Untitled Document
June 6, 2025 [GMT]
  • Welcome
  • Welcome
35ஆவது அகவை நிறைவில் மகிழ்ந்து நிமிரும் தமிழாலயங்கள் – யேர்மனி, என்னெப்பெற்றால்! Top News
[Wednesday 2025-03-26 06:00]

தமிழ்க் கல்விக் கழகத்தின் நிருவாகச் செயல்நெறியின் ஒழுங்கமைப்பில் மத்தியமாநிலத்துக்கான 35ஆவது அகவைநிறைவுவிழாஎன்னெப்பெற்றால் அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. அறங்கொண்டு பணி செய்யும் ஆசான்களையும் ஆசான்களின் திறன் கொண்டு வாகைசூடும் மாணவர்களையும் 14 ஆண்டுகள் தமிழ்மொழியைக் கற்றுத் தேர்ச்சி பெற்ற மாணவர்களையும் கூட்டுழைப்பின் விளைவாகத் தமிழாலயங்கள் பெற்ற வெற்றிகளுக்கான மதிப்பளிப்புகள் எனப் பல்வகைமதிப்பளிப்புகளைத் தன்னகத்தே கொண்டதாகத் தமிழ்க் கல்விக் கழகத்தின் அகவை நிறைவுவிழா அமைந்திருந்தது.

தமிழ்க் கல்விக் கழகத்தின் நிருவாகச் செயல்நெறியின் ஒழுங்கமைப்பில் மத்தியமாநிலத்துக்கான 35ஆவது அகவைநிறைவுவிழாஎன்னெப்பெற்றால் அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. அறங்கொண்டு பணி செய்யும் ஆசான்களையும் ஆசான்களின் திறன் கொண்டு வாகைசூடும் மாணவர்களையும் 14 ஆண்டுகள் தமிழ்மொழியைக் கற்றுத் தேர்ச்சி பெற்ற மாணவர்களையும் கூட்டுழைப்பின் விளைவாகத் தமிழாலயங்கள் பெற்ற வெற்றிகளுக்கான மதிப்பளிப்புகள் எனப் பல்வகைமதிப்பளிப்புகளைத் தன்னகத்தே கொண்டதாகத் தமிழ்க் கல்விக் கழகத்தின் அகவை நிறைவுவிழா அமைந்திருந்தது.

  

09:30 மணிக்கு என்னப்பெற்றால் நகர இளைஞர் விவகாரத்துறைமேலாளர் திருமதிறுசாகால்னரபாக் அவர்கள் பொதுச்சுடர்ஏற்றிவைத்தமையைத் தொடர்ந்து, சிறப்பு விருந்தினர்களான பசுமைக் கட்சியின் என்னப்பெற்றால் நகரசபைஉறுப்பினர் திரு. யூற்கன் கொவ்மன்,என்னப்பெற்றால் நகர முன்னாள் துணை முதல்வரும் மூத்தக்குடிமக்களின் பிரதிநிதியும் அனைவருக்கும் சமத்துவத்திற்கான தன்னார்வத் தொண்டருமான சபினிகொவ்மன், தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் யேர்மனியக் கிளைப் பொறுப்பாளர் திரு.யோன்பிள்ளை சிறிரவீந்திரநாதன், யேர்மன் தமிழ்ப் பெண்கள் அமைப்பின் பொறுப்பாளர் திருமதி வசந்தி மனோகரன், தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் மத்தியமாநிலப் பொறுப்பாளர்களானதிரு. சதாசிவம் சிறிக்கந்தவேல், திரு.கணபதிசிவசுப்பிரமணியம், திரு.சிவநேசன் சுதர்சன், தமிழ் இளையோர் அமைப்பின் பொறுப்பாளர் செல்வன் சயந்தன் கேதீஸ்வரன், யேர்மன் தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பின் துணைப்பொறுப்பாளர் செல்வன் மிதுனன் ,ரட்ணராஜா,யேர்மன் தமிழ்ப் பெண்கள் அமைப்பின் நிர்வாகப் பொறுப்பாளர் ஷதமிழ் மாணி| திருமதிகலா ஜெயரட்ணம் ஆகியோர் மங்கலவிளக்கேற்றிவைக்க, அகவைநிறைவுவிழாச் சிறப்புடன் தொடங்கியது.

தமிழ்க் கல்விக் கழகத்தின்பொறுப்பாளர் ஷசெம்மையாளன்| திரு.செல்லையாலோகானந்தம் அவர்களின் வரவேற்புரையைத் தொடர்ந்து,மதிப்பளிப்புகள் தொடங்கின. அனைத்துலகப் பொதுத்தேர்வு,தமிழ்த்திறன்போட்டிஆகியவற்றில் வெற்றிபெற்றவெற்றியாளர்களுக்கும் மற்றும் 5,10,15ஆண்டுகள் பணியாற்றியஆசான்களுக்கானமதிப்பளிப்போடு, 20 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு ஷதமிழ் வாரிதி| என்றும் 25 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு ஷதமிழ் மாணி| என்றும் 30 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு முப்பது ஆண்டுகளைக் குறிக்கும் மூன்றுஉடுக்கள் பொறிக்கப்பட்டபதக்கமும் வழங்கிமதிப்பளிப்புகள் நடைபெற்றது.

யூச்சன் தமிழாலயநிர்வாகிஷதமிழ்மாணி| திரு. தம்பையாசிவலிங்கம்,கிறீபெல்ட் தமிழாலயநிர்வாகிஷதமிழ்மாணி| திருமதியஸ்ரின் உதயதேவி, கிறீபெல்ட், நெற்றெற்றால், வியர்சன் ஆகியதமிழாலயங்களின்ஆசிரியர்ஷதமிழ்மாணி|திரு.ஆலாலசுந்தரம் ஞானகுமார், வூப்பெற்றால் தமிழாலய ஆசிரியர் ஷதமிழ்மாணி| திருமதி தெய்வறஞ்சனிகிருதரமூர்த்திமற்றும் வூப்பெற்றால் தமிழாலயஆசிரியர்ஷதமிழ்மாணி| திரு. செபஸ்ரியான் றொமாலியஸ் ஸ்ரீபன் ஆகியோருக்கு30 ஆண்டுகள் பணிநிறைவுக்கானமதிப்பளிப்பும், கைன்ஸ்பேர்க்தமிழாலயத்தின் நிர்வாகியும்ஆசிரியரும் மற்றும் யூச்சன் தமிழாலயத்தின் ஆசிரியருமான ஷதமிழ்மாணி|திரு. திசைவீரசிங்கம் புஸ்பராசாஅவர்களுக்கு 35 ஆண்டுகள் பணிநிறைவுமதிப்பளிப்பும் வழங்கப்பட்டன.

பொதுத்தேர்வு, தமிழ்த்திறன், கலைத்திறன் போன்றவற்றில் மாணவர்கள் பெற்றவெற்றிகளின்அறுவடையாகத்தமிழாலயங்கள் பெற்ற புள்ளிகளினடிப்படையில் சிறந்த தமிழாலயங்களுக்கான மதிப்பளிப்புகளும் இடம்பெற்றன. நாடுதழுவியமட்டத்தில் அனைத்துலகப் பொதுத்தேர்வில்லிவர்குசன் தமிழாலயம் 2ஆம் இடத்திற்கானமதிப்பளிப்பைப்பெற்றுக்கொண்டது. 1ஆம் மற்றும் 3ஆம் இடங்களுக்கானமதிப்பளிப்புஎதிர்வரும் விழாக்களில் வழங்கப்படும். தமிழ்த்திறன் போட்டியில் முன்சன்கிளாட்பாக்தமிழாலயம் 2ஆம் நிலையையும், கலைத்திறன் போட்டியில் கிறீபெல்ட் தமிழாலயம் 3ஆம் நிலையையும், கலைத்திறன் மாநிலப் போட்டியில் கிறீபெல்ட், முன்சன்கிளாட்பாக் மற்றும் வூப்பெற்றால் தமிழாலயங்கள் முறையே 1ஆம், 2ஆம், 3ஆம் நிலைகளையும்,கலைத்திறன் போட்டியில் நாடுதழுவியமட்டத்திற் கிறீபெல்ட் தமிழாலயம் 2ஆம் இடத்தைப் பெற்றமைக்கான மதிப்பளிப்புகள் வழங்கப்பட்டன.

மழலையராக இணைந்து 14ஆண்டுகள் தமிழ்மொழிக்கற்றலில் சித்திபெற்று நிறைவு செய்த மாணவர்களுக்கு சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட முறையிலே மதிப்பளிக்கப்பட்டனர். மாணவர்களின் உரை, கவிதை, எழுச்சிப்பாடல்கள் மற்றும் எழுச்சிநடனங்கள் எனக் கலைநிகழ்வுகளுமாக நடைபெற்ற அகவை நிறைவுவிழா, தமிழ்த்தேசத்தின் விடியலுக்கான நம்பிக்கையைப் பறைசாற்றியவாறு 22:00மணிக்கு மத்தியமாநிலத் தமிழாலயங்களின் அகவை நிறைவுவிழா நிறைவுற்றது. எதிர்வரும் வாரங்களில் தமிழ்க் கல்விக் கழகத்தின்நிருவாகப் பொறிமுறைக்கேற்பவகுக்கப்பட்டுள்ள ஏனைய நான்கு மாநிலங்களிலும் அகவை நிறைவுவிழா நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

  
   Bookmark and Share Seithy.com



இராணுவத்தினால் இடித்தழிக்கப்பட்ட சிலையில் பொன் சிவகுமாரனுக்கு உணர்வுபூர்வ அஞ்சலி! Top News
[Thursday 2025-06-05 18:00]

இராணுவத்தினரால் தகர்க்கப்பட்டு மீள பிரதிஸ்டை செய்யப்பட்ட பொன் சிவகுமாரனின் சிலையில் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தியாகராஜா நிரோஸ் மற்றும் போராளிகள் நலன்புரிச் சங்கத்தினர் இன்று காலை உணர்வுபூர்வமாக ஈகைச் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர். தமிழ் மக்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் முதன் முதலில் சயனைட் அருந்தி தன்னுயிரைத் தியாகம் செய்த முதல் வித்து பொன் சிவனுமாரன் 51 ஆவது நினைவு தினம் தமிழர் தயாகத்தில் உணர்வுபூர்வமாக இன்று அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது. உரும்பிராயில் பொன் விவகுமாரனின் சிலை அமையப்பெற்றுள்ளது.



தமிழின அழிப்பு நினைவுநாள் 2025-யேர்மனி! Top News
[Thursday 2025-05-22 19:00]

18.05.2025 ஞாயிற்றுக்கிழமை அன்று முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 16ஆவது ஆண்டு நினைவுநாள் யேர்மனியின் டுசில்டோவ் (Düsseldorf)நகரில் பேரெழுச்சியோடு நினைவு கூரப்பட்டது. நண்பகல் 12:45 மணிக்கு தொடரூந்து நிலையம் முன்பாக பெருந்திரளான மக்களோடு ஆரம்பமாகிய பேரணி, தமிழ் இளையோர் அமைப்பின் ஒருங்கிணைப்பிலும், தமிழாலயங்களது ஒப்பனையும் பாவனையும் எனும் வடிவத்தில் முள்ளிவாய்க்கால் காட்சிப்படுத்தல்களோடும் மத்திய மாநிலத்தில் அமைந்துள்ள மாநில நாடாளுமன்றத்தினை நோக்கிப் பேரெழுச்சியோடு நகரத் தொடங்கியது. பேரணி செல்லும் வழியெங்கும் ,கூடி நின்ற வேற்றின மக்களுக்கு இளையவர்கள் துண்டுப்பிரசுரங்களை வழங்க, பேரணியில் கலந்து கொண்ட மக்கள் வானதிர கொட்டொலிகள் எழுப்பியவாறும் சென்றனர்.



ஸ்ராஸ்பூர்க் மாநகரில் தமிழினப்படுகொலையின் 16வது ஆண்டு நினைவு கூறலும், அனைத்துலகத்திடம் நீதி கேட்டு கவனயீர்ப்பு நிகழ்வும்! Top News
[Tuesday 2025-05-20 06:00]

18/05/2025 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 14.45 மணி தொடக்கம் 17.00 மணிவரை, Place Kléber (Homme de Fer) Strasbourg என்னும் இடத்தில் நடை பெற்றது. இந்நிகழ்வில் தமிழ் மக்கள் உணர்வுடன் கலந்து கொண்டிருந்தனர். பிரத்தியேகமாக அமைக்கப் பட்டிருந்த நினைவுக்கல்லின் முன்னிலையில் நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு மலர் வணக்கமும் செய்யப்பட்டது. தமிழினப்படுகொலை நினைவு சுமந்த பதாதைகளைத் தாங்கிய வண்ணம் சிறுவர் முதல் பெரியவர் வரை மிகவும் உணர்வுடன் நின்றிருந்தனர்.



போரில் படுகொலைசெய்யப்பட்ட குழந்தைகளை நினைவுகூர்ந்து வலிகாமம் கிழக்கில் சிறார்கள் விளக்கேற்றி அஞ்சலி! Top News
[Sunday 2025-05-18 18:00]

இறுதி போர் உள்ளிட்ட அரச படை நடவடிக்கைகளில் படுகொலை செய்யப்பட்ட சிறார்களை நினைவு கூர்ந்து சிறுவர்களின் பங்கேற்புடன், வலிகாமம் கிழக்கு வாதரவத்தை, வீரவாணி ஞானவாணி சனசமூக நிலையத்தில் நேற்று சனிக்கிழமை மாலை உணர்வுபூர்வமாக அஞ்சலிநிகழ்வுகள் இடம்பெற்றன. சமூக செயற்பாட்டாளர் சிவராசா ரூபன் தலைமையில் அஞ்சலி சுடரினை போரில் மகனை இழந்த தந்தை எஸ். சுந்தரவேல் ஏற்றினார். போரில் சிறுவர்களுக்கு எதிராக அரசு மேற்கொண்ட தாக்குதல்களின் கோரத்தினையும் அதுதொடர்பில் பொறுப்புக்கூறப்படாமை மற்றும் மறுக்கப்பட்ட நீதி தொடர்பில் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தியாகராஜா நிரோஸ் அஞ்சலியுரையாற்றினார்.



ராஜபக்ச குடும்பம் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை இழைத்ததாக நாமல் ராஜபக்ஸவுக்கு பிரம்டன் முதல்வர் சுடச்சுட பதில்! Top News
[Thursday 2025-05-15 21:00]

இனப்படுகொலை நினைவுத்தூபியை ராஜபக்ச குடும்பம் எதிர்ப்பது அந்த நினைவுத்தூபிக்கு கிடைத்த கௌரவமாகும்..! கனடாவில் உருவாக்கப்பட்டுள்ள தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபியை ராஜபக்ச குடும்பம் எதிர்ப்பது அந்த நினைவுத்தூபிக்கு கிடைத்த கௌரவமாகும் என கனடாவின் பிரம்டன் மேயர் பட்ரிக் பிரவுன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் பிரம்டன் மேயர் பட்ரிக் பிரவுன் சமூக ஊடக பதிவில், தமிழ் இனப்படுகொலை நினைவுத்தூபிக்கான நாமல் ராஜபக்சவின் எதிர்ப்பு, அந்த குடும்பத்தின் கரங்களில் அப்பாவிகள் கொல்லப்பட்டதை அங்கீகரிக்கும் சரியான பாதையில் நாம் சென்றுகொண்டிருக்கின்றோம் என்பதற்கான உறுதியான சமிக்ஞை.



கனடாவின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக ஹரி ஆனந்தசங்கரி! Top News
[Wednesday 2025-05-14 06:00]

கனடாவின் புதிய அமைச்சரவையின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக ஹரி ஆனந்தசங்கரி பதவி பிரமாணம் செய்து கொண்டுள்ளார். அண்மையில் கனடாவில் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் மார்க் கார்னி தலைமையிலான தரப்பு வெற்றிபெற்ற நிலையில் புதிய அமைச்சரவை நியமனங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கார்னி 28 அமைச்சர்களை அமைச்சரவை பதவிகளுக்கும்இ மேலும் 10 பேரை வெளியுறவுச் செயலாளர்களாகவும் நியமித்துள்ளார்.



கனடாவில் திறந்து வைக்கப்பட்டது தமிழர் இனவழிப்பு நினைவுத்தூபி! Top News
[Sunday 2025-05-11 18:00]

இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்படவில்லை என தெரிவிப்பவர்களிற்கு கனடாவில் இடமில்லை! கொழும்பிற்கு திரும்பி செல்லுங்கள் பிரம்டன் மேயர் தெரிவிப்பு! கனடா பிரம்டனில் தமிழர் இனவழிப்பு நினைவுத்தூபி உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தின் இனப்படுகொலையை நினைவுகூரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள தமிழர் இனவழிப்பு நினைவுத்தூபியை திறந்துவைக்கும் நிகழ்வு சிங்காவுசி பூங்காவில் இடம்பெற்ற வேளை கனடா அரசியல்வாதிகள் உட்பட பெருமளவானவர் திரண்டிருந்தனர்.



அன்னை பூபதி அவர்களின் 37 வது நினைவு நாளும் , நாட்டுப்பற்றளார்கள் நினைவுநாளும்! Top News
[Sunday 2025-05-04 20:00]

அன்னை பூபதி அவர்களின் 37 வது நினைவு நாளும் , நாட்டுப்பற்றளார்கள் நினைவுநாளும் யேர்மனி போகும் நகரில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது. பொதுச்சுடரினை தழிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் இராட்டிங்கன் நகரச் செயற்பட்டாளர் திரு. அப்புத்துரை திருச்செல்வம் அவர்கள் ஏற்றி வைக்க தமிழீழத் தேசியக்கொடியை தழிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் மத்தியமாநிலம் 2 இன் துணைப்பொறுப்பாளர் திரு. பொன்னம்பலம் கிருபாமூர்த்தி ஏற்றிவைத்தார். அன்னை பூபதி அவர்களின் திருவுருவப் படத்திற்கான ஈகைச்சுடர் யேர்மனி தமிழ்ப்பெண்கள் அமைப்பின் செயற்பாட்டாளர்களில் ஒருவரான திருமதி. கிருபாரதி சிவராம் அவர்களால் ஏற்றிவைக்கப்பட்டது.



ஈரான் மற்றும் அமெரிக்காவின் புதிய அணு உரையாடல்! Top News
[Sunday 2025-04-13 18:00]

ஒரு குறிப்பிடத்தக்க வெளியுறவு முன்னேற்றத்தில், ஈரான் மற்றும் அமெரிக்கா நாடுகள் தெகுரானின் அணுத் திட்டம் குறித்து நேரடி பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்கியுள்ளன. முதல் சுற்று பேச்சுவார்த்தைகள் ஓமனின் மஸ்கத் நகரில் நடைபெற்றது. 2025-இல் டொனால்ட் டிரம்ப் மீண்டும் அதிபராக பதவியேற்ற பின்னர் இது இரண்டு நாடுகளுக்கும் இடையே முதல் முறையான உறவாகும். இந்தப் பேச்சுவார்த்தைகள் "கட்டமைப்பானது" என இரு தரப்பினராலும் விவரிக்கப்பட்டுள்ளது. இது மத்திய கிழக்கு மற்றும் உலக அரசியல் சூழலில் விரைவாக மாறிக்கொண்டிருக்கும் நிலையில் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் வாய்ந்தது.



இந்திய அரசியல்வாதிகளின் இலங்கைச் சந்திப்புகள்: தமிழ் தேசியம் மற்றும் வரலாற்றுப் பொறுப்புகள்! Top News
[Sunday 2025-04-06 07:00]

இலங்கையின் வடகிழக்குப் பகுதிகளில் தமிழர் மீதான மானுட வன்கொடுமைகள் நிகழ்ந்த பிறகு, பல ஆண்டுகளாகத் தமிழ் மக்கள், சர்வதேச நீதியை நாடி வருகின்றனர். இந்தச் சூழலில் இந்திய அரசியல்வாதிகளின் இலங்கையில் நிகழ்த்தும் பயணங்கள் வெறும் நவீன ராஜதந்திர நடவடிக்கைகளாக மட்டுமல்ல; அவை ஒரு வரலாற்றுப் பொறுப்பையும், தத்தம் செயற்திறன் மூலம் ஒரு இனத்தின் எதிர்காலத்தைக் குறியிடக்கூடிய தாக்கத்தையும் ஏற்படுத்துகின்றன.



35ஆவது அகவை நிறைவில் நிமிர்வோடு தமிழாலயங்கள் – கனோவர்! Top News
[Thursday 2025-04-03 06:00]

தமிழ்க் கல்விக் கழகத்தின் நிருவாகச் செயல்நெறியின் ஒழுங்கமைப்பில் வடமாநிலத்துக்கான 35ஆவது அகவை நிறைவு விழா கனோவர் அரங்கில் 30.03.2025 ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. அறங்கொண்டு பணி செய்யும் ஆசான்களையும் ஆசான்களின் திறன் கொண்டு வாகைசூடும் மாணவர்களையும் 14 ஆண்டுகள் தமிழ்மொழியைக் கற்றுத் தேர்ச்சி பெற்ற மாணவர்களையும் இவர்களின் கூட்டுழைப்பின் விளைவாகத் தமிழாலயங்கள் பெற்ற வெற்றிகளுக்கான மதிப்பளிப்புகள் எனப் பல்வகை மதிப்பளிப்புகளைத் தன்னகத்தே கொண்டதாகத் தமிழ்க் கல்விக் கழகத்தின் அகவை நிறைவு விழா அமைந்திருந்தது. 09:30 மணிக்கு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் யேர்மனியக் கிளைப் பொறுப்பாளர் திரு. யோன்பிள்ளை சிறிரவீந்திரநாதன் அவர்கள் பொதுச்சுடர் ஏற்றிவைத்தமையைத் தொடர்ந்து, அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் இணைப்பாளர் திரு. கிருஸ்ணகுமார் சிவலிங்கம், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் திரு. யோன்பிள்ளை சிறிரவீந்திரநாதன், யேர்மன் தமிழ்ப் பெண்கள் அமைப்பின் பொறுப்பாளர் திருமதி வசந்தி மனோகரன், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் வடமாநிலப் பொறுப்பாளர் திரு. இளையதம்பி துரைஐயா, தமிழ்க் கல்விக் கழகத்தின் நிர்வாகப்பிரிவுப் பொறுப்பாளர் திரு. ஜெனுசன் சந்திரபாலு, நிதிப்பிரிவுத் துணைப்பொறுப்பாளர் திரு. பிரவீன் செல்வேந்திரன், வடமாநிலச் செயற்பாட்டாளர்களான தமிழ் மாணி திருமதி சுபத்திரா யோகேந்திரன், திருமதி அன்னலட்சுமி இராமலிங்கம், வடமாநிலக் கல்விப்பிரிவுச் செயற்பாட்டாளர் தமிழ் வாரிதி திருமதி யமுனாராணி தியாபரன் மற்றும் பிறேமன் தமிழாலயத்தின் நிர்வாகி தமிழ் மாணி திருமதி கனகேஸ்வரி சந்திரபாலன் ஆகியோர் மங்கலவிளக்கேற்றி வைக்க, அகவை நிறைவு விழாச் சிறப்புடன் தொடங்கியது.



வாகைமயில் 2025 - யேர்மனி! Top News
[Friday 2025-03-21 18:00]

யேர்மனியில் ஆண்டுதோறும் வாகைமயில் என்னும் நடனப்போட்டியைத் தமிழ்ப் பெண்கள் அமைப்பு நடத்தி வருவது யாவரும் அறிந்ததே. இம்முறை கற்றிங்கன் நகரில் 15.03.25 சனி, 16.03.25 ஞாயிறு ஆகிய இரண்டு நாள்களும் தெரிவுப்போட்டிகளின்றி நிறைவுப்போட்டியாகப் பன்னிரெண்டு ஆண்டுகளை நிறைவு செய்தபடி வாகைமயில் வெகு சிறப்பாகத் தோகை விரித்தாடியது. யேர்மனியில் உள்ள நடன ஆசிரியர்களால் பயிற்றப்பட்ட அவர்களின் மாணவ மாணவிகள் ஒருவரை ஒருவர் மிஞ்சும் வகையில் களம் கண்டனர். இவர்கள் அற்புதமான பதங்களுடன் பல வண்ணங்கள் உடுத்தித் தேர்போல (இரதங்கள்) அழகாக அசைந்து, மிதமான அணிகளோடு அவையில் இதமான பரதத்தால் நவரசம் தந்தது மண்டபம் நிறைந்த மக்களின் வரவேற்பைப் பெற்றிருந்தது. டென்மாக், சுவிற்சலாந்து ஆகிய நாடுகளிலிருந்து வருகை தந்திருந்த திறமையும் பட்டறிவும் வாய்ந்த நடுவர்களால் போட்டிகள் நடுவம் செய்யப்பட்டு, மதிப்பளிப்புகளும் வாகைமயில் விருதுகளும் வழங்கப்பட்டன.



கனடாவில் வீட்டிலிருந்த யுவதிமீது துப்பாக்கி சூடு: சகோதரன் காயம்! Top News
[Monday 2025-03-10 06:00]

யா/கோண்டாவில் மேற்கு கல்வீட்டு துரையப்பாவின் பேர்த்தி யான செல்வி ரகுதாஸ் நிலக்சி 07-03-2025 வெள்ளிக்கிழமை கனடாவில் அகால மரணம் அடைந்து விட்டார். கனடாவின், மார்க்கம் நகரத்தில் வீடொன்றில் இடம்பெற்ற இரட்டை துப்பாக்கிச்சூட்டில் ஒரு பெண் உயிரிழந்ததுடன், ஒரு ஆண் தீவிரமான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



விஜய் தணிகாசலம் மீண்டும் ஒன்றாரியோ மாகாண பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்! Top News
[Friday 2025-03-07 06:00]

மார்ச் 4, 2025 அன்று, அமெரிக்கா, அதிபர் டொனால்ட் டிரம்பின் தலைமையில், கனடியா இறக்குமதிகளுக்கு 25% வரி விதித்தது. இது எல்லை பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் கடத்தல் குறித்த கவலையை காரணமாகக் கூறினாலும், ஒன்றாரியோ பொருளாதாரத்தில் 500,000 வேலைகளை ஆபத்துக்கு உள்ளாக்கியுள்ளது. இதற்கு பதிலளிக்க கனடா, அமெரிக்க பொருட்களுக்கு பதிலடி கட்டணங்களை அறிவித்து, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக பதற்றத்தை அதிகரித்துள்ளது.



தமிழர் கலைகளின் வளம்தேடும் வளரிளம் தமிழர்களின் கலைத்திறனாற்றுகை - ஸ்ருற்காட்! Top News
[Thursday 2025-03-06 06:00]

கலைகளின் ஊடாகத் தன்னையும்தனது சூழலையும்பதிவுசெய்வதிலும் வினவுதலுக்குட்படுத்துவதிலும் உலகம் பின்னிற்பதில்லை. அவை தலைமுறைகள் வழியேகடத்தப்பட்டுவருவதோடு, புதியநுண்ணறிவுசார் புலமைகளை உள்ளீர்ந்தவாறு செழுமைபெற்றுத் திகழ்கின்றன. தமிழர் கலைகள் பல ஆயிரம் ஆண்டுகளாகத் தொடர்ச்சியாகப் பயணித்துவருகின்றன. தமிழர்கள் புலம்பெயர்ந்து வேற்றுமொழி, கலைமற்றும் பண்பாட்டுச் சூழலுள் சிக்குண்டபோதும் தம்மைத் தகவமைத்துக் கொள்வதற்கான அத்தனை முயற்சிகளையும் செய்துவருவதற்கு மற்றுமொரு சான்றாக யேர்மன் தமிழ்க் கல்விக் கழகத்தால் நடாத்தப்பட்டுவரும் கலைத்திறன் போட்டிதிகழ்கின்றது. தமிழரதுகலைகளைத் தமிழினத்தின் இளையதலைமுறை கற்றும் கண்டுணரவும் அதனூடாகப் படைப்பாக்கத் திறனைப் பெறவும், தமிழர் கலைகள் அழிந்துவிடாதுகாக்கவும், கலை அரங்காற்றுகை செயலாக்கம் பெறுதல் வேண்டும்.



35ஆவது அகைவை நிறைவில் தமிழாலயங்கள்! Top News
[Thursday 2025-03-06 06:00]


நடிகர் கருணாஸ் தனது பிறந்த நாளையொட்டி முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்துப் பெற்றார்! Top News
[Thursday 2025-02-20 19:00]

முக்குலத்தோர் புலிப்புடைக் கட்சியின் தலைவரும், தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்தின் துணைத்தலைவரும், திரைப்பட நடிகருமான திரு. சேது. கருணாஸ் அவர்களின் பிறந்தநாளை (21.02.2025) யொட்டி 20.02.2025 இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்களை சந்தித்து நடிகர் சேது. கருணாஸ் வாழ்த்துப் பெற்றார்.



அஷ்ரஃப் சிஹாப்தீனின் ‘கழுதை மனிதன்’ மொழி பெயர்ப்பு சிறுகதை தொகுதி வெளியீடு! Top News
[Wednesday 2025-02-19 18:00]

சிரேஷ்ட ஒலி, ஒளிபரப்பாளரும் எழுத்தாளருமான அஷ்ரஃப் சிஹாப்தீன் மொழி பெயர்த்த 'கழுதை மனிதன்' சிறுகதைத் தொகுதி வெளியீடும் இலங்கை நெய்னார் சமூக நலக் காப்பகத்தின் மாணாக்கருக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் ஞாயிற்றுக் கிழமை தெமடகொட வை.எம்.எம்.ஏ. மண்டபத்தில் நடைபெற்றது.



மத்திய மாநிலத்திற்கான கலைத்திறன் போட்டிகள்! Top News
[Wednesday 2025-02-12 06:00]

தமிழ்க்கல்விக் கழகத்தின் நிர்வாகப் பொறிமுறைக்கேற்ப மத்திய மாநிலத்திற்கான கலைத்திறன்போட்டிகள் 08.02.2025 அன்று சிறப்பாக நடைபெற்றது. இக்கலைத்திறன் போட்டியில் மயிலாட்டம், புலியாட்டம், காவடியாட்டம், கரகம், காவடி, பொய்க்காற்குதிரை, வில்லுப்பாட்டு போன்ற கிராமியக் கலைவடிவங்களுடன் பரதநாட்டியம், விடுதலைநடனம், விடுதலைப்பாடல், வாய்ப்பாட்டு ஆகிய கலைகள் போட்டியாகளாக நடைபெற்றன.



கலைத்தமிழோடுகளமாடும் வளரிளம் கலைஞர்களின் கலைத்திறனாற்றுகை – கற்றிங்கன்! Top News
[Saturday 2025-02-08 06:00]

தமிழரதுகலைவடிவங்களைத்தமிழினத்தின் இளையதலைமுறைகற்றும் கண்டும் உணரவும், அதனுடாகப்படைப்பாக்கத் திறனைப் பெறவும்,தமிழர் கலைகள் அழிந்துவிடாதுகாக்கவும் கலைஅரங்காற்றுகை,செயலாக்கம் பெறுதல் வேண்டும். புலம்பெயர் நாடுகளில் மூன்றாந் தலைமுறைத் தமிழர்களும் தமிழர் கலைகளைஅறிந்துகொள்ளவும், பயிலவும் களம் அமைத்துக் கொடுக்கும் நோக்கோடு,தமிழ்க் கல்விக் கழகத்தின் கலைப்பிரிவுகலைத்திறன் போட்டியைநடாத்திவருகிறது. இக்கலைத்திறன் போட்டியில் மயிலாட்டம், புலியாட்டம், காவடியாட்டம், காவடி, கரகம், பொய்க்காற்குதிரை, வில்லுப்பாட்டு போன்றகிராமியக் கலைவடிவங்களுடன் பரதநாட்டியம் மற்றும் விடுதலைநடனம், விடுதலைப் பாடல், வாய்ப்பாட்டு ஆகிய ஒன்பது கலைகள் போட்டிகளாக நடைபெறுகின்றன. முதலாவது போட்டியரங்கம் வடமத்தியமாநிலத்தின் கற்றிங்கன் நகரிலேபொதுச்சுடர் ஏற்றலோடுதொடங்கியது.


Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
Latika-Gold-House-2025
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா