Untitled Document
May 10, 2025 [GMT]
வன்னியில் நாங்களே முதலிடத்தில் இருக்கும் கட்சி!
[Saturday 2025-05-10 04:00]


உள்ளூராட்சித் சபைகளுக்கான தேர்தலில் வன்னி மாவட்டத்தில் வாக்குகளை பெறுவதற்காக இலங்கை தமிழரசுக் கட்சி அங்கு  கசிப்பும் பணமும் விநியோகித்துள்ளது. அதேபோன்று இனவாதத்தை முன்னெடுத்தனர்.இதனை பொறுப்புடன் தெரிவிக்கிறேன் என சபைமுதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

உள்ளூராட்சித் சபைகளுக்கான தேர்தலில் வன்னி மாவட்டத்தில் வாக்குகளை பெறுவதற்காக இலங்கை தமிழரசுக் கட்சி அங்கு கசிப்பும் பணமும் விநியோகித்துள்ளது. அதேபோன்று இனவாதத்தை முன்னெடுத்தனர்.இதனை பொறுப்புடன் தெரிவிக்கிறேன் என சபைமுதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

  

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (8) இடம்பெற்ற சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் 'அ' அட்டவணையின் ஒழுங்குவிதிகளின் கீழ் இறக்குமதித் தீர்வைக் கட்டணங்கள் தொடர்பில் பிரசுரிக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்கள் தொடர்பான விவாதத்தில் பதிலளித்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

நாங்கள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியையும் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு அதிகாரத்தையும் தற்போது 341 உள்ளுராட்சி சபைகளில் 79 சதவீதமான அதிகாரத்தை கொண்டுள்ள கட்சியாகும். அதேபோன்று தொழிற்சங்க அதிகாரத்தையும் நாங்கள் கொண்டுள்ளோம். இவ்வாறான எங்களின் பணிவு நிலை தொடர்பில் மக்களும் விமர்சிக்கின்றனர்.

கடந்த 15 வருடங்களில் மூன்று தடவைகளே உள்ளுராட்சித் தேர்தல்கள் நடந்துள்ளன. 2011 ஆம் ஆண்டில் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த போது அவர்களின் கட்சி 270 சபைகளை வென்றது. 2611 உறுப்பினர்களையே கொண்டிருந்தனர். பின்னர் 2018ஆம் ஆண்டில் அந்த அதிகாரத்துடனேயே உள்ளூராட்சி சபைகளை கைப்பற்றினர்.

231 உள்ளூராட்சி சபைகளில் வெற்றி பெற்றனர். அப்போது ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கமே இருந்தது. தமது ஜனாதிபதி, பிரதமர் பதவியை வைத்துக்கொண்டே 31 உள்ளூராட்சி சபைகளையே கைப்பற்றியது. அப்போது அவர்கள் ஆட்சியில் இருந்து போனார்களா இல்லையே .

2018ஆம் ஆண்டில் எங்களிடம் ஒரு உள்ளூராட்சி சபைகளும் இருக்கவில்லை. ஆனால் நாங்கள் பூச்சியத்தில் இருந்து 267 உள்ளூராட்சி சபைகளை கைப்பற்றியுள்ளதுடன் 3000க்கும் அதிகமான உறுப்பினர்களை பெற்றுள்ளோம்.

இப்போது ஐக்கிய மக்கள் சக்திக்கு 14 சபைகளே கிடைத்துள்ளன. அவற்றில் ஆட்சி அமைக்கக்கூடிய சபைகள் எத்தனை உள்ளன என்று தெரியாது. ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைத்துப்பார்த்தால் 34 சபைகளில் இருந்து ஐக்கிய மக்கள் சக்தி 14 சபைகளாக குறைந்துள்ளது.

இதேவேளை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு எந்தவொரு சபையும் கிடைக்கவில்லை.இலங்கை வரலாற்றில் தேசிய மக்கள் சக்தியே அதிகளவான உள்ளூராட்சி சபைகளை கைப்பற்றியுள்ளது .

இந்நிலையில் வடக்கில் நாங்கள் இல்லாமல் போயுள்ளோம் என்று கூறுகின்றனர். ஆனால் வன்னி மாவட்டத்தில் எங்களின் வாக்குகள் அதிகரித்துள்ளன. வன்னி மாவட்டத்தில் தமிழரசுக் கட்சி கசிப்பு விநியோகித்தது. பணமும் கொடுத்தனர். இதனை பொறுப்புடன் கூறுகின்றேன்.

பச்சையான இனவாதத்தை முன்னெடுத்தனர். ஆனால் அவ்வாறு எங்களுக்கு விநியோகிப்பதென்றால் எவ்வளவோ விநியோகித்திருக்கலாம்.

குறைந்தது இந்த வீதியை திருத்துவோம் என்று கூறிக்கூட நாங்கள் ஒரு வாக்கையேனும் பெறவில்லை. கணக்கு வாக்கெடுப்பில் குறிப்பிடப்பட்ட வீதிகளை மாத்திரம் நாங்கள் சொல்லியிருக்கலாம். எந்தவொரு உறுப்பினரையும் நாங்கள் பணத்திற்காக வாங்கவில்லை. நாங்கள் இனவாதத்தை பயன்படுத்தவில்லை. நாங்கள் சுத்தமான அரசியல் செய்தோம்.

வடக்கில் வன்னி மாவட்டத்தில் மன்னாரில் தேசிய மக்கள் சக்தியே பெரிய கட்சியாக இருக்கின்றது. ஷொப்பிங் பேக்குடன் மன்னாரில் இருந்து புத்தளம் போய் இப்போது கப்பலில்கூட ஏற்றமுடியாதளவுக்கான சொத்துக்களை கொண்டவர்கள் நாங்கள் அல்ல.

வவுனியாவிலும் நாமே பெரிய கட்சி , முல்லைத்தீவிலும் வாக்குகள் அதிகரித்துள்ளன. வடக்கில் குறிப்பாக வன்னி மாவட்டத்தில் வாக்குகளை அதிகரித்துள்ள ஒரே கட்சி தேசிய மக்கள் சக்தி மட்டுமே.

அதேபோன்று யாழ். மாவட்டத்தில் எமது கட்சிக்கு வரலாற்றில் உள்ளூராட்சி சபைகளில் ஒரு ஆசனமேனும் இருந்ததில்லை. ஆனால் இன்று 81 உறுப்பினர்கள் அங்கே இருக்கின்றனர். கிளிநொச்சியை சேர்த்தால் நூறு வரையிலான உறுப்பினர்கள் உள்ளனர்.

யாழ். மாவட்டத்தில் தமிழரசுக் கட்சியே வரலாற்றில் சகல சபைகளையும் ஆட்சி செய்துள்ளது. யாழ். நகர சபையின் நிலைமை என்ன? பெரும் கதைகளை கதைத்துக்கொண்டிருக்கும் அந்தக் கட்சிக்கு 13 ஆசனங்களே கிடைத்துள்ளன.

பொன்னம்பலத்தின் கட்சிக்கு 12 ஆசனங்கள் கிடைத்துள்ளன. இவர்கள் அந்த சபையை ஆட்சி செய்தவர்கள். ஆனால் தேசிய மக்கள் சக்தி 10 உறுப்பினர்களை பெற்றுக்கொண்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்திக்கு ஒன்றும், ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒன்றும் என்றே ஆசனங்கள் கிடைத்துள்ளன.

நாங்கள் அங்கே புதியவர்கள். அந்த மண்ணை மிதிக்காதவர்கள் இப்போது அங்கே 150 உறுப்பினர்கள் உள்ளனர். வன்னியில் முதலிடத்தில் இருக்கும் கட்சி நாங்களே, முழு வடக்கிலும் தேசிய கட்சிகளில் பெரிய கட்சி நாங்களே.இம்முறை நாடளாவிய ரீதியில் தேசிய மக்கள் சக்தி 267 உள்ளூராட்சி சபைகளையும் ஆட்சி செய்யும் என்றார்.

  
   Bookmark and Share Seithy.com



அரசியல் கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும்!
[Saturday 2025-05-10 04:00]

பயங்கரவாத தடைச்சட்டத்தை மிக மோசமான சட்டமாக இந்த அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் தற்போதும் அந்த சட்டத்தை அமுல்படுத்துகிறது. இது நியாயமற்றது. பல ஆண்டுகாலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுவிக்க அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தினார்.



அமைச்சர் பிமல் தனது கருத்தை மீளப் பெறவேண்டும்!
[Saturday 2025-05-10 04:00]

இலங்கை தமிழரசுக் கட்சி மக்களுக்கு கசிப்பையும் பணத்தையும் வழங்கியே உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ள கருத்து முறையற்றது. நிராகரிக்கத்தக்கது. இந்தக் கருத்தை அவர் உடனடியாக வாபஸ் பெற வேண்டுமென இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழு தலைவரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறிதரன் வலியுறுத்தினார்.



அமைச்சர் சரோஜா போல்ராஜ் பதவி விலக வேண்டும்!
[Saturday 2025-05-10 04:00]

சரோஜா போல்ராஜ் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சருக்கான பொறுப்பிலிருந்து விலகி, சர்ச்சைக்குரிய மேலதிக வகுப்பு ஆசிரியைப் பாதுகாக்கும் வகையிலேயே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார். எனவே அவர் இந்த அமைச்சுப்பதவியை வகிப்பதற்கு பொருத்தமற்றவர். சரோஜா போல்ராஜ் உடனடியாக அமைச்சு பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹிணி கவிரத்ன தெரிவித்தார்.



7 மாதங்களில் துப்பாக்கிச் சூடுகளில் 52 பேர் பலி!
[Saturday 2025-05-10 04:00]

கடந்த 7 மாதங்களில் 79 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால பாராளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போது தெரிவித்தார். கடந்த ஆண்டு செப்டம்பர் 21 முதல் நேற்று முன்தினம்(08) வரையிலான காலப்பகுதியில் இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 52 பேர் உயிரிழந்ததுடன், 35 பேர் காயமடைந்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.



கொட்டாஞ்சேனை சம்பவம்- கட்டாய விடுப்பில் ஆசிரியர்!
[Saturday 2025-05-10 04:00]

கொட்டாஞ்சேனை பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில் தொடர்புடைய ஆசிரியர் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸாரின் 'பி' அறிக்கை பெற்ற பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து உள்ளக விசாரணை நடத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



சிஐடி விசாரணை கோருகிறார் தனியார் கல்வி நிறுவனத்தின் உரிமையாளர்!
[Saturday 2025-05-10 04:00]

கொட்டாஞ்சேனையில் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், குற்றம் சுமத்தப்பட்டுள்ள தனியார் கல்வி நிறுவனத்தின் உரிமையாளர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்துள்ளார்.



மாதுருஓயா நீர்த்தேக்கத்தில் விழுந்த ஹெலி! - 6 படையினர் பலி.
[Friday 2025-05-09 16:00]

இலங்கை விமான படைக்குச் சொந்தமான பெல் 212 ரக ஹெலிகொப்டர் ஒன்று மாதுறு ஓயா நீர்த்தேக்கத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்து இன்று வெள்ளிய்கிகழமை (09) காலை இடம்பெற்றுள்ளது.



கசிப்பும் பணமும் கொடுத்ததை நிரூபிக்கத் தயாரா?- பிமலிடம் சுமந்திரன் சவால்.
[Friday 2025-05-09 16:00]

கசிப்பும் பணமும் கொடுத்து தமிழ் அரசுக் கட்சி வாக்கு சேகரித்து என்பதை அமைச்சர் பிமல் ரட்நாயக்க நாடாளுமன்றுக்கு வெளியில் வந்து ஆதாரங்களுடன் நிரூபித்துக் காட்டவேண்டும் என்று வலியுறுத்தியுள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், சலுகைகளுக்காக வாக்களிப்பவர்கள் தமிழ் மக்கள் என்று இதுவரை காலமும் பிழையான எண்ணத்தை அவர் கொண்டுள்ளார் என்றும் சாடியுள்ளார்.



43 சூட்டுச் சம்பவங்களில் 29 பேல் பலி- 23 பேர் காயம்!
[Friday 2025-05-09 16:00]

2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து மே மாதம் 08 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் நாடளாவிய ரீதியில் 43 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இந்தச் சூட்டுச் சம்பவங்களில் 29 பேர் உயிரிழந்துள்ளதுடன் 23 பேர் காயமடைந்துள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 94 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.



கோவணத்துடன் சென்ற மக்களிடம் ஆவணம் கேட்கின்றீர்களா?
[Friday 2025-05-09 16:00]

கோவணத்துடன் சென்றமக்களிடம் ஆவணம் கேட்கின்றீர்களாஎனவும், கடந்தகால கொடுங்கோல் அரசுகளைப் பின்தொடர்கின்றீர்களா எனவும், சபையில் சரமாரியாகக் கேள்வி எழுப்பிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், வடக்குமாகாணத்தில் சுமார் 5,941ஏக்கர் காணிகளை அபகரிக்கும் நோக்கில் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி உடனடியாக மீளப்பெறுமாறும் வலியுறுத்தியுள்ளார்.



கொழும்பில் மாநகரசபையில் ஆட்சியைப் பிடிக்க மில்லியன் கணக்கில் பேரம்!
[Friday 2025-05-09 16:00]

கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஏனைய எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் அரசு மில்லியன் கணக்கான ரூபா பேரம் பேசி வருகிறது. திருடர்கள் என தெரிவித்தவர்களுடன் இவர்கள் எப்படி ஆட்சி அமைக்க முடியும் என கேட்கிறேன் என குற்றம்சாட்டிய ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட எ.பி.எஸ்.எம். மரிக்கார் கேள்வி எழுப்பினார்.



மாணவி சாவு குறித்து பாடசாலை அதிபரிடம் விளக்கம் கோரப்படும்!
[Friday 2025-05-09 16:00]

கொட்டாஞ்சேனையில் தற்கொலை செய்து கொண்ட பம்பலப்பிட்டி பாடசாலை மாணவிக்கு நடந்த முதல் சம்பவம் இடம்பெற்ற போது அது முறையாக ஆராயப்படவில்லை. இந்த விடயம் குறித்து ஏன் கல்வி அமைச்சுக்கு அறிவிக்கவில்லை? குறித்த ஆசிரியர் தொடர்பில் ஏன் அமைச்சுக்கு அறிவிக்கவில்லை என்பது தொடர்பில் அந்த பாடசாலையின் அதிபரிடம் விளக்கம் கோர அமைச்சுக்கு முன்னிலையாகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது என கல்வி அமைச்சரும், பிரதமருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.



ரஷ்ய தூதரகத்தில் மடிகணினி - ஜெர்மன் பெண் கைது!
[Friday 2025-05-09 16:00]

ரஷ்ய தூதரகத்திற்கு அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் மடிக்கணினி ஒன்றை வைத்து சென்ற சம்பவம் தொடர்பாக, ஜெர்மன் இளம்பெண் ஒருவர் கருவாத்தோட்டம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.



பாலியல் இலஞ்சம் கேட்ட அரச அதிகாரிக்கு 20 ஆண்டு கடூழிய சிறைத்தண்டனை!
[Friday 2025-05-09 16:00]

பாலியல் இலஞ்சம் கேட்டதாக குற்றம் சாட்டப்பட்ட அரச அதிகாரி ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 20 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையை இன்று விதித்துள்ளது. 7 வயது பிள்ளையின் சிறுநீரக அறுவை சிகிச்சைக்காக அரசாங்க நிதி உதவி கோரிய 30 வயது தாயிடம் குறித்த அதிகாரி பாலியல் இலஞ்சம் கேட்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.



குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியர் வீட்டுக்கு பொலிஸ் பாதுகாப்பா?
[Friday 2025-05-09 16:00]

கொட்டாஞ்சேனை மாணவிக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதாக கூறப்படும் பிரத்தியேக வகுப்பு ஆசிரியரின் இல்லத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.



திருவுளச்சீட்டில் வெற்றி பெற்ற உறுப்பினர்!
[Friday 2025-05-09 16:00]

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் புத்தளம் மாவட்டத்தின் வண்ணாத்திவில்லு பிரதேச சபைக்கு வண்ணாத்திவில்லு வட்டாரத்தில் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவர் திருவுளச்சீட்டின் மூலம் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.



தமிழின அழிப்பு நினைவேந்தல் நாளை அங்கீகரித்து மொன்றியல் நகரம் தீர்மானம்! Top News
[Friday 2025-05-09 06:00]

Côte-des-Neiges–Notre-Dame-de-Grâce பெருநகராட்சி மன்றம், மே 18-ஐ தமிழ் இனவழிப்பு நினைவேந்தல் நாளாக அங்கீகரிக்கும் தீர்மானத்தை அதிகாரபூர்வமாக நிறைவேற்றியுள்ளது.



புதிய பாப்பரசர் 14ஆவது லியோ!
[Friday 2025-05-09 05:00]

கத்தோலிக்க மக்களின் புதிய தலைவராக அமெரிக்காவின் ரொபர்ட் பிரீவோஸ்ட் (Robert Prevost) தெரிவு செய்யப்பட்டுள்ளார். புதிய பாப்பரசரை தெரிவு செய்வதற்காக வத்திகானில் சிஸ்டைன் சேப்பல் தேவாலயத்தில் கர்த்தினால்கள் ஒன்று கூடி இரகசிய வாக்கெடுப்பில் ஈடுபட்டனர்.



மாணவி அம்ஷிகா மரணத்துக்கு காரணமானவர் என்பிபி அமைப்பாளர்!
[Friday 2025-05-09 05:00]

தன்னுயிரை மாய்த்துக்கொண்ட மாணவி அம்ஷியை தனியார் வகுப்பு நிறுவனத்தில் இழிவுபடுத்தி மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாக கூறப்படும் குறித்த நிறுவன ஊழியர், மத்திய கொழும்புக்கான தேசிய மக்கள் சக்தி அமைப்பாளர் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று தெரிவித்தார்.



கொட்டாவவில் மற்றொரு துப்பாக்கிச் சூடு- காயமடைந்தவர் மரணம்!
[Friday 2025-05-09 05:00]

கொட்டாவை - மாலபல்ல பகுதியில் உள்ள விகாரைக்கு அருகில் நேற்று இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்தவர் உயிரிழந்தார். உயிரிழந்தவர் மிரிஸ்ஸாய பகுதியைச் சேர்ந்த 43 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள், பொலிஸாரால் முன்னெடுக்கப்படுகிறது


Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Latika-Gold-House-2025
Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா