Untitled Document
April 1, 2025 [GMT]
  • Welcome
  • Welcome
பா.ஜ.க.வின் தேசிய மகளிரணி தலைவி திருமதி வானதி சீனிவாசன் அவர்களுடனான இந்திய – ஈழத் தமிழர் உறவுப் பாலம்! Top News Top News
[Monday 2025-01-20 21:00]

இந்திய – ஈழத் தமிழர் உறவுப் பாலம் எனும் முக்கியத்துவம் வாய்ந்த  நிகழ்வானது 17-01-2025 வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில் லண்டனில் உள்ள கிறிஸ்ரல் மண்டபத்தில் இடம் பெற்றது. பிரித்தானிய தமிழர் பேரவையின் அழைப்பினை ஏற்று இந்தியாவிலிருந்து பிரித்தானியாவிற்கு தமிழர் மரபுத் திங்கள் மற்றும் தைப் பொங்கல் விழாவை பிரித்தானியப் பாராளுமன்றத்தில் கொண்டாடுவதற்கான சிறப்பு விருந்தினராக வருகை தந்திருந்த, பா.ஜ.க.வின் தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தமிழகச் சட்டமன்ற உறுப்பினருமான கௌரவத்திற்குரிய திருமதி வானதி சீனிவாசன் அவர்களுடனான இந்த நிகழ்வில் பிரித்தானியாவில் உள்ள முக்கியமான பல அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் மருத்துவர்கள், சட்டத்துறை சார்ந்தவர்கள், பொறியியலார்கள், தொழில்சார் வல்லுநர்கள், வர்த்தக பிரமுகர்கள், நீண்டகால தமிழ் தேசிய செயல்பாட்டாளர்கள், தொண்டு நிறுவனங்கள், சமூக பிரதிநிதிகள் ஆகியோரும் பிரித்தானியா தமிழர் பேரவையுடன் இணைந்து சிறப்பித்தார்கள்.

இந்திய – ஈழத் தமிழர் உறவுப் பாலம் எனும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வானது 17-01-2025 வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில் லண்டனில் உள்ள கிறிஸ்ரல் மண்டபத்தில் இடம் பெற்றது. பிரித்தானிய தமிழர் பேரவையின் அழைப்பினை ஏற்று இந்தியாவிலிருந்து பிரித்தானியாவிற்கு தமிழர் மரபுத் திங்கள் மற்றும் தைப் பொங்கல் விழாவை பிரித்தானியப் பாராளுமன்றத்தில் கொண்டாடுவதற்கான சிறப்பு விருந்தினராக வருகை தந்திருந்த, பா.ஜ.க.வின் தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தமிழகச் சட்டமன்ற உறுப்பினருமான கௌரவத்திற்குரிய திருமதி வானதி சீனிவாசன் அவர்களுடனான இந்த நிகழ்வில் பிரித்தானியாவில் உள்ள முக்கியமான பல அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் மருத்துவர்கள், சட்டத்துறை சார்ந்தவர்கள், பொறியியலார்கள், தொழில்சார் வல்லுநர்கள், வர்த்தக பிரமுகர்கள், நீண்டகால தமிழ் தேசிய செயல்பாட்டாளர்கள், தொண்டு நிறுவனங்கள், சமூக பிரதிநிதிகள் ஆகியோரும் பிரித்தானியா தமிழர் பேரவையுடன் இணைந்து சிறப்பித்தார்கள்.

  

தொடர்ந்து திருமதி வானதி சீனிவாசன் அவர்களுக்கான சிறப்புக் காணொளி ஒன்று திரையிடப்பட்டது. இக் காணொலியில் திருமதி வானதி சீனிவாசன் அவர்கள் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருவதையும், இவருக்கும் பிரித்தானிய தமிழர் பேரவைக்குமிடையேயான நீண்ட கால உறவு குறித்து விவரணப்படுத்தப்பட்டிருந்தது.

தொடர்ந்து, பிரித்தானிய தமிழர் பேரவையின் மனித உரிமைகள் பிரிவின் துணை ஒருங்கிணைப்பாளர் கவுன்சிலர் செல்வி. சர்மிளா வரதராஜ் அவர்கள் உரையாற்றினார். இவர் மிக குறைந்த வயதில் வொன்ஸ்வொர்த் கவுன்சிலின் துணை மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார்.

“பல்லின பாரம்பரியத்தினை அடிப்படையாக கொண்டு இந்தியா மொழிவாரி மாநிலங்களை உருவாக்கி அதிகாரங்களை பகிர்ந்து சனநாயக பாராளுமன்ற “ஒன்றிய” அரசியல் யாப்பினை நடைமுறைப்படுத்தி வருகின்றது. மாறாக சிறிலங்கா தன்னை தானே சிதைத்து கொள்ளும் ஒற்றை இன, ஒற்றை மத, ஒற்றை மொழி நாடாக சம உரிமைகளை மறுதலித்து, தொடரும் வன்முறை சுழற்சி, படுகொலைகள் என 30 ஆண்டு கால யுத்தத்தினை தமிழ் மக்களுக்கெதிராக கட்டவிழ்த்து விட்டது. சுதந்திரம் பெற்றதில் இருந்து தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட இனவழிப்பு அதனை வங்குரோத்து (Bankruptcy) நிலைமைக்கு இட்டு சென்றுள்ளது.

பிரித்தானிய தமிழர் பேரவை, ஐ.நா. மனித உரிமைகள் கழகத்துடனும் அதன் உறுப்பு நாடுகளுடனும் நீண்ட காலமாக செயல்பட்டு வருவதுடன் ஐ.நா.வில் பொறுப்புக் கூறல் செயற்பாடுகளை தற்போது இருக்கும் நிலைக்கு முன்னெடுப்பதில் முக்கிய பங்காற்றியுள்ளது. ஐக்கிய நாடுகள் (ஐ.நா.) உறுப்பு நாடுகள், உயர் ஸ்தானிகர் அலுவலகத்தின் கீழ் சிறிலங்காவின் மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஆதாரங்களை சேகரித்தல், பாதுகாத்தல் மற்றும் பகுப்பாய்வு செய்யும் நோக்கத்துடன் ‘இலங்கை பொறுப்புக்கூறல் திட்டத்தை’ (SLAP) அமைத்து சாட்சியங்களை திரட்டி வருகின்றது. குற்றவியல் வழக்குத் தொடர்வதற்கு சரியான ஆதாரங்கள் தேவை. BTF ஒரு குற்றவியல் விசாரணை பொறிமுறையை நிறுவுவதற்கான அடுத்த படிகளில் உறுப்பு நாடுகளுடன் தொடர்ந்து பணியாற்றுகிறது. ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா அண்மையில் விடுத்த அறிக்கையில், "தமிழ் மக்களின் சட்டபூர்வமான அபிலாசைகளை பூர்த்தி செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுங்கள்" என குறிப்பிட்டிருந்தது.

ஈழத் தமிழர்கள் தங்கள் தாயகத்தில், சுதந்திரமாக வாழக் கூடிய எதிர்காலம் உருவாகும் வரை BTF உலகெங்கும் உள்ள நாடுகளுடன் இணைந்து பணியாற்றும்” என சர்மிளா வரதராஜ் தன் உரையில் குறிப்பிட்டு இருந்தார்.

மண்ணும் மக்களும் அவர் தம் சமூக, பொருளாதார, அரசியல் பலம் தாயகத்தில் நாளாந்தம் திட்டமிட்ட சிதைவுக்குள்ளாக்கப்பட்டு மீள முடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டு வருகின்றது. இதன் முழு பரிமாணத்தையும் ஆராய்ந்து அதற்கான சரியான மூலோபாயத்தின் அடிப்படையில் என்னென்ன வியூகங்கள் வகுக்கப்பட வேண்டும் என்ற விபரங்களை சுருக்கமாக துல்லியமான புள்ளி விபரங்களுடன் பிரித்தானிய தமிழர் பேரவையின் பொது செயலாளர் ரவி குமாரின் உரை அமைந்தது. குறிப்பாக மீள் குடியேற்றம், மீள் கட்டுமானம், சமூக பொருளாதார வலுவூட்டல், தாயக மக்கள் விரும்பும் அரசியல் தீர்வு, அதற்காக வெளி சக்திகளின் மூலம் பிரயோகிக்க வேண்டிய அழுத்தம் கொடுக்கும் பொறிமுறைகள் என்பன ஒரு வழி வரைபடமாக முன் வைக்கப்பட்டது. ஈழத் தமிழர்கள் மீது சிங்கள அரசு தொடர்ச்சியாக ஏற்படுத்திக் கொண்டு வரும் தாக்குதல் மற்றும் ஈழத் தமிழர்களின் குறைவடைந்து வரும் இன விகிதாசாரம் பற்றிய ஓர் காணொலியும் காட்சிப்படுத்தப்பட்டமையானது இந்நிகழ்வின் ஓர் சிறப்பம்சமாகும்.

சர்வதேச சட்டங்களும் ஒப்பந்தங்களும் அவற்றை மீறிய சிறிலங்காவின் போர்க் குற்றங்கள், இனவழிப்பு நடவடிக்கைகளும் குறித்து உரையாற்றிய சட்டவாளரும் பிரித்தானிய தமிழர் பேரவையின் நிருவக உறுப்பினர்களில் ஒருவருமான கலாநிதி நகுலேசன் அவர்கள் மேற்படி அட்டூழிய குற்றங்களை ஆவணப்படுத்தி சர்வதேச பொறிமுறைகளை பயன்படுத்தி சட்டரீதியாக தீர்வு காணும் பிரித்தானிய தமிழர் பேரவையின் முயற்சிகளை விபரித்திருந்தார்.

சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டிருந்த திருமதி வானதி சீனிவாசன் அவர்களின் உரை நடைபெற்றது. இந்திய - ஈழத்தமிழர் உறவுப்பாலமானது செயற்கையாக இல்லாமல் இயற்கையாகவே இந்திய - ஈழத்தமிழர் இடையே உறவானது, உணர்வு ரீதியாக, வரலாற்று ரீதியாக கலாச்சார ரீதியாக இணைந்திருக்கக் கூடிய பாதைதான், இந்திய – ஈழத் தமிழர் உறவுப் பாதை. கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கக் கூடிய பிரச்சனையானது, பல்வேறு பரிமாணங்கள், பல்வேறு வடிவங்களில் மாறிக் கொண்டே இருக்கக் கூடிய சூழலில் இந்தியாவை ஆட்சி செய்யும் கட்சி பிரதிநிதியாகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் வந்திருக்கும் வகையில், ஒரு நீண்ட காலப் பிரச்சனைக்கான ஓர் ஒற்றைத் தீர்வு என்பதை யாராலும் முன் வைக்க முடியாது. ஆனால் இதற்கான தீர்வு ஒரு தொடர்ச்சியான முயற்சி. 15 ஆண்டுகளுக்கு மேலாக BTF வேலை செய்து கொண்டிருக்கிறது. இதே சமயத்தில் உலகத்திலே பல்வேறு நாடுகளில் புலம் பெயர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் ஈழத்தமிழர்கள் ஒரு மாபெரும் சக்தியாக உருவாகி செயற்பட்டு வருகின்றார்கள். இந்தியாவில் வாழும் இலங்கை மக்கள் எவ்வாறு தங்களை இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் கீழ் இணைத்துக் கொண்டு வாழ்கிறார்கள். இந்தியாவின் வெளியுறவு கொள்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து உங்களுக்கு தெரியும். பாரதிய ஜனதா கட்சி உலகத்திலேயே மிகப் பெரிய ஜனநாயகக் கட்சியாக வளர்ந்து வருகிறது. இப்படி இருக்கும் பட்சத்தில் இந்தியா தனது அண்டை நாடுகளுடன் உறவைப் பேணுவதென்பதும் அந்தந்த நாடுகளின் வெளியுறவுத் துறையின் கொள்கைகளுடன் பொருத்திப் பார்ப்பதென்பதும் முக்கியமானது. ஒரு நாடானது பல்வேறு தரப்பட்ட இராஜதந்திரங்களுடன் தான் செயற்படும்.

2014இல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இலங்கை அரசின் உயர் அதிகாரிகளைச் சந்தித்து பேசியதுடன் நின்று விடாது, யாழ்ப்பாணம் சென்று அங்குள்ள தமிழர்களுடன் தைப் பொங்கல் விழாவைக் கொண்டாடினார் என்ற செய்தி, அவர் யாழ்ப்பாண மக்களுடன் நிற்கிறேன், அவர்களுக்கென்று இருக்கின்ற அந்த நீண்டகால கோரிக்கையை நான் இலங்கை மண்ணிலே உங்கள் முன் வைக்கிறேன் என்று அந்த நாட்டு பாராளுமன்றத்திலே உரையாற்றிய ஒரு இந்தியப் பிரதமர்.

யாழ்ப்பாணத்திலே ‘Multi Cultural Center’ முழுவதும் இந்திய அரசின் சார்பாக கட்டி முடிக்கப்பட்டது. இரயில்வே திட்டங்களுக்கான நிதி உதவி, உள்கட்டமைப்பு வசதிகளுக்கான நிதி உதவி, Power Projects, மற்றும் சிறப்பு நிதி உதவி திட்டங்கள், Soft Loan போன்றவற்றை இந்திய அரசானது இலங்கை அரசு கடுமையான நிதி நெருக்கடியில் இருந்த போது உதவியது. இலங்கை அரசு நிதி நெருக்கடியில் சிக்கி தவித்தால் அங்கே தவிக்கப் போவது தமிழ் மக்களின் வாழ்வாதாரம் தான். இலங்கை தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக பிரதமர் முனைந்து கொண்டிருக்கிறார்.

மேலும், ‘வான்வழி’, ‘கடல் வழி’ தொடர்பானது 40 ஆண்டுகளுக்கு பின்னர் பிரதமர் நரேந்திர மோடியின் உறுதிமொழியில், யாழ்ப்பாணத்திலிருந்து நேரடி வான் வழி விமான சேவை நடைபெற்றது. ‘கடல் வழி’ போக்குவரத்து பற்றிய தகவல்கள் 10 ஆண்டுகளுக்கு முன்பே BTF ஐ சேர்ந்த முக்கிய உறுப்பினர்கள் டெல்லி வந்த போது, அமைச்சர்களைச் சந்தித்த பின்னர், எப்படி படகு சேவையை ஆரம்பிக்கலாம் என்று ஆலோசனை செய்த பின், அமைச்சர்களுடன் பேசி, புதுச்சேரியிலிருந்து படகு போக்குவரத்தை தொடக்கி வைத்தவர் பிரதமர் நரேந்திர மோடிதான். இன்று நாகபட்டிணத்திலிருந்து பயணியர் போக்குவரத்து ஆரம்பித்துள்ளது. கொரோனா தொற்று காலத்தில் கூட இந்த பயணங்கள் போக்குவரத்து திட்டத்தை மத்திய அரசு துரிதப்படுத்தியது.

தோட்டத் தொழிலாளர்களுக்கான விழாவை இந்திய அரசு நடத்தியது. இந்திய அரசு அனைவருக்கும் வீடு என்னும் திட்டத்தை செயல்படுத்துவதோடு மட்டுமின்றி இலங்கையிலும் அதைச் செயற்படுத்தியது. மிகவும் ஒரு இக்கட்டான சூழலில் இந்திய அரசு சிறிது சிறிதாக ஒரு திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது. ஈழத் தமிழ் மக்களின் நீண்டகால கோரிக்கைகள், அந்த நாட்டிலே அவர்கள் சம உரிமையோடு வாழ்வதற்கான அங்கீகாரமும், அவர்களுக்கென புதிதாக உருவாக்கப்பட வேண்டிய தொழில் வாய்ப்புகளும், அவர்களுக்கு கிடைக்க வேண்டிய அரசியல் உரிமைகளை எப்படிப் பயன்படுத்துகின்றனர் என்ற தெளிவு, உல‌க நாடுகளில் இருக்கக்கூடிய அமைப்புகளின் உதவிகள் போன்ற பல்வேறு நிலையில், நீங்கள் தொடர்ந்தும் செயற்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். எங்கள் அடையாளம், எங்கள் மக்களின் எதிர்காலமென தொடர்ந்து பணிகளைச் செய்கிறீர்கள். ஒரே குரலாக இது இருக்க வேண்டும். ஒரே பாதையை நோக்கியதாகவும் இருக்க வேண்டும். குரலில்லாத மனிதர்களுக்காக வாழ்க்கையைத் தொலைத்த மனிதர்களுக்காக, வாழ்க்கையின் நம்பிக்கைக்காக ஏங்கிக் கொண்டிருப்பவர்களுக்காக நீங்கள் பயணியுங்கள். ஈழத் தமிழர்கள் உலகின் எல்லா நாடுகளிலும் நிறைந்து தம் மொழியைக், கலையை, சிறந்த சிந்தனையை, தன் நிலையை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

பின் திருமதி வானதி சீனிவாசன் அவர்களிடம் இந் நிகழ்வில் கலந்து கொண்டவர்களால் எழுதப்பட்டு, கேட்கப்பட்ட வினாக்களுக்கு திருமதி வானதி சீனிவாசன் அவர்கள் உண்மையாகவும், நேர்மையாகவும், தெளிவாகவும் பதிலளித்து இருந்தமையானது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில், வரலாற்றில் முதன் முறையாக கடல் படை ஒன்றினை கட்டி எழுப்பி கடல் வழியே சென்று தூர தேசங்களை வசப்படுத்தி பேரரசினை உருவாக்கிய சோழர் வலிமையை எடுத்தியம்பும் வகையில் ஒரு காணொலி காட்சிப்படுத்தப்பட்டமையானது வந்திருந்த அனைவரினது கவனத்தையும் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.

மில்ரன்கீன்ஸ் நடன ஆசிரியை திருமதி. சியாமா சொரூபநாதன் அவர்களின் மாணவிகளான நடன நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

“சக்கரக்கட்டி” எனத் தொடங்கும் ‘தைப் பொங்கல்’ பாடலானது பிரித்தானிய தமிழர் பேரவையின் கலைப் பிரிவால் உருவாக்கப்பட்டு, பிரித்தானிய பாராளுமன்றத்தில் நடைபெற்ற தமிழர் மரபுத் திங்கள் மற்றும் தைப் பொங்கல் விழாவில் பெருமையுடன் வெளியிட்டு வைக்கப்பட்டது. இப் பாடல் ஈழப் போரினால் பாதிக்கப்பட்ட இரு கலைஞர்களால் உருவாக்கப்பட்டது. இப் பாடலை எழுதியவர் தமிழீழத்தின் கலைஞர் திரு. தூ.வீரா அவர்கள் ஆவார். பாடலை இசையமைத்தவர் தமிழீழத்தின் கலைஞர் இசைப்பிரியன் ஆவார். வளர்ந்து வரும் இளம் பிள்ளைகளுக்கு ஒரு வாய்ப்பு வழங்கி, அவர்களை உள்வாங்கி பாடப்பட்ட இப் பாடல், உலகம் முழுவதும் பரந்து விரிந்து வாழ்ந்து கொண்டிருக்கும் ஈழத் தமிழ் மக்களுக்காக தமிழர்களிடம் ஒற்றுமை உணர்வை வளர்க்க வேண்டிய கடமை இருப்பதை வலியுறுத்துவதற்காக உருவாக்கப்பட்டது.

மேலும், ‘Voice Art’ மாணவர்களால் ‘மகளி’ என்ற பாடல் பெண்களை முதன்மைப்படுத்தும் பாடலாகப் பார்க்கப்படுகின்றது. இப் பாடலை இந்தியாவின் பிரபல இசையமைப்பாளரும், நடிகரும், பாடகருமான திரு. ஜீ.வி.பிரகாஸ் அவர்கள் இசையமைத்துள்ளார். இப் பாடலை ‘Voice Art’ பிரித்தானியா பாராளுமன்றத்தில் பெருமையுடன் வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

நன்றியுரையுடன் இந் நிகழ்வானது சிறப்பாக நிறைவுற்றது.

  
   Bookmark and Share Seithy.com



35ஆவது அகவை நிறைவில் மகிழ்ந்து நிமிரும் தமிழாலயங்கள் – யேர்மனி, என்னெப்பெற்றால்! Top News
[Wednesday 2025-03-26 06:00]

தமிழ்க் கல்விக் கழகத்தின் நிருவாகச் செயல்நெறியின் ஒழுங்கமைப்பில் மத்தியமாநிலத்துக்கான 35ஆவது அகவைநிறைவுவிழாஎன்னெப்பெற்றால் அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. அறங்கொண்டு பணி செய்யும் ஆசான்களையும் ஆசான்களின் திறன் கொண்டு வாகைசூடும் மாணவர்களையும் 14 ஆண்டுகள் தமிழ்மொழியைக் கற்றுத் தேர்ச்சி பெற்ற மாணவர்களையும் கூட்டுழைப்பின் விளைவாகத் தமிழாலயங்கள் பெற்ற வெற்றிகளுக்கான மதிப்பளிப்புகள் எனப் பல்வகைமதிப்பளிப்புகளைத் தன்னகத்தே கொண்டதாகத் தமிழ்க் கல்விக் கழகத்தின் அகவை நிறைவுவிழா அமைந்திருந்தது.



வாகைமயில் 2025 - யேர்மனி! Top News
[Friday 2025-03-21 18:00]

யேர்மனியில் ஆண்டுதோறும் வாகைமயில் என்னும் நடனப்போட்டியைத் தமிழ்ப் பெண்கள் அமைப்பு நடத்தி வருவது யாவரும் அறிந்ததே. இம்முறை கற்றிங்கன் நகரில் 15.03.25 சனி, 16.03.25 ஞாயிறு ஆகிய இரண்டு நாள்களும் தெரிவுப்போட்டிகளின்றி நிறைவுப்போட்டியாகப் பன்னிரெண்டு ஆண்டுகளை நிறைவு செய்தபடி வாகைமயில் வெகு சிறப்பாகத் தோகை விரித்தாடியது. யேர்மனியில் உள்ள நடன ஆசிரியர்களால் பயிற்றப்பட்ட அவர்களின் மாணவ மாணவிகள் ஒருவரை ஒருவர் மிஞ்சும் வகையில் களம் கண்டனர். இவர்கள் அற்புதமான பதங்களுடன் பல வண்ணங்கள் உடுத்தித் தேர்போல (இரதங்கள்) அழகாக அசைந்து, மிதமான அணிகளோடு அவையில் இதமான பரதத்தால் நவரசம் தந்தது மண்டபம் நிறைந்த மக்களின் வரவேற்பைப் பெற்றிருந்தது. டென்மாக், சுவிற்சலாந்து ஆகிய நாடுகளிலிருந்து வருகை தந்திருந்த திறமையும் பட்டறிவும் வாய்ந்த நடுவர்களால் போட்டிகள் நடுவம் செய்யப்பட்டு, மதிப்பளிப்புகளும் வாகைமயில் விருதுகளும் வழங்கப்பட்டன.



கனடாவில் வீட்டிலிருந்த யுவதிமீது துப்பாக்கி சூடு: சகோதரன் காயம்! Top News
[Monday 2025-03-10 06:00]

யா/கோண்டாவில் மேற்கு கல்வீட்டு துரையப்பாவின் பேர்த்தி யான செல்வி ரகுதாஸ் நிலக்சி 07-03-2025 வெள்ளிக்கிழமை கனடாவில் அகால மரணம் அடைந்து விட்டார். கனடாவின், மார்க்கம் நகரத்தில் வீடொன்றில் இடம்பெற்ற இரட்டை துப்பாக்கிச்சூட்டில் ஒரு பெண் உயிரிழந்ததுடன், ஒரு ஆண் தீவிரமான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



விஜய் தணிகாசலம் மீண்டும் ஒன்றாரியோ மாகாண பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்! Top News
[Friday 2025-03-07 06:00]

மார்ச் 4, 2025 அன்று, அமெரிக்கா, அதிபர் டொனால்ட் டிரம்பின் தலைமையில், கனடியா இறக்குமதிகளுக்கு 25% வரி விதித்தது. இது எல்லை பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் கடத்தல் குறித்த கவலையை காரணமாகக் கூறினாலும், ஒன்றாரியோ பொருளாதாரத்தில் 500,000 வேலைகளை ஆபத்துக்கு உள்ளாக்கியுள்ளது. இதற்கு பதிலளிக்க கனடா, அமெரிக்க பொருட்களுக்கு பதிலடி கட்டணங்களை அறிவித்து, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக பதற்றத்தை அதிகரித்துள்ளது.



தமிழர் கலைகளின் வளம்தேடும் வளரிளம் தமிழர்களின் கலைத்திறனாற்றுகை - ஸ்ருற்காட்! Top News
[Thursday 2025-03-06 06:00]

கலைகளின் ஊடாகத் தன்னையும்தனது சூழலையும்பதிவுசெய்வதிலும் வினவுதலுக்குட்படுத்துவதிலும் உலகம் பின்னிற்பதில்லை. அவை தலைமுறைகள் வழியேகடத்தப்பட்டுவருவதோடு, புதியநுண்ணறிவுசார் புலமைகளை உள்ளீர்ந்தவாறு செழுமைபெற்றுத் திகழ்கின்றன. தமிழர் கலைகள் பல ஆயிரம் ஆண்டுகளாகத் தொடர்ச்சியாகப் பயணித்துவருகின்றன. தமிழர்கள் புலம்பெயர்ந்து வேற்றுமொழி, கலைமற்றும் பண்பாட்டுச் சூழலுள் சிக்குண்டபோதும் தம்மைத் தகவமைத்துக் கொள்வதற்கான அத்தனை முயற்சிகளையும் செய்துவருவதற்கு மற்றுமொரு சான்றாக யேர்மன் தமிழ்க் கல்விக் கழகத்தால் நடாத்தப்பட்டுவரும் கலைத்திறன் போட்டிதிகழ்கின்றது. தமிழரதுகலைகளைத் தமிழினத்தின் இளையதலைமுறை கற்றும் கண்டுணரவும் அதனூடாகப் படைப்பாக்கத் திறனைப் பெறவும், தமிழர் கலைகள் அழிந்துவிடாதுகாக்கவும், கலை அரங்காற்றுகை செயலாக்கம் பெறுதல் வேண்டும்.



35ஆவது அகைவை நிறைவில் தமிழாலயங்கள்! Top News
[Thursday 2025-03-06 06:00]


நடிகர் கருணாஸ் தனது பிறந்த நாளையொட்டி முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்துப் பெற்றார்! Top News
[Thursday 2025-02-20 19:00]

முக்குலத்தோர் புலிப்புடைக் கட்சியின் தலைவரும், தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்தின் துணைத்தலைவரும், திரைப்பட நடிகருமான திரு. சேது. கருணாஸ் அவர்களின் பிறந்தநாளை (21.02.2025) யொட்டி 20.02.2025 இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்களை சந்தித்து நடிகர் சேது. கருணாஸ் வாழ்த்துப் பெற்றார்.



அஷ்ரஃப் சிஹாப்தீனின் ‘கழுதை மனிதன்’ மொழி பெயர்ப்பு சிறுகதை தொகுதி வெளியீடு! Top News
[Wednesday 2025-02-19 18:00]

சிரேஷ்ட ஒலி, ஒளிபரப்பாளரும் எழுத்தாளருமான அஷ்ரஃப் சிஹாப்தீன் மொழி பெயர்த்த 'கழுதை மனிதன்' சிறுகதைத் தொகுதி வெளியீடும் இலங்கை நெய்னார் சமூக நலக் காப்பகத்தின் மாணாக்கருக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் ஞாயிற்றுக் கிழமை தெமடகொட வை.எம்.எம்.ஏ. மண்டபத்தில் நடைபெற்றது.



மத்திய மாநிலத்திற்கான கலைத்திறன் போட்டிகள்! Top News
[Wednesday 2025-02-12 06:00]

தமிழ்க்கல்விக் கழகத்தின் நிர்வாகப் பொறிமுறைக்கேற்ப மத்திய மாநிலத்திற்கான கலைத்திறன்போட்டிகள் 08.02.2025 அன்று சிறப்பாக நடைபெற்றது. இக்கலைத்திறன் போட்டியில் மயிலாட்டம், புலியாட்டம், காவடியாட்டம், கரகம், காவடி, பொய்க்காற்குதிரை, வில்லுப்பாட்டு போன்ற கிராமியக் கலைவடிவங்களுடன் பரதநாட்டியம், விடுதலைநடனம், விடுதலைப்பாடல், வாய்ப்பாட்டு ஆகிய கலைகள் போட்டியாகளாக நடைபெற்றன.



கலைத்தமிழோடுகளமாடும் வளரிளம் கலைஞர்களின் கலைத்திறனாற்றுகை – கற்றிங்கன்! Top News
[Saturday 2025-02-08 06:00]

தமிழரதுகலைவடிவங்களைத்தமிழினத்தின் இளையதலைமுறைகற்றும் கண்டும் உணரவும், அதனுடாகப்படைப்பாக்கத் திறனைப் பெறவும்,தமிழர் கலைகள் அழிந்துவிடாதுகாக்கவும் கலைஅரங்காற்றுகை,செயலாக்கம் பெறுதல் வேண்டும். புலம்பெயர் நாடுகளில் மூன்றாந் தலைமுறைத் தமிழர்களும் தமிழர் கலைகளைஅறிந்துகொள்ளவும், பயிலவும் களம் அமைத்துக் கொடுக்கும் நோக்கோடு,தமிழ்க் கல்விக் கழகத்தின் கலைப்பிரிவுகலைத்திறன் போட்டியைநடாத்திவருகிறது. இக்கலைத்திறன் போட்டியில் மயிலாட்டம், புலியாட்டம், காவடியாட்டம், காவடி, கரகம், பொய்க்காற்குதிரை, வில்லுப்பாட்டு போன்றகிராமியக் கலைவடிவங்களுடன் பரதநாட்டியம் மற்றும் விடுதலைநடனம், விடுதலைப் பாடல், வாய்ப்பாட்டு ஆகிய ஒன்பது கலைகள் போட்டிகளாக நடைபெறுகின்றன. முதலாவது போட்டியரங்கம் வடமத்தியமாநிலத்தின் கற்றிங்கன் நகரிலேபொதுச்சுடர் ஏற்றலோடுதொடங்கியது.



கல்விக்கு கரம் கொடுப்போம்! Top News
[Saturday 2025-02-08 06:00]

கல்விக்குக் கரம் கொடுப்போம் செயற்திட்டத்தின் ஊடாக வாழ் தமிழ்மக்களின் பங்களிப்பில் அருள்மிகு சிறீ சித்திவிநாயகர் கோவில் ஸ்ருட்காட் நிதிப்பங்களிப்பில் 06/02/2025 அன்று யாழ் மாவட்டம் மாதகல், தெல்லிப்பளை ஆகிய கிராமத்தில் வசிக்கும் கற்றல் தேவையுடைய 18 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.



உறை குளிரில் மானிடத்தை உலுக்கிய மின்னல் செந்தில்குமரனின் MGR 108 இசை நிகழ்வு! Top News
[Thursday 2025-02-06 19:00]

சமீபத்தில் ஈழத்தில் உள்ள எங்கள் சொந்தங்களின் மருத்துவ தேவைகளுக்காக நெடுங்காலமாக தன்னை அர்ப்பணித்து சேவையாற்றி வரும் மின்னல் செந்தில்குமரனின் இசை நிகழ்விற்கு சென்றிருந்தேன். நூறு கோவில்களுக்கு சென்ற மகிழ்ச்சி. ஏன் என்பதனை முழுவதும் படித்த பின் நீங்களும் ஆமோதிப்பீர்கள். ஆறு மணியளவில் மெட்ரோபொலிட்டன் மண்டபம் நிரம்பி வழிந்தது. நிகழ்ச்சியை தொய்வில்லாமல் விறுவிறுப்பாக கொண்டு சென்றார்கள். செந்தில் குமரனோடு வித்தியாசங்கர், சிவா, சந்தியா, மகிசா, விஜிதா, அனோஜனா, அபிராமி, சௌமிகா, கனிஷா, மானசி, ஷியானா, சியாரா என்று ஒரு பட்டாளமே தெரிவு செய்யப்பட்ட ஹிட் பாடல்களை பாடி மக்களின் கரவொலிகளைப் பெற்று கொண்டிருந்தார்கள்.



யேர்மனி டுசில்டோர்ப் நகரில் நடைபெற்ற கரிநாள் போராட்டம்! Top News
[Thursday 2025-02-06 06:00]

புலம்பெயர் தமிழர்கள், சிறிலங்காவின் சுதந்திர நாளை கரிநாளாக வெளிப்படுத்துவதோடு தமிழீழ தேசத்தில் தொடரும் சிங்கள தேசத்தின் ஆக்கிரமிப்பைக் கண்டித்தும், தமிழீழ மக்கள் மீது தொடரும் சிங்கள தேசத்தின் இனப்படுகொலையை வெளிக்கொணர்ந்தும் தமிழீழ தேசத்தின் இருப்பையும், இறைமையையும் வலியுறுத்தியும் இலங்கைத்தீவில் சுதந்திரத்துக்காக போராடிவருகின்ற இனமான, ஈழத்தமிழினம் உள்ளதென்பதனையும் சர்வதேசத்தின் செவிகளுக்கு எடுத்துரைத்து தமிழருக்கான ஒரு நிரந்தர நீதி கிடைக்கும் வரை ஓயோமென இக்கரிநாளில் உறுதிகொள்வோம்.



சிங்களப் பேரினவாதாத்தின் 77 வது சுதந்திர தினம் ஈழத்தமிழர்களின் கரிநாள்! Top News
[Wednesday 2025-02-05 06:00]

தமிழீழத் தாய்மணில் ஒன்றரை லட்சம் உறவுகளின் இரத்த ஆறு ஓடி பதினைந்து ஆண்டுகள் ஆகிய நிலையில், இந்தப் பதினைந்து ஆண்டுகளைத் திரும்பிப் பார்க்கிற எவரும் சிறிலங்காவின் சுதந்திர தினத்தில் பங்கேற்க மாட்டார்கள். சிங்களப் பேரினவாதாத்தின் 77 வது சுதந்திர தினம் ஈழத்தமிழர்களைப் பொறுத்த வரை மாறாத்துயரை என்றென்றும் நினைவுபடுத்தும் கரிநாள்.



"இந்திய ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் நிதிநிலை அறிக்கை" - திருமா அறிக்கை!
[Monday 2025-02-03 06:00]

நேற்று அறிவிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கையைத் தனது கூட்டணிக் கட்சிகளைத் திருப்தி செய்வதற்காகவே பாஜக அரசு பயன்படுத்தியுள்ளது. மற்ற மாநிலங்கள் வஞ்சிக்கப்படுவதால் இந்திய ஒருமைப்பாடே சீர்குலையும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. மோடி அரசின் ஓர்வஞ்சனைப் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறும் பீகார் மாநிலத்தில் தேசிய உணவுத் தொழில் நுட்ப நிறுவனம் ( என்.ஐ.எஃப்.டி ) அமைக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. பீகாரில் விளையும் மக்கானா பயிரை மேம்படுத்துவதற்காக வாரியம் அமைக்கப்படும் என்று அறிவிப்பு செய்யப்பட்டிருக்கிறது. பீகாரில் கிரீன் ஃபீல்ட் விமான நிலையம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.



அனைத்துலக மட்டத்தில் நடாத்தப்பட்ட அரையாண்டுத்தேர்வு! Top News
[Friday 2025-01-31 06:00]

தமிழ்க் கல்விக் கழகத்தின் நிர்வாகக் கட்டமைப்பின் கீழியங்கிவரும் 100க்கு மேற்பட்ட தமிழாலயங்களில் தமிழ் மொழியைக் கற்றுவரும் தமிழ்ப்பிள்ளைகளின் மொழிக் கற்றலை வளப்படுத்தி, கற்கையின் தரத்தை உயர்த்தும் நோக்கோடு, கல்வியாண்டின் நடுப்பகுதியில் அரையாண்டுத் தேர்வானது நடாத்தப்பட்டு வருகிறது. இவ்வாண்டுக்கான அரையாண்டுத்தேர்வு 25.01.2025 சனிக்கிழமை சிறப்புடன் நடைபெற்றது.



கல்விக்குக் கரம் கொடுப்போம்! Top News
[Sunday 2025-01-26 16:00]

செயற்திட்டத்தின் ஊடாக ஜேர்மனி அருள்மிகு சிறீ சித்திவினாயகர் கோவில் ஸ்ருட்காட் நிதிப்பங்களிப்பில் 25/01/2025 இன்றைய தினம் வவுனியா மாவட்டம் நெடுங்கேணி, ஒலுமடு, பன்றிக்கெய்தகுளம், நொச்சிமோட்டை ஆகிய கிராமங்களில் வசிக்கும் கற்றல் தேவையுடைய 50 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.



கல்விக்குக் கரம் கொடுப்போம்! Top News
[Saturday 2025-01-25 20:00]

செயற்திட்டத்தின் ஊடாக ஜேர்மனி வாழ் தமிழ்மக்களின் பங்களிப்பில் Help For Smile அமைப்பின் ஊடாக 23/01/2025 அன்று மட்டக்களப்பு மாவட்டம் மாங்காடு,மணிபுரம்,மாவடிவேம்பு, மாவடி முன்மாரி, புதுநகர் ஆகிய கிராமங்களில் வசிக்கும் கற்றல் தேவையுடைய 45 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டதுடன், 22/01/2025 அன்று முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளம் துணுக்காய்வீதி மற்றும் கற்குவாரி ஆகிய கிராமங்களில் வசிக்கும் கற்றல் தேவையுடைய 21 மாணவர்களுக்கும் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.



Vaughan தமிழ்ப் பாரம்பரிய விழாவில், கனடாவின் எதிர்கால பிரதமர்-Pierre Poilievre உறுதி! Top News
[Friday 2025-01-24 07:00]

January 18, 2025 Vaughan தமிழ் மரபுத்திங்கள் மற்றும்தைப் பொங்கல் விழா என்பன முன்னைய ஆண்டுகளைவிடமிகப்பெரிய வெற்றியாகவும் தமிழர் பண்பாட்டைச்சிறப்பிக்கும் நிகழ்வாகவும் இடம்பெற்றிருந்தது. Vaughan தமிழ் பண்பாட்டு அமைப்பின் ஏற்பாட்டில், இந்நிகழ்வு 1,000 க்கும் மேற்பட்ட தமிழ் மக்களையும் அரசியல்பிரமுகர்களையும் கலாச்சார ஆர்வலர்களையும் வர்த்தகநிதியாளர்களையும் ஒருங்கே கொண்டுவந்தது. இந்த ஆண்டு, City of Vaughanமும், York District School Boardம்இணைந்து இந்நிகழ்வை ஆதரித்து ஒருங்கிணைந்தனர். விழாவின் வெற்றியை உறுதி செய்ய Vaughan நகரத்தின்பல ஊழியர்கள் கடுமையாக உழைத்தனர். அவர்களின்அர்ப்பணிப்பு மற்றும் ஒழுங்கமைப்பின் மூலம், நிகழ்வு மிகவும்சிறப்பாக நடைபெற்றது.



தமிழர் திருநாளில் பண்பாட்டுப் படையலிடும் தமிழாலயங்கள் - யேர்மனி Top News
[Thursday 2025-01-23 19:00]

யேர்மனியில் புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் தமிழர்தம் மொழியையும் கலைகளையும் பண்பாட்டு விழுமியங்களையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வதில் தமிழாலயங்கள் சிறந்து விளங்குகின்றன. அதேபோல் தமிழர் திருநாளையும் சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.


 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
Latika-Gold-House-2025
Karan Remax-2010
Airlinktravel-2020-01-01
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா