Untitled Document
September 19, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
நடிகர் சங்கத்தின் கணக்கு விவரங்களை சரத் குமார் இன்னும் தரவில்லை: நடிகர் சங்கம் குற்றம் சாட்டு
[Thursday 2015-12-31 09:00]

நடிகர் சங்கத்தின் கணக்கு விவரங்களை சரத் குமார் இன்னும் தரவில்லை என்று நடிகர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. இதுதொடர்பாக நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர் சரத் குமார் ஊடகங்களுக்குத் தந்த பேட்டியைப் படித்தோம். அதுபற்றி மக்களுக்கும் உறுப்பினர்களுக்கும் சில விளக்கங்களைத் தரவேண்டியுள்ளது. நடிகர் சங்க செயல்பாட்டில் இரண்டுவிதமான கணக்குகளைப் பராமரித்துத் தரவேண்டியது கட்டாயமாகிறது.

ஒன்று, சங்க சட்டதிட்ட விதிகளுக்கு உட்பட்ட நடிகர் சங்க கணக்குகள். மற்றொன்று அறக்கட்டளை சட்ட திட்டத்துக்கு உட்பட்ட கணக்குகள். தேர்தல் முடிந்த மறுநாள், சரத் குமார் ஊடகங்களின் மூலம், நடிகர் சங்க கணக்குகளை 7 நாளிலும் அறக்கட்டளை கணக்குகளை 15 நாளிலும் ஒப்படைப்பேன் என்றார். ஒரு மாதம் வரை காத்திருந்தோம். ஆனால் கணக்குகள் வரவில்லை. பலமுறை நினைவூட்டல் கடிதங்களுக்குப் பின், நவம்பர் 25-ம் தேதி நடிகர் சங்கத்தின் ஒருவருட கணக்கு (2014-2015) மட்டும் வந்தது. ஆனால், ஏப்ரல் - அக்டோபர் வரையிலான 6 மாதக் கணக்குகள் இன்னும் வரவில்லை. அவர்கள் கொடுத்த ஒரு வருடக் கணக்கு தணிக்கை செய்யப்பட்டு வருகிறது. அறக்கட்டளைக்கு கடந்த இரண்டரை வருடங்களுக்கான கணக்கு தரவேண்டி உள்ளது. ஆனால் இன்றுவரை ஒப்படைக்கவில்லை. அதற்குப் பல நினைவூட்டல் கடிதங்களை அனுப்பி உள்ளோம். கடந்த டிசம்பர் 26 அன்று நடைபெற்ற நடிகர் சங்க செயற் குழு மற்றும் அறக்கட்டளை கூட்டத்துக்குப் பின் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், கணக்குகள் உடனே வரவில்லை என்றால், சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் என்று கூறியிருந்தோம். இதற்கு, கணக்கை ஒப்படைத்துவிட்டதற்கான ரசீது வைத்திருக்கிறேன் என்று முன்னுக்குப் பின் பொய்யான செய்தியை சரத் குமார் பரப்பி வருகிறார். அத்துடன் தற்போது பொதுக்குழுவைக் கூட்டினால் அறக்கட்டளைக் கணக்கை ஒப்படைப்பேன், இப்போது உள்ள நிர்வாகிகள் பொதுக்குழுவைக் கூட்டாமல் தள்ளிப் போடுவதாக எங்கள் மேல் வீண் பழி போடுகிறார்.

முந்தைய வருட கணக்குகளை தணிக்கை செய்து பொதுக்குழுவில் வைத்து ஒப்புதல் பெற வேண்டும் என்பது பொதுக்குழுவின் நோக்கம். அதைப் பல வருடங்களாக தலைவர், செயலாளர், பொருளாளர் போன்ற பொறுப்புகளில் இருந்த சரத்குமார், ராதாரவி, சந்திரசேகருக்குத் தெரியாதா? அவர்கள் கணக்கை ஒப்படைத்த 21 நாள்களுக்குள் பொதுக்குழுவைக் கூட்ட நடிகர் சங்கம் தயாராக உள்ளது. இவர்களின் பொறுப்பற்ற செயலால், வருமான வரித்துறை, சேவை வரித்துறை போன்றவற்றில் நடிகர் சங்கமும் அறக்கட்டளையும் சட்டப்படி பல பிரச்னைகளைச் சந்தித்து வருகிறது. உறுப்பினர்கள் மற்றும் சங்க நலனுக்காக கூடிய விரைவில் இவர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை உறுதிபட தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

  
  
   Bookmark and Share Seithy.com


Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
Vaheesan-Remax-2016
Ambikajewellers-01-08-2021-seithy
NKS-Ketha-04-11-2021
Mahesan-Remax-169515-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா