Untitled Document
May 8, 2025 [GMT]
170 சபைகளில் என்பிபி ஆட்சியமைக்க முடியாது!
[Thursday 2025-05-08 05:00]



அதிகாரம் எதிர்க்கட்சிகளிடமே உண்டு. 170 மன்றங்களில் அரசாங்கத்தால் ஆட்சியமைக்க முடியாது. கட்சி பேதங்களை மறந்து சகல எதிர்க்கட்சிகளுடனும் இணைந்து 170 உள்ளுராட்சிமன்றங்களை அமைப்பதற்கு தயார் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.

அதிகாரம் எதிர்க்கட்சிகளிடமே உண்டு. 170 மன்றங்களில் அரசாங்கத்தால் ஆட்சியமைக்க முடியாது. கட்சி பேதங்களை மறந்து சகல எதிர்க்கட்சிகளுடனும் இணைந்து 170 உள்ளுராட்சிமன்றங்களை அமைப்பதற்கு தயார் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.

  

கொழும்பிலுள்ள சுதந்திர கட்சி தலைமையகத்தில் புதன்கிழமை (7) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரசாங்கம் கூறுவது பொய் என்பது தமக்கு தெரியும் என்பதை மக்கள் இந்த தேர்தலில் உணர வைத்திருக்கின்றனர். பாராளுமன்றத்தில் 159 பெரும்பான்மையைக் கொண்டுள்ள இந்த அரசாங்கத்துக்கு மக்கள் இந்த செய்தியை வழங்கியிருக்காவிட்டால் அடுத்த 4 ஆண்டுகளுக்கும் இவர்களின் பொய்கள் தொடர்ந்திருக்கும். எவ்வாறிருப்பினும் மக்கள் அதற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கின்றனர்.

தற்போது அரசாங்கம் பெற்றுக் கொண்ட வாக்குகள் வெறும் இலக்கங்களாக மாத்திரமே உள்ளன. அதிகாரம் எதிர்க்கட்சிகளிடமே உண்டு. 164 உள்ளுராட்சிமன்றங்களில் மாத்திரமே அரசாங்கத்துக்கு ஆட்சியமைக்க முடியும். 170 மன்றங்களில் அரசாங்கத்தால் ஆட்சியமைக்க முடியாது. ஜனாதிபதியும், பிரதமரும் மக்களுக்கு அச்சுறுத்தல் விடுத்த போதிலும், அவை நடைமுறையில் சாத்தியப்படவில்லை.

ஜே.வி.பி. செயலாளர் டில்வின் சில்வா வேறு எந்த கட்சிகளின் ஆதரவும் தமக்கு தேவையில்லை என்று குறிப்பிட்டுள்ளார். அவர்கள் கோரினாலும் ஆதரவளிப்பதற்கு நாம் தயாராக இல்லை என்பதை டில்வின் சில்வாவிடம் தெரிவித்துக் கொள்கின்றோம். பொய் கூறி மக்களை ஏமாற்றும் உங்களுடன் இணைய வேண்டிய தேவைய எமக்கில்லை. ஆனால் கட்சி பேதங்களை மறந்து சகல எதிர்க்கட்சிகளுடனும் இணைந்து 170 உள்ளுராட்சிமன்றங்களை அமைப்பதற்கு நாம் தயார்.

கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் 67 இலட்சம் வாக்குகளை அரசாங்கம் பெற்றுக் கொண்டது. ஆனால் இம்முறை தேர்தலில் 40 இலட்சம் வாக்குகள் மாத்திரமே கிடைத்துள்ளன. 6 மாதங்களில் 27 இலட்சம் மக்கள் சகோதரர் அநுரகுமார திஸாநாயக்கவை நிராகரித்துள்ளனர். எனவே இனியாவது பொய் கூறுவதை நிறுத்துங்கள். ஆர்ப்பாட்டத்தின் மூலம் கோட்டாபய ராஜபக்ஷவை துரத்தியதைப் போன்று ஆட்சியைக் கவிழ்ப்பது எமது நோக்கமல்ல. அரசாங்கம் அதன் தவறுகளை திருத்திக் கொண்டு ஆட்சியை முன்னெடுக்க வேண்டும் என்றார்.

  
   Bookmark and Share Seithy.com



பாராளுமன்றத் தேர்தலை நடத்துமாறு சவால் விடுகிறது ஐதேக!
[Thursday 2025-05-08 05:00]

அரசாங்கம் பொதுத் தேர்தலில் பெற்றுக் கொண்ட வாக்குகளில் பெருந்தொகையை இழந்திருக்கிறது. சரியென்றால் இப்போதாவது அரசாங்கம் பதவி விலக வேண்டும். எனவே இப்போது பாராளுமன்றத் தேர்தலை நடத்திக் காண்பிக்குமாறு சவால் விடுப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அத்துகோரள தெரிவித்தார்.



தமிழ் கட்சிகளுடன் இணைந்து தமிழரசு கட்சி ஆட்சியமைக்கும்!
[Thursday 2025-05-08 05:00]

தமிழ் கட்சிகளுடனும் இணைந்து ஏனைய உள்ளூராட்சி சபைகளில் இலங்கை தமிழரசு கட்சி ஆட்சியமைக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார்.



25 சதவீத பெண் பிரதிநிதித்துவத்தை தேர்தல் ஆணைக்குழு உறுதிப்படுத்த வேண்டும்!
[Thursday 2025-05-08 05:00]

ஒவ்வொரு உள்ளுராட்சிமன்றமும் இளம் பெண்கள் உள்ளடங்கலாக 25 சதவீத பெண் பிரதிநிதித்துவத்தைக் கொண்டிருப்பதனை தேர்தல்கள் ஆணைக்குழு இறுக்கமாக நடைமுறைப்படுத்தவேண்டும். அதிலிருந்து தவறும் அரசியல் கட்சிகள் பொறுப்புக்கூறச்செய்யப்படவேண்டும் என 34 பெண்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கூட்டாக வலியுறுத்தியுள்ளன.



பேச்சைக் குறைத்து செயலில் இறங்க வேண்டும்!
[Thursday 2025-05-08 05:00]

தற்போதைய அரசாங்கம் சிறப்பாக செயற்படவேண்டுமாயின், அவர்கள் பேசுவதைக் குறைத்து, அதனை செயலில் காண்பிக்கவேண்டும் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி வலியுறுத்தியுள்ளார்.



மிகை மதிப்பீட்டின் முடிவு!
[Thursday 2025-05-08 05:00]

2025 உள்ளாட்சித் தேர்தலின் முடிவு, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தன்னைத் தானே மிகைப்படுத்திக் கொண்டிருந்தது என்பதை நிரூபித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா கூறுகிறார்.



இது வெறும் ஆரம்பம் தான் என்கிறார் நாமல்!
[Thursday 2025-05-08 05:00]

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து நாமல் ராஜபக்ச தனது டுவிட்டர் தளத்தில் கருத்தொன்றை பதிவிட்டுள்ளார். “கடந்த ஆறு மாதங்களில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மீண்டும் ஒன்றிணைந்து, எங்கள் கொள்கைகளுக்கு உண்மையாக இருப்பதன் மூலம் உத்வேகம் பெற்றுள்ளது.



புதுக்குடியிருப்பில் மின்னல் தாக்கி விவசாயி பலி!
[Thursday 2025-05-08 05:00]

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு கிழக்கு கமக்கார அமைப்பின் கீழ் உள்ள கள்ளியடி வயல்வெளி பகுதியில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயி ஒருவர் மின்னல் தாக்கியதில் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்றுப் பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.



இந்தியா செல்கிறார் ரணில்!
[Thursday 2025-05-08 05:00]

கர்நாடக மாநிலத்தில் தி இந்து செய்தித்தாள் ஏற்பாடு செய்துள்ள விழாவில் கலந்து கொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று இந்தியா செல்கிறார். இந்த விழாவில் ரணில் விக்கிரமசிங்க முக்கிய உரையாற்றுவார் என்று அவரது அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் பல அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் கலைஞர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



யானையின் வாக்கு வங்கி அதிகரித்திருக்கிறதாம்!
[Thursday 2025-05-08 05:00]

ஐக்கிய தேசியக் கட்சியால் (UNP) தனது வாக்குத் தளத்தை அதிகரிக்க முடிந்துள்ளதுடன், சில உள்ளூராட்சி மன்றங்களில் ஒரு தீர்க்கமான சக்தியாகவும் மாறியுள்ளது என்று கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்தார். "எங்களால் ஒரு வாக்குத் தளத்தை அடைய முடிந்துள்ளதுடன், மேலும் பிற எதிர்க்கட்சிகளுடன் இணைந்து பணியாற்றவும் நாங்கள் தயாராக உள்ளோம். சில உள்ளாட்சி அமைப்புகளிலும் நாங்கள் ஒரு தீர்க்கமான சக்தியாக மாறிவிட்டோம்," என்று அவர் ஊடகவியலாளர்களிடம் கூறினார்.



கூட்டமைப்பாக பெற்றதை விட பெரிய வெற்றியை பெற்றுள்ளோம்!
[Wednesday 2025-05-07 17:00]

இலங்கை தமிழரசுகட்சி பலவீனமடையவில்லை தமிழ்தேசிய கூட்டமைப்பாக சேர்ந்து இருந்ததை விட தற்போது தனியாக பலமாக வெளிவந்திருக்கின்றது என இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம் ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.



257 உள்ளூராட்சி சபைகளை கைப்பற்றியது தேசிய மக்கள் சக்தி!
[Wednesday 2025-05-07 17:00]

2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வௌியான முடிவுகளுக்கு அமைவாக, 257 உள்ளூராட்சி சபைகளை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது.



பிற கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைக்கமாட்டோம்!
[Wednesday 2025-05-07 17:00]

நிராகரிக்கப்பட்ட எதிர்க்கட்சிகளுடன் தேசிய மக்கள் சக்தி கைகோர்த்து சபைகளை நிறுவாது என்று ஜே.வி.பி. பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார். இருப்பினும், தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து பணியாற்ற விரும்பும் சுயாதீன குழுக்களின் ஆதரவை பரிசீலிக்கும் என்றும் அவர் கூறினார்.



நிரந்தர அரசியல் தீர்வுக்கு தமிழ் மக்கள் மீண்டும் ஆணை தந்திருக்கிறார்கள்!
[Wednesday 2025-05-07 17:00]

நிரந்தரமான ஒரு அரசியல் தீர்வினை அடைய வேண்டுமென்ற எங்களுடைய இலக்கிற்கு வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் மீண்டும் ஆணையை தந்திருக்கிறார்கள் என இலங்கை தமிழ் அரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.



வடக்கு கட்சிகள் என்பிபியை ஆட்சியமைக்க அழைக்கின்றவாம்!
[Wednesday 2025-05-07 17:00]

வடக்கில் உள்ள அரசியல் கட்சிகள் உள்ளூராட்சி சபைகளின் ஆட்சியமைக்க, தேசிய மக்கள் சக்தியிடம் (NPP) கோரிக்கை விடுத்துள்ளன என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.



யாழ்ப்பாணத்தில் தமிழரசு 12, சைக்கிள் 3, சபைகளில் வெற்றி!
[Wednesday 2025-05-07 17:00]

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி ஆதிக்கம் செலுத்தியுள்ளது.



எழுவைதீவில் 323 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது!
[Wednesday 2025-05-07 17:00]

இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக பெருமளவான கஞ்சாவினை கடத்தி வந்த மூவரை கடற்படையினர் நேற்றிரவு கைதுசெய்துள்ளனர். எழுவைதீவு கடற்பரப்பில் வைத்து 323.35 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இவர்களில் ஒருவர் பேசாலை பகுதியையும், மற்றைய இருவர் குருநகர் பகுதியையும் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.



கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைப்போம்!
[Wednesday 2025-05-07 17:00]

கொழும்பு மாநகர சபையில் புதிய நிர்வாகத்தை ஐக்கிய மக்கள் சக்தி (SJB) மற்ற கட்சிகளுடன் இணைந்து அமைக்கும், அதே நேரத்தில் புதிய மேயர் எங்கள் கட்சியைச் சேர்ந்தவராக இருப்பார் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.



அமைச்சர் ஆனந்த விஜேபாலவை தகுதி நீக்கம் செய்யக் கோரும் மனு தள்ளுபடி!
[Wednesday 2025-05-07 17:00]

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவை பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த ரிட் மனுவை, மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.



மீண்டும் கைது செய்யப்பட்டார் ரம்புக்வெல்ல!
[Wednesday 2025-05-07 17:00]

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மீண்டும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம் அளிக்க இன்று ஆணைக்குழுவில் ஆஜரானபோது அவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.



தமிழர் பகுதிகளில் தமிழ் தேசிய கட்சிகள் ஆதிக்கம்- பிற பகுதிகளில் என்பிபி வெற்றி!
[Wednesday 2025-05-07 06:00]

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு அமைய, இன்று அதிகாலை 5 மணி வரை வௌியான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) தொடர்ந்தும் முன்னிலை வகிக்கிறது. தமிழர் பகுதிகளில் தமிழரசு, தமிழ்,காங்கிரஸ் கட்சிகள் ஆதிக்கம் செலுத்துகின்றன.


Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Latika-Gold-House-2025
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா