Untitled Document
May 27, 2025 [GMT]
24 மணிநேர கடவுச்சீட்டு சேவை 3 நாட்களுக்கு நிறுத்தம்!
[Friday 2025-05-02 17:00]


ஒருநாள் சேவையில் கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்காக 24 மணி நேரம் செயற்படும் சேவை எதிர்வரும் 05, 06 மற்றும் 07 ஆம் திகதிகளில் நிறுத்தப்படும் என பதில் குடிவரவு குடியகல்வு ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

ஒருநாள் சேவையில் கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்காக 24 மணி நேரம் செயற்படும் சேவை எதிர்வரும் 05, 06 மற்றும் 07 ஆம் திகதிகளில் நிறுத்தப்படும் என பதில் குடிவரவு குடியகல்வு ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

  

எவ்வாறாயினும், குறித்த திகதிகளில் ஏனைய சேவைகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இடம்பெறும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சித் தேர்தலை முன்னிட்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பதில் குடிவரவு குடியகல்வு ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

  
   Bookmark and Share Seithy.com



காணி சுவீகரிப்பு வர்த்தமானியை மீளப் பெறுவதாக அரசாங்கம் அறிவிப்பு!
[Tuesday 2025-05-27 18:00]

வடமாகாண காணிதொடர்பான வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் மீளப்பெற்றுள்ளது. அரசாங்கத்தினால் காணி நிர்ணயக் கட்டளைச் சட்டத்தின் 4 ஆம் பிரிவின்கீழ் 28.03.2025 ஆம் திகதியிடப்பட்டு 2430 இலக்கமிடப்பட்டு பிரசுரிக்கப்பட்டிருக்கும் வர்த்தமானி அறிவித்தலில் வடக்கு மாகாணத்தில் மொத்தமாக 5940 ஏக்கர் காணிகளை 3 மாதகாலத்துக்குள் எவரும் உரிமை கோராதுவிடின் அவை அரச காணிகளாகப் பிரகடனப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



திருகோணமலையில் 5 சபைகளில் தமிழரசு - முஸ்லிம் காங்கிரஸ் கூட்டாக ஆட்சி நடத்த இணக்கம்!
[Tuesday 2025-05-27 18:00]

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள ஐந்து உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைக்க இலங்கை தமிழ் அரசு கட்சிக்கும் ஶ்ரீலங்கா முஸ்லீம் காங்ரஸிற்கும் இடையில் இன்று ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.



இலங்கை சிறுவனின் வயிற்றில் உலகின் மிக நீளமான குரங்கு நாடாப் புழு!
[Tuesday 2025-05-27 18:00]

குரங்கு நாடாப்புழு என அறியப்படும் பெர்டியெல்லா இனத்தைச் சேர்ந்த உலகின் மிக நீளமான நாடாப்புழு ஒன்றை வைத்திய ஆராய்ச்சி ஸ்தாபனத்தினால் (MRI) ஒட்டுண்ணியியல் ஆய்வுக் குழு கண்டுப்பிடித்துள்ளது.



ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தார் சுமந்திரன்!
[Tuesday 2025-05-27 18:00]

வடமாகாண காணி தொடர்பான வர்த்தமானியை மீளபெற்றமைக்காக ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கவிற்கும் அமைச்சரவைக்கும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளருமான எம் ஏ சுமந்திரன் நன்றியை தெரிவித்துள்ளார்.



பாதாள உலக குற்றவாளிகள் போலிக் கடவுச்சீட்டுகள் வழங்கிய குடிவரவு உதவிக் கட்டுப்பாட்டாளர் கைது!
[Tuesday 2025-05-27 18:00]

பாதாள உலகக் குற்றவாளியான மன்தினு பத்மசிறி எனப்படும் 'கெஹெல்பத்தர பத்மே'வுக்கு மூன்று போலி கடவுச்சீட்டுகளை வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் உதவிக் கட்டுப்பாட்டாளர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.



49 வகையான கிரீம்களில் ஆபத்தான உலோகங்கள்!
[Tuesday 2025-05-27 18:00]

இலங்கை சந்தையில் கிடைக்கும் பல சரும கிரீம்கள் மற்றும் லோஷன்களில் ஆபத்தான அளவில் அதிக அளவு கன உலோகங்கள் இருப்பது ஆய்வக சோதனைகளில் தெரியவந்ததை அடுத்து, நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.



40 அரசியல் பிரமுகர்களை கைது செய்ய பட்டியல் தயாரித்துக் கொடுத்த ஜனாதிபதி செயலகம்!
[Tuesday 2025-05-27 18:00]

லஞ்சம் மற்றும் ஊழல் குறித்த சாத்துதல்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட உள்ள 40 அரசியல்வாதிகளின் பட்டியலை ஜனாதிபதி செயலகம் வெளியிட்டுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச குற்றம் சாட்டியுள்ளார்.



அரச சேவையில் 15,073 வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கு அனுமதி!
[Tuesday 2025-05-27 18:00]

அரச சேவைக்கான ஆட்சேர்ப்பு செயன்முறையை மீளாய்வு செய்தல் மற்றும் ஆளணி முகாமைத்துவத்துக்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவின் விதந்துரைகளை அமுல்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.



ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டு. அணியில் பிளவு- இரு முக்கிய பிரமுகர்கள் விலகல்!
[Tuesday 2025-05-27 18:00]

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் அருள்ராஜ் ஜெயகாந்தன் மற்றும் மாவட்ட மகளீர் அணி செயலாளர் ரவீந்திரநாதன் கண்ணகி ஆகிய இருவரும் கட்சியில் இருந்து இன்று விலகுவதாக அறிவித்துள்ளனர்.



மோசடியான முறையில் சொத்துக் குவித்த மேர்வின் சில்வாவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்
[Tuesday 2025-05-27 18:00]

மோசமாயான முறையில் 15 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்து மற்றும் பணத்தை சேர்த்ததாகக் கூறப்படும் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிராக, வழக்கு, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் லஞ்சம் மற்றும் ஊழல் குறித்த சாத்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவால், வழக்குத் தாக்கல் செய்ய அதி குற்றச்சாட்டு பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.



இன்று அறிவிப்பு வெளியாகா விட்டால் நாளை பாரிய போராட்டம்!
[Tuesday 2025-05-27 06:00]

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய கூட்டத்தில் வடமாகாண காணிகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை நீக்குவது குறித்து ஏதேனும் அறிவிப்புக்கள் வெளியிடப்படுகின்றவா என அவதானிப்போம். அவ்வாறு வெளியிடப்படாதவிடத்து நாளைய தினம் (28) மாபெரும் மக்கள் போராட்டத்தை முன்னெடுப்பதற்குரிய ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படும் என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.



புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் எதற்கு?- தமிழ் தலைவர்கள் கேள்வி.
[Tuesday 2025-05-27 06:00]

நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தி வரும் நிலையில் புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தை அநுரகுமார தலைமையிலான அரசாங்கம் எதற்காக இயற்றுவதற்கு முயற்சிக்கின்றது என்று தமிழ்த் தலைவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.



ஜனாதிபதி அனுரவைச் சந்தித்தார் நியூசிலாந்து பிரதிப் பிரதமர்!
[Tuesday 2025-05-27 06:00]

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து பிரதிப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான வின்சென்ட் பீட்டர்ஸுக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (26) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.



கொழும்பு மாநகரசபை ஆட்சியை ஐக்கிய மக்கள் சக்தி கைப்பற்றும்!
[Tuesday 2025-05-27 06:00]

கொழும்பு மாநகரசபையின் ஆட்சியை எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் ஐக்கிய மக்கள் சக்தி கைப்பற்றும். எதிர்வரும் 2ஆம் திகதி அதனை கண்டுகொள்ளலாமென ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.



அடுப்புக்கு மண்ணெண்ணெய் ஊற்றியதால் தீக்காயம் அடைந்த இளம்பெண் மரணம்!
[Tuesday 2025-05-27 06:00]

சமையலில் ஈடுபட்டிருந்த போது அடுப்புக்கு மண்ணெண்ணெய் ஊற்றி தீ மூட்ட முற்பட்ட இளங்குடும்பப் பெண் ஒருவர் தீயில் எரிந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். புலவர்வீதி, நவாலி வடக்கு மானிப்பாயைச் சேர்ந்த கஜன் தனுஷா (வயது 23) என்ற ஒரு வயது குழந்தையின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.



அரச உத்தியோகத்தர்களை அச்சுறுத்தும் ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்!- நிரோஷ் குற்றச்சாட்டு.
[Tuesday 2025-05-27 06:00]

உள்ளூராட்சி மன்றங்களில் உத்தியோகத்தர்களால் மேற்கொள்ளப்படும் உத்தியோகபூர்வ நடவடிக்கைகளை திட்டமிட்டு திரிவுபடுத்தும் வகையில் செயற்பட்டு மக்களை பிழையாக வழிநடத்தி அரச உத்தியோக்தரின் தொழில் சுதந்திரத்திலும் செயற்பாடுகளிலும் தடை ஏற்படுத்தவதை அரசாங்கம் உடன் நிறுத்த வேண்டும் என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.



இன்று நள்ளிரவு வரை திறந்திருக்கும் தேர்தல் அலுவலகங்கள்!
[Tuesday 2025-05-27 06:00]

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் செலவுகள் ஒழுங்குபடுத்தல் சட்டத்தின் கீழ் சமர்ப்பிக்கப்பட வேண்டிய வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டிய இறுதி தினம் இன்று நள்ளிரவுடன் முடிவடைய உள்ளதென தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.



சிக்குன்குனியா ஆபத்து - இலங்கை செல்லும் பிரித்தானியர்களுக்கு எச்சரிக்கை!
[Tuesday 2025-05-27 06:00]

இலங்கையில் சிக்குன்குனியா நோய் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், பிரித்தானியா அரசாங்கம் தமது நாட்டு பிரஜைகளுக்கு பயண எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி, இலங்கை செல்லும் பிரித்தானிய பிரஜைகள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அந்நாட்டு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது. மே 23ஆம் திகதி தனது பயண எச்சரிக்கையை புதுப்பித்துள்ள பிரித்தானியா அரசாங்கம் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளது.



நாட்டை ஆளும் பாதாள உலகம்!
[Tuesday 2025-05-27 06:00]

பொதுமக்களைக் கொல்வது நாட்டில் ஒரு சாதாரண நிகழ்வாகிவிட்டது, இப்போது பாதாள உலகம் நாட்டை ஆளுகிறது என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.



கனகராயன்குளத்தில் மூழ்கி இளைஞன் மரணம்!
[Tuesday 2025-05-27 06:00]

வவுனியா - கனகராயன்குளம் குளத்தில் மூழ்கி இளைஞர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவத்தில் அதேபகுதியை சேர்ந்த ம. ஈழவன் வயது 23 என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மேலும் குறித்த இளைஞர் நேற்று மாலை கனகராயன்குளப்பகுதியில் மீன்பிடிப்பதற்காக சென்றுள்ளார்.இதன்போது குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.


Airlinktravel-2020-01-01
Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Latika-Gold-House-2025
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா