Untitled Document
May 6, 2025 [GMT]
ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் பாதுகாப்பு அமைச்சுக்கு விஜயம்!
[Monday 2025-05-05 07:00]


இராஜதந்திர உறவுகள் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்புகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட உத்தியோகபூர்வ உயர் மட்ட விஜயத்தை மேற்கொண்டு ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் நகதானி ஜென் நேற்று  நாட்டுக்கு வருகை தந்தார்.

இராஜதந்திர உறவுகள் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்புகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட உத்தியோகபூர்வ உயர் மட்ட விஜயத்தை மேற்கொண்டு ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் நகதானி ஜென் நேற்று நாட்டுக்கு வருகை தந்தார்.

  

ஜப்பானிய தூதுவர் அகியோ இசோமாடா மற்றும் சர்வதேச விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் கௌரவ கனோ கோஜி ஆகியோருடன், ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் இன்று (4) காலை கோட்டே, ஸ்ரீ ஜெயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் அமைந்துள்ள இலங்கை பாதுகாப்பு அமைச்சுக்கு விஜயம் செய்தார்.

பாதுகாப்பு அமைச்சில் அவருக்கு இலங்கை இராணுவத்தின் சம்பிரதாய மரியாதை அணிவகுப்பொன்று அளிக்கப்பட்டது. பின்னர் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) அவரை வரவேற்றார்.

அதனைத் தொடர்ந்து நடந்த கலந்துரையாடலின் போது, ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவதிலும் ஒத்துழைப்பை வளர்ப்பதிலும் கவனம் செலுத்தி, இரு தரப்பினரும் தற்போதுள்ள இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவத்தை வலியுறுத்தினர். அனர்த்த முகாமைத்துவம், எல்லை தாண்டிய மனித கடத்தலைத் தடுப்பது மற்றும் கடலில் அரசு அல்லாதவர்களின் சட்டவிரோத நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடுவது போன்ற முக்கியமான விடயங்களில் ஒத்துழைப்பின் முக்கியத்துவமும் இதன்போது எடுத்துரைக்கப்பட்டது.

கூட்டு முயற்சிகள் மூலம் அமைதி மற்றும் செழிப்பை மேம்படுத்தும் வகையில், பாதுகாப்பான மற்றும் நிலையான இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்திற்கான தங்கள் பொதுவான தொலைநோக்குப் பார்வையை இரு நாடுகளும் மீண்டும் வலியுறுத்தின.

இலங்கை தூதுக்குழுவின் தலைவரான பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) அவர்கள், அனர்த்த முகாமைத்துவ, கடலோர பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் பயிற்சி முயற்சிகளில் ஜப்பானின் நீண்டகால மற்றும் தொடர்ச்சியான உதவிக்கு நன்றி தெரிவித்தனர். விசேடமாக இலங்கையின் கடல்சார் கண்காணிப்பு, வானிலை ஆராய்ச்சி துறை மற்றும் கடலோர பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவதில் ஜப்பானின் உதவியையும் அவர் பாராட்டினார்.

ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் நகதானி, இலங்கையின் நீண்டகால கூட்டாண்மைக்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்ததோடு, உளவுத் தகவல் பகிர்வு, அபாயகரமான மற்றும் தீங்கு விளைவிக்கும் பொருட்கள் மற்றும் சைபர் பாதுகாப்பு குறித்த சிறப்பு பயிற்சி, கடல்சார் சட்டம் மற்றும் தேடல் மற்றும் மீட்பு பணிகள் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பு வழங்க விருப்பம் தெரிவித்தார்.

ஜப்பானிய தூதுக்குழுவில் பாதுகாப்பு அமைச்சின் சிறப்பு ஆலோசகர் லெப்டினன்ட் ஜெனரல் பன்ஷோ கொய்ச்சிரோ (ஓய்வு), கூட்டுப் பணியாளர் பிரதி தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் மட்சுனாகா கோஜி மற்றும் பணிப்பாளர் நாயகங்கள் மற்றும் பாதுகாப்பு ஆலோசகர் உட்பட தூதரக அதிகாரிகளும் அடங்கினார்.

பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு), தேசிய புலனாய்வு பிரதானி உட்பட இலங்கை பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள், முப்படை தளபதிகள், அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் இலங்கை கடலோர பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர்கள் நாயகம் மற்றும் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் கிழக்காசிய இயக்குநர் ஜெனரல் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இதன் பின்னர் ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் பொரளை பொது மயானத்தில் இரண்டாம் உலகப் போரின் போது இலங்கையில் இறந்த ஜப்பானிய பிரஜைகளை நினைவுகூரும் வகையில் மலர் அஞ்சலி செலுத்தினார்.

  
   Bookmark and Share Seithy.com



இன்று உள்ளூராட்சித் தேர்தல்!
[Tuesday 2025-05-06 06:00]

உள்ளூராட்சித் தேர்தல் வாக்களிப்பு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகிறது. மாலை 4 மணிவரை வாக்களிப்பு இடம்பெறவுள்ளது. 339 உள்ளூராட்சி சபைகளுக்கு நடைபெறும் இந்த தேர்தலில் 70ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.



வாக்களிப்பதை, வாக்குச்சீட்டை பதிவிடுவது குற்றம்!
[Tuesday 2025-05-06 06:00]

உள்ளூராட்சி சபைத் தேர்தலுடன் தொடர்புடைய நடவடிக்கைகளை புகைப்படம் அல்லது காணொளி எடுத்து சமூக ஊடகங்களில் பதிவிடுவது தேர்தல் சட்டங்களை மீறும் செயல்களாகும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எனவே, வாக்களிக்கும் சந்தர்ப்பங்களையும் வாக்குச் சீட்டுகளையும் புகைப்படம் அல்லது காணொளி எடுத்து சமூக ஊடகங்களில் பதிவிடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு தேர்தல் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.



அமைதிக்காலத்தில் பிரசாரத்துக்கு தூண்டிய பிரதமர்- வசமாக மாட்டினார்!
[Tuesday 2025-05-06 06:00]

பிரதமர் ஹரிணி அமரசூரிய தனது கட்சியின் ஆதரவாளர்களை தேர்தல் பிரச்சார அமைதிக் காலத்திலும் பிரச்சாரம் செய்யச் சொன்னதன் மூலம் தேர்தல் சட்டங்களை மீறியதாக எழுந்த முறைப்பாட்டை விசாரிக்குமாறு இலங்கையின் முக்கிய தேர்தல் கண்காணிப்பு அமைப்பான சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கை (PAFFREL) தேர்தல் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.



நெடுந்தீவில் வேட்பாளர் மீது தாக்குதல்!
[Tuesday 2025-05-06 06:00]

நெடுந்தீவு பிரதேச சபைக்கான தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் மீது நெடுந்தீவில் திங்கட்கிழமை (5) தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. நெடுந்தீவு பிரதேச சபை வேட்பாளரான முருகேசு அமிர்தமந்திரன் என்பவரே தாக்குதலுக்கு இலக்காகியுள்ளர். தாக்குதலுக்கு இலக்கானவர், தலையில் காயமடைந்த நிலையில் நெடுந்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.



புலிகளிடம் கைப்பற்றிய தங்கம்- விசாரணைக்கு உத்தரவு!
[Tuesday 2025-05-06 06:00]

இலங்கை இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தங்கப் பொருட்கள் அடங்கிய தங்கக் கையிருப்பு குறித்து மேலும் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி, இலங்கை மத்திய வங்கி, தேசிய நகை ஆணையம் மற்றும் பல அரசு நிறுவனங்களுக்கு தொடர்ச்சியான உத்தரவுகளை, திங்கட்கிழமை (05) பிறப்பித்தார்.



இன்று 11 மணி வரை மட்டுமே வங்கிகள் திறந்திருக்கும்!
[Tuesday 2025-05-06 06:00]

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்களிப்பு நாளான, செவ்வாய்க்கிழமை (06) அனைத்து வங்கிகளும் காலை 11.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என்று இலங்கை வங்கி ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. அனைத்து வங்கிகளும் காலை 8.30 மணிக்குத் திறக்கப்படும். இரண்டரை மணி நேரம் திறந்திருக்கும் என்று சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.



அதிகாலையில் சூறைக்காற்று, இடிமின்னலுடன் மழை! - 8குடும்பங்கள் பாதிப்பு.
[Tuesday 2025-05-06 06:00]

யாழ்ப்பாணத்தில் நேற்று அதிகாலை கடும் காற்று, இடி மின்னலுடன் பெய்த மழையினால், 8 குடும்பங்களைச் சேர்ந்த 26பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.



காணாமல்போன குடும்பஸ்தர் நந்திக்கடல் களப்பில் சடலமாக மீட்பு!
[Tuesday 2025-05-06 06:00]

மாத்தளன் நந்திகடல் களப்பில் இருந்து திங்கட்கிழமை (05) இளம் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்டப்டுள்ளார். சடலமாக மீட்கப்பட்டவர் முல்லைத்தீவு அம்பலவன் பொக்கணையை வசிப்பிடமாக கொண்ட 27 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஒருவர் ஆவார். இவர் மூன்று நாட்களாக காணாமல் போயுள்ள நிலையில் நேற்றைய தினம் நந்திக்கடல் களப்பிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.



வியட்நாமுடன் 4 ஒப்பந்தங்கள் கைச்சாத்து!
[Tuesday 2025-05-06 06:00]

இலங்கை மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு இடையே பல துறைகள் தொடர்பான நான்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் ஒரு உடன்பாட்டு ஒப்பந்தத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவோங் ஆகியோர் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது. வியட்நாம் ஜனாதிபதி மாளிகையில் இரு நாடுகளுக்கு இடையே நடைபெற்ற இருதரப்பு கலந்துரையாடல்களைத் தொடர்ந்து இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் உடன்பாட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டது.



வவுனியாவில் திருடப்பட்ட 35 பவுண் நகைகள் மீட்பு!
[Tuesday 2025-05-06 06:00]

வவுனியாவில் 80 இலட்சம் ரூபாய் பெறுமதியான 35 பவுன் தங்க நகைகளை மீட்டுள்ளதாக நெளுக்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.



சுமந்திரனுக்கு எதிராக முறைப்பாடு - அரச அதிகாரத்தை வைத்து அச்சுறுத்தும் என்பிபி!
[Monday 2025-05-05 07:00]

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனுக்கு எதிராக தேசிய மக்கள் சக்தியினரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட தேர்தல் அலுவலகத்திலும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திலும் தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட குழு உறுப்பினர் பூலோகராசா சிறீதரன் என்பவரால் குறித்த முறைப்பாடு இன்று பதிவு செய்யப்பட்டது.



களுத்துறையில் வேட்பாளர் மீது சூடு!
[Monday 2025-05-05 07:00]

இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் களுத்துறைப் பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த வேட்பாளர் களுத்துறை, நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். எவ்வாறாயினும், அவரது நிலைமை மோசமாக இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது.



வாக்களிப்பு நிலையங்களைத் தயார்படுத்தும் பணிகள் ஆரம்பம்!
[Monday 2025-05-05 07:00]

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நிலையங்களைத் தயார்படுத்தும் பணிகள் இன்று காலை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நாளை காலை 7 மணிக்குத் ஆரம்பமாகி மாலை 4 மணி வரை நாடளாவிய ரீதியாக 13,759 வாக்களிப்பு நிலையங்களில் வாக்குப்பதிவு இடம்பெற உள்ளது.



பருத்தித்துறை கடற்கரையில் பெண்ணின் சடலம்!
[Monday 2025-05-05 07:00]

பருத்தித்துறை மூர்க்கம் கடற்கரையில் இளம் குடும்பப் பெண் ஒருவரின் சடலம் நேற்று பிற்பகல் கரையொதுங்கியுள்ளது. சடலமாக கரை ஒதுங்கியவர் தும்பளை கிழக்கை சேர்ந்த 36 வயதுடைய பெண்ணொருவர் என பொலிஸார் தெரிவித்தனர்.



பகிடிவதையால் மாணவன் மரணம் - நான்கு மாணவர்கள் கைது!
[Monday 2025-05-05 07:00]

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் மரணம் தொடர்பில் பல்கலை மாணவர்கள் நால்வர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தின் இரண்டாம் வருட மாணவன் ஒருவர் தனது வீட்டில் உயிர் மாய்த்துக் கொண்டார்.



ஜனாதிபதி அனுர வியட்நாமில் வழிபாடு!
[Monday 2025-05-05 07:00]

வியட்நாமுக்கு அரச விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, நேற்று தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய பௌத்த விகாரைகளில் ஒன்றான பாய் டின் (Bai Dinh) விகாரைக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டு ஆசி பெற்றார்.



தரமற்ற டின் மீன் உற்பத்தி செய்த இடம் முற்றுகை!
[Monday 2025-05-05 07:00]

தயாரிப்பு நிறுவனமொன்றின் பெயர் மற்றும் தரநிலை சின்னத்தை போலியாக பயன்படுத்தி, டின் மீன் உற்பத்தியை முன்னெடுத்து வந்த இடமொன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. நீர்கொழும்பு, தலாஹேன, தூங்கல்பிட்டிய பகுதியில் டின் மீன்கள் தயாரிக்கப்படுவதாக நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு கிடைத்த முறைப்பாட்டைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் சுற்றிவளைக்கப்பட்டது.



கிணற்றில் தவறி வீழ்ந்து பெண் மரணம்!
[Monday 2025-05-05 07:00]

கிணற்றுக்குள் தவறி வீழ்ந்து குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். காரைநகர், மருதபுரத்தைச் சேர்ந்த திருச்செந்தில் சரோஜாதேவி (வயது-58) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நேற்று கிணற்றில் குளிக்கச் சென்றபோது, கிணற்று மேடையில் இருந்த பாசி வழுக்கி பாதுகாப்புக் கட்டில்லாத கிணற்றுக்குள் தவறி வீழ்ந்துள்ளார்.



தேர்தலுக்குப் பின் யாருடனும் கூட்டு இல்லை!
[Monday 2025-05-05 07:00]

உள்ளூராட்சி மன்ற தேர்தலின் பின் எந்தவொரு அரசியல் கட்சி அல்லது சுயேட்சைக்குழுவுடன் கூட்டணி வைத்துக் கொள்ளப் போவதில்லை என்று மொட்டுக் கட்சி அறிவித்துள்ளது.



நகைகளை அரசுடைமையாக்கி தமிழ் மக்களின் சொத்துக்களை கபளீகரம் செய்யக்கூடாது!
[Sunday 2025-05-04 19:00]

எமது மக்களின் முதலீடாகவும் அவர்களின் கலாச்சார அடையாளமாகவும் காணப்படும் தங்க நகைகளை அரசுடைமையாக்காது உரியவர்களிடமே ஒப்படைக்க தற்போதைய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.


Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Latika-Gold-House-2025
Airlinktravel-2020-01-01
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Rajeef sebarasha 2023/04/19
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா