Untitled Document
September 19, 2024 [GMT]
திடீரென உலகம் முழுவதும் பிரபலமாகும் ‘quiet quitting’!
[Saturday 2022-08-20 16:00]

உலகம் முழுவதும் ‘quiet quitting’ என்னும் விடயம் பிரபலமாகி வருகிறது. தங்களுக்குத் தெரியாமலே தாங்கள் quiet quittingஐப் பின்பற்றி வருவது இப்போதுதான் தங்களுக்குப் புரிந்துள்ளதாக பலர் தெரிவித்துள்ளார்கள். உலக நாடுகள் பலவற்றில் ‘quiet quitting’ என்னும் விடயம் தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது.


  

இந்த Quiet Quitting என்றால் என்ன?

பிடிக்காத வேலையை விட்டு அமைதியாக வெளியேறிவிடுவதா?

இந்த கொரோனா பொதுமுடக்கக் காலகட்டம், வேலை குறித்த பலரது கண்ணோட்டத்தை மாற்றிவிட்டது. நான் எதற்காக வேலை செய்கிறேன், வேலை என்பது என் கொள்கைகளை விட வாழ்வில் முக்கியத்துவம் வாய்ந்ததா என தங்களைத் தாங்களே கேள்வி கேட்கத் துவங்கிவிட்டார்கள் மக்கள்.

பொதுமுடக்கக் காலகட்டத்தின் மீது வீட்டிலிருந்தவண்ணம் பணியாற்றிவந்த Paige West என்பவர், காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை கம்பியூட்டரையே பார்த்துக்கொண்டிருந்த நிலையில், மெல்ல, தான் quiet quittingஐ தழுவிக்கொண்டதாக தெரிவிக்கிறார்.

இந்த quiet quitting என்பது பிடிக்காத வேலையை விட்டு அமைதியாக வெளியேறுவது அல்ல, அது வேலை நேரத்துக்குக் கட்டுப்பாடு விதிப்பது போன்ற ஒரு விடயமாகும்.

உதாரணமாக சிலர் வேலையின் நடுவில் பதறிப் பதறி மதிய உணவை விழுங்குவார்கள். வேலை முடிந்து வீட்டுக்குச் சென்றாலும் குடும்பத்துடன் முழுமையாக நேரம் செலவிடாமல், நடு நடுவே கம்பியூட்டரிலோ அல்லது மொபைலிலோ மின்னஞ்சல்களை பார்த்துக்கொண்டிருப்பார்கள்.

ஆக, இந்த quiet quitting என்னவென்றால், வேலை முடிந்தால் வீட்டுக்குச் சென்று மீதமுள்ள நேரத்தை குடும்பத்துடன் நிம்மதியாக செலவிடவேண்டும், மதிய உணவைப் பதற்றமின்றி, முழு மதிய இடைவேளையையும் பயன்படுத்திக்கொண்டு உண்ணவேண்டும். நமக்கு அனுமதிக்கப்பட்டுள்ள விடுப்பை எடுத்துக்கொள்வது, குடும்பத்தில் நடக்கும் நல்லது கெட்டதுகளில் பங்குகொள்வது, வேலை செய்யும் நேரத்தில் வேலை, வேலை முடிந்தபிறகு சொந்த அல்லது குடும்ப விடயங்களில் கவனம் செலுத்துவதுதான் quiet quitting.

இந்த விடயம் இப்போது பல நாடுகளில் பரவிவரும் நிலையில், சமூக ஊடகங்களில் quiet quitting குறித்த விடயங்கள் வைரலாகிவருகின்றன.

இன்னொருபக்கம், quiet quitting என்றால் என்னவென்றே தெரியாமல், தாங்கள் முன்பே அதை துவங்கிவிட்டது தெரியவந்துள்ளதால் பலர் வியப்படைந்துள்ளார்கள்.

ஆனால், இந்த விடயம் அலுவலகங்களுக்கு நல்லதல்ல, அதை ஒழித்துக்கட்டவேண்டுமென பணி வழங்குவோர் சிலர் கருதுகிறார்கள். நிபுணர்களோ, அப்படியல்ல, பணியாளர்களின் பணி எவ்வளவு முக்கியமானது, அவர்களிடமிருந்து அலுவலகம் எதை எதிர்பார்க்கிறது என்பதை சரியான விதத்தில் பணியாளர்களுக்கு தெரியப்படுத்தவேண்டும் என்கிறார்கள்.

பணியாளர்களுக்கு எந்த வேலைக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும் என்பதை தெரியப்படுத்துவதன் மூலம், பணியாளர்கள் மனக்களைப்பு அடையவிடாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மீது தொடர்ச்சியாக நிறுவனங்களும் மேலாளர்களும் கவனம் செலுத்தவேண்டும் என்கிரார்கள் அவர்கள்.

மகிழ்ச்சியான பணியாளர்களால்தான் நல்ல விளைவைக் கொடுக்கமுடியும் என்கிறார்கள் அவர்கள்.

  
   Bookmark and Share Seithy.com


கடவுளுக்கு தண்டனை கொடுக்கும் வினோத மாநிலம்!
[Tuesday 2024-09-10 18:00]

மக்களின் வேண்டுதல்களை நிறைவேற்றாத கடவுள்களுக்கு இந்திய மாநிலம் ஒன்றில் தண்டனை வழங்கப்படுகிறது. பொதுவாகவே மனிதர்கள், தான் நினைத்தது ஏதாவது நடக்கவில்லை என்றாலோ, ஏதாவது ஒரு தேவை இருக்கிறது என்றாலோ, கஷ்ட காலம் ஏற்படும் போதெல்லாம் கடவுளிடம் தான் குறைகளை சொல்வார்கள். அதில் சில விடயங்கள் நடப்பதுண்டு, சில விடயங்கள் நடக்காமல் போகலாம். ஆனால், சத்தீஸ்கர் மாநிலத்தில் வேண்டுதல்களை நிறைவேற்றாவிட்டால் கடவுளுக்கு தண்டனை வழங்கும் வினோதமான பழக்கங்கள் பின்பற்றப்பட்டு வருகிறது.


சூரியனை விட 500 ட்ரில்லியன் மடங்கு பிரகாசமான் பொருள் கண்டுபிடிப்பு!
[Wednesday 2024-08-28 18:00]

பிரபஞ்சத்தில் சூரியனை விட 500 ட்ரில்லியன் மடங்கு பிரகாசமான ஒளிரும் பொருளை வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். சூரியனை விட 500 ட்ரில்லியன் மடங்கு பிரகாசமுடைய இந்த குவாசருக்கு J0529-4351 என்று பெயரிடப்பட்டுள்ளது. இதுவரை எங்கும் கண்டிராத அளவுக்கு இது மிகவும் பிரகாசமான உள்ளதாகவும் வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர். ஐரோப்பிய தெற்கு ஆய்வகத்தின் VLT எனப்படும் மிகப்பெரிய தொலை நோக்கி மூலம் இதை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.


பிறப்புறுப்பு உட்பட உடல் முழுவதும் டாட்டூ: கின்னஸ் சாதனை படைத்த பெண்!
[Saturday 2024-08-24 06:00]

அமெரிக்க பெண் ஒருவர் அதிக எண்ணிக்கையில் பச்சை (Tattoo) குத்தி கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். அவரது உடலில் 99.98 சதவீதம் அவரது பச்சை குத்தல்களால் நிரம்பியுள்ளது. கைகள் மற்றும் கால்கள், உச்சந்தலை, நாக்கு, ஈறுகள், கண் இமைகளின் வெள்ளை வெளிப்புற அடுக்கு மற்றும் பிறப்புறுப்புகள் உட்பட உடலின் எந்த பாகத்தையும் அவர் விட்டுவைக்கவில்லை.


பிரித்தானியாவில் 17 ஆண்களை தாக்கிய பேய் பிடித்த மணப்பெண் பொம்மை!
[Friday 2024-08-23 06:00]

உலகின் பயங்கரமான பொம்மை இங்கிலாந்தின் தெற்கு யார்க்ஷயரில் உள்ள ரோதர்ஹாமில் உள்ளது. பேய் பிடித்த இந்த பொம்மை இதுவரை 17 பேரை தாக்கியுள்ளதாக நியூயார்க் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. கணவரால் ஏமாற்றப்பட்ட எலிசபெத் என்ற மணமகளின் ஆவி இந்த பொம்மை இருப்பதாக நம்பப்படுகிறது. இந்த காரணத்திற்காக, இது மணப்பெண் பொம்மை (Bridal Doll) என்றும் அழைக்கப்படுகிறது.


கத்தரிக்கோல் காணாமல் போனதால் 36 விமானங்கள் இரத்து!
[Tuesday 2024-08-20 18:00]

ஜப்பான் விமான நிலையத்தில் கத்தரிக்கோல் ஒன்று ்காணாமல் போனதால் 36 விமானங்கள் பயணத்தை இரத்து செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கடந்த சனிக்கிழமை (17) ஜப்பானில் கொக்கைடோவின் நியூ சிட்டோஸ் விமான நிலையத்தின் உள் நுழையும் வாயிலின் அருகே இருந்த கடையொன்றில் கத்தரிக்கோல் காணாமல் போனதால் 36 விமானங்கள் இரத்து செய்யப்பட்டதோடு, 201 விமான சேவைகள் தாமதமடைந்துள்ளன.


கிணறு ஏன் வட்ட வடிவில் இருக்கிறது? பின்னணியில் இருக்கும் ஆச்சரிய காரணம்!
[Sunday 2024-08-18 16:00]

கிணறுகள் வட்ட வடிவில் ஏன் இருக்கிறது என்பதையும், அதற்கு பின்னணியில் இருக்கும் காரணத்தையும் இந்த பதிவில் பார்க்கலாம். பண்டைய காலங்களில் இருந்து கிணறுகளில் தண்ணீர் சேமிக்கப்பட்டு வருகிறது. கிராமங்களில் இன்றும் கிணறுகள் இருந்து வருகிறது. நகரங்களிலும் சில இடங்களில் நாம் கிணறுகளை பார்க்க முடியும்.


"வெறித்தனமாக காதலிக்கிறேன்" - மருமகளை திருமணம் செய்து கொண்ட மாமியார்!
[Wednesday 2024-08-14 18:00]

கணவரை விட்டு பிரிந்து தனது மருமகளை மாமியார் ஒருவர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் பேசுபொருளாகியுள்ளது. இந்திய மாநிலமான பீகார், கோபால் கஞ்ச் மாவட்டத்தில் உள்ள பெல்வா கிராமத்தைச் சேர்ந்தவர் சுமன். இவருடைய சொந்த மருமகள் ஷோபா. இவருக்கு கடந்த 3 ஆண்டுகளாக மருமகள் மீது காதல் ஏற்பட்டுள்ளது.


18 ஆண்டுகளின் பின்னர் வானில் நடக்கவிருக்கும் சனிசந்திர கிரகணம் எப்போது தெரியுமா?
[Monday 2024-08-12 19:00]

சந்திர கிரகணம் என்பது பூமி சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் வரும்போது, பூமியின் காரணமாக சூரியனின் ஒளி சந்திரனை அடைய முடியாது. இதன் காரணமாக பூமியின் நிழல் நிலவின் மீது விழுகிறது. இந்த வானியல் நிகழ்வு சந்திர கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. இந்து நாட்காட்டியின்படி, ஒவ்வொரு மாதமும் சுக்கில பக்ஷத்தின் கடைசி தேதியில் முழு நிலவு ஏற்படுகிறது. ஆனால் சனி சந்திர கிரகணம் என்பது முற்றிலும் வேறுபட்டது. இது எவ்வாறு நிகழும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.


ஏலியனுக்கு கோயில் கட்டி கும்பிடும் பக்தர்!
[Friday 2024-08-02 16:00]

குஷ்பு, ரஜினி உள்ளிட்டவர்களுக்கு ரசிகர்கள் கோயில் கட்டிய நிலையில், பக்தர் ஒருவர் ஏலியனுக்கு கோயில் கட்டி கும்பிட்டு வருகிறார். தமிழக மாவட்டமான சேலம், மல்லமூப்பம்பட்டியை அடுத்த ராமகவுண்டனூரைச் சேர்ந்தவர் லோகநாதன். இவர், வேற்றுகிரகவாசிகள் என்று கூறப்படும் ஏலியனுக்கு கோயில் அமைத்து வழிபாடு செய்து வருகிறார்.


திருமணம் ஆகாமல் 100 குழந்தைகளுக்கு தந்தையான பிரபலம்!
[Wednesday 2024-07-31 18:00]

நூற்றுக்கும் மேற்பட்ட தம்பதிகள் குழந்தை பெற எனது விந்தணுக்களை தானம் செய்து உதவியுள்ளேன் என திருமணமாகாத டெலிகிராம் நிறுவனத்தின் இணை நிறுவனர் பாவெல் துரோவ் (Pavel Durov) தெரிவித்துள்ளமை பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல சமூக வலைதளமான டெலிகிராம் நிறுவனத்தின் இணை நிறுவனர் பாவெல் துரோவ் (Pavel Durov) அதன் தலைமை அதிகாரியாகவும் உள்ளார்.


கனடா-கிரீன்லாந்து இடையே வெளியுலகுக்கு தெரியாத சிறிய கண்டம்!
[Sunday 2024-07-21 17:00]

கனடாவுக்கும் கிரீன்லாந்துக்கும் இடையே வெளியுலகுக்கு தெரியாத சிறிய கண்டம் இருப்பதாக புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. 'டேவிஸ் ஜலசந்தி'யின் (Davis Strait) கீழ் இந்த 'மைக்ரோ கண்டத்தை' ஆராய்ச்சியாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர். இது முதன்முறையாக உப்சாலா பல்கலைக்கழகம் (Sweden) மற்றும் டெர்பி பல்கலைக்கழகம் (UK) ஆகியவற்றின் புவியியலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.


44.6 மில்லியன் டொலருக்கு ஏலம் போன டைனோசர் எலும்புக்கூடு!
[Saturday 2024-07-20 19:00]

டைனோசர் எலும்பு கூட்டை 44.6 மில்லியன் டொலருக்கு வாங்கிய பில்லியனரின் பெயர் தற்போது தெரியவந்துள்ளது. 44.6 மில்லியன் டொலருக்கு வாங்கப்பட்ட இந்த stegosaurus டைனோசரின் எலும்புக்கூடு சுமார் 150 மில்லியன் ஆண்டுகள் பழமையானது என்று கருதப்படுகிறது. Apex என்ற பொருத்தமான பெயருக்கு ஏற்றவாறு கிட்டத்தட்ட 11 அடி (3.3 மீட்டர்) உயரம், 27 அடி (8.2 மீட்டர்) நீளமும் கொண்ட கிட்டத்தட்ட முழுமையான டைனோசர் எலும்பு கூடு இதுவாகும்.


கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த பர்கர்!
[Thursday 2024-07-11 17:00]

பிரபல சமையல் நிபுணரும், டி டால்டன்ஸ் என்ற உணவகத்தின் உரிமையாளருமான ராபர்ட் ஜான் டி வென் என்பவர் வித்தியாசமான பர்கரை உருவாக்கி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். அவர் உருவாக்கிய பர்கரின் விலை 5 ஆயிரம் யுரோக்கள் (இந்திய மதிப்பில் ரூ.4.5 லட்சம்) என தெரிவிக்கப்பட்டுள்ளது.


உலகில் முதன் முறையாக ரோபோ ஒன்று தற்கொலை!
[Wednesday 2024-07-03 18:00]

தென் கொரியாவில் அரச சேவையில் ஈடுபட்டிருந்த ரோபோ ஒன்று தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தென் கொரியாவில் உள்ள குமி நகர சபையில் சுமார் ஒரு வருடமாக பணியாற்றி வந்த ரோபோவே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


உயிருள்ள மனித தோலுடன் புன்னகைக்கும் ரோபோ: ஜப்பானிய விஞ்ஞானிகள் அசத்தல்!
[Friday 2024-06-28 06:00]

உயிருள்ள மனித தோல் செல்களிலிருந்து புன்னகைக்கும் ரோபோ முகத்தை ஜப்பானிய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். ஜப்பானிய விஞ்ஞானிகள் மனித தோல் செல்களைப் பயன்படுத்தி, ஓர் ஹ்யூமனாய்ட் ரோபோவுக்கு இயற்கையான புன்னகையை வழங்கும் முகத்தைக் உருவாக்கியுள்ளனர். இது மனிதர்களுடனான ரோபோக்களின் தொடர்பு திறனை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
Logan-Kumaresh-Homelife-02-02-2021
NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
Ambikajewellers-01-08-2021-seithy
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
 gloriousprinters.com 2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா