Untitled Document
May 8, 2025 [GMT]
ரணில் 23 முறை வெளிநாடு சென்றார்!
[Thursday 2025-05-08 17:00]


2022 ஆம் ஆண்டு முதல், 2024 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில், ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதியாக பதவிவகித்த காலப்பகுதியில், 23 தடவைகள் வெளிநாடுகளுக்கு விஜயம் செய்துள்ளார்.

2022 ஆம் ஆண்டு முதல், 2024 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில், ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதியாக பதவிவகித்த காலப்பகுதியில், 23 தடவைகள் வெளிநாடுகளுக்கு விஜயம் செய்துள்ளார்.

  

2022 ஆம் ஆண்டு 14 தடவைகளும், 2023 ஆம் ஆண்டு 4 தடவைகளும், 2024 ஆம் ஆண்டு 05 தடவைகளும் வெளிநாடுகளுக்கு விஜயம் செய்துள்ளார்.

வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போது, ஆளும் கட்சியின் பிரதம கொறடாவான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, பாராளுமன்றத்தில், வியாழக்கிழமை (08) பதிலளிக்கும் போதே மேற்கண்ட தகவலை தெரிவித்தார்.

இந்த விஜயங்களின் போது, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் செலவிட்டுள்ளதாக அரசாங்கத்தின் பிரதம கொறடா நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

  
   Bookmark and Share Seithy.com



இந்தியாவுடனான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை தடை செய்யக் கோரி மனுத் தாக்கல்!
[Thursday 2025-05-08 17:00]

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் அண்மையில் கைச்சாத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை வலுவற்றதாக்கி உத்தரவிடக் கோரி, வைத்தியர் குணதாச அமரசேகர உள்ளிட்ட குழுவினர் நேற்று (07) உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.



பாராளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார் அர்ச்சுனா !
[Thursday 2025-05-08 17:00]

பாராளுமன்ற அலுவல்களுக்கு இடையூறு விளைவித்ததற்காக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை சபையில் இருந்து வௌியேற்றுவதற்கு சபைக்கு தலைமை தாங்கிய பாராளுமன்ற உறுப்பினர் நடவடிக்கை எடுத்துள்ளார். இன்று (8) பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின் போது, ​​எழுப்பப்பட்ட கேள்வியால் ஏற்பட்ட சிக்கல் நிலை காரணமாக அவர் சபையிலிருந்து வௌியேற்றப்பட்டுள்ளார்.



கொழும்பில் மாணவி சாவுக்கு நீதி கேட்டு போராட்டங்கள்!
[Thursday 2025-05-08 17:00]

தன்னுயிரை மாய்த்துக் கொண்ட மாணவி அம்ஷிகாவின் சாவுக்கு நீதி கேட்டு பம்பலப்பிட்டி இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி முன்பாக மக்கள் போராட்டம் இடம்பெற்றுள்ளது.



யாழ். மாநகர சபை முதல்வர் விலை போகாதவராக இருக்க வேண்டும்!
[Thursday 2025-05-08 17:00]

யாழ்ப்பாண மாநகர சபை முதல்வராக வரக்கூடியவர் விலை போகாதவராகவும் தமிழ் தேசிய பற்றுடன் செயற்படக்கூடியவராகவும் இருக்க வேண்டும் என யாழ். மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.



மர அரிவு இயந்திரத்தில் சிக்கியவர் மரணம்!
[Thursday 2025-05-08 17:00]

யாழ்ப்பாணம் - ஏழாலை பகுதியில் மர அரிவு இயந்திரத்தினுள் சிக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று புதன்கிழமை (07) இடம்பெற்றுள்ளது. ஏழாலை பகுதியை சேர்ந்த 42 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே உயிரிழந்துள்ளார். இவர் தனது வீட்டில் மர அரிவு நிலையத்தை நடாத்தி வந்துள்ள நிலையில், நேற்றைய தினம் வழமை போன்று மர அரிவு வேலையில் ஈடுபட்டிருந்த போது தவறி இயந்திரத்தின் மேல் விழுந்ததில் இயந்திரம் வெட்டி சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார்.



உழவு இயந்திர சக்கரத்தில் அகப்பட்டு இளம் குடும்பஸ்தர் பலி!
[Thursday 2025-05-08 17:00]

யாழ்ப்பாணம் - அராலி பகுதியில் உழவு இயந்திரத்தின் சக்கரத்தில் சிக்குண்டு இளம் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் புதன்கிழமை இடம்பெற்றுள்ளது. அராலி மேற்கு, வட்டுக்கோட்டை என்ற முகவரியை சேர்ந்த பத்மநாதன் தனீஸ்வரன் (வயது 38) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.



புவிசார் அரசியல் மோதல்களில் தலையிடமாட்டோம்!
[Thursday 2025-05-08 17:00]

இந்திய-பாகிஸ்தான் நெருக்கடியை வெளியுறவு அமைச்சு தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், அரசாங்கத்திற்குத் தகவல் அளித்து வருவதாகவும் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.



பருத்தித்துறையில் 4 நாள் காய்ச்சலால் இளைஞன் மரணம்!
[Thursday 2025-05-08 17:00]

யாழ்ப்பாணம், பருத்தித்துறை பகுதியில் நான்கு நாட்களாக காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த 21 வயது இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவர் கொழும்பில் உயர் கல்வி பயின்று வருபவர் என்றும், சமீபத்தில் யாழில் உள்ள தனது வீட்டுக்குத் திரும்பியதும் நோயால் பாதிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.



வெற்றியைக் கொண்டாடியவர்களை தாக்கியவர்களுக்கு பிணை!
[Thursday 2025-05-08 17:00]

யாழ்ப்பாணத்தில் தேர்தல் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்ட குற்றச்சாட்டில் கைதான இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.



பாராளுமன்றத் தேர்தலை நடத்துமாறு சவால் விடுகிறது ஐதேக!
[Thursday 2025-05-08 05:00]

அரசாங்கம் பொதுத் தேர்தலில் பெற்றுக் கொண்ட வாக்குகளில் பெருந்தொகையை இழந்திருக்கிறது. சரியென்றால் இப்போதாவது அரசாங்கம் பதவி விலக வேண்டும். எனவே இப்போது பாராளுமன்றத் தேர்தலை நடத்திக் காண்பிக்குமாறு சவால் விடுப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அத்துகோரள தெரிவித்தார்.



தமிழ் கட்சிகளுடன் இணைந்து தமிழரசு கட்சி ஆட்சியமைக்கும்!
[Thursday 2025-05-08 05:00]

தமிழ் கட்சிகளுடனும் இணைந்து ஏனைய உள்ளூராட்சி சபைகளில் இலங்கை தமிழரசு கட்சி ஆட்சியமைக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார்.



25 சதவீத பெண் பிரதிநிதித்துவத்தை தேர்தல் ஆணைக்குழு உறுதிப்படுத்த வேண்டும்!
[Thursday 2025-05-08 05:00]

ஒவ்வொரு உள்ளுராட்சிமன்றமும் இளம் பெண்கள் உள்ளடங்கலாக 25 சதவீத பெண் பிரதிநிதித்துவத்தைக் கொண்டிருப்பதனை தேர்தல்கள் ஆணைக்குழு இறுக்கமாக நடைமுறைப்படுத்தவேண்டும். அதிலிருந்து தவறும் அரசியல் கட்சிகள் பொறுப்புக்கூறச்செய்யப்படவேண்டும் என 34 பெண்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கூட்டாக வலியுறுத்தியுள்ளன.



170 சபைகளில் என்பிபி ஆட்சியமைக்க முடியாது!
[Thursday 2025-05-08 05:00]

அதிகாரம் எதிர்க்கட்சிகளிடமே உண்டு. 170 மன்றங்களில் அரசாங்கத்தால் ஆட்சியமைக்க முடியாது. கட்சி பேதங்களை மறந்து சகல எதிர்க்கட்சிகளுடனும் இணைந்து 170 உள்ளுராட்சிமன்றங்களை அமைப்பதற்கு தயார் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.



பேச்சைக் குறைத்து செயலில் இறங்க வேண்டும்!
[Thursday 2025-05-08 05:00]

தற்போதைய அரசாங்கம் சிறப்பாக செயற்படவேண்டுமாயின், அவர்கள் பேசுவதைக் குறைத்து, அதனை செயலில் காண்பிக்கவேண்டும் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி வலியுறுத்தியுள்ளார்.



மிகை மதிப்பீட்டின் முடிவு!
[Thursday 2025-05-08 05:00]

2025 உள்ளாட்சித் தேர்தலின் முடிவு, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தன்னைத் தானே மிகைப்படுத்திக் கொண்டிருந்தது என்பதை நிரூபித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா கூறுகிறார்.



இது வெறும் ஆரம்பம் தான் என்கிறார் நாமல்!
[Thursday 2025-05-08 05:00]

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து நாமல் ராஜபக்ச தனது டுவிட்டர் தளத்தில் கருத்தொன்றை பதிவிட்டுள்ளார். “கடந்த ஆறு மாதங்களில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மீண்டும் ஒன்றிணைந்து, எங்கள் கொள்கைகளுக்கு உண்மையாக இருப்பதன் மூலம் உத்வேகம் பெற்றுள்ளது.



புதுக்குடியிருப்பில் மின்னல் தாக்கி விவசாயி பலி!
[Thursday 2025-05-08 05:00]

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு கிழக்கு கமக்கார அமைப்பின் கீழ் உள்ள கள்ளியடி வயல்வெளி பகுதியில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயி ஒருவர் மின்னல் தாக்கியதில் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்றுப் பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.



இந்தியா செல்கிறார் ரணில்!
[Thursday 2025-05-08 05:00]

கர்நாடக மாநிலத்தில் தி இந்து செய்தித்தாள் ஏற்பாடு செய்துள்ள விழாவில் கலந்து கொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று இந்தியா செல்கிறார். இந்த விழாவில் ரணில் விக்கிரமசிங்க முக்கிய உரையாற்றுவார் என்று அவரது அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் பல அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் கலைஞர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



யானையின் வாக்கு வங்கி அதிகரித்திருக்கிறதாம்!
[Thursday 2025-05-08 05:00]

ஐக்கிய தேசியக் கட்சியால் (UNP) தனது வாக்குத் தளத்தை அதிகரிக்க முடிந்துள்ளதுடன், சில உள்ளூராட்சி மன்றங்களில் ஒரு தீர்க்கமான சக்தியாகவும் மாறியுள்ளது என்று கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்தார். "எங்களால் ஒரு வாக்குத் தளத்தை அடைய முடிந்துள்ளதுடன், மேலும் பிற எதிர்க்கட்சிகளுடன் இணைந்து பணியாற்றவும் நாங்கள் தயாராக உள்ளோம். சில உள்ளாட்சி அமைப்புகளிலும் நாங்கள் ஒரு தீர்க்கமான சக்தியாக மாறிவிட்டோம்," என்று அவர் ஊடகவியலாளர்களிடம் கூறினார்.



கூட்டமைப்பாக பெற்றதை விட பெரிய வெற்றியை பெற்றுள்ளோம்!
[Wednesday 2025-05-07 17:00]

இலங்கை தமிழரசுகட்சி பலவீனமடையவில்லை தமிழ்தேசிய கூட்டமைப்பாக சேர்ந்து இருந்ததை விட தற்போது தனியாக பலமாக வெளிவந்திருக்கின்றது என இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம் ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Latika-Gold-House-2025
Asayan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Airlinktravel-2020-01-01
Rajeef sebarasha 2023/04/19
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா