Untitled Document
April 1, 2025 [GMT]
  • Welcome
  • Welcome
வாகைமயில் 2025 - யேர்மனி! Top News
[Friday 2025-03-21 18:00]

யேர்மனியில் ஆண்டுதோறும் வாகைமயில் என்னும் நடனப்போட்டியைத் தமிழ்ப் பெண்கள் அமைப்பு நடத்தி வருவது யாவரும் அறிந்ததே. இம்முறை கற்றிங்கன் நகரில் 15.03.25 சனி, 16.03.25 ஞாயிறு ஆகிய இரண்டு நாள்களும் தெரிவுப்போட்டிகளின்றி நிறைவுப்போட்டியாகப் பன்னிரெண்டு ஆண்டுகளை நிறைவு செய்தபடி வாகைமயில் வெகு சிறப்பாகத் தோகை விரித்தாடியது. யேர்மனியில் உள்ள நடன ஆசிரியர்களால் பயிற்றப்பட்ட அவர்களின் மாணவ மாணவிகள் ஒருவரை ஒருவர் மிஞ்சும் வகையில் களம் கண்டனர். இவர்கள் அற்புதமான பதங்களுடன் பல வண்ணங்கள் உடுத்தித் தேர்போல (இரதங்கள்) அழகாக அசைந்து, மிதமான அணிகளோடு அவையில் இதமான பரதத்தால் நவரசம் தந்தது மண்டபம் நிறைந்த மக்களின் வரவேற்பைப் பெற்றிருந்தது. டென்மாக், சுவிற்சலாந்து ஆகிய நாடுகளிலிருந்து வருகை தந்திருந்த திறமையும் பட்டறிவும் வாய்ந்த நடுவர்களால் போட்டிகள் நடுவம் செய்யப்பட்டு, மதிப்பளிப்புகளும் வாகைமயில் விருதுகளும் வழங்கப்பட்டன.

அதிக எண்ணிக்கைகளிலான நடனக்கலைஞர்கள் வாகைமயில் போட்டியில் கலந்து கொண்டார்கள். 15.03.25 சனிக்கிழமையன்று மண்டபம் நிறைந்த மக்களுடன் போட்டிகள் தொடங்கியது. முதலில் மண்மீட்புப் போரில் தங்கள் இன்னுயிர்களை ஈகம்செய்த மாவீரர்களையும் பொதுமக்களையும் நினைவு கூர்ந்து பொதுச்சுடர் ஏற்றிவைக்கப்பட்டதை தொடர்ந்து மங்கல விளக்கு ஏற்றி வைக்கப்பட்டுப் போட்டிகள் தொடங்கியது. சனிக்கிழமைக்குரிய போட்டிகள் நிறைவு பெற்றதும் முடிவுகளும் அன்றே அறிவிக்கப்பட்டது.

16.03.25 ஞயிறு அன்று 9:00 மணிக்கு போட்டிகள் தொடங்கியது. முதலில் மண்மீட்புப் போரில் தங்கள் இன்னுயிர்களை ஈகம்செய்த மாவீரர்களையும் பொதுமக்களையும் நினைவு கூர்ந்து பொதுச்சுடர் ஏற்றிவைக்கப்பட்டது. தொடர்ந்து வணக்கத்துடன் சிறப்பு விருந்தினரை வரவேற்று, தோகை விரித்தாடுவோம், தாளமெடுத்தாடுவோம், வாகைமயில் போட்டியிலே நாங்கள் வாகை சூடுவோம் தமிழ்ப் பெண்கள் அமைப்பின் போட்டி வாகைமயில் போட்டி’ என்னும் பாடலோடு சிறப்பு விருந்தினர்கள் அரங்குக்குள் அழைத்து வரப்பட்டனர். அதைத் தொடர்ந்து நாட்டுப்பாற்றாளர் ஜெயந்தி கீதபொங்கலன் அவர்களில் திருவுருவப்படத்திற்கு ஈகைசுடர் ஏற்றி மலர்மாலை அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து மங்கல விளக்கேற்றி வைக்கப்பட்டு அகவணக்கத்துடன் போட்டிகளுக்குள் நுழைந்தோம். அனைத்துப் போட்டிகளும் நிறைவுபெற்றதும் மண்டபம் நிறைந்த மக்களின் ஆரவாரத்துடனும் உற்சாகத்துடனும் மதிப்பளிப்புகளும் வாகை விருதுகளும் வழங்கப்பட்டன.

மதிப்பளிப்புகளையும் விருதுகளையும் வென்றோர் விபரம்

தனிநடனம்

பாலர்பிரிவு

முதலாமிடம்

செல்வி நியோமி நிரோன்சன்

ஆசிரியர் திருமதி தீபனா தர்மபாலன்

இரண்டாம் இடம்

செல்வி விதுலா சாய்ராம்

ஆசிரியர் திருமதி தீபனா தர்மபாலன்

செல்வி தியா பிரபாகரன்

ஆசிரியர் செல்வி அபிரா தயாபரன்

ழூன்றாம் இடம்

செல்வி ஷமீரா சந்திரசேகரம்

ஆசிரியர் திருமதி றெஜினி சத்தியகுமார்

செல்வி இனியா மனேகரன்

ஆசிரியர் திருமதி தீபனா தர்மபாலன்

வாகைமயில் ஆரம்பப்பிரிவு

செல்வி மிதிலா சந்தோஷ்குமார்

ஆசிரியர் விவேகா மகேந்திரகுமார்

இரண்டாம் இடம்

செல்வி மஹீரா மாயா ஆனந்தராஜா

ஆசிரியர் திருமதி றெஜினி சத்தியகுமார்

செல்வி அக்ஷ்னா கிருபாகரன்

ஆசிரியர் செல்வி ரோசிகா ரவிக்குமார்

மூன்றாம் இடம்

செல்வி சிந்த்யா புலேந்திரன்

ஆசிரியர் திருமதி றெஜினி சத்தியகுமார்

செல்வி மகிழ்மதி கார்த்திக்

ஆசிரியர் விவேகா மகேந்திரகுமார்

செல்வி ஹரிணி பிரதீப்

ஆசிரியர் திருமதி லாவண்யா நிரோஷன்

வாகைமயில் கீழ்ப்பிரிவு

செல்வி லுய்ஸ் கியாரா பெர்னாண்டடோ

ஆசிரியர் திருமதி லாவண்யா நிரோஷன்

இரண்டாம் இடம்

செல்வி வர்ஷினி ஜெயந்தன்

ஆசிரியர் செல்வன் நிமலன் சத்தியகுமார்

செல்வி அச்சுதா கதிர்காமநாதன்

ஆசிரியர் செல்வி அபிரா தயாபரன்

செல்வி தர்மிகா மோகனதாஸ்

ஆசிரியர் செல்வன் நிமலன் சத்தியகுமார்

மூன்றாம் இடம்

செல்வி அதிதி சரவணன்

ஆசிரியர் திருமதி லாவண்யா நிரோஷன்

செல்வி அதுலா சௌந்தரராஜன்

ஆசிரியர் விவேகா மகேந்திரகுமார்

செல்வி ஆரத்யா சண்முகராஜா

ஆசிரியர் செல்வி அபிரா தயாபரன்

வாகைமயில் மத்தியபிரிவு

செல்வி ஆராதனா கிருஷ்ணமேனன்

ஆசிரியர் செல்வன் நிமலன் சத்தியகுமார்

இரண்டாம் இடம்

செல்வி கீர்த்தனா விஸ்வநாதன்

ஆசிரியர் திருமதி மைதிலி கஜேந்திரன்

செல்வி சாந்தினி தப்பா ஷேத்ரி

ஆசிரியர் திருமதி அமலா அன்ரனி சுரேஷ்குமார்

மூன்றாம் இடம்

செல்வி வக்சிகா அலோசியஸ்

ஆசிரியர் செல்வி கயானி லோகேஸ்வரன்

செல்வி விதுஷா சண்முகநாதன்

ஆசிரியர் செல்வன் நிமலன் சத்தியகுமார்

வாகைமயில் மேற்பிரிவு

செல்வி சுருதி சுதர்சன்

ஆசிரியர் திருமதி றெஜினி சத்தியகுமார்

இரண்டாம் இடம்

செல்வி ஐலின் றிமமோன்சன்

ஆசிரியர் திருமதி லாவண்யா நிரோஷன்

செல்வி மதுஷா றஞ்சித்

ஆசிரியர் செல்வன் நிமலன் சத்தியகுமார்

மூன்றாம் இடம்

செல்வி திபிஷா ராம்குமார்

ஆசிரியர் திருமதி லாவண்யா நிரோஷன்

செல்வி திவ்யா ரவிசந்திரன்

ஆசிரியர் திருமதி லாவண்யா நிரோஷன்

செல்வி கவிப்பிரியா நடேசகுமார்

ஆசிரியர் திருமதி றெஜினி சத்தியகுமார்

வாகைமயில் அதிமேற்பிரிவு

செல்வி அபிரா ரவீந்திரநாதன்

ஆசிரியர் திருமதி யனுஷா பிரதீப்

இரண்டாம் இடம்

செல்வி யனுசா இராசமோகன்

ஆசிரியர் திருமதி றெஜினி சத்தியகுமார்

மூன்றாம் இடம்

செல்வி அபர்ணா சிவரூபன்

ஆசிரியர் திருமதி றெஜினி சத்தியகுமார்

ஆற்றுகைத்தரம் முடித்த மாணவர்கள்

செல்வி சபிதா தவேநசன்

ஆசிரியர் திருமதி றெஜினி சத்தியகுமார்

செல்வி விதுசா நவீன்

ஆசிரியர் திருமதி றெஜினி சத்தியகுமார்

ஆற்றுகைத்தரம் முடித்த ஆசிரியர்கள்

முதலாமிடம்

செல்வன் நிமலன் சத்தியகுமார்

ஆசிரியர் திருமதி றெஜினி சத்தியகுமார்

இரண்டாம் இடம்

அபிரா தயாபரன்

ஆசிரியர் திருமதி றெஜினி சத்தியகுமார்

மூன்றாம் இடம்

விவேகா மகேந்திரகுமார்

ஆசிரியர் திருமதி சாவித்திரி சரவணன்

குழுநடனம் வாகைமயில்

பாலர்பிரிவு

முதலாமிடம்

குழு A1 திருமதி தீபனா தர்மபாலன்

வாகைமயில் ஆரம்பப்பிரிவு

செல்வி சனஜா ரஞ்சன்

ஆசிரியர் செல்வி ராசிகா ரவிக்குமார்

முதலாமிடம்

குழு B2ஆசிரியர் செல்வி ராசிகா ரவிக்குமார்

இரண்டாம் இடம்

குழு B1ஆசிரியர் திருமதி லாவண்யா நிரோசன்

மூன்றாம் இடம்

குழு B3 ஆசிரியர் திருமதி யசோதா நிதார்சன்

வாகைமயில் கீழ்ப்பிரிவு

மிதிலா சந்தோஸ்குமார்

ஆசிரியர் விவேகா மகேந்திரகுமார்

முதலாமிடம்

குழு C4

ஆசிரியர் திருமதி றெஜினி சத்தியகுமார்

இரண்டாம் இடம்

குழு C7

ஆசிரியர் விவேகா மகேந்திரகுமார்

மூன்றாம் இடம்

குழு C3

ஆசிரியர் செல்வி ரோசிகா ரவிக்குமார்

வாகைமயில் மத்தியபிரிவு

தர்மிகா மோகனதாஸ்

ஆசிரியர் செல்வன் நிமலன் சத்தியகுமார்

முதலாமிடம்

குழு D1

ஆசிரியர் திருமதி லாவண்யா நிரோசன்

இரண்டாம் இடம்

குழு D4 ஆசிரியர் செல்வன் நிமலன் சத்தியகுமார்

மூன்றாம் இடம்

குழு D2 ஆசிரியர் திருமதி மைதிலி கஜேந்திரன்

வாகைமயில் மேற்பிரிவு

பிரியா பப்பரிகாஸ்

ஆசிரியர் திருமதி றெஜினி சத்தியகுமார்

முதலாமிடம்

குழு E1 ஆசிரியர் திருமதி றெஜினி சத்தியகுமார்

இரண்டாம் இடம்

குழு E3 ஆசிரியர் திருமதி சரண்யா பிரசாந்

மூன்றாம் இடம்

குழு E2 ஆசிரியர் திருமதி சபாஸ்கரன் இதயராணி

வாகைமயில் அதிமேற்பிரிவு

ஆதிகா செல்வராசா

ஆசிரியர் செல்வன் நிமலன் சத்தியகுமார்

முதலாமிடம்

குழு F2 ஆசிரியர் செல்வன் நிமலன் சத்தியகுமார்

குழு F1 ஆசிரியர் திருமதி யனுசா பிரதீப்

ஆற்றுகைத்தரம் முடித்த மாணவர்கள் ஆசிரியர்கள்

முதலாமிடம்

குழு H1 ஆசிரியர் திருமதி றெஜினி சத்தியகுமார்

இரண்டாம் இடம்

குழு H2 ஆசிரியர் திருமதி யசோதா நிதார்சன்

  
  
   Bookmark and Share Seithy.com



கனடாவில் வீட்டிலிருந்த யுவதிமீது துப்பாக்கி சூடு: சகோதரன் காயம்! Top News
[Monday 2025-03-10 06:00]

யா/கோண்டாவில் மேற்கு கல்வீட்டு துரையப்பாவின் பேர்த்தி யான செல்வி ரகுதாஸ் நிலக்சி 07-03-2025 வெள்ளிக்கிழமை கனடாவில் அகால மரணம் அடைந்து விட்டார். கனடாவின், மார்க்கம் நகரத்தில் வீடொன்றில் இடம்பெற்ற இரட்டை துப்பாக்கிச்சூட்டில் ஒரு பெண் உயிரிழந்ததுடன், ஒரு ஆண் தீவிரமான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



விஜய் தணிகாசலம் மீண்டும் ஒன்றாரியோ மாகாண பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்! Top News
[Friday 2025-03-07 06:00]

மார்ச் 4, 2025 அன்று, அமெரிக்கா, அதிபர் டொனால்ட் டிரம்பின் தலைமையில், கனடியா இறக்குமதிகளுக்கு 25% வரி விதித்தது. இது எல்லை பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் கடத்தல் குறித்த கவலையை காரணமாகக் கூறினாலும், ஒன்றாரியோ பொருளாதாரத்தில் 500,000 வேலைகளை ஆபத்துக்கு உள்ளாக்கியுள்ளது. இதற்கு பதிலளிக்க கனடா, அமெரிக்க பொருட்களுக்கு பதிலடி கட்டணங்களை அறிவித்து, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக பதற்றத்தை அதிகரித்துள்ளது.



தமிழர் கலைகளின் வளம்தேடும் வளரிளம் தமிழர்களின் கலைத்திறனாற்றுகை - ஸ்ருற்காட்! Top News
[Thursday 2025-03-06 06:00]

கலைகளின் ஊடாகத் தன்னையும்தனது சூழலையும்பதிவுசெய்வதிலும் வினவுதலுக்குட்படுத்துவதிலும் உலகம் பின்னிற்பதில்லை. அவை தலைமுறைகள் வழியேகடத்தப்பட்டுவருவதோடு, புதியநுண்ணறிவுசார் புலமைகளை உள்ளீர்ந்தவாறு செழுமைபெற்றுத் திகழ்கின்றன. தமிழர் கலைகள் பல ஆயிரம் ஆண்டுகளாகத் தொடர்ச்சியாகப் பயணித்துவருகின்றன. தமிழர்கள் புலம்பெயர்ந்து வேற்றுமொழி, கலைமற்றும் பண்பாட்டுச் சூழலுள் சிக்குண்டபோதும் தம்மைத் தகவமைத்துக் கொள்வதற்கான அத்தனை முயற்சிகளையும் செய்துவருவதற்கு மற்றுமொரு சான்றாக யேர்மன் தமிழ்க் கல்விக் கழகத்தால் நடாத்தப்பட்டுவரும் கலைத்திறன் போட்டிதிகழ்கின்றது. தமிழரதுகலைகளைத் தமிழினத்தின் இளையதலைமுறை கற்றும் கண்டுணரவும் அதனூடாகப் படைப்பாக்கத் திறனைப் பெறவும், தமிழர் கலைகள் அழிந்துவிடாதுகாக்கவும், கலை அரங்காற்றுகை செயலாக்கம் பெறுதல் வேண்டும்.



35ஆவது அகைவை நிறைவில் தமிழாலயங்கள்! Top News
[Thursday 2025-03-06 06:00]


நடிகர் கருணாஸ் தனது பிறந்த நாளையொட்டி முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்துப் பெற்றார்! Top News
[Thursday 2025-02-20 19:00]

முக்குலத்தோர் புலிப்புடைக் கட்சியின் தலைவரும், தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்தின் துணைத்தலைவரும், திரைப்பட நடிகருமான திரு. சேது. கருணாஸ் அவர்களின் பிறந்தநாளை (21.02.2025) யொட்டி 20.02.2025 இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்களை சந்தித்து நடிகர் சேது. கருணாஸ் வாழ்த்துப் பெற்றார்.



அஷ்ரஃப் சிஹாப்தீனின் ‘கழுதை மனிதன்’ மொழி பெயர்ப்பு சிறுகதை தொகுதி வெளியீடு! Top News
[Wednesday 2025-02-19 18:00]

சிரேஷ்ட ஒலி, ஒளிபரப்பாளரும் எழுத்தாளருமான அஷ்ரஃப் சிஹாப்தீன் மொழி பெயர்த்த 'கழுதை மனிதன்' சிறுகதைத் தொகுதி வெளியீடும் இலங்கை நெய்னார் சமூக நலக் காப்பகத்தின் மாணாக்கருக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் ஞாயிற்றுக் கிழமை தெமடகொட வை.எம்.எம்.ஏ. மண்டபத்தில் நடைபெற்றது.



மத்திய மாநிலத்திற்கான கலைத்திறன் போட்டிகள்! Top News
[Wednesday 2025-02-12 06:00]

தமிழ்க்கல்விக் கழகத்தின் நிர்வாகப் பொறிமுறைக்கேற்ப மத்திய மாநிலத்திற்கான கலைத்திறன்போட்டிகள் 08.02.2025 அன்று சிறப்பாக நடைபெற்றது. இக்கலைத்திறன் போட்டியில் மயிலாட்டம், புலியாட்டம், காவடியாட்டம், கரகம், காவடி, பொய்க்காற்குதிரை, வில்லுப்பாட்டு போன்ற கிராமியக் கலைவடிவங்களுடன் பரதநாட்டியம், விடுதலைநடனம், விடுதலைப்பாடல், வாய்ப்பாட்டு ஆகிய கலைகள் போட்டியாகளாக நடைபெற்றன.



கலைத்தமிழோடுகளமாடும் வளரிளம் கலைஞர்களின் கலைத்திறனாற்றுகை – கற்றிங்கன்! Top News
[Saturday 2025-02-08 06:00]

தமிழரதுகலைவடிவங்களைத்தமிழினத்தின் இளையதலைமுறைகற்றும் கண்டும் உணரவும், அதனுடாகப்படைப்பாக்கத் திறனைப் பெறவும்,தமிழர் கலைகள் அழிந்துவிடாதுகாக்கவும் கலைஅரங்காற்றுகை,செயலாக்கம் பெறுதல் வேண்டும். புலம்பெயர் நாடுகளில் மூன்றாந் தலைமுறைத் தமிழர்களும் தமிழர் கலைகளைஅறிந்துகொள்ளவும், பயிலவும் களம் அமைத்துக் கொடுக்கும் நோக்கோடு,தமிழ்க் கல்விக் கழகத்தின் கலைப்பிரிவுகலைத்திறன் போட்டியைநடாத்திவருகிறது. இக்கலைத்திறன் போட்டியில் மயிலாட்டம், புலியாட்டம், காவடியாட்டம், காவடி, கரகம், பொய்க்காற்குதிரை, வில்லுப்பாட்டு போன்றகிராமியக் கலைவடிவங்களுடன் பரதநாட்டியம் மற்றும் விடுதலைநடனம், விடுதலைப் பாடல், வாய்ப்பாட்டு ஆகிய ஒன்பது கலைகள் போட்டிகளாக நடைபெறுகின்றன. முதலாவது போட்டியரங்கம் வடமத்தியமாநிலத்தின் கற்றிங்கன் நகரிலேபொதுச்சுடர் ஏற்றலோடுதொடங்கியது.



கல்விக்கு கரம் கொடுப்போம்! Top News
[Saturday 2025-02-08 06:00]

கல்விக்குக் கரம் கொடுப்போம் செயற்திட்டத்தின் ஊடாக வாழ் தமிழ்மக்களின் பங்களிப்பில் அருள்மிகு சிறீ சித்திவிநாயகர் கோவில் ஸ்ருட்காட் நிதிப்பங்களிப்பில் 06/02/2025 அன்று யாழ் மாவட்டம் மாதகல், தெல்லிப்பளை ஆகிய கிராமத்தில் வசிக்கும் கற்றல் தேவையுடைய 18 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.



உறை குளிரில் மானிடத்தை உலுக்கிய மின்னல் செந்தில்குமரனின் MGR 108 இசை நிகழ்வு! Top News
[Thursday 2025-02-06 19:00]

சமீபத்தில் ஈழத்தில் உள்ள எங்கள் சொந்தங்களின் மருத்துவ தேவைகளுக்காக நெடுங்காலமாக தன்னை அர்ப்பணித்து சேவையாற்றி வரும் மின்னல் செந்தில்குமரனின் இசை நிகழ்விற்கு சென்றிருந்தேன். நூறு கோவில்களுக்கு சென்ற மகிழ்ச்சி. ஏன் என்பதனை முழுவதும் படித்த பின் நீங்களும் ஆமோதிப்பீர்கள். ஆறு மணியளவில் மெட்ரோபொலிட்டன் மண்டபம் நிரம்பி வழிந்தது. நிகழ்ச்சியை தொய்வில்லாமல் விறுவிறுப்பாக கொண்டு சென்றார்கள். செந்தில் குமரனோடு வித்தியாசங்கர், சிவா, சந்தியா, மகிசா, விஜிதா, அனோஜனா, அபிராமி, சௌமிகா, கனிஷா, மானசி, ஷியானா, சியாரா என்று ஒரு பட்டாளமே தெரிவு செய்யப்பட்ட ஹிட் பாடல்களை பாடி மக்களின் கரவொலிகளைப் பெற்று கொண்டிருந்தார்கள்.



யேர்மனி டுசில்டோர்ப் நகரில் நடைபெற்ற கரிநாள் போராட்டம்! Top News
[Thursday 2025-02-06 06:00]

புலம்பெயர் தமிழர்கள், சிறிலங்காவின் சுதந்திர நாளை கரிநாளாக வெளிப்படுத்துவதோடு தமிழீழ தேசத்தில் தொடரும் சிங்கள தேசத்தின் ஆக்கிரமிப்பைக் கண்டித்தும், தமிழீழ மக்கள் மீது தொடரும் சிங்கள தேசத்தின் இனப்படுகொலையை வெளிக்கொணர்ந்தும் தமிழீழ தேசத்தின் இருப்பையும், இறைமையையும் வலியுறுத்தியும் இலங்கைத்தீவில் சுதந்திரத்துக்காக போராடிவருகின்ற இனமான, ஈழத்தமிழினம் உள்ளதென்பதனையும் சர்வதேசத்தின் செவிகளுக்கு எடுத்துரைத்து தமிழருக்கான ஒரு நிரந்தர நீதி கிடைக்கும் வரை ஓயோமென இக்கரிநாளில் உறுதிகொள்வோம்.



சிங்களப் பேரினவாதாத்தின் 77 வது சுதந்திர தினம் ஈழத்தமிழர்களின் கரிநாள்! Top News
[Wednesday 2025-02-05 06:00]

தமிழீழத் தாய்மணில் ஒன்றரை லட்சம் உறவுகளின் இரத்த ஆறு ஓடி பதினைந்து ஆண்டுகள் ஆகிய நிலையில், இந்தப் பதினைந்து ஆண்டுகளைத் திரும்பிப் பார்க்கிற எவரும் சிறிலங்காவின் சுதந்திர தினத்தில் பங்கேற்க மாட்டார்கள். சிங்களப் பேரினவாதாத்தின் 77 வது சுதந்திர தினம் ஈழத்தமிழர்களைப் பொறுத்த வரை மாறாத்துயரை என்றென்றும் நினைவுபடுத்தும் கரிநாள்.



"இந்திய ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் நிதிநிலை அறிக்கை" - திருமா அறிக்கை!
[Monday 2025-02-03 06:00]

நேற்று அறிவிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கையைத் தனது கூட்டணிக் கட்சிகளைத் திருப்தி செய்வதற்காகவே பாஜக அரசு பயன்படுத்தியுள்ளது. மற்ற மாநிலங்கள் வஞ்சிக்கப்படுவதால் இந்திய ஒருமைப்பாடே சீர்குலையும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. மோடி அரசின் ஓர்வஞ்சனைப் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறும் பீகார் மாநிலத்தில் தேசிய உணவுத் தொழில் நுட்ப நிறுவனம் ( என்.ஐ.எஃப்.டி ) அமைக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. பீகாரில் விளையும் மக்கானா பயிரை மேம்படுத்துவதற்காக வாரியம் அமைக்கப்படும் என்று அறிவிப்பு செய்யப்பட்டிருக்கிறது. பீகாரில் கிரீன் ஃபீல்ட் விமான நிலையம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.



அனைத்துலக மட்டத்தில் நடாத்தப்பட்ட அரையாண்டுத்தேர்வு! Top News
[Friday 2025-01-31 06:00]

தமிழ்க் கல்விக் கழகத்தின் நிர்வாகக் கட்டமைப்பின் கீழியங்கிவரும் 100க்கு மேற்பட்ட தமிழாலயங்களில் தமிழ் மொழியைக் கற்றுவரும் தமிழ்ப்பிள்ளைகளின் மொழிக் கற்றலை வளப்படுத்தி, கற்கையின் தரத்தை உயர்த்தும் நோக்கோடு, கல்வியாண்டின் நடுப்பகுதியில் அரையாண்டுத் தேர்வானது நடாத்தப்பட்டு வருகிறது. இவ்வாண்டுக்கான அரையாண்டுத்தேர்வு 25.01.2025 சனிக்கிழமை சிறப்புடன் நடைபெற்றது.



கல்விக்குக் கரம் கொடுப்போம்! Top News
[Sunday 2025-01-26 16:00]

செயற்திட்டத்தின் ஊடாக ஜேர்மனி அருள்மிகு சிறீ சித்திவினாயகர் கோவில் ஸ்ருட்காட் நிதிப்பங்களிப்பில் 25/01/2025 இன்றைய தினம் வவுனியா மாவட்டம் நெடுங்கேணி, ஒலுமடு, பன்றிக்கெய்தகுளம், நொச்சிமோட்டை ஆகிய கிராமங்களில் வசிக்கும் கற்றல் தேவையுடைய 50 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.


Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Latika-Gold-House-2025
Karan Remax-2010
Airlinktravel-2020-01-01
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா