Untitled Document
May 19, 2026 [GMT]
வெள்ளவத்தை கடற்கரையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!- குழுப்ப முயன்ற சிங்கள ராவய. Top News
[Tuesday 2026-05-19 08:00]

இறுதிக்கட்ட போரின் போது உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து கொழும்பு வெள்ளவத்தை கடற்கரையில் திங்கட்கிழமை (மே-18) சிவில் சமூக செயற்பாட்டாளர்களால் அமைதியான முறையில் நினைவேந்தல் அனுஷ்ப்பு, முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வும் முன்னெடுக்கப்பட்டது.

இறுதிக்கட்ட போரின் போது உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து கொழும்பு வெள்ளவத்தை கடற்கரையில் திங்கட்கிழமை (மே-18) சிவில் சமூக செயற்பாட்டாளர்களால் அமைதியான முறையில் நினைவேந்தல் அனுஷ்ப்பு, முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வும் முன்னெடுக்கப்பட்டது.

  

போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு இன்றுடன் 17 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் உயிரிழந்தவர்களை நினைவுக்கூர்ந்து கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்னால் திங்கட்கிழமை (மே-18) காலை முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்பட்டது.

இதனைத் தொடர்ந்து வெள்ளவத்தை கடற்கரையில் மாலை இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்லுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிங்கள ராவய அமைப்பின் ஆதரவாளர்கள், இந்த நினைவேந்தல் நிகழ்வானது பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் செயல் எனக் கூறி கடும் எதிர்ப்பை வெளியிட்டதுடன், விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படத்தையும் தீயிட்டு எரித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டதுடன், பொலிஸாருக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் இடம்பெற்றது.

நினைவேந்தல் என்ற பெயரில் நாட்டில் மீண்டும் பயங்கரவாத சிந்தனைகளை விதைக்க ஒரு சில குழுக்கள் முயற்சிக்கின்றன. முப்பது வருடங்களாக இந்த நாட்டை பேரழிவுக்குள் தள்ளிய பயங்கரவாத கொள்கையை நாட்டில் மீண்டும் தோற்றுவிக்கவோ அல்லது கொண்டாடவோ நாம் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம். சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய பொலிஸார், இவ்வாறான செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது முற்றிலும் தவறானது. இந்த சட்டவிரோத செயல்களுக்கு எதிராக நாம் சட்டப்படி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளோம். எனவே பொலிஸார் உடனடியாக தலையிட்டு இந்த நினைவேந்தலை நிறுத்த வேண்டும். நாட்டை அழிவுக்கு கொண்டுவந்தவர்க்கு நினைவேந்தல் நடத்த அனுமதி வழங்கியது யார்?

இங்கு கூடி நிற்பவர்கள் இலங்கையில் தமிழ் இனப்படுகொலை நடந்ததாக உலகுக்கு பொய்ப் பிரச்சாரம் செய்கின்றனர். இந்த நாட்டில் தமிழ் இனப்படுகொலை என்பதொன்று இடம்பெறவே இல்லை. அவ்வாறு ஒரு இனப்படுகொலை நடந்திருந்தால், இன்று எங்களோடு தோளோடு தோள் நின்று பழகும் தமிழ் நண்பர்கள் எவ்வாறு இந்த நாட்டில் பாதுகாப்பாக வாழ முடியும். இன்றும் இந்த நாட்டில் தமிழ் இளைஞர்களும் யுவதிகளும் எவ்வித அச்சமுமின்றி சுதந்திரமாக வாழ்ந்து வருகின்றனர். எங்களைப் பொறுத்தவரை சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் என்ற பாகுபாடு கிடையாது. நாங்கள் அனைவரும் இந்த நாட்டில் ஒரு தாயின் பிள்ளைகளாக, சகோதரர்களாகவே வாழ்கின்றோம்.

இங்கு நினைவேந்தல் என்ற பெயரில் பிரபாகரனின் பயங்கரவாத சிந்தனைகளுக்கு புத்துயிர் கொடுக்கப் பார்க்கிறார்கள். பயங்கரவாதத்தை ஆரம்பத்திலேயே ஒடுக்காவிட்டால், அவர்கள் மீண்டும் இந்த நாட்டுக்கு எதிராக ஆயுதம் ஏந்தத் தயங்கமாட்டார்கள். ஆயுதம் ஏந்தி வருபவர்களுக்கு ஆயுதத்தாலேயே பதில் வழங்கப்பட வேண்டும் என்பதுதான் நியதியாகும். கடந்த கால போரினால் ஒட்டுமொத்த நாடும் சீரழிந்தது போன்றதொரு நிலைக்கு இந்த நாட்டை மீண்டும் கொண்டு செல்ல நாம் அனுமதிக்க மாட்டோம்.

இந்த நினைவேந்தல் நிகழ்வின் பின்னணியில் சர்வதேச சதி உள்ளது. முப்பது வருட போரினால் இந்த நாட்டு மக்கள் பல்லாயிரக்கணக்கான துயரங்களைச் சந்தித்துள்ளனர். இராணுவத்தினர் தங்களது உயிர்களை தியாகம் செய்து மீட்டெடுத்த இந்த அமைதியான நாட்டில், மீண்டும் இனவாதத்தைத் தூண்டி குளிர்காய சிலர் முற்படுகின்றனர். கனடா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் வாழும் சில பிரிவினைவாத அமைப்புகளிடம் இருந்து பெருமளவிலான நிதியைப் பெற்றுக்கொண்டு, நாட்டை காட்டிக்கொடுக்கும் இவ்வாறான செயல்களில் இவர்கள் ஈடுபடுகின்றனர். இவ்வாறானவர்களுக்கு இந்த நாட்டில் வாழ தார்மீக உரிமை கிடையாது என்று கோசம் எழுப்பி தகாத சைகைகளினால் தங்களது எதிர்ப்பபை வெளிப்படுத்தினர்.

வெள்ளவத்தை கடற்கரை பகுதியில் பதற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து அங்கு மேலதிக பொலிஸ் மற்றும் கலகத்தடுப்புப் பிரிவினர் வரவழைக்கப்பட்டனர். அமைதியான முறையில் நினைவேந்தல் உரிமையைப் பயன்படுத்தி நிகழ்வை நடத்திய சிவில் சமூகத்தினருக்கு இடையூறு விளைவித்தலையும், சட்டம் ஒழுங்கு சீர்குலைவதையும் தடுக்கும் பொருட்டு பொலிஸார் அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.

நினைவேந்தலில் ஈடுபட்டவர்களை அச்சுறுத்தி, வன்முறையைத் தூண்டும் வகையில் செயற்பட்ட சிங்கள ராவய அமைப்பின் ஆதரவாளர்களை அங்கிருந்து உடனடியாக கலைந்து செல்லுமாறு பொலிஸார் அறிவுறுத்தினர்.. பொலிஸாரின் கடுமையான எச்சரிக்கையை அடுத்து, எதிர்ப்பாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் வெள்ளவத்தை கடற்கரை பகுதியில் சில மணித்தியாலங்கள் பெரும் பரபரப்பான சூழல் நிலவியமை குறிப்பிடத்தக்கது.

  
   Bookmark and Share Seithy.com



வலுவான பொறுப்புக்கூறல் பொறிமுறைக்கு சர்வதேச நாடுகள் அழுத்தம் பிரயோகிக்க வேண்டும்!
[Tuesday 2026-05-19 08:00]

பொறுப்புக்கூறலை வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால் அந்தத் தீர்மானங்கள் மாத்திரம் போதாது. மாறாக சர்வதேச பங்களிப்புடன்கூடிய வலுவான பொறுப்புக்கூறல் பொறிமுறையைக் கோரி சர்வதேச நாடுகளின் அரசாங்கங்கள் அழுத்தம் பிரயோகிக்க வேண்டும் என சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள் வலியுறுத்தியுள்ளன.



ஏதோவொரு வடிவில் பொறுப்புக்கூறலை உறுதிசெய்யவேண்டும்!
[Tuesday 2026-05-19 08:00]

சர்வதேச பங்களிப்புடன்கூடிய வலுவான பொறுப்புக்கூறல் பொறிமுறையைக் கோரி சர்வதேச நாடுகளின் அரசாங்கங்கள் அழுத்தம் பிரயோகிக்கவேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்தியப் பணிப்பாளர் அலைன் பியர்ஸன் தெரிவித்துள்ளார்.



மீண்டும் ஆபத்தான நிலைக்குள் இலங்கை!
[Tuesday 2026-05-19 08:00]

உலகளாவிய ரீதியில் நிலவும் போர் மற்றும் நிச்சயமற்ற சூழலால், இலங்கை மீண்டும் ஒரு அபாயகரமான நிலையை எதிர்நோக்கியுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க எச்சரித்துள்ளார்.



இறந்தவர்களின் நீதிக்காக குரலெழுப்புவது உயிருடன் இருப்பவர்களின் கடமை!
[Tuesday 2026-05-19 08:00]

இலங்கையில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பில் உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பன உறுதிசெய்யப்படுவதை முன்னிறுத்தி நான் எனது குரலையும், அதிகாரத்தையும் பயன்படுத்துவேன். இறந்தவர்களால் நீதிக்காக குரலெழுப்பமுடியாது. அவர்களுக்கான அதனைச் செய்வது உயிருடன் இருப்பவர்களின் கடமையாகும் என பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் உமா குமாரன் வலியுறுத்தியுள்ளார்.



கொழும்பில் ரணவிரு நினைவுத் தூபியில் ஒத்திகைக்கு இடையூறு விளைவித்த விமல் வீரவன்ச!
[Tuesday 2026-05-19 08:00]

தேசிய ரணவிரு நினைவு தினத்தை முன்னிட்டு, ஜனாதிபதியின் தலைமையில் பாராளுமன்ற விளையாட்டு மைதானத்தில் உள்ள ரணவிரு நினைவுத் தூபிக்கு அருகில் விசேட நினைவேந்தல் நிகழ்வொன்று இன்று (19) செவ்வாய்க்கிழமை டைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது.



இராணுவ வெற்றி தின நிகழ்வு - மஹிந்தவுக்கு அழைப்பில்லை!
[Tuesday 2026-05-19 08:00]

இன்று நடைபெறவுள்ள தேசிய இராணுவ வெற்றி தின நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு இதுவரை எந்தவொரு அழைப்பும் கிடைக்கப்பெறவில்லை என அவரது ஊடகச் செயலாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.



யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!
[Tuesday 2026-05-19 08:00]

தமிழின அழிப்பை எடுத்துக்காட்டும் 17ஆவது ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவு நாள் நேற்று யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.



வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களுக்கு பொது இணையத்தளம்!
[Tuesday 2026-05-19 08:00]

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு, தனது புதுப்பிக்கப்பட்ட உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தையும், வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்கள் மற்றும் பணியகங்களுக்காகப் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பொது இணையத்தளத்தையும், நேற்று(18) அமைச்சின் பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற வைபவ நிகழ்வில் தொடங்கி வைத்தது.



தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை ஆரம்பம்!
[Tuesday 2026-05-19 08:00]

நாட்டில் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை நிலைமை படிப்படியாகத் உருவாகி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.



பல்லாயிரம் பேரின் கண்ணீரால் நனைந்த முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்! Top News
[Monday 2026-05-18 15:00]

முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலையின் 17ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று முள்ளிவாய்க்கால் நினைவுமுற்றத்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது.



நந்திக்கடலில் அஞ்சலி செலுத்தினார் ரவிகரன்! Top News
[Monday 2026-05-18 15:00]

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 17ஆம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும். இதனை முன்னிட்டு முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்று (18) நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார்.



முள்ளிவாய்க்கால் பிரகடனம் - 2026!
[Monday 2026-05-18 15:00]

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவேந்தலில் வெளியிடப்பட்ட “முள்ளிவாய்க்கால் பிரகடனம் - 2026”.



ஈச்சிலம்பற்றில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!
[Monday 2026-05-18 15:00]

முள்ளிவாய்க்கால் 17ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு திருகோணமலை மாவட்டத்தில் உள்ள வெருகல், ஈச்சிலம்பற்று பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை (18) நடைபெற்றது. பிரதேச மக்கள் ஏற்பாடு செய்திருந்த இந்த நினைவேந்தல் நிகழ்வின்போது முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆத்மா சாந்தி வேண்டி ஒரு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.



பருத்தித்துறையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!
[Monday 2026-05-18 15:00]

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 17ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பருத்தித்துறை நகரில் இன்று (18) உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.



அம்பாறையில் துப்பாக்கிச் சூடு- இருவர் காயம்!
[Monday 2026-05-18 15:00]

அம்பாறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சட்டவிரோத மதுபான விற்பனையுடன் தொடர்புடைய ஒருவரைக் நேற்றிரவு (17) கைதுசெய்யச் சென்றபோது துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.



வல்வையில் நீச்சல் தடாகத்தில் மூழ்கி சிறுவன் பலி!
[Monday 2026-05-18 15:00]

யாழ்ப்பாணத்தில் நேற்று (17) நீச்சல் தடாகத்தில் மூழ்கி சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். புலோலி மேற்குப் பகுதியைச் சேர்ந்த 13 வயதுடைய சிறுவனே இவ்வாறு நீரில் ழூழ்கி உயிரிழந்துள்ளார்.



லண்டனுக்குப் பயணமானார் பிரதமர் ஹரிணி!
[Monday 2026-05-18 15:00]

பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று (18) இங்கிலாந்துக்கு பயணமானார். இங்கிலாந்தின் லண்டன் நகரில் நடைபெறவுள்ள அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காகவே பிரதமர் சென்றுள்ளார்.



முள்ளிவாய்க்காலில் இன்று தமிழினப் படுகொலை நினைவேந்தல்!
[Monday 2026-05-18 03:00]

2009 ஆம் ஆண்டு பாரிய இனப்படுகொலையுடன் போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு இன்றுடன் 17 ஆண்டுகள் பூர்த்தியடையும் நிலையில், முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வு இன்று முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெறவுள்ளது.



சிறிதரனை விசாரிக்க மூவர் குழு!- தமிழரசின் மத்திய குழு தீர்மானம்.
[Monday 2026-05-18 03:00]

பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தொடர்பாக முன்வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளை ஆராய்வதற்காக அவரது இணக்கப்பாட்டுடன் மூவர் கொண்ட குழு நியமிக்கப்பட்டிருப்பதாக தமிழரசுக்கட்சியின் பதில் பொதுசெயலாளர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார்.



மேல் மாகாண ஆளுநர் பதவி விலக முடிவு!
[Monday 2026-05-18 03:00]

மேல் மாகாண ஆளுநர் பதவியில் இருந்து விலகுவதற்கு தாம் தீர்மானித்துள்ளதாக ஹனீஃப் யூசுப் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு அறிவித்துள்ளார். அவர் ஊடகங்களுக்கு அறிக்கையொன்றை விடுத்து இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா