Untitled Document
April 1, 2025 [GMT]
  • Welcome
  • Welcome
அனைத்துலக மட்டத்தில் நடாத்தப்பட்ட அரையாண்டுத்தேர்வு! Top News
[Friday 2025-01-31 06:00]

தமிழ்க் கல்விக் கழகத்தின் நிர்வாகக் கட்டமைப்பின் கீழியங்கிவரும் 100க்கு மேற்பட்ட தமிழாலயங்களில் தமிழ் மொழியைக் கற்றுவரும் தமிழ்ப்பிள்ளைகளின் மொழிக் கற்றலை வளப்படுத்தி, கற்கையின் தரத்தை உயர்த்தும் நோக்கோடு, கல்வியாண்டின் நடுப்பகுதியில் அரையாண்டுத் தேர்வானது நடாத்தப்பட்டு வருகிறது. இவ்வாண்டுக்கான அரையாண்டுத்தேர்வு 25.01.2025 சனிக்கிழமை சிறப்புடன் நடைபெற்றது.

தமிழ்க் கல்விக் கழகத்தின் கட்டமைக்கப்பட்ட நிர்வாகப் பொறிமுறைகளைப் பயன்படுத்தி, கண்ணியத்துடனும் நேர்மையுடனும் இத்தேர்வானது நடாத்தப்பட்டது. நாடுதழுவிய மட்டத்தில் 90க்கு மேற்பட்ட தேர்வு நிலையங்களிலும் ஒவ்வொரு சிறப்புக் கண்காணிப்பாளர் என்ற அடிப்படையில் 90க்கும் மேற்பட்ட ஆசிரியப் பெருந்தகைகள் தமிழ்க் கல்விக் கழகத்தின் விதிமுறைகளுக்கேற்பப் பணியாற்றினார்கள்.

அவர்களுடன் தமிழ்மொழியின் பெருமை அதன் தொன்மையில் இல்லை. அதன் தொடர்ச்சியில் தான் உள்ளது என்பதை நன்குணர்ந்த எமது 400க்கு மேற்பட்ட ஆசிரியப் பெருந்தகைகளும் கடமையுணர்வோடு தமது பணியில் ஈடுபட்டனர். பெரும்பாலான தமிழாலயங்கள் தனியாகவும் சில தமிழாலயங்கள் இணைந்தும் தேர்வு நிலையங்களை அமைத்திருந்தன.

கழகத்தின் அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையால் வழங்கப்பட்ட தேர்வுத்தாள்கள் தமிழ்க் கல்விக் தேர்வுப்பிரிவினரால் நேர்த்தியாகப் பொதியாக்கப்பட்டு, தேசியச் செயற்பாட்டாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. காலை 08:00 மணி தொடக்கம் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடன் தேர்வு மண்டபத்தை நோக்கி வருகைதரத் தொடங்கினார்கள். 08:30 மணிக்குத் தாயமைப்பின் தேர்வுநிலையத்தின் மணிக்குத் சிறப்புக் தொடக்க செயற்பாட்டாளர்கள் தேர்வுத்தாள் பொதியை அந்தந்த கண்காணிப்பாளரிடம் கையளித்ததைத் தொடர்ந்து, 09:00 நிகழ்வுகளுடன் அனைத்துலக அரையாண்டுத்தேர்வு தொடங்கிவைக்கப்பட்டது.

காலை 09:30 மணிக்குத் தேர்வாளர்கள் அனைவரையும் தேர்வு மண்டபத்தில் அமர்த்திச் சரியாக 10:00 மணிக்குத் தேர்வு தொடங்கியது. ஆண்டு 1 தொடக்கம் 3 வரை 11:30 மணிக்கும், ஆண்டு 4 தொடக்கம் 6 வரை 12:00 மணிக்கும், ஆண்டு 7 தொடக்கம் 9 வரை 12:30 மணிக்கும் ஏனைய வகுப்புநிலைகளுக்கு 13:00 மணிக்கும் அரையாண்டுத்தேர்வானது நிறைவுபெற்றது.

கற்பிக்கும் தமிழாலய மாணவர்கள் தமது தாய்மொழிக் கற்றலின் நிலையறியவும் தமிழாலய ஆசான்கள் தாம் மாணவர்களின் கற்கையின் தரத்தை மதிப்பிடுவதனூடாக, அவர்களை மேம்படுத்தவும் ,வ் அரையாண்டுத் தேர்வானது துணைநிற்கின்றது. அத்துடன் யூன் மாதம் நடைபெறவுள்ள அனைத்துலகப் பொதுத்தேர்வுக்கான வளப்படுத்தல்களைச் செய்து கொள்ளவும் இந்த அரையாண்டுத்தேர்வு உதவுகின்றது.

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Latika-Gold-House-2025
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா