Untitled Document
May 17, 2025 [GMT]
உள்ளூராட்சிகளில் என்பிபிக்கு ஆதரவு இல்லை!- கைவிரித்தார் வீரவன்ச.
[Friday 2025-05-16 06:00]


உள்ளூராட்சி மன்ற தேர்தலில் பெரும்பான்மை இல்லாத சபைகளில் ஆட்சியமைப்பதற்கு ஆளும் அரசாங்கத்துக்கும் ஒருபோதும் ஆதரவளிக்கப்போவதில்லை. எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு நிபந்தனையுடன் ஆதரவளிக்க தயாராக இருக்கிறோமென தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் பெரும்பான்மை இல்லாத சபைகளில் ஆட்சியமைப்பதற்கு ஆளும் அரசாங்கத்துக்கும் ஒருபோதும் ஆதரவளிக்கப்போவதில்லை. எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு நிபந்தனையுடன் ஆதரவளிக்க தயாராக இருக்கிறோமென தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

  

தேசிய சுதந்திர முன்னணி கட்சி காரியாலயத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், உள்ளூராட்சி மன்ற தேர்தலில் அதிகமான சபைகளுக்கு எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை. இந்நிலையில் யார் ஆட்சி செய்தாலும் அவர்களுக்கு ஏனைய கட்சிகளின் ஆதரவு தேவைப்படுகிறது.

அதனால் அவ்வாறன சபைகளை ஆளும் அரசாங்கம் ஆட்சி செய்வதாக இருந்தால், அவர்களுக்கு ஒருபோதும் ஆதரவளிக்கப்போவதில்லை. அதேநேரம் எதிர்க்கட்சியில் ஏதாவது கட்சி ஆட்சி அமைப்பதாக இருந்தால், அவர்களுக்கு நிபந்தனையும் ஆதரவளிக்க தயாராக இருக்கிறோம்.

ஏனெனில் அரசாங்கம் வெறுமனே பேசுவது தவிர செயற்பாட்டில் எதனையும் செய்வதை காணமுடியவில்லை. இன்று நாட்டில் உப்புக்கு தட்டுப்பாடு.

உப்பு பெக்கெட் ஒன்றின் விலை 60 ரூபாவாக உயர்வதற்கு 70 வருடங்கள் சென்றன. ஆனால் 7 மாதங்களில் 60 ரூபாவுக்கு இருந்த உப்பு பெக்கெட் 350 முதல் 400 ரூபா வரை அதிகரித்துள்ளது. இதுதான் இவர்களின் மறுமலர்ச்சி.

உப்புக்கான தட்டுப்பாடு மற்றும் விலை அதிகரிப்புக்கும் இருந்த அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும் என அரசாங்கத்தில் இருக்கும் அமைச்சர் ஒருவர் தெரிவிக்கிறார்.

சிலவேளை அந்த அமைச்சரின் மனைவிக்கு குழந்தை கிடைக்க இருந்தாலும் அதற்கும் இருந்த அரசாங்கமே பொறுப்பு கூறவேண்டும் என சொல்வார்கள். நல்ல வேளை, அவ்வாறன எந்த செய்யும் இல்லை. இல்லாவிட்டால் அந்த கட்டணத்தையும் கடந்த அரசாங்கத்தில் போடுவார்கள்.

அரசாங்கத்தின் செயற்பாடுகளை பார்க்கும்போது புதுமையாக இருக்கிறது. 60 ரூபாவுக்கு இருந்த உப்பு பெக்கட் 350 ரூபாவுக்கு அதிகரித்துள்ளதை 70 வருட சாபம் என தெரிவிக்கிறார்கள். அமைச்சர் ஹந்துன்நெத்தி ஆரம்பித்துவைத்த உப்பு தொழிற்சாலைை எங்கே என கேட்கிறேன். முழு நாட்டுக்கு உப்பு வழங்குவதாக தெரிவித்தார்கள். அந்த உப்பு தொழிற்சாலை மூடப்பட்டுள்ளதா?.

இன்று ஆசிரியர் நியமனம் கிடைத்த ஒருவருக்கு பாடசாலை ஒன்றின் அதிபர் பதவியை வழங்கியுள்ளதுபோன்றே இருக்கிறது. எதனையும் தூரநோக்குடன் தீர்மானம் எடுக்க முடியாத ஒரு அரசாங்கம். அரசாங்கத்தில் உள்ளவர்கள் உப்பு பெக்கெட்டிலும் பணமோசடி செய்துள்ளனர்.

அரிசி இறக்குமதியிலும் மோசடி செய்துள்ளனர். இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலாே அரிசிக்குக்கு 60 ரூபா வரி அறவிட்டால், இறக்குமதி செய்பவருக்கு எந்தளவு லாபம் மீதமாகிறது. அந்த லாபத்தை இரண்டாக பிரித்து எங்கு அனுப்புகிறார்கள்.

அநுரகுமாரவுக்கா அல்லது வசந்த சமரசிங்கவுக்கா? கொல்கலன் விடுவிப்பு மோசடியில் கிடைக்கப்பெற்ற பணம் எவ்வளவு என யாருக்கும் தெரியாது. அண்மைக்காலத்தில் இடம்பெற்ற பாரிய பண மாேசடி இதுவாகும்.

மற்றவர்களின் குறைகளை தேடிக்கொண்டு கோள் கதைத்துக்கொண்டும் இருக்கும் கிணற்றடியில் கலந்துரையாடும் ஒரு அரசாங்கமாகும். இதனைத் தவிர 7 மாதங்களில் இவர்கள் எதை செய்திருக்கிறார்கள் என கேட்கிறேன்.

அதனால் மக்கள் இவர்கள் மீது பாரிய நம்பிக்கை வைத்தே வாக்களித்தார்கள். வணங்கப்போன விகாரை தலையில் இடிந்து விழுந்தால் ஏற்படுகின்ற கோபம், வேறு ஒரு இடத்தில் இடிந்து விழுவதைவிட அதிகமாகும். அதனால் அந்த சூராவளி எந்தப்பக்கத்தால் வீசும் என மதிப்பிட்டு சொல்வது இலகுவானதல்ல என்றார்.

  
   Bookmark and Share Seithy.com



கொடூரங்கள் மீண்டும் இடம்பெறாததை உறுதி செய்யவேண்டும்!
[Friday 2025-05-16 16:00]

தமிழர் இனப்படுகொலையின் போது இடம்பெற்ற கொடூரங்கள் மீண்டும் இடம்பெறாததை உறுதி செய்யவேண்டும் என அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் டொன் டேவிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.



தமிழர்களின் சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான தீர்வுக்கு அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ஆதரவு!
[Friday 2025-05-16 16:00]

தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அடிப்படையாக கொண்ட அரசியல் தீர்வினை ஆதரித்து அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ஹேர்ப் கொனாவே கருத்து வெளியிட்டுள்ளார். சமூக ஊடக பதிவில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது-



சாமர சம்பத்தின் பிணையை ரத்துச் செய்ய நீதிமன்றம் மறுப்பு!
[Friday 2025-05-16 16:00]

ஊழல் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய புதிய ஜனநாயக முன்னணி கட்சியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவின் பிணையை இரத்து செய்யுமாறு இலஞ்சம் ஊழல் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி இன்று நிராகரித்துள்ளார். இலஞ்சம் ஊழல் ஆணைக்குழுவினால் நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட சாட்சியங்கள் போதுமானதாக இல்லாமையால் சாமர சம்பத்தின் பிணையை இரத்து செய்யுமாறு முன்வைத்த கோரிக்கையை நீதவான் நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



ஆனையிறவு உப்பளத்தில் போராட்டம் நடத்த தடை!
[Friday 2025-05-16 16:00]

கிளிநொச்சி ஆனையிறவு உப்பளத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்பினை வெளியிடங்களுக்கு கொண்டுசென்று பொதி செய்யும் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட போராட்டத்துக்கு நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது. இந்நிலையில், போராட்டம் நடத்தப்படும் பகுதியில் இன்று காலை பொலிஸார் குவிக்கப்பட்டனர்.



அதிரடிப்படை வாகனம் மோதி இளைஞன் பலி!
[Friday 2025-05-16 16:00]

வவுனியா, ஓமந்தைப் பகுதியில் விசேட அதிரடிப் படையின் வாகனம் மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இந்த விபத்தில் 32 வயதுடைய கண்ணதாசன் திவியன் என்பவரே உயிரிழந்துள்ளார்.



வவுனியாவை சென்றடைந்த தமிழின படுகொலை நினைவேந்தல் ஊர்தி!
[Friday 2025-05-16 16:00]

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில் தமிழினப் படுகொலையில் உயிர் நீத்தவர்களை நினைவு கூரும் ஊர்தி பவனி இன்று(16) காலை வவுனியாவை வந்தடைந்தது. யாழ்ப்பாணம் நல்லூர் தியாக தீபம்திலீபனின் நினைவிடத்துக்கு முன்பாக நேற்றுமுன்தினம் ஆரம்பமான ஊர்தி பவனி ஓமந்தை ஊடாக இன்று வவுனியா நகரை வந்தடைந்தது.



ஹெரோயின் வைத்திருந்த 3 பேருக்கு மரணதண்டனை!
[Friday 2025-05-16 16:00]

ஹெரோயின் வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்த குற்றச்சாட்டுடன் தொடர்புடைய மூவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இந்த மூவரும் 2018 ஆம் ஆண்டு 176 கிலோகிராமுக்கு அதிகளவான ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டனர். இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டிருந்த மேலும் 5 பிரதிவாதிகளை விடுதலை செய்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகே உத்தரவிட்டார்.



வெருகலில் முள்ளிவாய்க்கால் கஞ்சி!
[Friday 2025-05-16 16:00]

முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தை முன்னிட்டு வெருகல் -இலங்கைத்துறை முகத்துவாரம் பகுதியில் இன்று (16) காலை முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி பரிமாறப்பட்டதோடு, நினைவஞ்சலி நிகழ்வும் இடம்பெற்றது.



ஆட்சியமைக்க சஜித்துடன் பேச இணக்கம்!
[Friday 2025-05-16 16:00]

உள்ளூராட்சி சபைகளில் அதிகாரத்தை நிறுவுவது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் நாளை (17) கலந்துரையாடலை மேற்கொள்ள எதிர்க்கட்சிகளின் செயலாளர்கள் இணக்கம் வௌியிட்டுள்ளனர்.



இந்தியாவில் இருந்து திரும்பிய 6 பேர் கைது!
[Friday 2025-05-16 16:00]

இந்தியாவில் இருந்து படகு வழியாக யாழ்ப்பாணம் வந்த நால்வர் உட்பட 6 பேர் வல்வெட்டித்துறைப் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.



ஒட்டாவா,வோட்டலூ பிரதேசங்களும் தமிழின அழிப்பு அறிவூட்டற் கிழமைக்கு அங்கீகாரம்! Top News
[Friday 2025-05-16 06:00]

2021ஆம் ஆண்டு வரலாற்றுச் சிறப்புமிக்க , தமிழின அழிப்பு அறிவூட்டற் கிழமை - சட்டமூலம் 104 நிறைவேற்றப்பட்டதிலிருந்து, மே 12 முதல் மே 18 ஒன்ராறியோவின் கல்விச்சபைகளெங்கும் அதன்மட்டிலான ஈடுபாடும் அதற்கான அங்கீகாரமும் அதிகரிந்து வருகின்றன. சட்டமூலம் 104 ஆனது, இப்போது இன அழிப்பை நினைவுகூருதல் மற்றும் அதுதொடர்பான கற்பித்தல் மட்டில் மாநில அளவில் உறுதியான நிலையை எட்டியுள்ளது.



நாமல் ராஜபக்ஸவுக்கு பிரம்டன் முதல்வர் சுடச்சுட பதில்!
[Friday 2025-05-16 06:00]

கனடாவில் உருவாக் கப்பட்டுள்ள தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபியை ராஜபக்ச குடும்பம் எதிர்ப்பது அந்த நினைவுத்தூபிக்கு கிடைத்த கௌரவமாகும் என கனடாவின் பிரம்டன் மேயர் பட்ரிக் பிரவுன் தெரிவித்துள்ளார்.



கனடிய அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரிக்கு சிறிதரன் வாழ்த்து!
[Friday 2025-05-16 06:00]

கனடாவின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக பொறுப்பேற்றுள்ள, ஈழத்தமிழரான ஹரி ஆனந்தசங்கரி அவர்களுக்கு, பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.



ஜனாதிபதியின் கருத்து முற்றிலும் ஜனநாயக விரோதம்!
[Friday 2025-05-16 06:00]

தோல்வியை ஏற்றுக் கொள்வதற்கு அரசாங்கம் தயாராக இல்லை. சட்டத்தை மாற்றியேனும் எதிர்க்கட்சிகள் ஆட்சியமைப்பதை தடுப்போம் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளமை முற்றிலும் ஜனநாயக விரோதமான கருத்தாகும். அவர் நிறைவேற்றதிகார ஜனாதிபதி மாத்திரமே. மாறாக சட்டத்துக்கு மேலானவர் அல்ல என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.



குமுதினி படுகொலையின் நாற்பதாவது ஆண்டு நினைவேந்தல்!
[Friday 2025-05-16 06:00]

நெடுந்தீவு குமுதினி படுகொலையின் நாற்பதாவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடந்தது. மாவிலி துறையில் அமைந்துள்ள குமுதினி படுகொலை நினைவேந்தல் நினைவு தூவியில் குமுதினி படுகொலை நினைவேந்தல் குழுவின் தலைவர் விஸ்வலிங்கம் ருத்திரன் தலைமையில் நேற்றுக் காலை நடைபெற்றது. நினைவு சுடர்கள் ஏற்றப்பட்டு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலர் வணக்கம் அக வணக்கம் செலுத்தப்பட்டது



உப்பு இறக்குமதிக்கு அனுமதி!
[Friday 2025-05-16 06:00]

இறக்குமதி கட்டுப்பாடுகளைத் தளர்த்தி ஜூன் 10 ஆம் திகதி வரை உப்பு இறக்குமதிக்கு அனுமதி வழங்க அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு இதை தெரிவித்துள்ளது. இதனூடாக, தொழிற்சாலைகளுக்குத் தேவையான பதனிடப்படாத அயடின் சேர்க்கப்படாத உப்பு மற்றும் நுகர்வோருக்கு தேவையான அயடின் கலந்த உப்பு இறக்குமதிக்கே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.



முள்ளிவாய்க்கால் பேரவலத்தை நினைவு கூறும் 'நினைவாயுதம்' கண்காட்சி! Top News
[Friday 2025-05-16 06:00]

முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தில் முள்ளிவாய்க்கால் பேரவலத்தை நினைவுகூறும் 'நினைவாயுதம்' கண்காட்சி யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வருகிறது. யாழ் . பல்கலைக்கழக பிராதன வளாகத்தில் நடைபெற்று வரும் இக் கண்காட்சி எதிர்வரும் 18 ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது.



உள்ளூராட்சிகளிலும் ஊழல், முறைகேடுகளைத் தடுக்க விசாரணைப் பிரிவு!
[Friday 2025-05-16 06:00]

ஊழல் மற்றும் முறைகேடுகளைத் தடுக்க அமைச்சு மட்டத்தில் நிறுவப்பட்டுள்ள விசாரணைப் பிரிவுகளை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களுள் நிறுவுவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அனுமதி அளித்துள்ளார்.



பிள்ளையான் அடிப்படை உரிமைகள் மனு தாக்கல்!
[Friday 2025-05-16 06:00]

முன்னாள் அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு ஒன்றை சட்டத்தரணிகள் ஊடாக தாக்கல் செய்துள்ளார்.



கிளிநொச்சியை சென்றடைந்த தமிழினப் படுகொலை ஊர்தி!
[Thursday 2025-05-15 18:00]

தமிழினப் படுகொலையைச் சித்திரிக்கும் விதமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்துக்கு முன்பாக நேற்று (14) காலை ஆரம்பமான ஊர்தி பவனி இன்று கிளிநொச்சியை சென்றடைந்தது. இதன்போது பரந்தன், கிளிநொச்சி நகர் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் அஞ்சலி செலுத்தினர்.


Latika-Gold-House-2025
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Rajeef sebarasha 2023/04/19
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Airlinktravel-2020-01-01
Asayan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா