Untitled Document
April 2, 2025 [GMT]
  • Welcome
  • Welcome
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் யேர்மனி டோர்ட்முண்ட் – 2023! Top News
[Friday 2023-12-01 05:00]

மாவீரர்கள் கந்தகச் சூளையில் தம்மை புடம்போட்டுத் தேசவிடுதலைக்காய் ஆகுதியாகிய நெருப்பின் அலைகள். சாவின் வாசலை அதிரவைத்த எறிகணைகள். தேசத்தில் காதல் கொண்டு உயிரீகம் செய்த தெய்வப்பிறவிகள். தலைவனின் விழியில் பாயும் கதிர்வீச்சின் உயிராயுதங்கள். மனிதப்பிறவியின் உன்னத இலக்கினை அடைந்த இறையாளர்கள். இத்தகைய ஈகத்தெய்வங்களின் திருநாள் 27.11.2023 அன்று யேர்மனியில் உள்ள டோர்ட்முண்ட் (Dortmund) மேற்கு விளையாட்டு அரங்கில் உணர்வு பூர்வமாக நடைபெற்றது.

இந்தநிகழ்வின் போது முதலாவதாக அனைவரதும் உணர்வு பொங்கும் மன ஒருங்கிணைப்பின் அலைவீச்சின் மத்தியில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டது. பொதுச்சுடரினை Nordrhein-Westfalen குர்திஸ்தான் அமைப்புகளின் சார்பில் கலந்து கொண்ட திருமதி. நாட்சோ (Nazo) அவர்கள் ஏற்றி வைத்தார்கள். அதனைத் தொடர்ந்து தமிழீழ தேசியக்கொடியினை யேர்மன் தமிழ் பெண்கள்அமைப்பின் துணைப்பொறுப்பாளர் செல்வி. தமிழினி பத்மநாதன் அவர்கள் ஏற்றிவைத்தார். அந்தவேளையில் கொடியேற்றப்பாடல் இசைக்கப்பட்டது. பாடலின் உணர்வுகள் தமிழீழத்தேசத்தின் ஒவ்வொரு அணுவிலும் மனதை பதியம் வைத்தது. தொடர்ந்து தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 2008ஆம் ஆண்டின் மாவீரர் உரையிலிருந்து சிறு பகுதி ஒளிபரப்பப்பட்டது.

எக்காலத்துக்கும் பொருந்தும் வகையில் தூரநோக்குப் பார்வையின் வெளிப்பாடக அமைந்தது. தலைவர் அவர்களது 2008ஆம் ஆண்டு மாவீரர் நாள் உரையைத் தொடர்ந்து தமிழீழவிடுதலைப் புலிகளின் அனைத்துலக தொடர்பக கொள்கை வகுப்பு உரை ஒலிபரப்பப் பட்டது. இன்று நாம் எதிர் கொள்ளும் தடைகளையும், அதற்காக நாம் ஆற்றவேண்டிய பணிகளின் அவசியம் பற்றியும் இவ்வறிக்கையில் தெளிவு படுத்தப்பட்டது.

இதனை அடுத்து எமது தேசத்தின் உயிரீகத்தெய்வங்களின் துயிலுமில்லத்தில் அகவணக்கம் செய்யப்பட்டு துயிலுமில்லப் பாடல் ஒலிக்கவிடப்பட்டது. துயிலுமில்லத்தில் முதன்மைச் சுடரினை 24.06.1997ஆம் ஆண்டு அன்று வவுனியா பெரியமடுவில் அமைந்திருந்த ஜெயசிக்குறு படையினரின் ஆட்லரி, மோட்டார், ஏவுதளங்கள் மற்றும் காப்பரண்களின் மீதான தாக்குதலின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட திரவியம் அமுதினி எனும் இயற்பெயர் கொண்ட லெப்.நித்தியா அவர்களின் தாயார் திருமதி. திரவியம் செவ்வந்திமலர் அவர்கள் ஏற்றி வைத்தார்.

அந்தவேளையில் மாவீரர் குடும்பங்கள் சுடர் ,மலர் வணக்கத்தை இதயம் வெதும்பும் உணர்வோடு துதித்து வணங்கினார்கள். அதனைத் தொடர்ந்து அனைத்து மக்களும் மாவீரர் உணர்வுடன் தமது சுடர்,மலர் வணக்கத்தை செலுத்தி உணர்வேற்றிக்கொண்டனர். துயிலும் இல்லத்தில் விளக்கேற்றும் நேரத்தில், எமது மாவீரமணிகளின் எழுச்சிப்பாடல்கள் மேடையில் இசைக்கப்பட்டு மென்மேலும் உணர்வினை ஊட்டி ஆழ்மனதில் மாவீரர்களின் தியாகங்களை உரமூட்டியது.

யேர்மனிக் கிளையின் மாவீரர் பணிமனை ஒவ்வொரு வருடமும் மாவீரர்களினதும் ,எமது தேசத்தின் விடுதலை பற்றிய அறத்தைத் தாங்கிய இதழாக “கார்திகை தீபம் ” எனும் இதழை வெளியீடு செய்து வருகின்றனர். அவ்விதழை இவ்வருடம் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் தாயகநலன் பொறுப்பாளர் திரு இரா.இராஜன் அவர்கள் வெளியீடு செய்ய, தமிழ்க் கல்விக்கழகத்தின் தேர்வுப் பொறுப்பாளர் திரு.சேரன் யோகேந்திரன் அவர்கள் பெற்றுக்கொண்டார். மேலும் அனைத்துலக செயலகத்தின் வெளியீடான “மாவீரம் பேசும் காற்று” எனும் பாடல் தொகுப்பின் தகவல் சேமிப்பானை (USB) தமிழர் ஒருங்கிணைப்புக்குழு யேர்மனிக் கிளையின் துணைப்பொறுப்பாளர் திரு. சுப்பிரமணியம் ஜெய்சங்கர் வெளியீடு செய்ய திரு.சக்தி அவர்கள் பெற்றுக்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து மாவீரர் வெற்றிக்கிண்ண போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற தமிழாலயங்களுக்கு மதிப்பளிக்கப்பட்டது. இம்மதிப்பளிப்பின் போது வெற்றிபெற்ற தமிழாலய மாணவர்கள் தமது அறுவடையின் வெற்றிக்களிப்பின் உச்சத்தை தொட்டனர்.அத்தோடு தமிழத்திறன் போட்டிகளில் யேர்மன் தழுவிய ரீதியில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற தமிழாலய மாணவ, மாணவிகளுக்கு மதிப்பளிக்கப்பட்டதோடு, அவர்களது பேச்சும், கவிதையும் மாவீரர் அரங்கினை மேலும் எழுச்சி ஊட்டியது.

உணர்வின் வேர்களை ஆளும் பேர்லின் (Berlin) கலைஞர்களின் உணர்வூட்டிய நாடகமும், எமது தேசியத்தின் வரலாற்றுப்பதிவாக யேர்மன் இளையோர் அமைப்பால் ஒளிபரப்பப்பட்ட வரலாற்றுப் பதிவும் சிறப்பாக அமைந்தது. தொடர்ந்து இடதுசாரிக் கட்சியின் உறுப்பினரும் குர்திஸ்தான் அமைப்பின் Baden-Württenberg இணைப்பாளருமாகிய திரு. டென்னிஸ் ஸ்டோஸ் (Dennis storz) அவர்களும், Nordrhein-Westfalen குர்திஸ்தான் அமைப்புகளின் சார்பில் கலந்து கொண்ட திருமதி. நாட்சோ (Nazo)அவர்களும் விடுதலை பெறும்வரை சோர்வின்றி போராடவேண்டியத்தின் அவசியத்தினை வலியுறுத்தி யேர்மன் மொழியில் உரையாற்றினார்கள்.

அத்தோடு யேர்மன் பெண்கள் அமைப்பு தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பெண்கள் தொடர்ந்து ஆற்ற வேண்டிய பணிகள் சார்ந்தும், தமிழீழப் பெண்கள் மீது சிங்கள இனவெறி அரசினால் தொடர்ந்தும் நடத்தப் பட்டுவரும் அநீதிகள் பற்றி எடுத்துரைக்கப்பட்டது. இந்த ஆண்டின் மாவீரர் நாளின் சிறப்பு உரையினை யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் திரு. யோன்பிள்ளை சிறிரவீந்திரநாதன் அவர்கள் வழங்கியிருந்தார். இன்றைய அரசியல் நிலைப்பாட்டின் உண்மைத் தன்மையினை எடுத்தியம்பும் பேச்சாக அவரது சிறப்புரை அமைந்திருந்தது.

மாவீரர் நாள் எழுச்சி நிகழ்வுகளின் நிறைவாக யேர்மன் தமிழர் கலை பண்பாட்டுக் கழக ஆசிரியர்களின் நெறியாள்கையில் நூறுக்கும் மேற்பட்ட மாணவர்களது “உணர்வின் அலைகள்” எனும் நாட்டியத் தொகுப்பு எழுச்சி ஊட்டும் வகையில் இடம்பெற்றிருந்தது. நிகழ்வுகளின் நிறைவாக இளையோர் அமைப்பினர் ஒன்றிணைந்து மக்களோடு உறுதிமொழியினை எடுத்துக்கொண்ட பின்னர் தமிழீழத் தேசியக்கொடி இறக்கிவைக்கப்பட்டு “நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்” என்ற எழுச்சிப்பாடலோடு 2023ஆம் ஆண்டின் மாவீரர் வணக்கநிகழ்வுகள் எழுச்சியோடு நிறைவேறியது .

  
  
   Bookmark and Share Seithy.com



வாகைமயில் 2025 - யேர்மனி! Top News
[Friday 2025-03-21 18:00]

யேர்மனியில் ஆண்டுதோறும் வாகைமயில் என்னும் நடனப்போட்டியைத் தமிழ்ப் பெண்கள் அமைப்பு நடத்தி வருவது யாவரும் அறிந்ததே. இம்முறை கற்றிங்கன் நகரில் 15.03.25 சனி, 16.03.25 ஞாயிறு ஆகிய இரண்டு நாள்களும் தெரிவுப்போட்டிகளின்றி நிறைவுப்போட்டியாகப் பன்னிரெண்டு ஆண்டுகளை நிறைவு செய்தபடி வாகைமயில் வெகு சிறப்பாகத் தோகை விரித்தாடியது. யேர்மனியில் உள்ள நடன ஆசிரியர்களால் பயிற்றப்பட்ட அவர்களின் மாணவ மாணவிகள் ஒருவரை ஒருவர் மிஞ்சும் வகையில் களம் கண்டனர். இவர்கள் அற்புதமான பதங்களுடன் பல வண்ணங்கள் உடுத்தித் தேர்போல (இரதங்கள்) அழகாக அசைந்து, மிதமான அணிகளோடு அவையில் இதமான பரதத்தால் நவரசம் தந்தது மண்டபம் நிறைந்த மக்களின் வரவேற்பைப் பெற்றிருந்தது. டென்மாக், சுவிற்சலாந்து ஆகிய நாடுகளிலிருந்து வருகை தந்திருந்த திறமையும் பட்டறிவும் வாய்ந்த நடுவர்களால் போட்டிகள் நடுவம் செய்யப்பட்டு, மதிப்பளிப்புகளும் வாகைமயில் விருதுகளும் வழங்கப்பட்டன.



கனடாவில் வீட்டிலிருந்த யுவதிமீது துப்பாக்கி சூடு: சகோதரன் காயம்! Top News
[Monday 2025-03-10 06:00]

யா/கோண்டாவில் மேற்கு கல்வீட்டு துரையப்பாவின் பேர்த்தி யான செல்வி ரகுதாஸ் நிலக்சி 07-03-2025 வெள்ளிக்கிழமை கனடாவில் அகால மரணம் அடைந்து விட்டார். கனடாவின், மார்க்கம் நகரத்தில் வீடொன்றில் இடம்பெற்ற இரட்டை துப்பாக்கிச்சூட்டில் ஒரு பெண் உயிரிழந்ததுடன், ஒரு ஆண் தீவிரமான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



விஜய் தணிகாசலம் மீண்டும் ஒன்றாரியோ மாகாண பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்! Top News
[Friday 2025-03-07 06:00]

மார்ச் 4, 2025 அன்று, அமெரிக்கா, அதிபர் டொனால்ட் டிரம்பின் தலைமையில், கனடியா இறக்குமதிகளுக்கு 25% வரி விதித்தது. இது எல்லை பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் கடத்தல் குறித்த கவலையை காரணமாகக் கூறினாலும், ஒன்றாரியோ பொருளாதாரத்தில் 500,000 வேலைகளை ஆபத்துக்கு உள்ளாக்கியுள்ளது. இதற்கு பதிலளிக்க கனடா, அமெரிக்க பொருட்களுக்கு பதிலடி கட்டணங்களை அறிவித்து, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக பதற்றத்தை அதிகரித்துள்ளது.



தமிழர் கலைகளின் வளம்தேடும் வளரிளம் தமிழர்களின் கலைத்திறனாற்றுகை - ஸ்ருற்காட்! Top News
[Thursday 2025-03-06 06:00]

கலைகளின் ஊடாகத் தன்னையும்தனது சூழலையும்பதிவுசெய்வதிலும் வினவுதலுக்குட்படுத்துவதிலும் உலகம் பின்னிற்பதில்லை. அவை தலைமுறைகள் வழியேகடத்தப்பட்டுவருவதோடு, புதியநுண்ணறிவுசார் புலமைகளை உள்ளீர்ந்தவாறு செழுமைபெற்றுத் திகழ்கின்றன. தமிழர் கலைகள் பல ஆயிரம் ஆண்டுகளாகத் தொடர்ச்சியாகப் பயணித்துவருகின்றன. தமிழர்கள் புலம்பெயர்ந்து வேற்றுமொழி, கலைமற்றும் பண்பாட்டுச் சூழலுள் சிக்குண்டபோதும் தம்மைத் தகவமைத்துக் கொள்வதற்கான அத்தனை முயற்சிகளையும் செய்துவருவதற்கு மற்றுமொரு சான்றாக யேர்மன் தமிழ்க் கல்விக் கழகத்தால் நடாத்தப்பட்டுவரும் கலைத்திறன் போட்டிதிகழ்கின்றது. தமிழரதுகலைகளைத் தமிழினத்தின் இளையதலைமுறை கற்றும் கண்டுணரவும் அதனூடாகப் படைப்பாக்கத் திறனைப் பெறவும், தமிழர் கலைகள் அழிந்துவிடாதுகாக்கவும், கலை அரங்காற்றுகை செயலாக்கம் பெறுதல் வேண்டும்.



35ஆவது அகைவை நிறைவில் தமிழாலயங்கள்! Top News
[Thursday 2025-03-06 06:00]


நடிகர் கருணாஸ் தனது பிறந்த நாளையொட்டி முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்துப் பெற்றார்! Top News
[Thursday 2025-02-20 19:00]

முக்குலத்தோர் புலிப்புடைக் கட்சியின் தலைவரும், தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்தின் துணைத்தலைவரும், திரைப்பட நடிகருமான திரு. சேது. கருணாஸ் அவர்களின் பிறந்தநாளை (21.02.2025) யொட்டி 20.02.2025 இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்களை சந்தித்து நடிகர் சேது. கருணாஸ் வாழ்த்துப் பெற்றார்.



அஷ்ரஃப் சிஹாப்தீனின் ‘கழுதை மனிதன்’ மொழி பெயர்ப்பு சிறுகதை தொகுதி வெளியீடு! Top News
[Wednesday 2025-02-19 18:00]

சிரேஷ்ட ஒலி, ஒளிபரப்பாளரும் எழுத்தாளருமான அஷ்ரஃப் சிஹாப்தீன் மொழி பெயர்த்த 'கழுதை மனிதன்' சிறுகதைத் தொகுதி வெளியீடும் இலங்கை நெய்னார் சமூக நலக் காப்பகத்தின் மாணாக்கருக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் ஞாயிற்றுக் கிழமை தெமடகொட வை.எம்.எம்.ஏ. மண்டபத்தில் நடைபெற்றது.



மத்திய மாநிலத்திற்கான கலைத்திறன் போட்டிகள்! Top News
[Wednesday 2025-02-12 06:00]

தமிழ்க்கல்விக் கழகத்தின் நிர்வாகப் பொறிமுறைக்கேற்ப மத்திய மாநிலத்திற்கான கலைத்திறன்போட்டிகள் 08.02.2025 அன்று சிறப்பாக நடைபெற்றது. இக்கலைத்திறன் போட்டியில் மயிலாட்டம், புலியாட்டம், காவடியாட்டம், கரகம், காவடி, பொய்க்காற்குதிரை, வில்லுப்பாட்டு போன்ற கிராமியக் கலைவடிவங்களுடன் பரதநாட்டியம், விடுதலைநடனம், விடுதலைப்பாடல், வாய்ப்பாட்டு ஆகிய கலைகள் போட்டியாகளாக நடைபெற்றன.



கலைத்தமிழோடுகளமாடும் வளரிளம் கலைஞர்களின் கலைத்திறனாற்றுகை – கற்றிங்கன்! Top News
[Saturday 2025-02-08 06:00]

தமிழரதுகலைவடிவங்களைத்தமிழினத்தின் இளையதலைமுறைகற்றும் கண்டும் உணரவும், அதனுடாகப்படைப்பாக்கத் திறனைப் பெறவும்,தமிழர் கலைகள் அழிந்துவிடாதுகாக்கவும் கலைஅரங்காற்றுகை,செயலாக்கம் பெறுதல் வேண்டும். புலம்பெயர் நாடுகளில் மூன்றாந் தலைமுறைத் தமிழர்களும் தமிழர் கலைகளைஅறிந்துகொள்ளவும், பயிலவும் களம் அமைத்துக் கொடுக்கும் நோக்கோடு,தமிழ்க் கல்விக் கழகத்தின் கலைப்பிரிவுகலைத்திறன் போட்டியைநடாத்திவருகிறது. இக்கலைத்திறன் போட்டியில் மயிலாட்டம், புலியாட்டம், காவடியாட்டம், காவடி, கரகம், பொய்க்காற்குதிரை, வில்லுப்பாட்டு போன்றகிராமியக் கலைவடிவங்களுடன் பரதநாட்டியம் மற்றும் விடுதலைநடனம், விடுதலைப் பாடல், வாய்ப்பாட்டு ஆகிய ஒன்பது கலைகள் போட்டிகளாக நடைபெறுகின்றன. முதலாவது போட்டியரங்கம் வடமத்தியமாநிலத்தின் கற்றிங்கன் நகரிலேபொதுச்சுடர் ஏற்றலோடுதொடங்கியது.



கல்விக்கு கரம் கொடுப்போம்! Top News
[Saturday 2025-02-08 06:00]

கல்விக்குக் கரம் கொடுப்போம் செயற்திட்டத்தின் ஊடாக வாழ் தமிழ்மக்களின் பங்களிப்பில் அருள்மிகு சிறீ சித்திவிநாயகர் கோவில் ஸ்ருட்காட் நிதிப்பங்களிப்பில் 06/02/2025 அன்று யாழ் மாவட்டம் மாதகல், தெல்லிப்பளை ஆகிய கிராமத்தில் வசிக்கும் கற்றல் தேவையுடைய 18 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.



உறை குளிரில் மானிடத்தை உலுக்கிய மின்னல் செந்தில்குமரனின் MGR 108 இசை நிகழ்வு! Top News
[Thursday 2025-02-06 19:00]

சமீபத்தில் ஈழத்தில் உள்ள எங்கள் சொந்தங்களின் மருத்துவ தேவைகளுக்காக நெடுங்காலமாக தன்னை அர்ப்பணித்து சேவையாற்றி வரும் மின்னல் செந்தில்குமரனின் இசை நிகழ்விற்கு சென்றிருந்தேன். நூறு கோவில்களுக்கு சென்ற மகிழ்ச்சி. ஏன் என்பதனை முழுவதும் படித்த பின் நீங்களும் ஆமோதிப்பீர்கள். ஆறு மணியளவில் மெட்ரோபொலிட்டன் மண்டபம் நிரம்பி வழிந்தது. நிகழ்ச்சியை தொய்வில்லாமல் விறுவிறுப்பாக கொண்டு சென்றார்கள். செந்தில் குமரனோடு வித்தியாசங்கர், சிவா, சந்தியா, மகிசா, விஜிதா, அனோஜனா, அபிராமி, சௌமிகா, கனிஷா, மானசி, ஷியானா, சியாரா என்று ஒரு பட்டாளமே தெரிவு செய்யப்பட்ட ஹிட் பாடல்களை பாடி மக்களின் கரவொலிகளைப் பெற்று கொண்டிருந்தார்கள்.



யேர்மனி டுசில்டோர்ப் நகரில் நடைபெற்ற கரிநாள் போராட்டம்! Top News
[Thursday 2025-02-06 06:00]

புலம்பெயர் தமிழர்கள், சிறிலங்காவின் சுதந்திர நாளை கரிநாளாக வெளிப்படுத்துவதோடு தமிழீழ தேசத்தில் தொடரும் சிங்கள தேசத்தின் ஆக்கிரமிப்பைக் கண்டித்தும், தமிழீழ மக்கள் மீது தொடரும் சிங்கள தேசத்தின் இனப்படுகொலையை வெளிக்கொணர்ந்தும் தமிழீழ தேசத்தின் இருப்பையும், இறைமையையும் வலியுறுத்தியும் இலங்கைத்தீவில் சுதந்திரத்துக்காக போராடிவருகின்ற இனமான, ஈழத்தமிழினம் உள்ளதென்பதனையும் சர்வதேசத்தின் செவிகளுக்கு எடுத்துரைத்து தமிழருக்கான ஒரு நிரந்தர நீதி கிடைக்கும் வரை ஓயோமென இக்கரிநாளில் உறுதிகொள்வோம்.



சிங்களப் பேரினவாதாத்தின் 77 வது சுதந்திர தினம் ஈழத்தமிழர்களின் கரிநாள்! Top News
[Wednesday 2025-02-05 06:00]

தமிழீழத் தாய்மணில் ஒன்றரை லட்சம் உறவுகளின் இரத்த ஆறு ஓடி பதினைந்து ஆண்டுகள் ஆகிய நிலையில், இந்தப் பதினைந்து ஆண்டுகளைத் திரும்பிப் பார்க்கிற எவரும் சிறிலங்காவின் சுதந்திர தினத்தில் பங்கேற்க மாட்டார்கள். சிங்களப் பேரினவாதாத்தின் 77 வது சுதந்திர தினம் ஈழத்தமிழர்களைப் பொறுத்த வரை மாறாத்துயரை என்றென்றும் நினைவுபடுத்தும் கரிநாள்.



"இந்திய ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் நிதிநிலை அறிக்கை" - திருமா அறிக்கை!
[Monday 2025-02-03 06:00]

நேற்று அறிவிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கையைத் தனது கூட்டணிக் கட்சிகளைத் திருப்தி செய்வதற்காகவே பாஜக அரசு பயன்படுத்தியுள்ளது. மற்ற மாநிலங்கள் வஞ்சிக்கப்படுவதால் இந்திய ஒருமைப்பாடே சீர்குலையும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. மோடி அரசின் ஓர்வஞ்சனைப் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறும் பீகார் மாநிலத்தில் தேசிய உணவுத் தொழில் நுட்ப நிறுவனம் ( என்.ஐ.எஃப்.டி ) அமைக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. பீகாரில் விளையும் மக்கானா பயிரை மேம்படுத்துவதற்காக வாரியம் அமைக்கப்படும் என்று அறிவிப்பு செய்யப்பட்டிருக்கிறது. பீகாரில் கிரீன் ஃபீல்ட் விமான நிலையம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.



அனைத்துலக மட்டத்தில் நடாத்தப்பட்ட அரையாண்டுத்தேர்வு! Top News
[Friday 2025-01-31 06:00]

தமிழ்க் கல்விக் கழகத்தின் நிர்வாகக் கட்டமைப்பின் கீழியங்கிவரும் 100க்கு மேற்பட்ட தமிழாலயங்களில் தமிழ் மொழியைக் கற்றுவரும் தமிழ்ப்பிள்ளைகளின் மொழிக் கற்றலை வளப்படுத்தி, கற்கையின் தரத்தை உயர்த்தும் நோக்கோடு, கல்வியாண்டின் நடுப்பகுதியில் அரையாண்டுத் தேர்வானது நடாத்தப்பட்டு வருகிறது. இவ்வாண்டுக்கான அரையாண்டுத்தேர்வு 25.01.2025 சனிக்கிழமை சிறப்புடன் நடைபெற்றது.


Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Latika-Gold-House-2025
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா