப் பிரதமரிடம் நான்கு விடயங்களை முன்வைத்தது. முதலாவது - இலங்கைத் தீவில் இந்தியாவுக்கு மட்டும்தான் அதன் தேசிய பாதுகாப்பு தொடர்பில் ஒரு பார்வை - பங்களிப்பு - உரித்து - இருக்க முடியும் என்பதை நாங்கள் ஏற்று அங்கீகரிக்கின்றோம் என்று குறிப்பிட்டோம்.

வேறு எந்த நாட்டுக்கும் தங்களுடைய தேசிய பாதுகாப்பு என்ற அடிப்படையில் இலங்கையை அணுகும் உரிமையோ, அருகதையோ இல்லை என்பதே எங்கள் நிலைப்பாடு என்பதை வெளிப்படுத்தினோம்.

இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு என்ற அம்சத்தில் இலங்கைத் தீவு இந்தியாவுக்கு மற்றைய நாடுகளை விட முன்னுரிமை வழங்கிச் செயற்பட வேண்டும் என்ற எமது நிலைப்பாட்டைக் குறிப்பிட்டோம். விசேடமாக வடக்கு, கிழக்கில் அந்த உரிமை இந்தியாவுக்கு இருக்கின்றது என்பதை நாங்கள் அங்கீகரிக்கின்றோம் என்பதை இந்தச் சந்திப்பில் சொன்னோம்.

இரண்டாவது விடயம் - தமிழர்களின் தேசியப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஓரளவு நெருக்கமாக வந்த சர்வதேச ஆவணம் இலங்கை - இந்திய ஒப்பந்தம் என்பதை நாங்கள் ஏற்றுக்கொண்டிருக்கின்றோம் என்பதையும் குறிப்பிட்டோம்.

ஆனால், இலங்கை - இந்திய ஒப்பந்தம் மூலம் தமிழரின் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண எடுத்த முயற்சியை ஒற்றையாட்சி என்ற நெருக்கடிக்குள் முடக்கியமையால் அது பலன் தரவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினோம்.

1987 ஆம் ஆண்டு இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டு, இவ்வளவு காலத்தின் பின்னரும் இன்னமும் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துங்கள், நடைமுறைப்படுத்துங்கள் என்று இந்தியா கோர வேண்டிய - வலியுறுத்த வேண்டிய - அவல நிலை நீடிப்பதற்கு இது ஒற்றையாட்சிக்குள் முடக்கப்பட்டமையே காரணம் என்பதை விளக்கினோம்.

இந்த 13ஆம் திருத்தம் ஒற்றையாட்சிக்குள் இருப்பதால் மத்திய அரசே மேலானது, 13ஆம் திருத்தத்தினால் மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையில் மோதல் வருவதற்கு இடமில்லை என்று அப்போதே அதை ஒட்டிய ஒரு வழக்கில் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து இருந்தது.

ஒற்றையாட்சி முறைமைக்குள் அனைத்து அதிகாரங்களும் மத்திய அரசுக்குத்தான் இருப்பதை அது உறுதிப்படுத்தியதை நாங்கள் தெளிவுபடுத்திச் சுட்டிக்காட்டினோம். ஆக, எல்லா அதிகாரங்களும் மத்திய அரசிடம் இருப்பதால், அந்த ஒற்றையாட்சிக்குள் அதிகாரங்களை பகிரவே இடமில்லை என்பதை இந்தியப் பிரதமருக்குச் சொன்னோம்.

இதுவே 38 வருடங்களாக நாங்கள் கண்ட அனுபவம் என்பதையும் தெரிவித்தோம். 13ஆம் திருத்தத்தை ஒற்றை ஆட்சிக்குள் முடக்கியமையால்தான் இன்றும் கூட தமிழர்களுடைய பிரச்சினை தீர்க்கப்படாமல் இருக்கின்றது என்பதை நாங்கள் விளங்கப்படுத்தினோம்.

இதனையே, இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு முதல் தடவையாக வந்து இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது, கூட்டுறவு சமஷ்டியே தீர்வுக்கு வழி என்று குறிப்பிட்டமையை நாங்கள் நினைவுபடுத்தினோம்.

ஒற்றையாட்சிக்கு வெளியே வந்து, சமஷ்டி முறைமைக்குக் கீழ் இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தி, ஒரு தீர்வைக் காண எத்தனித்தால் வழி பிறக்கும் என்பதை நாம் விளக்கினோம். இந்த விடயங்களை அடைவதற்காகத் தமிழ்க் கட்சிகளை டில்லிக்கு வரவழைத்துப் பேசுங்கள் என்று நாங்கள் இந்தியப் பிரதமரைக் கோரினோம்.

இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை மீறாமல், ஆனால் அதே நேரம் ஒற்றையாட்சி முறைமையைத் தாண்டி, ஒரு சமஷ்டி ஏற்பாட்டை முழுமையாக அடையக்கூடிய - இந்தியாவும் ஏற்றுக்கொள்ளத்தக்க - பொது நிலைப்பாடு ஒன்றை எட்டுவதற்கு உதவுமாறு நாங்கள் இந்தியப் பிரதமரை வேண்டினோம்.

மூன்றாவதாக - இந்தியாவின் தேசியப் பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொண்டு, இலங்கையின் வடக்கு, கிழக்கில் இந்தியா அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதற்கு நாங்கள் முழுமையாக ஒத்துழைப்போம் என்பதைத் தெரிவித்தோம்.

இந்த அபிவிருத்தித் திட்டங்களில் இந்தியாவுக்கு முன்னுரிமை கொடுக்கும் அதே நேரத்தில், இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதத்தில் வெளித் தரப்புகளுக்கு இப்பிராந்தியத்தில் காலூன்ற இடம் அளிக்கக்கூடாது என்ற எங்களது நிலைப்பாட்டையும் வெளிப்படுத்தினோம்.

வடக்கு - கிழக்கு தமிழர் தாயகம் இந்தியாவின் பாதுகாப்பு நோக்கோடு நோக்கப்படுகின்றது என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம். அதேவேளையில் இந்தப் பிராந்தியத்தின் குடிசனப் பரம்பல் விகிதாசாரத்தை மாற்றி அமைக்காத விதத்தில் அபிவிருத்தித் திட்டங்களில் இந்தியா முழு அளவில் ஈடுபட்டுப் பங்களிப்பதை நாங்கள் வரவேற்கின்றோம் என்பதையும் குறிப்பிட்டோம்.

மீனவர் பிரச்சினை பற்றி நான்காவதாகப் பேசினோம். இலங்கையின் வடக்கு - கிழக்கு மீனவர்கள் இன்று வாழ்வா, சாவா நிலைமையில் அவலப்படுகின்றார்கள் என்பதைச் சுட்டிக்காட்டினோம். இந்தப் பிரச்சினை எந்த வழியிலாவது தீர்க்கப்பட்ட வேண்டும். அது தொடர இடமளிக்கக்கூடாது. இந்த விடயத்தில் வடக்கு - கிழக்கு மீனவ பிரதிநிதிகளும், அரசியல் பிரதிநிதிகளும், இந்தியாவுக்குச் சென்று, எங்கள் உறவுகளோடும் மீனவப் பிரதிநிதிகளோடும் பேசித் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்பதை நாம் வலியுறுத்தினோம்.

எங்கள் மீனவர்களின் இழப்புக்கு உரிய நட்டஈடுகள் கூட இன்னும் வழங்கப்படவில்லை. அவை பற்றியும் கருத்தில் எடுக்கப்பட வேண்டும் என நாம் வலியுறுத்தினோம்." - என்றார் அவர்.

  
   Bookmark and Share Seithy.com



கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட பல சபைகளில் தேர்தல் செயற்பாடுகளை இடைநிறுத்த உத்தரவு!
[Monday 2025-04-07 16:00]

கொழும்பு மாநகர சபைஉட்பட பல உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களை நடத்துவது தொடர்பாக எந்தவொரு நடவடிக்கையையும் தடுக்கும் வகையில் மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று தடை உத்தரவைப் பிறப்பித்தது.



இலங்கையின் மக்கள் தொகை 21,763,170 - அதிகாரபூர்வமாக அறிவிப்பு.
[Monday 2025-04-07 16:00]

இலங்கையின் மக்கள் தொகை 21,763,170 என்று மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் கூறுகிறது.



பாதுகாப்பு ஒப்பந்தம் தொடர்பில் ஜனாதிபதி விளக்கமளிக்க வேண்டும்!
[Monday 2025-04-07 16:00]

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வருகையின் போது இந்தியாவுடன் மேற்கொண்ட பாதுகாப்பு ஒப்பந்தம் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாட்டு மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும் என்பதுடன் இந்த அரசாங்கம் இந்தியாவுக்கு மாத்திரம் ஆதரவாக ஒருதலைப்பட்சமாக செயற்படுவதை அனுமதிக்க முடியாது’’ என்றும் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.



இந்த ஆண்டு 7 இலட்சத்தை தாண்டிய சுற்றுலாப் பயணிகள்!
[Monday 2025-04-07 16:00]

கடந்த மார்ச் மாதத்தில் இலங்கை 229,298 சுற்றுலாப் பயணிகளை வரவேற்றுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை உறுதிப்படுத்தியுள்ளது. மார்ச் மாதத்தில் அதிகபட்ச சுற்றுலாப் பயணிகள் வருகை மார்ச் 01 முதல் 07 வரை பதிவாகியுள்ளது. இதன்போது, 53,113 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.



மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கை ஜனாதிபதியிடம் சமர்ப்பிப்பு!
[Monday 2025-04-07 16:00]

மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தால் நடத்தப்பட்ட 'மக்கள் தொகை மற்றும் வீட்டுவசதி மக்கள் தொகை கணக்கெடுப்பு 2024' தொடர்பான அறிக்கை இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிடம் அதிகாரப்பூர்வமாக கையளிக்கப்பட்டது.



மூன்று கன்றுகளை ஈன்ற பசு - வடமராட்சியில் அதிசயம்!
[Monday 2025-04-07 16:00]

வடமராட்சி - உடுப்பிட்டி இலக்கணாவத்தை விவசாயி ஒருவரின் பசு மூன்று கன்றுகளை சனிக்கிழமை ஈன்றுள்ளது. ஒரே தடவையில் மூன்று கன்றுகளைப் பிரசவிப்பதென்பது மிகவும் அபூர்வமான நிகழ்வாக கருதப்படுகின்றது. இரண்டு நாம்பன், ஒரு பசுக் கன்று ஈன்றுள்ளது. மூன்று கன்றுக் குட்டிகளும் ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



நாளை தேசபந்துவை நீக்கும் பிரேரணை!
[Monday 2025-04-07 16:00]

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவது தொடர்பான பிரேரணை நாளை செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியாரச்சி தெரிவித்தார்.



சிஐடியில் முன்னிலையானார் மைத்திரி!
[Monday 2025-04-07 16:00]

அரசியல்வாதிகள் உட்பட பல நபர்களுக்கு ஜனாதிபதி நிதியிலிருந்து நிதி வழங்குவது தொடர்பாக வாக்குமூலம் அளிக்க முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்று நேரத்திற்கு முன்பு குற்றப் புலனாய்வுத் துறைக்கு வந்ததாக போலிஸார் தெரிவித்தனர். இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தொடர்பில், வாக்குமூலம் அளிப்பதற்கே, மைத்திரிபால சிறிசேன, வந்துள்ளார் என மற்றுமொரு தகவல் தெரிவிக்கின்றது.



மஹிந்த வைத்தியசாலையிலா? - மறுக்கிறார் நாமல்!
[Monday 2025-04-07 16:00]

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக அவரது மகன், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று (07) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையான போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.



நாடாளுமன்ற ஆசனம் வெற்றிடமானதாக அறிவிப்பு!
[Monday 2025-04-07 16:00]

தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கோசல நுவான் ஜயவீரவின் திடீர் மரணத்தால் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமாகியுள்ளதாக பாராளுமன்றத்தால் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.



வெளிநாட்டுக்கு அனுப்புவதாக பண மோசடி - விளக்கமறியலில் வைக்க உத்தரவு!
[Monday 2025-04-07 05:00]

யாழ்ப்பாணத்தில் ஒரு கோடி அறுபது இலட்சம் ரூபா பெறுமதியான பணமோசடி செய்த சந்தேகநபர் ஒருவர் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்தப்பட்டுள்ளார்.



பாதாள உலகக்குழுவை ஒழிக்கும் நடவடிக்கை முப்படையில் இருந்து ஆரம்பிக்கப்படும்!
[Monday 2025-04-07 05:00]

முப்படைகளில் இருந்து தப்பிச் சென்ற சுமார் 1,700 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.



ஆளும்கட்சி எம்.பி மாரடைப்பால் மரணம்!
[Monday 2025-04-07 05:00]

தேசிய மக்கள் சக்தி யின் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோசல நுவான் நேற்றுமாலை மாரடைப்பால் 38 வயதில் மரணமானார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. அவரது சடலம் கரவனல்ல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.



அமெரிக்கா கதவடைக்கும் போது ஐரோப்பாவின் கதவு திறக்குமா?
[Monday 2025-04-07 05:00]

அமெரிக்காவினால் கதவுகள் அடைக்கப்படும் போது, ஐரோப்பிய ஒன்றியத்தின் தகவுகள் திறக்கப்படும் என்று எவராவது எண்ணினால் அது முற்றிலும் தவறாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.



வர்த்தக இடைவெளியை குறைக்க நாளை அமெரிக்காவுடன் பேச்சு!
[Monday 2025-04-07 05:00]

அமெரிக்காவின் பரிந்துரைக்கு அமைவாக, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக இடைவெளியைக் குறைப்பதற்கான ஒரு முன்மொழிவு செவ்வாய்க்கிழமை நடைபெறும் விசேட கலந்துரையாடலின் போது அந்த நாட்டின் அதிகாரிகளிடம் முன்வைக்கப்படும் என்று தொழில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்தார்.



பிரித்தானியாவுக்கான அரசாங்கத்தின் பதில் - கம்யூனிஸ்ட் கட்சி விரக்தி!
[Monday 2025-04-07 05:00]

இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தில் மனித உரிமை மீறப்பட்டுள்ளதாக தெரிவித்து ஓய்வுபெற்ற ஜென்ரல் சவேந்திர சில்வா, அட்மிரல் வசன்த கரண்ணாகொட ஜென்ரல் ஜகத் ஜயசூரிய மற்றும் கேணல் கருணா என அழைக்கப்படும் முன்னாள் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோருக்கு எதிராக பிரித்தானியா விதித்திருக்கும் தடையை வன்மையாக கண்டிக்கிறோம் பிரித்தானியாவின் இந்த நடவடிக்கைக்கு இலங்கை அரசாங்கத்தின் பதில் வெட்கப்படக்கூடியதாக இருக்கிறது என ஸ்ரீலங்கா கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.



தேர்தல் முறைப்பாடுகள் 600 ஐ தாண்டியது!
[Monday 2025-04-07 05:00]

வரவிருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பாக 74 புதிய முறைப்பாடுகள் பெறப்பட்ட நிலையில், மொத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை 600 க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.



யாழ். பல்கலைக்கழக மாணவனை சித்திரவதை செய்த இரு மாணவர்களுக்கு விளக்கமறியல்!
[Monday 2025-04-07 05:00]

யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞான பீட புதுமுக மாணவன் மீது தாக்குதல் மேற்கொண்டு சித்திரவதை புரிந்த குற்றச்சாட்டில் சிரேஷ்ட மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.



பூஸா சிறையில் தமிழ்க் கைதி கொலை- விசாரணை நடக்கிறதாம்!
[Monday 2025-04-07 05:00]

பூஸா சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் அறிவுறுத்தலின் பேரில் விரிவான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.



யாழ். நகரில் போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது!
[Monday 2025-04-07 05:00]

யாழ்ப்பாண நகரில் போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் யாழ் மாவட்ட குற்றத்த தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். யாழ் நகர் பகுதியில் போதை மாத்திரைகளின் பரவல் அதிகரித்திருப்பதாகவும், விற்பனை செய்யப்படுவதாகவும் கிடைத்த தகவலுக்கு அமைய கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.


Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Latika-Gold-House-2025
Airlinktravel-2020-01-01
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா