Untitled Document
May 31, 2025 [GMT]
ஹரி ஆனந்தசங்கரிக்கு மனோ, சுமந்திரன் வாழ்த்து!
[Thursday 2025-05-15 05:00]


கனடாவின் பொதுப்பாதுகாப்பு மற்றும் அவசரகால நடவடிக்கைகள் அமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்டிருக்கும் ஹரி ஆனந்தசங்கரிக்கு பாராளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

கனடாவின் பொதுப்பாதுகாப்பு மற்றும் அவசரகால நடவடிக்கைகள் அமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்டிருக்கும் ஹரி ஆனந்தசங்கரிக்கு பாராளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

  

கனடாவில் அண்மையில் நடைபெற்ற மத்திய பாராளுமன்றத்துக்கான தேர்தலில் வெற்றிபெற்ற லிபரல் அரசாங்கத்தின் அமைச்சரவை பதவியேற்பு வைபவம் செவ்வாய்கிழமை (13) ஒட்டாவா நகரில் நடைபெற்றது.

அதன்படி கனடாவின் புதிய மத்திய அமைச்சரவையில் பொதுப்பாதுகாப்பு மற்றும் அவசரகால நடவடிக்கைகள் அமைச்சராக இலங்கையைப் பூர்விகமாகக்கொண்ட ஹரி ஆனந்தசங்கரி பதவியேற்றுக்கொண்டார்.

அவரை தொலைபேசி ஊடாகத் தொடர்புகொண்டு 'சகோதரரே, வாழ்த்துக்கள். நீங்கள் சிறப்பாகச் செய்தீர்கள். சிறப்பாகச் செய்வீர்கள். தொடர்ந்து செல்லுங்கள். நாம் தொடர்பில் இருப்போம்' என வாழ்த்துக் கூறியதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன் அவரது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதேவேளை பொதுப்பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள ஹரி ஆனந்தசங்கரிக்கு வாழ்த்துத் தெரிவிப்பதாக இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் அவரது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

  
   Bookmark and Share Seithy.com



பேச்சுக்களில் முழு இணக்கம் இல்லை- தொடர்ந்து பேச இணக்கம்!
[Saturday 2025-05-31 06:00]

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்­சிய­மைப்பது குறித்து இலங்கை தமி­­ழ­ரசுக் கட்­சிக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்­ன­ணிக்­கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முழு­மையான இணக்கம் எட்டப்­பட­வில்லை.



என்பிபி- ஜேவிபிக்கு இடையே முரண்பாடு இல்லை!
[Saturday 2025-05-31 06:00]

தேசிய மக்கள் சக்திக்கும், மக்கள் விடுதலை முன்னணிக்கும் இடையில் முரண்பாடு தீவிரமடைந்துள்ளதாகவும், அதனால் வெகுவிரைவில் அமைச்சரவையில் மாற்றம் ஏற்படுவதாகவும் எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் கருத்து முற்றிலும் பொய்யானது. அரசியலில் வங்குரோத்து நிலையடைந்துள்ளவர்களின் குற்றச்சாட்டுக்களுக்கு அவதானம் செலுத்த போவதில்லை என்று கைத்தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்தார்.



161 சபைகளின் உறுப்பினர்களின் பெயர்களே வர்த்தமானியில் வெளியாகும்!
[Saturday 2025-05-31 06:00]

161 உள்ளூராட்சிமன்றங்களுக்குரிய உறுப்பினர் பெயர் விபரங்களை வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிப்பதற்கான ஆவணம் அரச அச்சகத் திணைக்களத்துக்கு இன்று அல்லது நாளைய தினம் அனுப்பி வைக்கப்படும். முதல் கட்ட வர்த்தமானி இவ்வாரத்துக்குள் பிரசுரிக்கப்படும்.தாமதமாக கிடைத்த பெயர் பட்டியல் விபரங்கள் இரண்டாம் கட்டமாக வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்படும் என்று தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.



பிள்ளையான் கட்சியின் தலைமையகம் சுற்றிவளைத்து தேடுதல்!
[Saturday 2025-05-31 06:00]

மட்டக்களப்பில் உள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைமைக் காரியாலயத்தை கொழும்பில் இருந்து வந்த சி.ஐ.டி.யினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் வெள்ளிக்கிழமை பகல் 11 மணியில் இருந்து சுற்றி வளைத்து முற்றுகையிட்டு பாரிய தேடுதல் நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்தனர்.



உணவுப் பணவீக்கம் 5.2 சதவீதமாக அதிகரிப்பு!
[Saturday 2025-05-31 06:00]

2025 மே மாதத்திற்கான கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் மற்றும் கொழும்பு நகர்ப்புற சமூகத்தின் நுகர்வோர் பணவீக்க வீதம் ஆகியவை வௌியிடப்பட்டுள்ளன. அதன்படி, மே மாதத்துக்கான கொழும்பு நகர்ப்புற சமூகத்தின் நுகர்வோர் பணவீக்க வீதம் - 0.7% ஆக உயர்ந்துள்ளது. இது 2025 ஏப்ரலில் -2.0% ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. உணவுப் பணவீக்கமானது, 2025 ஏப்ரலில் 1.3 சதவீதத்திலிருந்து 2025 மே மாதம் 5.2 சதவீதமாக உயர்வடைந்துள்ளது.



24 மணி நேரத்தில் 50,009 மின்சார தடை முறைப்பாடுகள்!
[Saturday 2025-05-31 06:00]

நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, நேற்றுமுன்தினம் இரவு 8:00 மணி முதல் நேற்று இரவு 8:00 மணி வரையிலான 24 மணி நேரத்தில் சுமார் 50,009 மின்சார தடைகள் தொடர்பான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.



21 மாவட்டங்களில் 2,249 குடும்பங்கள் பாதிப்பு!
[Saturday 2025-05-31 06:00]

நாடு முழுவதும் பெய்து வரும் கடும் மழை காரணமாக 21 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் (இடர் முகாமைத்துவ பிரிவு) கே.ஜி. தர்மதிலக்க தெரிவித்தார்.



தனித்திருந்த பெண் வெட்டுக்காயங்களும் சடலமாக மீட்பு!
[Saturday 2025-05-31 06:00]

அம்பாறை மாவட்டம், பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விஷ்ணு கோயில் வீதியில் அமைந்துள்ள வீடொன்றில், 38 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயான திருமதி மனோதர்ஷன் விதுஷா என்பவர் வெள்ளிக்கிழமை (30) அன்று கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார்.



ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!
[Saturday 2025-05-31 06:00]

ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, எச்சரிக்கையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் மஞ்சள் நிற முன்னெச்சரிக்கையின் முதல் கட்ட அறிவிப்பு, நேற்று இரவு 9:00 மணி முதல் இன்று இரவு 9:00 மணி வரையிலான அடுத்த 24 மணி நேரத்திற்கு வெளியிடப்பட்டுள்ளது.



துசித ஹல்லொலுவவுக்கு விளக்கமறியல்!
[Saturday 2025-05-31 06:00]

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவவை எதிர்வரும் ஜூன் மாதம் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



நாடு திரும்பிய அகதியை கைது செய்தது சரியா?- மனோ கணேசன் கேள்வி.
[Friday 2025-05-30 15:00]

தமிழக முகாமில் முப்பது வருடங்களுக்கு மேல் வாழ்ந்து, வயோதிபம் அடைந்து, உங்களை நம்பி, நாடு திரும்பிய, 75 வயதான சின்னையா சிவலோகநாதனை விமான நிலையத்தில், எதற்காக கைது செய்தீர்கள்? கைது செய்து, இன்று பிணையில் வெளியே விடாமல், சிறையில் அடைக்கிறீர்கள்? வெளிநாடு சென்ற தமிழர்களை திரும்பி “வாங்கோ, வாங்கோ” என நீங்கள் தானே வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கிறீர்கள்? உங்களை நம்பி வந்தால், திரும்பி வந்தால் விமான நிலையத்தில் கைது செய்வதா? என தமுகூ தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார்.



நாடு திரும்புவதை தடுப்பதற்கான ஏற்பாடா?
[Friday 2025-05-30 15:00]

இந்தியாவில் அகதிமுகாமில் பல தசாப்தங்களாக தஞ்சமடைந்திருந்த நிலையில் பலாலியை வந்தடைந்த ஒருவரை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் கைதுசெய்துள்ளனர் அவர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம் ஏ சுமந்திரன் தனது சமூக ஊடக பதிவில் தெரிவித்துள்ளார்



'இனப்படுகொலை' என்று வகைப்படுத்துவீர்களா?- ஹரி ஆனந்தசங்கரியிடம் விஜயதாஸ கேள்வி!
[Friday 2025-05-30 15:00]

பொதுமக்களின் பாதுகாப்புக்குப் பொறுப்பான அமைச்சர் என்ற ரீதியில், கனடாவில் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் தோற்றம் பெறுமாயின், அதன் விளைவாக ஏற்படும் உயிரிழப்புக்கள் தொடர்பில் கனேடிய அரசு நடவடிக்கை எடுக்குமாயின், அதனையும் 'இனப்படுகொலை' என்று வகைப்படுத்துவீர்களா? என கனடாவின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரியிடம் முன்னாள் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ கேள்வி எழுப்பியுள்ளார்.



கடும் மழை, பலத்த காற்று! - ஆம்பர் எச்சரிக்கை.
[Friday 2025-05-30 15:00]

நாளை (31) முற்பகல் 08.00 மணி வரை செல்லுபடியாகும் வகையில் பலத்த மழைவீழ்ச்சி மற்றும் காற்று தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் ஆம்பர் நிற எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வௌியிட்டுள்ளது.



20 முன்னாள் அமைச்சர்கள், அதிகாரிகள் விசாரணை வளையத்தில்!
[Friday 2025-05-30 15:00]

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிகாரிகள் 20 பேரின் கடந்தகால நடவடிக்கைகள் குறித்து விசாரணைகள் இடம்பெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.



முன்னாள் அமைச்சர்கள் வெலிக்கடையில் அடைப்பு!
[Friday 2025-05-30 15:00]

கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் நேற்று (29) கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோர் வெலிக்கடை சிறையில் பொதுவான கைதிகள் வைக்கப்படும் பொது அறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.



பலத்த காற்று, மழையினால் பரவலாக சேதம்!
[Friday 2025-05-30 15:00]

கொழும்பு உட்பட நாடு முழுவதும் வீசிய பலத்த காற்று காரணமாக மரங்கள் விழுதல் உள்ளிட்ட அனர்த்தங்கள் பதிவாகியுள்ளதாக பேரிடர் மேலாண்மை மையங்கள் தெரிவிக்கின்றன. பல வீடுகளின் கூரைகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. மரங்கள் விழுந்ததால் மின்சாரம் பாதிக்கப்பட்டுள்ளது.கொழும்பின் பல பகுதிகளில் பெரிய விளம்பரப் பலகைகள் சாலைகளில் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.



சம்பூரில் யானை தாக்கி முதியவர் பலி!
[Friday 2025-05-30 15:00]

திருகோணமலை - சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள கணேசபுரம் பகுதியிலுள்ள கணேசபுரம் பிரதான வீதியில் காட்டு யானை தாக்கி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



யாழ்ப்பாணத்தில் பிறப்பு எண்ணிக்கை அதிகரிப்பு!
[Friday 2025-05-30 15:00]

யாழ்.மாவட்டத்தில் இந்த வருடத்தின் முதலாம் காலாண்டில் இறப்புகளை விட பிறப்புகளின் எண்ணிக்கை அதிகமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வடக்குப் பிரதி பதிவாளர் நாயகம் பிரபாகர் தெரிவித்துள்ளார். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கோரப்பட்ட தகவலுக்கமைவாக இந்தத் தகவல் வழங்கப்பட்டுள்ளது .



விபத்துக்குள்ளான படகில் இருந்து 3 மீனவர்கள் ஹெலியில் மீட்பு!
[Friday 2025-05-30 15:00]

கடும் காற்று, கடற்கொந்தளிப்பினால்பலப்பிட்டிய கடலில் விபத்துக்குள்ளான மீன்பிடி படகில் இருந்த மூன்று மீனவர்களும் விமானப்படையினரால் மீட்கப்பட்டு பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்


Kugeenthiran-200-2022-seithy
Airlinktravel-2020-01-01
Latika-Gold-House-2025
Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா