Untitled Document
May 19, 2026 [GMT]
வலுவான பொறுப்புக்கூறல் பொறிமுறைக்கு சர்வதேச நாடுகள் அழுத்தம் பிரயோகிக்க வேண்டும்!
[Tuesday 2026-05-19 08:00]


பொறுப்புக்கூறலை வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால் அந்தத் தீர்மானங்கள் மாத்திரம் போதாது. மாறாக சர்வதேச பங்களிப்புடன்கூடிய வலுவான பொறுப்புக்கூறல் பொறிமுறையைக் கோரி சர்வதேச நாடுகளின் அரசாங்கங்கள் அழுத்தம் பிரயோகிக்க வேண்டும் என சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள் வலியுறுத்தியுள்ளன.

பொறுப்புக்கூறலை வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால் அந்தத் தீர்மானங்கள் மாத்திரம் போதாது. மாறாக சர்வதேச பங்களிப்புடன்கூடிய வலுவான பொறுப்புக்கூறல் பொறிமுறையைக் கோரி சர்வதேச நாடுகளின் அரசாங்கங்கள் அழுத்தம் பிரயோகிக்க வேண்டும் என சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள் வலியுறுத்தியுள்ளன.

  

2009 ஆம் ஆண்டு போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு நேற்றுடன் 17 ஆண்டுகள் பூர்த்தியடைந்திருக்கும் நிலையில், போரில் கொல்லப்பட்ட மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகள் உள்நாட்டிலும், புலம்பெயர் தேசங்களிலும் அவர்களது அன்புக்குரியவர்களால் நினைவுகூரப்பட்டனர்.

அதற்கமைய போரில் கொல்லப்பட்டவர்களை நினைவுகூரும் வகையில் சர்வதேச மன்னிப்புச்சபையின் உத்தியோகபூர்வ எக்ஸ் தளப்பக்கத்தில் செய்யப்பட்டிருக்கும் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:

இலங்கையில் இடம்பெற்ற ஆயுதமோதல் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டு இன்றுடன் 17 ஆண்டுகள் நிறைவடைகின்றன. அம்மோதலில் உயிர் பிழைத்தவர்களும், அவர்களது குடும்பத்தினரும் ஒவ்வொரு ஆண்டும் முள்ளிவாய்க்காலில் ஒன்றுகூடி போரின்போதும், இறுதிக்கட்டப்போரிலும் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதுடன், தாம் அனுபவித்த துயரங்களுக்கு சாட்சியாக நிற்கின்றனர்.

ஐக்கிய நாடுகள் சபையினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் ஊடாக ஆவணப்படுத்தப்பட்டதன் பிரகாரம், மோதலின்போது இடம்பெற்ற சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமானச் சட்ட மீறல்கள் தொடர்பில் உண்மை, நீதி மற்றும் இழப்பீடு என்பன உறுதிசெய்யப்படவேண்டியதன் உடனடித் தேவையை இந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நினைவுறுத்துகிறது.

உள்நாட்டுப் பொறிமுறையின் ஊடாகப் பக்கச்சார்பற்றதும், நம்பகரமானதுமான விசாரணைகள் இடம்பெறுவதை உறுதிசெய்வதாக இலங்கை உள்நாட்டிலும், சர்வதேச ரீதியிலும் பலமுறை வாக்குறுதியளித்த போதிலும், தற்போதைய அரசாங்கம் உள்ளடங்கலாக அடுத்தடுத்து ஆட்சிபீடமேறிய அரசாங்கங்கள் அவ்வாக்குறுதியை நிறைவேற்றத் தவறிவிட்டன.

நாட்டில் ஆழமாக வேரூன்றியிருக்கும் தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கானது நீதி, நல்லிணக்கம் மற்றும் நிலையான அமைதியை நிலைநாட்டுவதற்கான வாய்ப்புக்களை சீர்குலைப்பதுடன் மாத்திரமன்றி, சர்வதேச சட்டத்தின் பிரகாரம் இலங்கை பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதற்கு புதுப்பிக்கப்பட்ட வலுவான நடவடிக்கை அவசியம் என்பதையும் காண்பிக்கின்றது.

மோதல்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் தமிழ்ச்சமூகங்களுடனான கலந்துரையாடலின்போது, நீண்டகாலப் பிரச்சினைகளுக்கான தீர்வு மற்றும் கடந்தகால மீறல்களுக்கான பொறுப்புக்கூறல் என்பன நிறைவேற்றப்பட்டால் மாத்திரமே அரசாங்கத்துடன் அர்த்தமுள்ள ஒத்துழைப்பைக் கட்டியெழுப்பமுடியும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

  
   Bookmark and Share Seithy.com



ஏதோவொரு வடிவில் பொறுப்புக்கூறலை உறுதிசெய்யவேண்டும்!
[Tuesday 2026-05-19 08:00]

சர்வதேச பங்களிப்புடன்கூடிய வலுவான பொறுப்புக்கூறல் பொறிமுறையைக் கோரி சர்வதேச நாடுகளின் அரசாங்கங்கள் அழுத்தம் பிரயோகிக்கவேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்தியப் பணிப்பாளர் அலைன் பியர்ஸன் தெரிவித்துள்ளார்.



மீண்டும் ஆபத்தான நிலைக்குள் இலங்கை!
[Tuesday 2026-05-19 08:00]

உலகளாவிய ரீதியில் நிலவும் போர் மற்றும் நிச்சயமற்ற சூழலால், இலங்கை மீண்டும் ஒரு அபாயகரமான நிலையை எதிர்நோக்கியுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க எச்சரித்துள்ளார்.



இறந்தவர்களின் நீதிக்காக குரலெழுப்புவது உயிருடன் இருப்பவர்களின் கடமை!
[Tuesday 2026-05-19 08:00]

இலங்கையில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பில் உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பன உறுதிசெய்யப்படுவதை முன்னிறுத்தி நான் எனது குரலையும், அதிகாரத்தையும் பயன்படுத்துவேன். இறந்தவர்களால் நீதிக்காக குரலெழுப்பமுடியாது. அவர்களுக்கான அதனைச் செய்வது உயிருடன் இருப்பவர்களின் கடமையாகும் என பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் உமா குமாரன் வலியுறுத்தியுள்ளார்.



கொழும்பில் ரணவிரு நினைவுத் தூபியில் ஒத்திகைக்கு இடையூறு விளைவித்த விமல் வீரவன்ச!
[Tuesday 2026-05-19 08:00]

தேசிய ரணவிரு நினைவு தினத்தை முன்னிட்டு, ஜனாதிபதியின் தலைமையில் பாராளுமன்ற விளையாட்டு மைதானத்தில் உள்ள ரணவிரு நினைவுத் தூபிக்கு அருகில் விசேட நினைவேந்தல் நிகழ்வொன்று இன்று (19) செவ்வாய்க்கிழமை டைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது.



இராணுவ வெற்றி தின நிகழ்வு - மஹிந்தவுக்கு அழைப்பில்லை!
[Tuesday 2026-05-19 08:00]

இன்று நடைபெறவுள்ள தேசிய இராணுவ வெற்றி தின நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு இதுவரை எந்தவொரு அழைப்பும் கிடைக்கப்பெறவில்லை என அவரது ஊடகச் செயலாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.



யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!
[Tuesday 2026-05-19 08:00]

தமிழின அழிப்பை எடுத்துக்காட்டும் 17ஆவது ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவு நாள் நேற்று யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.



வெள்ளவத்தை கடற்கரையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!- குழுப்ப முயன்ற சிங்கள ராவய. Top News
[Tuesday 2026-05-19 08:00]

இறுதிக்கட்ட போரின் போது உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து கொழும்பு வெள்ளவத்தை கடற்கரையில் திங்கட்கிழமை (மே-18) சிவில் சமூக செயற்பாட்டாளர்களால் அமைதியான முறையில் நினைவேந்தல் அனுஷ்ப்பு, முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வும் முன்னெடுக்கப்பட்டது.



வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களுக்கு பொது இணையத்தளம்!
[Tuesday 2026-05-19 08:00]

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு, தனது புதுப்பிக்கப்பட்ட உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தையும், வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்கள் மற்றும் பணியகங்களுக்காகப் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பொது இணையத்தளத்தையும், நேற்று(18) அமைச்சின் பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற வைபவ நிகழ்வில் தொடங்கி வைத்தது.



தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை ஆரம்பம்!
[Tuesday 2026-05-19 08:00]

நாட்டில் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை நிலைமை படிப்படியாகத் உருவாகி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.



பல்லாயிரம் பேரின் கண்ணீரால் நனைந்த முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்! Top News
[Monday 2026-05-18 15:00]

முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலையின் 17ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று முள்ளிவாய்க்கால் நினைவுமுற்றத்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது.



நந்திக்கடலில் அஞ்சலி செலுத்தினார் ரவிகரன்! Top News
[Monday 2026-05-18 15:00]

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 17ஆம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும். இதனை முன்னிட்டு முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்று (18) நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார்.



முள்ளிவாய்க்கால் பிரகடனம் - 2026!
[Monday 2026-05-18 15:00]

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவேந்தலில் வெளியிடப்பட்ட “முள்ளிவாய்க்கால் பிரகடனம் - 2026”.



ஈச்சிலம்பற்றில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!
[Monday 2026-05-18 15:00]

முள்ளிவாய்க்கால் 17ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு திருகோணமலை மாவட்டத்தில் உள்ள வெருகல், ஈச்சிலம்பற்று பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை (18) நடைபெற்றது. பிரதேச மக்கள் ஏற்பாடு செய்திருந்த இந்த நினைவேந்தல் நிகழ்வின்போது முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆத்மா சாந்தி வேண்டி ஒரு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.



பருத்தித்துறையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!
[Monday 2026-05-18 15:00]

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 17ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பருத்தித்துறை நகரில் இன்று (18) உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.



அம்பாறையில் துப்பாக்கிச் சூடு- இருவர் காயம்!
[Monday 2026-05-18 15:00]

அம்பாறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சட்டவிரோத மதுபான விற்பனையுடன் தொடர்புடைய ஒருவரைக் நேற்றிரவு (17) கைதுசெய்யச் சென்றபோது துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.



வல்வையில் நீச்சல் தடாகத்தில் மூழ்கி சிறுவன் பலி!
[Monday 2026-05-18 15:00]

யாழ்ப்பாணத்தில் நேற்று (17) நீச்சல் தடாகத்தில் மூழ்கி சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். புலோலி மேற்குப் பகுதியைச் சேர்ந்த 13 வயதுடைய சிறுவனே இவ்வாறு நீரில் ழூழ்கி உயிரிழந்துள்ளார்.



லண்டனுக்குப் பயணமானார் பிரதமர் ஹரிணி!
[Monday 2026-05-18 15:00]

பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று (18) இங்கிலாந்துக்கு பயணமானார். இங்கிலாந்தின் லண்டன் நகரில் நடைபெறவுள்ள அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காகவே பிரதமர் சென்றுள்ளார்.



முள்ளிவாய்க்காலில் இன்று தமிழினப் படுகொலை நினைவேந்தல்!
[Monday 2026-05-18 03:00]

2009 ஆம் ஆண்டு பாரிய இனப்படுகொலையுடன் போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு இன்றுடன் 17 ஆண்டுகள் பூர்த்தியடையும் நிலையில், முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வு இன்று முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெறவுள்ளது.



சிறிதரனை விசாரிக்க மூவர் குழு!- தமிழரசின் மத்திய குழு தீர்மானம்.
[Monday 2026-05-18 03:00]

பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தொடர்பாக முன்வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளை ஆராய்வதற்காக அவரது இணக்கப்பாட்டுடன் மூவர் கொண்ட குழு நியமிக்கப்பட்டிருப்பதாக தமிழரசுக்கட்சியின் பதில் பொதுசெயலாளர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார்.



மேல் மாகாண ஆளுநர் பதவி விலக முடிவு!
[Monday 2026-05-18 03:00]

மேல் மாகாண ஆளுநர் பதவியில் இருந்து விலகுவதற்கு தாம் தீர்மானித்துள்ளதாக ஹனீஃப் யூசுப் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு அறிவித்துள்ளார். அவர் ஊடகங்களுக்கு அறிக்கையொன்றை விடுத்து இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.


Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா