Untitled Document
September 19, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
உறை பனியிலும் இறைபணியே மேல் என மனிதம் காத்திடத் திரண்ட மக்கள் கூட்டம்! Top News
[Thursday 2024-01-25 00:00]

கடந்த 19-01-24 வெள்ளி  மாலை Scarborough Metropoliton அரங்கில் நிகழ்ந்தேறிய திரு.செந்தில் குமரன் அவர்களின் தாயக மக்களுக்கான

கடந்த 19-01-24 வெள்ளி மாலை Scarborough Metropoliton அரங்கில் நிகழ்ந்தேறிய திரு.செந்தில் குமரன் அவர்களின் தாயக மக்களுக்கான "நிவாரணம்" எனும் உயிர்காப்பு இன்னிசை மாலை " MGR 107 " மனிதநேயம் படைத்த மக்கள் வெள்ளம் அலைகடலாக ஆர்ப்பரித்து எழுந்தோடித் தளம்பிய காட்சியாய் விரிந்த காட்சி கண்கொள்ளாக் காட்சியாய் அமைந்தது.

  

மனித உணர்வுகளுக்கு உயர்கொடுக்கும் பொன்மனச் செம்மலின் திரைப்படைப்புகள் தந்த மனிதாபிமான வழிகூறும் மெய்யியல் தத்துவப் பாடல்களோடு மனதை மயக்கும் இனிய காதல் பாடல்களுமாய் கூடவே அக்காலதில் புகழ் பெற்ற சிவாஜிகணேசன் திரைகளிலிருத்தும் அன்றாடம் நாம் மனதிற்குள் நினைந்து நினைந்து உருகி இன்புறும் காதல் பாடல்கள் மற்றும் ஏம் இராஜா, சீர்காழி போன்ற இன்குரல் செம்ல்கள் தந்த தித்திக்கும் பாடல்களுமென பொங்கி வழிந்த இசைமழையினில் நனைந்து இன்புற்ற மக்கள் பரவசத்தில் மூழ்கித்திளைத்த அந்த ஐந்து மணிநேரமும் ஐம்புலன்களையும் ஆட்சி செய்த பொன்மாலை வேளையெனில் பிறிதொரு வார்த்தையில்லை என்பேன்.

இவை அனைத்திற்கும் மகுடம் வைத்தாற் போல் திரு செந்தில் குமரன் அவர்கள் சிவாஜி எம்ஜிஆர் சாயலாய் அவர்தம் திரைக்காட்சிகளுக்கு ஏற்ப அப்பப்போ திடீர் உடையலங்கார ஒப்பைகளுடன் மேடையில் தோன்றி மக்களை இன்பவெள்ளத்தில் மூழ்கடித்த கணங்கள் ஒரு திரையரங்கிற்குள் நிற்பது போல் அல்லது அம்மாபெரும் நடிகர்களின் படப்பிடிப்புகளையே நேரே கண்டு களிப்பது போல் உணர்வின் தத்துரூப வெளிப்பாடாய் அவை எமை இன்பத்தில் ஆழ்த்தியது இரட்டிப்பு இனிமை எனலாம்.

அன்றைய இருபத்தி ஐந்து பாகை உறைபனிப் குளிர் நிலையினையும் ஒரு பொருட்டாத எண்ணாத மனிதம் தேடும் மக்கள் கூட்டம் திரள்திரளாய் பார்ப்போர் கூடத்தை நோக்கி அணிதிரண்டு வந்த வண்ணமே இருந்தனர்.

மண்டப வளாக வாகன தரிப்பிடங்களும் அதனை அண்டிய பிற நிறுவனங்களின் தரிப்பிடங்களும் இரசிகர் பட்டாள வாகனங்களால் நிரம்பிய நிலையில் அருகே உள்ள குடிமனைகளின் வீதி வீதியாய் தமது வாகனங்களை நிறுத்தி விட்டு கால்நடையாய் வந்து நிகழ்வை உளப்பூர்வமான பங்களிப்புகளுடன் இறுதிவரை இருந்து கண்டு களித்து பன்னிரண்டு மணி கடந்து நிகழ்வு நிறைவுற்ற பின்னும் பிரியும் மனமின்றி பெருமகிழ்வுடன் அவர்கள் வீடு சென்றமை நிகழ்வின் தரத்திற்கும் அதன் இலட்சியப் பயணத்திற்கும் மக்கள் வழங்கிய அங்கீகாரமும் ஒத்தாசையும் என்று சொல்வதே சாலப்பொருந்தும் .

மண்டபத்தில் அமைக்கப் பெற்ற இருக்கைகளிற்கு மேலாய் மக்கள் கூட்டம் பெருக்கெடுத்து வழிநெடுக நின்ற நிலையாய் நின்று தத்தளிக்கும் நிலை கண்டு மேலும் பிரத்தியோகமாக நூற்றிற்கும் மேற்பட்ட நாற்காலிகள் அவசரமாக வரவழைக்கப்பெற்றும் அவையும் போதாமையினால் உணர்ச்சிப் பெருக்கில் சுவைஞர் பெருமக்கள் நின்றவாறே கரவொலி கொட்டிக் கொண்டாடிய ஆரவாரத்தில் சுற்றும் முற்றும் சோபித்த விழாக்கோலம் பார்ப்போரை மெய்சிலிர்க்க வைத்திருந்தது.

துன்பங்களின் விளிம்பில் நின்று அல்லாடும் எம் தாய்மண் உடன்பிறப்புகளின் துயர்களை போக்கும் புனிதப் பணியில் அபிமானம் மிக்க இருபாலார் பாடகர் வட்டமும், இதயங்களை வருடும் இசைஞானம் கொண்ட Lathan Brothers இளையதலைமுறை இசை வல்லுனர்களும், இன உணர்வும் சமூகப் பொறுப்பும் ஒருசேர இரசிகர்களை உணர்ச்சிப் பெருக்கிலும் மகிழ்ச்சிக் கடலிலும் களிப்புறும் வகையில் நிகழ்வினை கொண்ட குறிக்கோளுக்கு அமைவாகவும், புத்துணர்வுடனும் பொழுதை கவலைகளை மறந்து களிப்புறும் வகையிலும் மேடையை ஒரு கொண்டாட்டக் களமாகவும், பயன் மிக்க நன்கொடையாளர்களின் சந்நிதியாகவும் நகர்த்திச் சென்ற சமூகப்பற்றும் அதற்கான செயற் திறனும் மிக்க நிகழ்ச்சித் தொகுப்பாளர்களாகிய திருமதி சாந்தினி சிவா மற்றும் செல்வி ரொசீதா ஆகிய இருவரும் தமது நேரத்தை மக்கள் பணியின் நிமிர்த்தம் முழுநீள நிகழ்ச்சிக்குமாக பங்களிப்புச் செய்தமை மிகுந்த பாராட்டுதலுக்கும் நன்றிக்குமுரிய ஒன்று என்றே சொல்ல வேண்டும்.

நிவாரணத்தின் நிறுவுனரும் தீரா நோய்களிலிருந்தும், வாழ்வாதாரங்கள் அற்றோராகவும் உயிர்பிழைக்கவென ஏங்கித்தவிக்கும் வகையற்றோர் மீது பரிவுகொண்டவருமாய் தமது இயல்பிற்கும் மீறியவகையில் கடினமாக முயன்று ஒரு தனிமனிதராய் இன்றுவரை பலநூறு மக்களின் அல்லல் போக்கிமீள்வாழ்வு அளித்து வருபவருமாகிய திரு.செந்தில் குமரன் அவர்கள் தமது செயற் திட்டங்களின் பயனாகக் காப்பாற்றப்பட்ட பயனாள உறவுகளின் மகிழ்ச்சியையும், இன்னமும் உயிர்காப்பு வேண்டி காத்திருக்கும் நோயின் பிடியில் சிக்கித் தவிக்கும் இளம் குழந்தைகள் சிறியோர் இளையோர் பருவவயதினர் முதியோர் பொருள் வளமற்றோர் போன்றோரின் கண்ணீர் வேண்டுதல்களையும், மன்றாட்டுக்களையும் மக்கள் முன் விபரித்த போது கண்கலங்கிய மக்கள் தமது பங்களிப்புகளை பெருமனமுடன் வாரி வழங்கி உணர்வெழுச்சியுடன் நிகழ்வினை மகிழ்ச்சிப் பெருக்கோடு அனுபவித்து ஆரவாரித்து இன்பம் மேலிட ஆர்ப்பரித்த கொண்டாடிய விதம், பார்ப்போர் மனங்களை நெகிழ வைத்த நிகழ்வாய் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அரங்கத்தின் இருமருங்கிலும் அமைக்கப்பெற்றிருந்த விளக்கேற்றும் பீடங்களிலும் காட்சிப்படுத்தப் பட்டிருந்த ஐநூறு டொலர் பங்களிப்பிற்கான நூறு விளக்குகளின் வடிவமைப்பு ஒன்று ஏற்படுத்தப்பட்டிருந்தன. பாடல்களின் போது திரு செந்தில் குமரன் தீபங்களின் மகிமையின் மேல் வலிமையின் மேல் ஆணையாடும் பாடலான "இசைகேட்டால் புவி அசைந்தாடும்" என்ற பாடலை பேரெழுச்சியுடன் ஆரம்பித்ததும் விளக்குகள் அனைத்தையும் மக்கள் துயர்களை மனதில் தாங்கி வந்த கொடையாள மனம்படைத்த மக்கள் தம்வசப்படுத்தி பங்களிப்புகளை தாராள மனதுடன் வாரி வழங்கி நிவாரணத்தாயின் கைகளுக்கு வலிமை சேர்த்து, "இல்லாதோருக்கான பணி இறைபணி" எனும் பெருமைக்கு தம்மை உட்படுத்தியது கண்டு கண்கள் குளமாகின.

நிறைவாக புரட்சித்தலைவர் MGR வரிசையில் மனிதநேயத்திற்கும், இரக்க சுபாவத்திற்கும் கறுப்பு MGR என்று செல்லமாக அழைக்கப்பெற்ற புரட்சிக்கலைஞர் அமரர் "விஜயகாந்த்" அவர்களின் மறைவு தொடர்பான நினைவுகூரல் நிகழ்வொன்றும் இடம்பெற்றது.

அவரது திரைப்படங்களில் மனம்விட்டகலா பாடல்களின் ஒரு தொகுப்பினை அனைத்து பாடகர்களும் உணர்வு பூர்வமாக பாடி அவருக்கு அகவணக்கம் செலுத்திய நிகழ்வானது ஒட்டுமொத்த விழாவின் முத்தாய்ப்பாய் அமைந்தது எனில் மிகையல்ல.

ஏழ்மையைக் கண்டு விலகாமலும், கொடுமையைக் கண்டு அஞ்சாமலும் வாழும் வாழ்வே இறைநெறிக்கு ஒப்பான வாழ்வாகும். எமது மனிதக்கடனை நாமே இறைவன் காலடியில் சமர்ப்பிக்கும் இவ் அரும்பெரும் வாய்ப்பினை தவறவிட்டோர், இனிவரும் காலங்களில் செந்தில் குமரன்களை இனம் கண்டு தமக்கு இசைவான வழிகளில் மனிதம் காத்திட உறுதி பூண்டு செயலாற்றின் எம்கைகளை எண்ணிக் காத்திருக்கும் மேலும் பல உயிர்களுக்கு வாழ்வளிக்கலாம்.

வாழ்க மனிதம் வாழ்க நிவாரணத்தாய் வாழ்க செந்தில் குமரன் வாழ்க கொடையாள நெஞ்சங்கள்.

அன்பில்லாதவர் எல்லாமே தமக்கு தமக்கு என்பர் அன்புள்ளவரோ தமக்கானவற்றையும் கொடுப்பர் பிறருக்கு...!

இனிவரும் எம்ஜிஆர் 108 மேலும் பல உயிர்களின் காப்பரணாக அமையட்டும்.

நன்றி!

க.இராசநாதன்

  
   Bookmark and Share Seithy.com



பிரம்டனில் தமிழின அழிப்பு நினைவிட அடிக்கல் நாட்டல்! Top News
[Friday 2024-08-23 06:00]

ஆகஸ்ட் 14, 2024 அன்று, கனடாவின் பிரம்டன் நகரிலுள்ள சிங்கூசிப் பூங்காவில் தமிழின அழிப்பு நினைவிடத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இது கனடாவில் மட்டுமன்றி உலகெங்குமுள்ள ஈழத் தமிழர்களுக்கான ஒரு வரலாற்று நிகழ்வாகக் கருதப்படுகிறது. இந்நிகழ்வு தமிழின அழிப்பு நடைபெற்றது என்பதற்கான சர்வதேச அங்கீகாரம், அதற்கான பொறுப்புக்கூறல் மற்றும் தமிழ் மக்களின் நீதிக்கான போராட்டம் போன்றவற்றின் ஒரு படிநிலையாக அமைகிறது. தமிழர்கள் மீதான இன அழிப்பை மறுதலிப்பவர்கள் இந்நிகழ்வைச் சீர்குலைக்க முனைந்த போதிலும், பிராம்ப்டன் நகரமுதல்வர் பட்றிக் பிரவுன், பிரம்ரன் தமிழ் ஒன்றியம், கனடிய தமிழர் தேசிய அவை (NCCT) மற்றும் பல தமிழ் அமைப்புகளின் பேராதரவுடன் நிகழ்வு வெற்றிகரமாக நடந்தேறியது.



தமிழின அழிப்பு நினைவகம் அடிக்கல் நாட்டும் நிகழ்வு - ஆகஸ்ட் 14, 2024! Top News
[Tuesday 2024-08-20 21:00]

ஆகஸ்ட் 14, 2024ல் கனடாவில் உள்ள பிராம்ப்டன் நகரில் அமைந்திருக்கும் சிங்குசி பூங்காவில் தமிழின அழிப்பு நினைவகத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்ட நிகழ்வானது கனடாவிலும் உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களுக்கு ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது. தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற இன அழிப்பிற்கான அனைத்துலக அங்கீகாரம், சர்வதேச பொறுப்புக்கூறல் மற்றும் பரிகார நீதி ஆகியவற்றை அடைவதற்கான தமிழ் மக்களின் நீண்ட பயணத்தில், இது ஒரு முக்கியமான மைல்கல் ஆகும்.



முதியோர் வாழும் செயற்றிறன் மையங்களை சமூகங்கள் பயன்பெறும் வகையில் ஒன்ராறியோ விரிவாக்குகிறது! Top News
[Friday 2024-07-19 06:00]

ஒன்ராறியோ அரசாங்கம், உடல்நலம், உடற்பயிற்சி, சமூக ஒருங்கிணைப்பு போன்ற அமைப்புகளை மேம்படுத்தி சேவைகளை வழங்குவதன் மூலம் முதியோர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த முதியோர் வாழும் செயற்றிறன் மையங்களை (SALCs) விரிவுபடுத்துகிறது. இது தொடர்பாக அமைச்சர் விஜய் தணிகாசலம் கருத்துத் தெரிவிக்கும்போது, "முதியோர் வாழும் செயற்றிறன் மையங்களை (SALC) விரிவுபடுத்துவதன் மூலம், பெருமளவு முதியவர்கள், சுறுசுறுப்பானதும் சுதந்திரமானதுமான வாழ்க்கையை வாழத் தேவையான வசதிகளை நாங்கள் ஏற்படுத்திக்கொடுக்கவுள்ளோம்" என்றார். மாநிலம் முழுவதும் முந்நூறுக்கும் அதிகமான முதியோர் வாழும் செயற்றிறன் மையங்கள் (SALC) வெற்றிகரமான நிலையில் இயங்கிவரும் வேளையில், இம்முக்கிய திட்டங்களை இணைந்து வழங்க உள்ளூர் நிறுவனங்களையும் அரசாங்கம் அழைக்கிறது.



மல்லாவி வைத்தியசாலைக்கு செந்தில் குமரன் நிவாரண நிதியத்தினால் இரத்த சுத்திகரிப்பு இயந்திரங்கள் வழங்கிவைப்பு! Top News
[Monday 2024-06-10 21:00]

முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி ஆதார வைத்தியசாலையின் பயன்பாட்டிற்கான இரத்த சுத்திகரிப்பு இயந்திரம் கனடா செந்தில் குமரன் நிவாரண நிதியத்தினால் நேற்று ஞாயிற்று கிழமை மாலை வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வானது மல்லாவி ஆதார வைத்தியசாலையின் சிறுநீரக சிகிச்சை பிரிவு கட்டிடத் தொகுதியில் இடம்பெற்றிருந்தது. இதன்போது கனடா செந்தில்குமரன் நிவாரண நிறுவனத்தின் அனுசரணையில் 3,367,000 செலவில் இரத்த சுத்திகரிப்பு இயந்திரங்கள் மல்லாவி ஆதார வைத்தியசாலை நிர்வாகத்திடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.



கனடாவில் அறிவக மாணவர்களுக்கான ஆண்டிறுதித் தேர்வில் ஐயாயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் தேர்வெழுதினர்! Top News
[Monday 2024-06-03 21:00]

நடப்புக் கல்வியாண்டுக்கான இறுதித்தேர்வு எட்டுத் தேர்வு மையங்களில் இனிதே நடைபெற்று முடிந்தது. கனடாவில் உள்ள 200 இற்கும் மேற்ப்பட்ட அறிவகத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் இத் தேர்விற்கு முகம் கொடுத்தனர். தேர்வுப் பணிகளில் ஏறக்குறைய முன்னூறு ஆசிரியர்கள் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.



தமிழ் தேசம் தொடர்ச்சியான இராணுவ அடக்குமுறைக்குள்" கலம் மெக்ரே அவர்களின் முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவு தின செய்தி! Top News
[Thursday 2024-05-30 06:00]

15 வருடங்கள் ஆகியும் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்ந்த கொடூர குற்றங்களுக்கு நீதி கிடைக்கவில்லை, குற்றங்கள் இன்று வரை தொடர்கின்றது. இதனால் உயிர் பிழைத்தோருக்கும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கும் மிகவும் பெரும் மன உளைச்சலை கொடுக்கின்றது. இவர்களின் நினைவு கூரல் உரிமை கூட மறுக்கப்படுகின்றது. தமிழ் மக்களின் தாயகம், அரச பயங்கரவாத பாதுகாப்பு படையினரால் கொடூர அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. உண்மை கண்டறியப்பட்டு நீதியை நிலைநாட்ட வேண்டிய தேவை முன்னெப்போதையும் விட இன்று அதிகம் முக்கியத்துவம் வாய்ந்தது.



ஈரான் அதிபருக்கான இரங்கல் பதிவு! Top News
[Friday 2024-05-24 21:00]

சில நாட்களுக்கு முன்னர், அசர்பைஜான் எல்லையில் ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசி, ஈரான் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஹுசைன் அமீர் அப்துல்லாஹியான் உள்ளிட்ட எட்டு அரச அதிகாரிகளுக்கு, வணிக உலக சர்வதேச அமைப்பின் இயக்குனர் ரகு இந்திரகுமார் கொழும்பிலுள்ள ஈரான் தூதரகத்திற்குச் சென்று, தூதுவரைச் சந்தித்து தனது அனுதாபங்களைத் தெரிவித்ததோடு, விசேட நினைவுக்குறிப்பேட்டில் தனது அனுதாபச் செய்தியையும் பதிவிட்டார்.



பிரித்தானியாவில் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் தமிழ் இளையோர்களின் நடன நிகழ்வு Top News
[Thursday 2024-05-23 21:00]

சந்ததிகள் கடந்தும் தாயகம் இழந்தும் நீதிக்காக போராடும் தமிழ் இளையோர்கள் - பிரித்தானியாவில் முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவு தினத்தில் தமிழர்களின் வலியை உலகுக்கு உணர்த்திய தமிழ் இளையோர்களின் நடன நிகழ்வு.



ஊழி திரைப்படம் பற்றிய பின்னோட்டம்! Top News
[Tuesday 2024-05-21 21:00]

யுத்தம் முடிவுக்கு வந்த பின்னரான தமிழர்களின் வாழ்வின் இருண்ட யுகங்களை பற்றி பேசும் படமாக ஊழி திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மே 10ம் திகதி இலங்கையிலும், உலகளவிலும் இத்திரைப்படம் உலகளவில் திரையிடப்படவுள்ளது. ஈழத்தில் உருவாக்கப்பட்ட ஈழ திரைப்படமே ஊழி ஆகும். நாட்டில் இனவழிப்பு ஒன்று செய்யப்பட்ட பின்னர், தாம் நாட்டினை ஒன்றாகியதாக ஆட்சியாளர்கள் 2009ம் ஆண்டு கூறிய பின்னர், கிழக்கு மாகாணத்தில் தொடங்கும் கதையே ஊழி திரைப்படம். இந்த திரைப்படம் போருக்குப் பிந்தைய சூழலில் ஒரு சிறுவனின் வாழ்வு பற்றியும், 2009ம் ஆண்டிற்கு பின்னர் தமிழர்களின் இருண்ட யுகங்களை பற்றியும் பேசுகின்றது. இந்த திரைப்படத்தில் ஈழ கலைஞர்கள் , தென்னிந்திய கலைஞர்கள் மற்றும் தென்னிலங்கை கலைஞர்கள் பணியாற்றியுள்ளனர்.



தமிழின அழிப்பு நினைவுநாள் 2024 - யேர்மனி 18.05.2024! Top News
[Tuesday 2024-05-21 06:00]

18.05.2024 சனிக்கிழமை அன்று முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 15ஆவது ஆண்டு நினைவுநாள் யேர்மனியின் டுசில்டோவ் (Düsseldorf)நகரில் பேரெழுச்சியோடு நினைவு கூரப்பட்டது. பிற்பகல் 14:30 மணிக்கு நகரமத்தியில் பெருந்திரளான மக்களோடு ஆரம்பமாகிய பேரணி, தமிழ் இளையோர் அமைப்பின் ஒருங்கிணைப்பிலும் தமிழாலயங்களது ஒப்பனையும் பாவனையும் எனும் வடிவத்தில் முள்ளிவாய்க்கால் காட்சிப்படுத்தல்களோடும் மத்திய மாநிலத்தில் அமைந்துள்ள மாநில நாடாளுமன்றத்தினை நோக்கிப் பேரெழுச்சியோடு நகரத் தொடங்கியது. பேரணி செல்லும் வழியெங்கும் கூடி நின்ற வேற்றின மக்களுக்கு இளையவர்கள் துண்டுப்பிரசுரங்களை வழங்க, பேரணியில் கலந்து கொண்ட மக்கள் வானதிர கொட்டொலிகள் எழுப்பியவாறும் சென்றனர். பிற்பகல் நான்கு மணிக்கு மாநில நாடாளுமன்றத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவிடத்தினைப் பேரணி வந்தடைந்தது.



ஸ்ராஸ்பூர்க் மாநகரில் தமிழினப்படுகொலையின் 15வது ஆண்டு நினைவு கூறலும் அனைத்துலகத்திடம் நீதி கேட்டு கவனயீர்ப்பு நிகழ்வும்! Top News
[Monday 2024-05-20 18:00]

18/05/2023 சனிக்கிழமை பிற்பகல் 14.45 மணி தொடக்கம் 17.00 மணிவரை, Place Kléber (Homme de Fer) Strasbourg என்னும் இடத்தில் நடை பெற்றது. இந்நிகழ்வில் தமிழ் மக்கள் உணர்வுடன் கலந்து கொண்டிருந்தனர். பிரத்தியேகமாக அமைக்கப் பட்டிருந்த நினைவுக்கல்லின் முன்னிலையில் நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு மலர் வணக்கமும் செய்யப்பட்டது. தமிழினப்படுகொலை நினைவு சுமந்த பதாதைகளைத் தாங்கிய வண்ணம் சிறுவர் முதல் பெரியவர் வரை மிகவும் உணர்வுடன் நின்றிருந்தனர்.



யேர்மனியில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற நாட்டுப்பற்றாளர் திருமதி. ஜெயந்தி கீதபொன்கலன் அவர்களது இறுதி வணக்க நிழ்வு! Top News
[Friday 2024-05-17 11:00]

கடந்த 02.05.2024 அன்று உடல்நலக் குறைவினால் யேர்மனியின் வூப்பெற்றால் நகரில் இயற்கையெய்திய தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளர் நாட்டுப்பற்றாளர். திருமதி. ஜெயந்தி கீதபொன்கலன் அவர்களது இறுதி வணக்க நிகழ்வு பெருமளவான தாயக மக்கள் புடைசூழ மிகவும் உணர்வுபூர்வமாக, அவர் வாழ்ந்த வூப்பெற்றால் நகரிலே நடைபெற்றது. யேர்மனிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் உப அமைப்புக்களான, தமிழ்க்கல்விக்கழக ஆளுகைக்குட்பட்ட வூப்பெற்றால் நகரத் தமிழாலய ஆசிரியராகத் தமிழ் விருத்தியின் அர்ப்பணிப்பு மிக்கதான தொடர் பணியாற்றியதோடு, இருபது வருட நிறை நல் பணியின் விருதுப் பட்டயமாக “தமிழ்வாரிதி” எனும் சிறப்பினை ஏலவே பெற்றிருந்தார். அத்தோடு அனைத்துலகத் தமிழ்க்கல்விக்கழக நூலாக்கக் குழுவிலும் யேர்மனிய தமிழ்க்கல்விக்கழக சார்பான தனது பங்கேற்பையும் நல்கியிருந்தார்.



“பேசுவோம் போரிடுவோம் ” நூல் வெயீட்டு விழா: யேர்மனி, டோட்முண்ட்! Top News
[Monday 2024-05-13 18:00]

11.05.2024 அன்று தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் யேர்மனியக் கிளையின் வெளியீட்டுப்பிரிவினால், தமிழீழ விடுதலைப்புலிகளின் சிறப்புறுப்பினர் திரு. க.வே.பாலகுமாரன் அவர்களது கட்டுரைகள் தொகுக்கப்பட்ட “பேசுவோம் போரிடுவோம் “எனும் நூல் யேர்மனியின் டோட்முண்ட் (Dortmund) நகரில் வெளியிட்டு வைக்கப்பட்டது. தமிழர் ஒருங்கிணைப்புக்குழு யேர்மனிக்கிளைப்பொறுப்பாளர் திரு. சிறீரவீந்திரநாதன் அவர்கள் பொதுச்சுடரினை ஏற்றிவைக்க, மாவீரர் நினைவுப்படத்திற்கு திருமதி.தீபா இரவிச்சந்திரன் அவர்களும் மே18 தமிழின அழிப்பு நினைவுப்படத்திற்கு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு டோட்முண்ட் நகரக் கோட்டப்பொறுப்பாளர் திரு.செல்லையா பாலகிருஸ்ணன் அவர்களும் ஈகைச்சுடரினை ஏற்றிவைத்தார்கள். தொடர்ந்து வருகை தந்திருந்த அனைவரும் மலர் சுடர்வணக்கம் செலுத்தினார்கள். நூல் வெளியீட்டு விழாவின் அடுத்தநிகழ்வாக மங்கல விளக்குகள் ஏற்றிவைக்கப்பட்டது.



பிரித்தானியாவின் பழமை வாய்ந்த வோல்சிங்கம் தேவாலயத்தில் முள்ளிவாய்கால் தமிழின அழிப்பு நினைவு நாளிற்கான அறிவித்தம்! Top News
[Monday 2024-05-06 06:00]

பிரித்தானியாவின் பழமை வாய்ந்த வோல்சிங்கம் தேவாலயத்தில் இன்று இடம்பெற்ற தமிழ் உற்சவத்திற்கு பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் பல பாகங்களில் இருந்தும் வருகை தந்திருந்தனர். பிரித்தனியா தமிழர் பேரவையினரால் 15ம் ஆண்டு முள்ளிவாய்கால் தமிழின அழிப்பு நினைவு நாளிற்கான அறிவித்தலும் , சிறிலங்காவில் தொடரும் தமிழின அழிப்பினை புதிதாக உருவாக்கப்பட்ட ஐ நா கட்டமைப்பில் (O SLAP) சாட்சியங்களை பதிவிடும் உலகளாவிய வேலைத்திட்டம் பற்றிய விபரங்களும் வழங்கப்பட்டன.



போகம்பர சிறைச்சாலையை ஹோட்டல் வளாகமாக மாற்ற தனியார் முதலீட்டாளர் முன் வந்திருக்கிறார்! Top News
[Sunday 2024-05-05 18:00]

போகம்பர சிறைச்சாலையானது வரலாற்று கட்டிடக்கலையுடன் கூடிய ஹோட்டல் வளாகமாகும்… ஒரு முதலீட்டாளர் ஏற்கனவே முன் வந்துள்ளார்… அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு. போகம்பர சிறைச்சாலையை ஹோட்டல் வளாகமாக மாற்ற தனியார் முதலீட்டாளர் முன் வந்திருக்கிறார்.. இதன் பழமையைப் பாதுகாத்து அபிவிருத்தித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.



கனடா நாடுகடந்த அரசவை தேர்தலில் அநீதிகள் இடம்பெற்றதாக குற்றச்ச்சாட்டு! Top News
[Thursday 2024-05-02 21:00]

இந்த புதிய சிக்கலுக்கு தீர்வுகளை எட்டுமா நாடுகடந்த தமிழீழ அரசின் தலைமைப்பணிமை ? தற்போதைய நான்காவது தவணைத்தேர்தல் முன்னெடுப்புகளில் அநீதிகள் இழைக்கப்பட்டு முன்னாள் அரசவை உறுப்பினர்கள் செயல்பாட்டாளர்கள் புதிய போட்டியாளர்கள் உள்ளிட்ட 14 பேர் முறையான காரணங்கள் இன்றி வேட்ப்புமனுக்கள் நீராகரிக்கப்பட்டது தொடர்பிலான பொதுமக்கள் மற்றும் ஊடக சந்திப்பு ஒன்று நேற்றுமாலை நடைபெற்றது.



எஹலேபொல மாளிகையின் உரிமையை உடனடியாக ஸ்ரீ தலதா மாளிகைக்கு மாற்றுமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் பிரசன்ன அறிவுறுத்தல்! Top News
[Sunday 2024-04-28 20:00]

வரலாற்று சிறப்புமிக்க எஹலெபொல மாளிகை இந்நாட்டின் முதல் மெழுகுச்சிலை அருங்காட்சியகம் ஆகும். நகர அபிவிருத்தி அதிகார சபையினால் புனரமைக்கப்பட்ட எஹலேபொல மாளிகையை தலதா மாளிகையிடம் ஒப்படைத்ததன் பின்னர் தொல்பொருள் மற்றும் கலாசார விழுமியங்களைப் பாதுகாத்து இந்த மெழுகுசிலை அருங்காட்சியகம் உருவாக்கப்படும் என ஸ்ரீ தலதா மாளிகையின் தியவதன நிலமே நிலங்க தேல பண்டார தெரிவித்தார்.



34ஆவது அகவை நிறைவின் மகிழ்வில் தமிழ்க் கல்விக் கழகம் – தென்மேற்கு மாநிலம், லன்டோவ்-எஸ்லிங்கன்! Top News
[Monday 2024-04-22 21:00]

யேர்மனியிலே 100க்கு மேற்பட்ட தமிழாலயங்களை அமைத்து நெறிப்படுத்திவரும் தமிழ்க் கல்விக் கழகம் தென்மேற்கு மாநிலத்தில் 34ஆவது அகவை நிறைவு விழாவை 20.04.2024 சனிக்கிழமையன்று எஸ்லிங்கன் நகரில் தமிழ்மொழி, கலை, பண்பாடு என்பவற்றை ஊட்டிவரும் செயற்பாட்டில் இணைந்து பயணிக்கும் அனைவரையும் அழைத்துச் சிறப்போடு கொண்டாடியது.



நல்லூரில் வாழும் பழங்குடியின மக்களின் பல்வேறு பிரச்சினைகளை ஆராய விசேட குழு! Top News
[Monday 2024-04-08 22:00]

மூதூர் பிரதேச செயலகத்திற்குட்பட்ட நல்லூரில் வாழும் பழங்குடியின மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள நிலையில் அவர்களது உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்த உடனடியாக விசேட குழுவொன்றை நியமிக்க திருகோணமலை அரசாங்க அதிபருக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் உத்தரவிட்டுள்ளார். நல்லூரைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் அண்மையில் திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் நல்லூரில் தங்களின் வாழ்வாதார அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளமை குறித்து கிழக்கு ஆளுநரிடம் முறைப்பாடு செய்திருந்தனர்.



34ஆவது அகவை நிறைவின் மகிழ்வில் தமிழ்க் கல்விக் கழகம்-யேர்மனி! Top News
[Monday 2024-04-08 22:00]

தமிழினம் புலம்பெயர்ந்து உலகெங்கும் பரந்து வாழும் சூழலில், தமது அடையாளத்தை அடுத்த தலைமுறை தொலைத்துவிடாதிருக்க தாய்மொழியைக் கற்பித்தல் அவசியம் என்ற உயர்சிந்தனையின் விளைவாகத் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் தமிழ்மொழியைக் கற்பிக்கும் செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. யேர்மனியிலும் தமிழ்க் கல்விக் கழகம் 100க்கு மேற்பட்ட தமிழாலயங்களை அமைத்துத் தமிழ்மொழி, கலை, பண்பாடு என்பவற்றை ஊட்டிவரும் செயற்பாட்டில் 34 ஆண்டுகளைத் தொட்டுநிற்கிறது.


Rajeef sebarasha 2023/04/19
NKS-Ketha-04-11-2021
Mahesan-Remax-169515-Seithy
 gloriousprinters.com 2021
Ambikajewellers-01-08-2021-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா