Untitled Document
April 1, 2025 [GMT]
  • Welcome
  • Welcome
35ஆவது அகவை நிறைவில் மகிழ்ந்து நிமிரும் தமிழாலயங்கள் – யேர்மனி, என்னெப்பெற்றால்! Top News
[Wednesday 2025-03-26 06:00]

தமிழ்க் கல்விக் கழகத்தின் நிருவாகச் செயல்நெறியின் ஒழுங்கமைப்பில் மத்தியமாநிலத்துக்கான 35ஆவது அகவைநிறைவுவிழாஎன்னெப்பெற்றால் அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. அறங்கொண்டு பணி செய்யும் ஆசான்களையும் ஆசான்களின் திறன் கொண்டு வாகைசூடும் மாணவர்களையும் 14 ஆண்டுகள் தமிழ்மொழியைக் கற்றுத் தேர்ச்சி பெற்ற மாணவர்களையும் கூட்டுழைப்பின் விளைவாகத் தமிழாலயங்கள் பெற்ற வெற்றிகளுக்கான மதிப்பளிப்புகள் எனப் பல்வகைமதிப்பளிப்புகளைத் தன்னகத்தே கொண்டதாகத் தமிழ்க் கல்விக் கழகத்தின் அகவை நிறைவுவிழா அமைந்திருந்தது.

09:30 மணிக்கு என்னப்பெற்றால் நகர இளைஞர் விவகாரத்துறைமேலாளர் திருமதிறுசாகால்னரபாக் அவர்கள் பொதுச்சுடர்ஏற்றிவைத்தமையைத் தொடர்ந்து, சிறப்பு விருந்தினர்களான பசுமைக் கட்சியின் என்னப்பெற்றால் நகரசபைஉறுப்பினர் திரு. யூற்கன் கொவ்மன்,என்னப்பெற்றால் நகர முன்னாள் துணை முதல்வரும் மூத்தக்குடிமக்களின் பிரதிநிதியும் அனைவருக்கும் சமத்துவத்திற்கான தன்னார்வத் தொண்டருமான சபினிகொவ்மன், தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் யேர்மனியக் கிளைப் பொறுப்பாளர் திரு.யோன்பிள்ளை சிறிரவீந்திரநாதன், யேர்மன் தமிழ்ப் பெண்கள் அமைப்பின் பொறுப்பாளர் திருமதி வசந்தி மனோகரன், தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் மத்தியமாநிலப் பொறுப்பாளர்களானதிரு. சதாசிவம் சிறிக்கந்தவேல், திரு.கணபதிசிவசுப்பிரமணியம், திரு.சிவநேசன் சுதர்சன், தமிழ் இளையோர் அமைப்பின் பொறுப்பாளர் செல்வன் சயந்தன் கேதீஸ்வரன், யேர்மன் தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பின் துணைப்பொறுப்பாளர் செல்வன் மிதுனன் ,ரட்ணராஜா,யேர்மன் தமிழ்ப் பெண்கள் அமைப்பின் நிர்வாகப் பொறுப்பாளர் ஷதமிழ் மாணி| திருமதிகலா ஜெயரட்ணம் ஆகியோர் மங்கலவிளக்கேற்றிவைக்க, அகவைநிறைவுவிழாச் சிறப்புடன் தொடங்கியது.

தமிழ்க் கல்விக் கழகத்தின்பொறுப்பாளர் ஷசெம்மையாளன்| திரு.செல்லையாலோகானந்தம் அவர்களின் வரவேற்புரையைத் தொடர்ந்து,மதிப்பளிப்புகள் தொடங்கின. அனைத்துலகப் பொதுத்தேர்வு,தமிழ்த்திறன்போட்டிஆகியவற்றில் வெற்றிபெற்றவெற்றியாளர்களுக்கும் மற்றும் 5,10,15ஆண்டுகள் பணியாற்றியஆசான்களுக்கானமதிப்பளிப்போடு, 20 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு ஷதமிழ் வாரிதி| என்றும் 25 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு ஷதமிழ் மாணி| என்றும் 30 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு முப்பது ஆண்டுகளைக் குறிக்கும் மூன்றுஉடுக்கள் பொறிக்கப்பட்டபதக்கமும் வழங்கிமதிப்பளிப்புகள் நடைபெற்றது.

யூச்சன் தமிழாலயநிர்வாகிஷதமிழ்மாணி| திரு. தம்பையாசிவலிங்கம்,கிறீபெல்ட் தமிழாலயநிர்வாகிஷதமிழ்மாணி| திருமதியஸ்ரின் உதயதேவி, கிறீபெல்ட், நெற்றெற்றால், வியர்சன் ஆகியதமிழாலயங்களின்ஆசிரியர்ஷதமிழ்மாணி|திரு.ஆலாலசுந்தரம் ஞானகுமார், வூப்பெற்றால் தமிழாலய ஆசிரியர் ஷதமிழ்மாணி| திருமதி தெய்வறஞ்சனிகிருதரமூர்த்திமற்றும் வூப்பெற்றால் தமிழாலயஆசிரியர்ஷதமிழ்மாணி| திரு. செபஸ்ரியான் றொமாலியஸ் ஸ்ரீபன் ஆகியோருக்கு30 ஆண்டுகள் பணிநிறைவுக்கானமதிப்பளிப்பும், கைன்ஸ்பேர்க்தமிழாலயத்தின் நிர்வாகியும்ஆசிரியரும் மற்றும் யூச்சன் தமிழாலயத்தின் ஆசிரியருமான ஷதமிழ்மாணி|திரு. திசைவீரசிங்கம் புஸ்பராசாஅவர்களுக்கு 35 ஆண்டுகள் பணிநிறைவுமதிப்பளிப்பும் வழங்கப்பட்டன.

பொதுத்தேர்வு, தமிழ்த்திறன், கலைத்திறன் போன்றவற்றில் மாணவர்கள் பெற்றவெற்றிகளின்அறுவடையாகத்தமிழாலயங்கள் பெற்ற புள்ளிகளினடிப்படையில் சிறந்த தமிழாலயங்களுக்கான மதிப்பளிப்புகளும் இடம்பெற்றன. நாடுதழுவியமட்டத்தில் அனைத்துலகப் பொதுத்தேர்வில்லிவர்குசன் தமிழாலயம் 2ஆம் இடத்திற்கானமதிப்பளிப்பைப்பெற்றுக்கொண்டது. 1ஆம் மற்றும் 3ஆம் இடங்களுக்கானமதிப்பளிப்புஎதிர்வரும் விழாக்களில் வழங்கப்படும். தமிழ்த்திறன் போட்டியில் முன்சன்கிளாட்பாக்தமிழாலயம் 2ஆம் நிலையையும், கலைத்திறன் போட்டியில் கிறீபெல்ட் தமிழாலயம் 3ஆம் நிலையையும், கலைத்திறன் மாநிலப் போட்டியில் கிறீபெல்ட், முன்சன்கிளாட்பாக் மற்றும் வூப்பெற்றால் தமிழாலயங்கள் முறையே 1ஆம், 2ஆம், 3ஆம் நிலைகளையும்,கலைத்திறன் போட்டியில் நாடுதழுவியமட்டத்திற் கிறீபெல்ட் தமிழாலயம் 2ஆம் இடத்தைப் பெற்றமைக்கான மதிப்பளிப்புகள் வழங்கப்பட்டன.

மழலையராக இணைந்து 14ஆண்டுகள் தமிழ்மொழிக்கற்றலில் சித்திபெற்று நிறைவு செய்த மாணவர்களுக்கு சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட முறையிலே மதிப்பளிக்கப்பட்டனர். மாணவர்களின் உரை, கவிதை, எழுச்சிப்பாடல்கள் மற்றும் எழுச்சிநடனங்கள் எனக் கலைநிகழ்வுகளுமாக நடைபெற்ற அகவை நிறைவுவிழா, தமிழ்த்தேசத்தின் விடியலுக்கான நம்பிக்கையைப் பறைசாற்றியவாறு 22:00மணிக்கு மத்தியமாநிலத் தமிழாலயங்களின் அகவை நிறைவுவிழா நிறைவுற்றது. எதிர்வரும் வாரங்களில் தமிழ்க் கல்விக் கழகத்தின்நிருவாகப் பொறிமுறைக்கேற்பவகுக்கப்பட்டுள்ள ஏனைய நான்கு மாநிலங்களிலும் அகவை நிறைவுவிழா நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

  
  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
Latika-Gold-House-2025
Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
Asayan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா