Untitled Document
September 19, 2024 [GMT]
பிரித்தானிய விசா திட்டத்தில் பல முக்கிய மாற்றங்கள்!
[Saturday 2024-09-14 18:00]

2025 முதல் பிரித்தானிய விசா திட்டத்தில் பல முக்கிய மாற்றங்கள் வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பிரித்தானிய மற்றும் ஐரிஷ் குடியுரிமையுடையவர்களை தவிர, பிற நாடுகளில் இருந்து வருபவர்கள் அனைவரும் 2025-க்குள் பிரித்தானியாவிற்கு வருவதற்கு முன்பே அனுமதி பெற வேண்டும் என்ற புதிய விசா திட்டத்தை, பிரித்தானிய உள்துறை அமைச்சர் Yvette Cooper அறிவித்துள்ளார்.

2025 முதல் பிரித்தானிய விசா திட்டத்தில் பல முக்கிய மாற்றங்கள் வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பிரித்தானிய மற்றும் ஐரிஷ் குடியுரிமையுடையவர்களை தவிர, பிற நாடுகளில் இருந்து வருபவர்கள் அனைவரும் 2025-க்குள் பிரித்தானியாவிற்கு வருவதற்கு முன்பே அனுமதி பெற வேண்டும் என்ற புதிய விசா திட்டத்தை, பிரித்தானிய உள்துறை அமைச்சர் Yvette Cooper அறிவித்துள்ளார்.

  

2024 நவம்பரில் இருந்து நடைமுறைக்கு வரும் புதிய விதிகளின்படி, பிரித்தானியாவிற்கு விசா இல்லாமல் வரும் பயணிகள், £10 கட்டணத்தை செலுத்தி, முன்னதாக அனுமதி பெற வேண்டும்.

முந்தைய அரசு கடந்த வருடம், ETA (Electronic Travel Authorization) என்ற மின்னணு பயண அனுமதி திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம், தற்காலிகமாக அல்லது பரிதானத்தில் பிரித்தானியா வழியாக பயணிக்கும் பயணிகள் முன்பே அனுமதி பெற வேண்டும்.

இதற்கு £10 கட்டணம் விதிக்கப்பட்டு, இம்முறை கட்டாயமாக கத்தார், பார்ஹைன், குவைத், ஒமான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா மற்றும் ஜோர்டான் குடியுரிமையாளர்கள் பயண அனுமதி பெறுவது அவசியமாக்கப்பட்டுள்ளது.

ETA திட்டம் முழுமையாக நடைமுறைக்கு வந்த பிறகு, யார் யார் பிரித்தானியாவிற்கு பயணம் செய்கின்றனர் என்பதற்கான முழுமையான கண்காணிப்பு சாத்தியமாகும் என்றும், பயண அனுமதி தேவையில் இருந்து வரும் வெளிப்பாடுகள் நிரப்பப்படும் என்றும் கூப்பர் கூறியுள்ளார்.

ETA என்பது பயணிகளை பிரித்தானியாவிற்கு வருவதற்கு முன்பு மின்னணு அனுமதி பெறச் செய்யும் திட்டமாகும். இதன் மூலம், யார், ஏன் பிரித்தானியாவிற்கு வருகிறார்கள் என்பதை அரசு அறிந்துகொள்ள முடியும்.

அண்மையில், கத்தார், பார்ஹைன், குவைத், ஒமான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளின் குடியுரிமையாளர்கள் ETA க்கு விண்ணப்பிக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பிற நாடுகளின் குடியுரிமையாளர்களுக்கான கட்டாயம் 2025ல் அமுலுக்கு வரும். 2024 நவம்பர் மாதம் முதல், பிரிட்டிஷ் மற்றும் ஐரிஷ் குடியுரிமையாளர்களைத் தவிர, அனைத்து பிற தேசியக்குடியுரிமையாளர்களும் ETA பெற வேண்டியது கட்டாயமாகும்.

2025 ஜனவரி 8 முதல் இந்த விதி நடைமுறையில் இருக்கும். ஐரோப்பிய குடியுரிமையாளர்களுக்கு 2025 மார்ச் மாதத்தில் இருந்து இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு, 2025 ஏப்ரல் 2-ஆம் திகதி முதல் பயணத்துக்கு முன்னதாக ETA பெறுவது அவசியமாகும்.

ETA கட்டணம் £10 ( இலங்கை பணமதிப்பில் கிட்டத்தட்ட ரூ.4000), இது இரண்டு ஆண்டுகள் அல்லது பாஸ்போர்ட் காலாவதியாகும் வரை செல்லும். பயணிகள் பல முறை இங்கிலாந்துக்கு வர அனுமதிக்கப்படுகிறது.

ETA-க்கு விண்ணப்பிக்க, பயணிகள் UK ETA App மூலம் விண்ணப்பிக்கலாம். ஸ்மார்ட்போன் இல்லாதவர்கள் gov.uk இணையதளத்தில் "Apply for an Electronic Travel Authorisation" எனும் தேடலை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் போது, பாஸ்போர்ட் விவரங்கள், பயணிக்கும் இடம் மற்றும் பயண காரணம் உள்ளிட்ட தகவல்களை வழங்க வேண்டும். விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட 3 நாட்களுக்குள் முடிவு தரப்படுகிறது.

ETA மறுக்கப்பட்டால், அந்த நபர் விசா பெறுவதற்காக தனிப்பட்ட முறையில் விண்ணப்பிக்க வேண்டும். ETA இன்றி வர விரும்புவோர் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள்.

அதேவேளை புதிய ETA திட்டம் 2025ல் முழுமையாக நடைமுறைக்கு வந்ததும், பிரித்தானிய பயணிகளின் அனுமதி விதிமுறைகள் மேலும் கட்டுப்பாடுகளுடன் செயல்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  
   Bookmark and Share Seithy.com



லெபனான் நாட்டை உலுக்கியுள்ள இரண்டாம் அலை வெடிப்பு!
[Thursday 2024-09-19 06:00]

லெபனான் நாட்டில் நேற்று நடந்த பேஜர்கள் வெடிப்பு சம்பவத்தை அடுத்து, அதன் தொடர்ச்சியாக கையடக்க ரேடியோ வெடிப்பு சம்பவமும் நிகழ்ந்துள்ளது. லெபனான் நாட்டின் போராளி அமைப்பான ஹிஸ்புல்லாஹ் பயன்படுத்திய பேஜர்கள் நாட்டின் பல பகுதிகளில் வெடித்ததை தொடர்ந்து நாடு முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. அத்துடன் இந்த வெடிப்பு சம்பவத்தில் சிறுமி உட்பட 8 பேர் வரை உயிரிழந்ததுடன், 3000 பேர் வரை படுகாயமடைந்தாக உள்ளூர் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.



பிரித்தானியாவில் சடலமாக மீட்கப்பட்ட தாய், மகன்!
[Thursday 2024-09-19 06:00]

பிரித்தானியாவில் தாயுடன் சேர்த்து 9 வயது சிறுவனும் உயிரிழந்து இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் கார்ன்வாலில் தாயுடன் உயிரிழந்த ஒன்பது வயது சிறுவனின் குடும்பம், அவரை "சேட்டைக்காரன்" என்று விவரித்துள்ளது. டெவன் மற்றும் கார்ன்வால் பொலிஸார் செப்டம்பர் 7 அன்று 31 வயதான டாஸ்மின் பேட்டர்சன்(Tasmin Paterson) மற்றும் அவரது மகன் ஹட்சன் பேட்டர்சன்(Hudson Paterson) ஆகியோரின் உயிரிழப்பை உறுதிப்படுத்தினர்.



காரில் மறைத்து வைக்கப்பட்ட வெடி மருந்து: டிரம்ப் மீது மீண்டும் வைக்கப்பட்ட குறி!
[Thursday 2024-09-19 06:00]

அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் மீது தொடர் தாக்குதல் குறி வைக்கப்படுவதால் அவரது ஆதரவாளர்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். அமெரிக்க ஜனாதிபதிக்கான போட்டியில் உள்ள டொனால்ட் ட்ரம்ப் மீது இரு தினங்களுக்கு முன்பு இரண்டாவது முறையாக நடத்தப்பட்ட கொலை முயற்சி துப்பாக்கி சூடு தாக்குதல் நாட்டை மீண்டும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.



கனடிய அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணை!
[Wednesday 2024-09-18 17:00]

கனடிய அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டுவரப்படும் என எதிர்க் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி அறிவித்துள்ளது. கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பியே பொலியேவ் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். எதிர்வரும் வாரம் கனடிய நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெற உள்ளன.



உலகளவில் பரவி வரும் புதிய வகை கொரோனா வைரஸ்!
[Wednesday 2024-09-18 17:00]

சீனாவின் யுகான் மாகாணத்தில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு பின் அது உலக அளவில் பரவியதில் கோடிக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இவ்வாறான ஒரு நிலையில் எக்ஸ்இசி வேரியண்ட் (XEC variant) என்ற புதிய வகை கொரோனாவின் தொற்று உலகம் முழுவதும் பரவி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.



கனடாவில் வீடு கொள்வனவு செய்வோருக்கான சலுகை!
[Wednesday 2024-09-18 17:00]

கனடாவில் அடகு கடன் தொடர்பான சட்டங்களில் சில திருத்தங்கள் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கனடாவில் மத்திய அரசாங்கம் இது தொடர்பான சட்ட திருத்தத்தை முன்னெடுக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வீடு கொள்வனவு செய்வதனை இலகுவாக்கும் வகையில் இந்த புதிய சட்ட திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது.



லெபனானில் பேஜர்கள் வெடித்தில் வெளியான புதிய தகவல்!
[Wednesday 2024-09-18 17:00]

லெபனானில் பேஜர்கள் வெடித்தில் 9 பேர் பலியானதுடன் 3000 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், இந்த சம்பவத்தில்ன் பின்னனியில் இஸ்ரேல் இருப்பது அம்பலமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. லெபனானின் தெற்கு பகுதியில் உள்ள தலைநகர் பெய்ரூட்டில் அல்-ஷஹ்ரா மருத்துவமனையில் பலரது கையடக்க பேஜர்கள் முதலில் வெடித்ததை தொடர்ந்து பல்வேறு இடங்களிலும் ஹிஸ்புல்லா அமைப்பினர் வைத்திருந்த பேஜர்கள் அடுத்தடுத்து வெடித்துள்ளன.



உச்சம் தொட்ட வறட்சி: 200 யானைகளை அழிக்க திட்டம்!
[Wednesday 2024-09-18 07:00]

தீவிர வறட்சி காரணமாக 200 யானைகளை அழிக்க ஜிம்பாப்வே திட்டமிட்டுள்ளது. நான்கு தசாப்தங்களில் மிக மோசமான வறட்சியை எதிர்கொண்டுள்ள ஜிம்பாப்வே, தனது மக்களுக்கு உணவு வழங்க உதவுவதற்காக 200 யானைகளை அழிக்க திட்டமிட்டுள்ளது. ஜிம்பாப்வேவின் இந்த முடிவு, அண்டை நாடான நமீபியா தீவிர வறட்சியின் காரணமாக 83 யானைகள் உள்பட 160 வனவிலங்கு பிராணிகளை அழிக்க இருப்பதாக அறிவித்ததை தொடர்ந்து வெளிவந்துள்ளது.



பள்ளிகள் மீது துப்பாக்கி சூடு அச்சுறுத்தல்: 11 வயது புளோரிடா சிறுவன் கைது!
[Wednesday 2024-09-18 07:00]

புளோரிடாவில் பள்ளிகள் மீது துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்த போவதாக அச்சுறுத்திய சிறுவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் புளோரிடாவில் இரண்டு உள்ளூர் பள்ளிகளில் கூட்டு துப்பாக்கி சூடு நடத்துவதாக அச்சுறுத்தியதற்காக 11 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.



லெபனானில் நிலைகுலைந்த ஹிஸ்புல்லாஹ்: பேஜர்கள் வெடித்ததில் 8 பலி!
[Wednesday 2024-09-18 07:00]

லெபனான் நாட்டின் ஹிஸ்புல்லாஹ் அமைப்பு பயன்படுத்திய பேஜர்கள் வெடித்ததில் 3 பேர் வரை உயிரிழந்துள்ளனர். லெபனான் நாட்டின் போராளி அமைப்பான ஹிஸ்புல்லாஹ் பயன்படுத்திய பேஜர்கள் வெடித்ததில் மூன்று பேர் உயிரிழந்து இருப்பதுடன், பலர் பலத்த காயமடைந்துள்ளனர். இது தொடர்பாக ஹிஸ்புல்லாஹ் வெளியிட்ட அறிக்கையில், இரண்டு போராளிகள் மற்றும் ஒரு சிறுமி உட்பட 3 பேர் உயிரிழந்து இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது.



நாட்டு மக்களுக்கு புடின் விடுத்த வேண்டுகோளால் எழுந்த பெரும் சர்ச்சை!
[Tuesday 2024-09-17 18:00]

ரஷ்யா நாட்டில் மக்கள் தொகை தொடர்ந்து குறைந்து வருவதால் வரும் காலங்களில் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அந்த நாட்டு மக்கள் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.



பாரிஸில் பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் பிரச்சாரம்!
[Tuesday 2024-09-17 18:00]

பாரிஸில் 2024 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் மற்றும் பரா ஒலிம்பிக் போட்டிகள் சிறப்பாக இடம்பெற காரணமாக இருந்த பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் பிரச்சார பணிகள் நாளை (18-09-2024) ஆரம்பிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, ”Merci” எனும் ஒற்றை வார்த்தையுடன் கூடிய பதாகைகள், சுவரொட்டிகளை நாளை முதல் பல இடங்களில் காணக்கூடியதாக இருக்கும்.



டிரம்ப்பை கொலை செய்ய 12 மணிநேரம் காத்திருந்த நபர்!
[Tuesday 2024-09-17 18:00]

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பினை கொலை செய்ய முயற்சித்தார் என குற்றம்சாட்டப்பட்டவர் டிரம்பிற்காக 12 மணித்தியாலங்கள் காத்திருந்தார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. டிரம்பினை கொலை செய்ய முயற்சித்தார் என சந்தேகிக்கப்படும் நபருக்கு எதிராக பொலிஸார் துப்பாக்கிகள் தொடர்பான இரண்டு குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர்.



அமெரிக்காவில் இந்து கோவில் மீது தாக்குதல்!
[Tuesday 2024-09-17 18:00]

அமெரிக்காவில் இந்துகோவில் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க்கில் மெல்வில்லே பகுதியில் சுவாமிநாராயண் கோவில் உள்ளது. இக்கோவில், அமெரிக்காவில் மிகப்பெரிய இந்து கோவில் மற்றும் உலகின் 2-வது மிகப்பெரிய கோவில் என சிறப்பை பெற்றுள்ளது.



வெடித்து சிதறிய டைட்டன் நீர்மூழ்கி கப்பல்: பயணிகளின் கடைசி வார்த்தைகள் இதுதான்!
[Tuesday 2024-09-17 06:00]

டைட்டன் நீர்மூழ்கி கப்பலில் இருந்தவர்களின் “கடைசி வார்த்தைகள்” குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளன. டைட்டன் நீர்மூழ்கி கப்பல் விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, அதற்கான பொது விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையின் நோக்கமாக, இந்த விபத்து குறித்த விவரங்களை ஆராய்ந்து, இதுபோன்ற விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஆகும்.



விமானத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்த விமான பணிப்பெண்!
[Tuesday 2024-09-17 06:00]

விமானத்தில் ஏறும் போது 3 குழந்தைகளுக்கு தாயான விமான பணிப்பெண் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இத்தாலியின் Reggio Calabria விமான நிலையத்தில் சனிக்கிழமை மதியம் விமானத்தில் ஏற சென்ற விமானப் பணிப்பெண் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். 3 குழந்தைகளுக்கு தாயான 57 வயது கேப்ரியல்லா கரியோ(Gabriella Cario) ITA ஏர்வேஸ் விமான சேவைக்கு பிறகு Sabaudia-வுக்கு வீடு திரும்பி கொண்டிருந்தார்.



பொதுமக்களை வேகமாக வெளியேற்றும் ரஷ்யா!
[Tuesday 2024-09-17 06:00]

உக்ரைனிய படைகளுடன் நடைபெற்று வரும் மோதலுக்கு மத்தியில் குர்ஸ்க் பிராந்தியத்தில் அமைந்துள்ள கிராமங்களை ரஷ்யா வெளியேற்றி வருகிறது. உக்ரைனிய எல்லைக்கு அருகில் அமைந்துள்ள குர்ஸ்க் பிராந்தியத்தின் சில கிராமங்களை ரஷ்யா வெளியேற்ற தொடங்கி இருப்பதாக உள்ளூர் மேயர் தகவல் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கையானது, குர்ஸ்க் பகுதியில் உக்ரைனிய படைகளின் திடீர் தாக்குதல் தொடங்கிய 6 வாரங்களுக்கு பிறகு வந்துள்ளது.



ஒரே நாளில் 1000 தடவை அழைப்பு: காதலனை தொல்லை செய்த பெண்ணுக்கு சிறை!
[Monday 2024-09-16 18:00]

பிரித்தானியாவில், முன்னாள் காதலனுக்கு ஒரே நாளில் 1000 தடவை அழைப்பெடுத்து தொல்லை செய்து வந்த பெண்ணுக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. சோபி கால்வில் [Sophie என்ற 30 வயதுடைய பெண்ணை டேவிட் பாக்லீரோ [David என்ற நபர் காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், அண்மையில் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட மனக் கசப்பு காரணமாகக் பெண் மன வருத்தத்தில் இருந்துள்ளார்.



பைடன், கமலா ஹாரிஸை படுகொலை செய்ய யாரும் முயற்சி செய்யவில்லை: எலான் மாஸ்க்!
[Monday 2024-09-16 18:00]

ஜோபைடனையோ அல்லது கமலா ஹாரிஸையோ கொலை செய்ய யாரும் முயற்சி கூட செய்யவில்லை என அலான் மாஸ் தெரிவித்துள்ளமை சரச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் டொனால்டு டிரம்ப் புளோரிடாவில் உள்ள கோல்ப் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருக்கும்போது, மைதானத்தை ஒட்டிய பகுதியில் துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டது.



டிரம்பினை கொலை செய்ய முயற்சித்தவர் உக்ரைன் ஆதரவாளர்?
[Monday 2024-09-16 18:00]

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பினை கொலை செய்ய முயற்சித்தவர் உக்ரைன் ஆதரவு செயற்பட்டாளர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ரயான் வெஸ்லே ரூத் என்ற 58வயது நபரே, டிரம்பினை கொல்வதற்கு திட்டமிட்டார் என அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.


Logan-Kumaresh-Homelife-02-02-2021
Vaheesan-Remax-2016
NKS-Ketha-04-11-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Mahesan-Remax-169515-Seithy
Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா