Untitled Document
May 2, 2025 [GMT]
நாடாளுமன்றம் வழி செய்தால் மட்டுமே மாகாண சபைத் தேர்தல்!
[Monday 2025-04-28 06:00]


மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவதற்கு தேவையான சட்ட ஏற்பாடுகளை பாராளுமன்றம் செய்து தரவேண்டும். நாம் இதற்காக தொடர்ந்து காத்துக் கொண்டிருக்கிறோம் என்று மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் சிவசுப்பிரமணியம் அச்சுதன் தெரிவித்தார்.

மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவதற்கு தேவையான சட்ட ஏற்பாடுகளை பாராளுமன்றம் செய்து தரவேண்டும். நாம் இதற்காக தொடர்ந்து காத்துக் கொண்டிருக்கிறோம் என்று மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் சிவசுப்பிரமணியம் அச்சுதன் தெரிவித்தார்.

  

முன்னைய பாராளுமன்றத்தில் முன்னாள் எம்.பி. சுமந்திரன் கொண்டுவந்த தனி நபர் பிரேரணை போன்ற ஒன்றை தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கொண்டு வந்து அதனை நிறைவேற்றினால் பழைய முறைமையில் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மாகாண சபைத் தேர்தல் தொடர்ந்தும் தாமடைந்து வருகின்ற நிலையில் அதற்கான நகர்வுகள் தொடர்பில் வினவிய போதே மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் இந்த விடயங்களை சுட்டிக்காட்டினார்.

‘‘ஒவ்வொரு முறையும் மாறி மாறி வருகின்ற அரசாங்கங்கள் இது தொடர்பான சட்ட ஏற்பாட்டை செய்து தருமாறு நாங்கள் கோரிக்கை விடுத்து வருகிறோம். ஒன்று எல்லை நிர்ணய அறிக்கையை நிறைவேற்றுங்கள். அல்லது பழைய முறைமையில் தேர்தலை நடத்துவதற்கு ஒரு பிரேரணையை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுங்கள்’’ இவ்வாறு குறிப்பிடுகிறார் சிவசுப்பிரமணியம் அச்சுதன்.

2017ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட புதிய கலப்பு தேர்தல் முறைமைக்கு அமைவான எல்லை நிர்ணய அறிக்கை பாராளுமன்றத்தில் நிராகரிக்கப்பட்டதால் புதிய முறைமையில் தேர்தல் நடத்த முடியாத சூழல் காணப்படுகிறது. அதேவேளை பழைய முறைமையில் நடத்த வேண்டுமாயின் பாராளுமன்றத்தில் பிரேரணை ஒன்று கொண்டு வந்து நிறைவேற்றப்பட வேண்டும். எனினும் கடந்த சில வருடங்களாகவே இந்த இரண்டு செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படாமல் இருக்கின்றன.

இந்நிலையில் இது தொடர்பில் மேலதிக தேர்தல் ஆணையாளர் சிவசுப்பிரமணியம் அச்சுதன் மேலும் குறிப்பிடுகையில்,

ஜனநாயகத்தின் விழுமியங்களை நாங்கள் பார்க்கின்ற போது, அதன் அடிப்படை தேர்தலாகும். இலங்கையில் நடைபெற ஏற்பாடாக இருக்கின்ற ஒவ்வொரு தேர்தலும் மிக முக்கியமானது. ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் என்பன ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். மாகாண சபைத் தேர்தல் நடைபெற வேண்டும். இந்தத் தேர்தலுக்கான காலப்பகுதிகளும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த வகையில் கடந்த 2014ஆம் ஆண்டு மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்ட பின்னர் இன்னும் நடத்தப்படவில்லை. மாகாண சபைகளின் காலம் முடிவடைந்தாலும் தேர்தல்கள் நடத்தப்படாமல் உள்ளது. இது ஜனநாயகத்துக்கு விரோதமான செயற்பாடு. மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

ஆனால் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவுக்கு சட்ட சிக்கல் உள்ளது. 2017ஆம் ஆண்டு மாகாண சபைத் தேர்தலை முறைமையை மாற்றி பாராளுமன்றத்தில் ஒரு சட்டத்தை நிறைவேற்றிவிட்டார்கள். தொகுதி மற்றும் விகிதாசார முறை என்ற கலப்பு முறைமையை தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

அந்த தேர்தல் முறைமைக்கு ஏற்ப தொகுதி எல்லைகள் நிர்ணயிக்கப்பட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டது. அந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இந்த அறிக்கை பாராளுமன்றத்தில் நிராகரிக்கப்பட்டது. இதில் விநோதமான செயல் என்றால் அந்த அறிக்கையை சமர்ப்பித்த அப்போதைய அமைச்சரே அதற்கு எதிராக வாக்களித்தார்.

பாராளுமன்றத்தில் தற்போது இரண்டு வழிமுறைகள் காணப்படுகின்றன. பழைய முறைமையில் தேர்தலை நடத்த ஒரு பிரேரணையைக் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும். அல்லது எல்லை நிர்ணய அறிக்கையை பாராளுமன்றம் ஏற்க வேண்டும். இதில் ஒன்றை விரைவாக செய்தால் மாகாண சபைத் தேர்தலை நடத்தலாம்.

இந்தப் பிரேரணையை நிறைவேற்றுவதற்கு பாராளுமன்றத்தில் சாதாரண பெறும்பான்மை போதுமாகும். குறித்த பிரேரணையை ஆளுங்கட்சியே செய்ய வேண்டும் என்றில்லை. பாராளுமன்றத்தில் எவரும் கொண்டு வரலாம் என்று குறிப்பிட்டார்.

>
  
   Bookmark and Share Seithy.com



தந்தை செல்வாவின் கொள்கையுடன் தமிழரசுடன் இணைந்து பயணிக்கத் தயார்!
[Friday 2025-05-02 05:00]

தமிழ் அரசுக் கட்சி தலைமைத்துவம் தந்தை செல்வா அவர்களது கொள்கையுடன் பயணிக்கத் தயாராக இருந்தால் அவர்களுடன் பேசுவதற்கும் இணைந்து செயலாற்றவும் நாம் தயார் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.



காணி சுவீகரிப்பை நிறுத்தாவிடின் யாழ்ப்பாணத்தில் அனுர கால் வைக்க முடியாது!
[Friday 2025-05-02 05:00]

மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு மாறாக காணிகளை சுவீகரிப்பதை அனுர அரசாங்கம் உடனடியாக நிறுத்திக் கொள்ளவேண்டும். குறிப்பாக காணி சுவீகரிக்கும் வர்த்தமானியை உடனடியாக மீளப்பெற வேண்டும். இல்லாவிட்டால் ஜனாதிபதி அனுரவை யாழ் மண்ணிற்குள் கால் வைக்க முடியாமல் செய்வோம் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.



பாதுகாப்பு அதிகாரி இடமாற்றம் - ரணில் விளக்கம்!
[Friday 2025-05-02 05:00]

பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ள ஒருவரிடம் தொலைபேசியில் பேச வேண்டுமெனில் அதற்கான அனுமதியைப் பெற வேண்டியது அவசியமாகும். அந்த அடிப்படையிலேயே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு பிரிவினரால் குற்றப்புலனாய்வுப்பிரிவின் ஊடாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவனேசதுரை சந்திரகாந்தனை தொடர்பு கொள்ள முயற்சிக்கப்பட்டது.



பஸ்கள் நேருக்கு நேர் மோதல் - 2 பேர் பலி!
[Friday 2025-05-02 05:00]

மின்னேரியா - ஹபரணை வீதியில், இராணுவ முகாமுக்கு முன்னால் இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. குறித்த விபத்தில் 2 பேர் உயிரிழந்ததுடன் 40 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.



நெல்லியடியில் தமிழ் தேசிய பேரவையின் மேதின கூட்டம்!
[Friday 2025-05-02 05:00]

தமிழ் தேசிய பேரவையின் மே தின எழுச்சி கூட்டம் நேற்று மாலை 6.30 மணியளவில் நெல்லியடி மாலி சந்தியில் அமைந்துள்ள மைதானத்தில் இடம்பெற்றது.



திருமலையில் பிக்குவின் பொய் முறைப்பாட்டில் தமிழ் உணர்வாளர் கைது!
[Friday 2025-05-02 05:00]

திருகோணமலையில் தமிழ் உணர்வாளர் கைதுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.



நல்லை ஆதீனம் காலமானார்!
[Friday 2025-05-02 05:00]

நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் நேற்று வியாழக்கிழமை இரவு இறையடி சேர்ந்தார். கொழும்பில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த நிலையிலேயே சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது இறுதிக்கிரியைகள் இன்று (02) மாலையே நடைபெறவுள்ளன



வேறு ஜனாதிபதிகளுக்கு வாய்ப்பே இல்லை!
[Friday 2025-05-02 05:00]

ஓகஸ்ட் அல்லது டிசம்பரில் ஜனாதிபதியாக வேண்டும் என்று கனவு காண்பவர்களுக்கு தங்கள் திட்டங்களை மறுபரிசீலனை செய்யுமாறு தெளிவான செய்தியை அனுப்பி ஆயிரக்கணக்கான மக்கள் காலி முகத்திடலில் கூடியுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.



யாழ்ப்பாணத்தில் கூட்டு மேதினப் பேரணி! Top News
[Thursday 2025-05-01 18:00]

தொழிற்சங்கங்கள், வெகுஜன மற்றும் சிவில் அமைப்புகளுடன் இலங்கை ஆசிரியர் சங்கம் இணைந்து நடாத்திய கூட்டு மே தினம் பேரணி இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.



ரணிலின் பிரதான பாதுகாப்பு அதிகாரி காங்கேசன்துறைக்கு மாற்றம்!
[Thursday 2025-05-01 18:00]

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பிரதான பாதுகாப்பு அதிகாரியான பொலிஸ் பரிசோதகர் அசோக்க ஆரியவன்ச உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் யாழ்ப்பாணம் காங்கேசன்துறைக்கு பணி இடமாற்றம் செய்ய பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது.



அதிகரித்துவரும் வாகனத் திருட்டுக்கு எதிராக ஒன்ராறியோ அரசு துணிச்சலான நடவடிக்கை!
[Thursday 2025-05-01 18:00]

திறப்பு இல்லாத உள்நுழைவுத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் குற்றவாளிகளை இலக்காகக் கொண்டு அதிகரித்து வரும் வாகனத் திருட்டுகளுக்கு எதிரான போராட்டத்தை ஒன்ராறியோ ஒரு புதிய சட்டமன்றத் திட்டத்துடன் முடுக்கிவிடுகிறது.



கூரை வேய்ந்து கொண்டிருந்தபோது தவறி விழுந்தவர் மரணம்!
[Thursday 2025-05-01 18:00]

வீட்டின் கூரையை வேய்ந்து கொண்டிருந்தபோது தவறி விழுந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று உயிரிழந்தார். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த 60 வயதுடையவரே உயிரிழந்துள்ளார். இந்த நபர் கடந்த 20ஆம் திகதி புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள வீடொன்றின் கூரையை வேய்ந்து கொண்டிருந்தவேளை, தவறி விழுந்து படுகாயமடைந்துள்ளார்.



காஷ்மீர் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு யாழ்ப்பாணத்தில் அஞ்சலி!
[Thursday 2025-05-01 18:00]

இந்தியாவின் ஜம்மு – காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வொன்று யாழ்ப்பாணத்தில் நேற்று புதன்கிழமை (30) நடைபெற்றது.



யாழ்ப்பாணத்தில் 40.7 ஏக்கர் காணிகள் விடுவிப்பு!
[Thursday 2025-05-01 18:00]

யாழ் மாவட்டத்தில் இராணுவத்தின் பயன்பாட்டில் இருந்து வந்த 40.7 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்காக இன்று (01) ஒப்படைக்கப்பட்டன.



உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அரசாங்கத்துக்கு பாடம் கற்பிக்க வேண்டும்!
[Thursday 2025-05-01 18:00]

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கு வாக்களித்து, அரசாங்கத்தக்கு சிவப்பு எச்சரிக்கையை வழங்குவதற்கு மக்கள் அணிதிரள வேண்டும்" என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அறைகூவல் விடுத்துள்ளார்.



முன்னாள் ஜனாதிபதிகளின் 3 தொலைபேசிகள் கட்!
[Thursday 2025-05-01 18:00]

முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, மஹிந்த ராஜபக்க்ஷ, மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்க்ஷ மற்றும் ரணில் விக்ரமசிங்கவிற்கு மற்றொரு வரப்பிரசாதம் அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது.



தொல்புரம் சிறுமி துஷ்பிரயோகம்- பிரதான சந்தேக நபர் கைது!
[Thursday 2025-05-01 18:00]

யாழ்ப்பாணம் , வட்டுக்கோட்டை தொல்புரம் பகுதியில் தவறான நடத்தைக்கு உட்படுத்தியதாக கூறப்படும் இரண்டு பெண்கள் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.



பல்கலைக்கழக மாணவரின் திடீர் மரணம்- கல்வி அமைச்சு அறிக்கை!
[Thursday 2025-05-01 18:00]

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவரின் திடீர் மரணத்துக்கான காரணம் பகிடிவதை என நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அந்த மாணவரின் மரணம் குறித்து விசாரிக்க ஒரு விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.



எரிபொருள் விலைகள் குறைப்பு!
[Thursday 2025-05-01 06:00]

நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருளின் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 299 ரூபாவாக இருந்த ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 6 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 293 ரூபாவாகும்.



கொழும்பில் 15 மேதினப் பேரணிகள்!
[Thursday 2025-05-01 06:00]

இன்று சர்வதேச தொழிலாளர் தினத்தை கொண்டாட அனைத்து தரப்பினரும் தற்போது தயாராகி வருகின்றனர். இதற்கமைய தேசிய மக்கள் சக்தி தனது மே தினக் கூட்டத்தை காலி முகத்திடலில் நடத்த திட்டமிட்டுள்ளது.


Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Rajeef sebarasha 2023/04/19
Latika-Gold-House-2025
Airlinktravel-2020-01-01
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா