|
|
பூமிக்கு அடியில் வினோத கிராமம்!
[Monday 2022-11-07 18:00]
|
தெற்கு ஆஸ்திரேலியாவில் நிலத்திற்கு அடியில் கிராமம் ஒன்று உள்ளதுடன், இங்கு அனைத்து ஆடம்பர பொழுது போக்கு அம்சங்களும் காணப்படுகின்றது. தெற்கு ஆஸ்திரேலியாவில் இருக்கும் இந்த கிராமத்தின் பெயர் கூப்பர் பேடி. இந்த கிராமத்தில் 1500 வீடுகள் இருப்பதுடன் 3500க்கு மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
|
|
|
கன்று ஈன்றாமலே 24 மணிநேரம் பால் கறக்கும் அதிசய பசுமாடு!
[Saturday 2022-11-05 16:00]
|
பசுமாடு ஒன்று கன்று ஈன்றாமலே 24 மணிநேரம் பால் கறக்கும் அதிசயம் தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்துள்ளது. தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள நந்தவனப்பட்டியை சேர்ந்த பெருமாள்(50) மற்றும் மயில்(460 தம்பதிகள். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருந்து வருகின்றனர். விவசாயம் பார்த்து வரும் பெருமாள் கால்நடைகளையும் வளர்த்து வரும் நிலையில், சமீபத்தில் கன்றுக்குட்டி ஒன்றினை வாங்கி வளர்த்து வந்துள்ளார்.
|
|
|
இலங்கையில் பதிவான ஆபத்தான அதிசயம்!
[Tuesday 2022-11-01 18:00]
|
இலங்கையில் யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கடற்பரப்பில் சுழல் காற்று கடல் நீரை அள்ளிச் செல்லும் வீடியோ வைரலாகி வருகின்றது. இதில் கடல் நீர் சுழல் போல் தோன்றி வானத்தை நோக்கிச் சென்றது. சில நிமிடங்கள் நீடித்த காட்சி பிறகு கலைந்து சென்றதாக நேரில் பார்த்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர். கடற்பரப்பில் மேகம் கீழிறங்கி வந்து கடல் நீர் எடுக்கும் அரிய நிகழ்வு ரொனாடோ எனப்படும் ஒருவகைச் சூழல் காற்று ஆகும்.
|
|
|
உலக சாதனை படைத்த பறவை: எப்படி தெரியுமா?
[Sunday 2022-10-30 16:00]
|
வருடத்தின் இந்த நேரத்தில் மில்லியன் கணக்கான பறவைகள் இடம்பெயர்கின்றன. விமானத்தில், அவை அடுத்த சில மாதங்களுக்கு இனப்பெருக்கம் செய்யும் இடங்களுக்கும், உணவளிக்கும் இடங்களுக்கும் செல்கின்றன,பலர் குளிர்ந்த காலநிலையிலிருந்து தப்பிக்க முயற்சி செய்கிறார்கள்.
|
|
|
கனடாவில் இரு இலங்கை தமிழர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்!
[Thursday 2022-10-27 18:00]
|
கனடாவில் நண்பர்களான இரண்டு இலங்கை தமிழர்களுக்கு லொட்டரியில் மிகப்பெரிய பரிசு விழுந்துள்ளது. Ajaxல் வசிக்கும் Vikneswararajah Amirthalingam மற்றும் Paramsothy (Param) Kathirgamu ஆகிய இருவரும் 10 ஆண்டுகால நண்பர்கள் ஆவர். இருவரும் இணைந்து லொட்டரி விளையாட்டில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.
|
|
|
பிரபல நடிகை போல மாற முயற்சித்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி?
[Wednesday 2022-10-26 18:00]
|
முகம் ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி போல மாற அறுவை சிகிச்சைகள் மேற்கொண்டதாக கூறிய ஈரானிய பெண், அவை அனைத்தும் ஒப்பனை மற்றும் போலியாக உருவாக்கப்பட்டவை என ஒப்புக் கொண்டுள்ளார். கடந்த 2017ஆம் ஆண்டு ஈரானைச் சேர்ந்த சஹர் தபார் என்ற பெண், ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலியை போல் தோற்றம் வேண்டும் என பலமுறை அறுவை சிகிச்சை செய்ததாக கூறினார்.
|
|
|
சூரிய கிரகணத்தில் செங்குத்தாக நிற்கும் உலக்கை!
[Tuesday 2022-10-25 19:00]
|
உலக்கை எந்தப் பிடிமானமும் இன்றி செங்குத்தாக நிற்பதன் அடிப்படையில் பழைய காலங்களில் சூரிய / சந்திர கிரகணங்களைக் கணக்கிட்டுள்ளனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று சூரிய கிரகணம் தெரியத் தொடங்கியது. தமிழகத்தில் 5.14 மணி முதல் 5.44 மணி வரை சூரிய கிரகணத்தை காண முடியும். தமிழகத்தில் 8 சதவீதம் அளவிற்கு மட்டுமே சூரியன் மறைப்பு நிகழ்ந்தது.
|
|
|
புகை கக்கும் அதிசய பறவை!
[Thursday 2022-10-20 18:00]
|
பறவை ஒன்று தனது வாயில் இருந்து புகையை கக்கும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. காட்டுயிர் புகைப்பட கலைஞர்கள் எப்போதும் அரிதான விஷயங்களை படம் பிடிப்பது வழக்கம். அந்த வகையில் புகைப்பட கலைஞர் ஒருவர் ஒரு பறவையை படம் பிடித்துள்ளார். அந்த பறவை செய்யும் செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
|
|
|
இலங்கையில் புதிய வகை கொசு கண்டுபிடிப்பு!
[Sunday 2022-10-16 16:00]
|
மருத்துவ ஆராய்ச்சி குழு இலங்கையின் பல்லுயிர் பெருக்கத்தை அதிகரிக்கும் புதிய வகை நுளம்பைக் கண்டுபிடித்துள்ளது. இலங்கையின் மீரிகம மற்றும் களுத்துறை பிரதேசங்களில் இந்த நுளம்பு இனம் பதிவாகியுள்ளதாக சுகாதார நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் திசானக திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
|
|
|
76,000 டொலர்களுக்கு விலைபோன அரியவகை ஜீன்ஸ் பேண்ட்!
[Friday 2022-10-14 18:00]
|
மெக்சிகோவில் 1880-களில் தயாரிக்கப்பட்ட பழமையான ஜீன்ஸ் பேண்ட் ஒன்று, ஏலத்தில் 76 ஆயிரம் அமெரிக்க டொலர்களுக்கு விற்பனையாகி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அமெரிக்காவின் மேற்கு பகுதியில் பாழடைந்த சுரங்கத்தில் ஜீன்ஸ் பேண்ட் ஒன்றை சில ஆண்டுகளுக்கு முன்னர் கண்டுபிடித்திருக்கின்றனர்.
|
|
|
இறந்து 90 நிமிடங்களுக்குப் பின் உயிர்பெற்ற அதிசய நபர்!
[Wednesday 2022-10-12 19:00]
|
சமீபத்தில் அவுஸ்திரேலியா நாட்டவரான Alistair Blake (61) என்பவர், மாரடைப்பால் உயிரிழந்தார். மருத்துவர்கள் அவரை காப்பாற்ற எடுத்த கடுமையான முயற்சியைத் தொடர்ந்து, உயிரிழந்து 90 நிமிடங்களுக்குப் பின் அவர் மீண்டும் உயிர்பெற்றார். அவரிடம், நீங்கள் உயிரிழந்தபோது என்ன பார்த்தீர்கள் என பலரும் கேட்கிறார்களாம்.
|
|
|
சொந்த நிறுவனத்தை வெறும் 1 யூரோவுக்கு ரஷ்யாவிடம் விற்ற நிசான்!
[Wednesday 2022-10-12 06:00]
|
ரஷ்யாவில் நிசான் மோட்டார் நிறுவனம் தங்களது சொந்த நிறுவனத்தை வெறும் 1 யூரோ தொகைக்கு ரஷ்ய அரசு நிறுவனத்திடம் விற்றுள்ளது தொழில்துறையில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நிசான் மோட்டார் நிறுவனத்தின் மொத்த இழப்பு 687 மில்லியன் டொலர் என தெரியவந்துள்ளது. ஜப்பான் மோட்டார் நிறுவனமான நிசான் ரஷ்யாவில் தங்களின் மொத்த பங்கையும் அரசு சார்பு நிறுவனமான NAMI- இடம் ஒப்படைத்துள்ளது.
|
|
|
எவ்வாறு கடலின் ஆழம் கணக்கிடப்படுகிறது?
[Sunday 2022-10-09 16:00]
|
புவியின் பரப்பில் 70 விழுக்காட்டை ஆக்கிரமித்துள்ள உப்பான நீர் கொண்ட தொடர்ச்சியான நீர்நிலையே கடல் ஆகும். இதன் ஆழத்தை கண்டறிய 19ம் நூற்றாண்டில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது, அப்போது நவீனக் கருவிகள் இல்லாததால் மிக நீளமான கயிற்றை அல்லது சங்கிலியைக் கடலின் உள்ளே ஆங்காங்கே இறக்கி மிகவும் பழமையான முறையை மேற்கொண்டு, சுமார் 7000 இடங்களில் ஆழம் கண்டறிந்தனர்.
|
|
|
கடலுக்கடியில் 11 வருடங்களாக மனைவியின் உடலை தேடிவரும் நபர்!
[Friday 2022-10-07 18:00]
|
ஜப்பானில் சுனாமியில் சிக்கி மாயமான தனது மனைவியை 11 ஆண்டுகளாக கணவர் ஒருவர் தொடர்ந்து தேடி வரும் சம்பவம் தொடர்ப்பில் தகவல் வெளியாகியுள்ளது. ஜப்பானில் 2011ல் ஏற்பட்ட சக்திவாய்ந்த சுனாமியால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட பகுதி Onagawa என கூறப்படுகிறது. இந்த பகுதியில் தான் Yasuo Takamatsu தமது மனைவியை சுனாமியில் தொலைத்துள்ளார்.
|
|
|
வெளிநாட்டு தம்பதி படைத்துள்ள வினோத சாதனை!
[Wednesday 2022-10-05 18:00]
|
தற்போது இணையத்தில் பலரை வியக்க வைக்ககூடிய வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. அந்த வகையில் உலகிலேயே மிகக் குள்ளமான நபரொருவர் உயரமான பெண்ணொருவரை திருமணம் செய்துள்ளார். இந்த திருமணம் கின்னஸ் சாதனை படைத்துள்ளது.
|
|
|
மனித மாதிரி ரோபோவை அறிமுகப்படுத்திய டெஸ்லா!
[Tuesday 2022-10-04 17:00]
|
உலகின் கோடீஸ்வரர்களில் ஒருவரான ஈலோன் மஸ்க் தமது டெஸ்லா எலக்ட்ரிக் கார் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட மனித மாதிரி ரோபோவின் அறிமுகப்படுத்தியுள்ளார். ஆப்டிமஸ் என்று அழைக்கப்படும் இந்த ரோபோ, சிலிக்கான் பள்ளத்தாக்கு நிகழ்வில் மேடையில் அவர் அறிமுகப்படுத்தினார். அங்கு அது பார்வையாளர்களுக்கு கை அசைத்தது. டெஸ்லாவின் வருடாந்திர செயற்கை நுண்ணறிவு நாள் நிகழ்ச்சியில், இந்த ரோபோவின் முன்மாதிரி அறிமுகப்படுத்தப்பட்டது.
|
|
|
மனைவி போட்ட சவால்: ஏற்றுக்கொண்டு செய்து காட்டிய கணவன்!
[Monday 2022-10-03 18:00]
|
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள கடிய புலங்காவை சேர்ந்தவர் வரதவீர வெங்கட சத்தியநாராயணா. அவருடைய மனைவி லாவண்யா. இவர்கள் திருமலை திருப்பதிக்கு நடைபயணமாக நேர்த்திக்கடன் செலுத்த சென்றுள்ளனர். மலை படிக்கட்டுகளில் கணவர் சத்யநாராயணா வேகமாக படியேறுவதை கவனித்த லாவண்யா, முடிந்தால் என்னை தூக்கி தோள் மீது வைத்துக்கொண்டு படியேறுங்கள் என சவால் விட்டுள்ளார்.
|
|
|
ஒரே நேரத்தில் 200 லொட்டரியை வாங்கிய அமெரிக்கருக்கு அடித்த அதிர்ஷ்டம்!
[Thursday 2022-09-29 19:00]
|
அமெரிக்காவில் விர்ஜீனியா மாகாணத்தில் உள்ள அலெக்ஸ்சாண்ட்ரியா நகரை சேர்ந்தவர் அலி கெமி. இவர், அவரின் அதிர்ஷ்டத்தை பரிசோதிக்க, கடந்த 6 ஆம் தேதி, விர்ஜீனியாவில் உள்ள கடை ஒன்றில் 200 ஒரு டாலர் லொட்டரி டிக்கெட்களை வாங்கியுள்ளார். அதில் வாங்கிய அனைத்து லொட்டரியிலும் ஒரே மாதிரியான நான்கு எண்களை உள்ளீடு செய்ய திட்டமிட்டுள்ளார்.
|
|
|
உலகின் மோசமான கழிவறையை கண்டுபிடிக்க நாடு நாடாக சுற்றித்திரியும் நபர்! காரணம் என்ன?
[Monday 2022-09-26 18:00]
|
பிரிட்டன் நாட்டை சேர்ந்த கிரஹாம் அஸ்கி (Graham Askey)58. என்பவர் blog ஒன்றை நடத்தி வருகிறார். அதன்படி உலகத்தின் மிகவும் மோசமான கழிவறையை கண்டுபிடிக்கும் ஆர்வத்துடன் இவர் தனது பயணத்தை துவங்கியிருக்கிறார். இதற்காகவே அவர், 91 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார். ஏராளமான மலைப்பிரதேசங்கள், குக்கிராமங்கள், அசாதாரண வானிலை கொண்ட இடங்கள் என இவருடைய நெடும்பயணம் தொடர்ந்திருக்கிறது.
|
|
|
சுடுகாட்டில் 6 அடி ஆழ குழியில் வாழும் விசித்திர மனிதர்!
[Saturday 2022-09-24 20:00]
|
தொண்டைப் பகுதியில் இருந்த கேன்சர் நோய் மருத்துவமனைக்கு போகமலேயே சரியானதால் அம்மனுக்கு சுடுகாட்டில் 6 அடி குழி தோண்டி அதில் இரவு பகலாக நபர் ஒருவர் விரதமிருந்து பூஜை செய்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
|
|
|
பசியைப்போக்கும் இயந்திரத்தை அறிமுகப்படுத்திய துபாய்!
[Wednesday 2022-09-21 19:00]
|
பசியுடன் ஒருவரும் வாடக்கூடாது என்ற உயர்ந்த எண்ணத்தில், துபாய் முழுதும் ஆங்காங்கே சூடான ரொட்டியை இலவசமாக அளிக்கும், ‘வெண்டிங்’ இயந்திரங்களை அந்நாட்டு அரசு நிறுவியுள்ளது. மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில், வெளிநாடுகளில் இருந்து வந்து பணிபுரிவோர் அதிக எண்ணிக்கையில் வசிக்கின்றனர்.
|
|
|
குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட முதல் ஓநாய்: சாதித்துக்காட்டிய சீனா!
[Tuesday 2022-09-20 19:00]
|
சீனா சினோஜீன் பயோடெக்னாலஜி. சீனா நாட்டை சேர்ந்த சினோஜீன் பயோடெக்னாலஜி நிறுவனமானது ஆர்க்டிக் ஓநாய் ஒன்றை குளோனிங் மூலம் வெற்றிகரமாக உருவாக்கி சாதனை படைத்துள்ளது. இந்த ஓநாய்க்கு மாயா என்று பெயரிடப்பட்டுள்ளது. உலகில் குளோனிங் முறையில் பிறந்த முதல் ஓநாய் இதுவே ஆகும்.
|
|
|
திடீரென சிவப்பு நிறத்தில் மாறிய உக்ரைன் நதி!
[Saturday 2022-09-17 16:00]
|
உக்ரைனிலுள்ள நதி ஒன்று திடீரென சிவப்பு நிறத்தில் மாறியுள்ளதால் மக்கள் குழப்பமடைந்துள்ளார்கள். வியாழக்கிழமை, மத்திய உக்ரைனிலுள்ள Kryvyi Rih என்ற நகரின்மீது ரஷ்யப் படைகள் எட்டு ஏவுகணைகளை வீசின. இந்தத் தாக்குதலில், நகரின் நீரேற்று மையம் ஒன்று சேதமடைந்ததால், Inhulets நதியில் வெள்ளம் பெருக்கெடுத்தது.
|
|
|
வயிறு வலியால் துடித்த இளைஞர்: மருத்துவர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!
[Wednesday 2022-09-14 18:00]
|
மேற்கு வங்க மாநிலத்தில் வயிறு வலியால் துடித்த இளைஞர் ஒருவரின் வயிற்றில் ஏழரை இன்ச் அளவிலான சென்ட் பாட்டில் இருந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் இயங்கிவரும் பர்த்வான் மருத்துவக் கல்லூரிக்கு கடந்த வாரம் புதன்கிழமை 27 வயது இளைஞர் ஒருவர் வயிற்றுவலி காரணமாக சிகிச்சைக்கு மருத்துவரை அணுகியுள்ளார்.
|
|
|
"15 மனைவிகள், 107 குழந்தைகள்" - மிரள வைத்த நபர்!
[Sunday 2022-09-11 16:00]
|
கென்யாவில் நபர் ஒருவர் 15 மனைவிகள் மற்றும் 107 குழந்தைகளுடன் ஒரே வீட்டில் வசிப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆப்பிரிக்க நாடான கென்யாவின் மேற்கு பகுதியில் உள்ள கிராமத்தை சேர்ந்தவர் சாகாயோ கலலூயானா. 61 வயதான இவர் 15 பெண்களை திருமணம் செய்துள்ளார். மேலும் அவர்களுடன் ஒன்றாகவே வசித்து வருகிறார்.
|
|
|
பிரித்தானிய ராணியார் எழுதிய ரகசிய கடிதம்: 63 ஆண்டுகளுக்கு பிறகு தான் திறக்க முடியுமாம்!
[Saturday 2022-09-10 06:00]
|
பிரித்தானிய ராணியார் இரண்டாம் எலிசபெத் எழுதிய ரகசியம் கடிதம் ஒன்று, இன்னும் 63 ஆண்டுகளுக்கு பிறகு மட்டுமே அதனை திறக்க முடியும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மறைந்த பிரித்தானிய ராணியின் கைப்பட எழுதப்பட்ட குறித்த கடிதமானது சிட்னி மக்களுக்காக எழுதப்பட்டது, சிட்னி நகரத்தின் வரலாற்று சிறப்புமிக்க ராணி விக்டோரியா கட்டிடத்தில் பாதுகாப்பு பெட்டகம் ஒன்றில் மூடப்பட்டு பாதுகாப்பாக உள்ளது.
|
|
|
ஒரே இரவில் மாறிய ஏழை முதியவரின் வாழ்க்கை!
[Thursday 2022-09-08 18:00]
|
கேரளாவில் தினக்கூலி வேலை பார்க்கும் 60 வயது முதியவரின் போட்டோஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது. கேரளா மாநிலம் கோழிக்கோடு அடுத்த கொடிவள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மம்மிக்கா. 60 வயதான இவர் அப்பகுதியில் தினக்கூலி வேலைகளை செய்து வருகிறார். அனைவரிடமும் சிரித்து சகஜமாக பழகும் இவர், எந்த வீட்டில் என்ன கூலி வேலையாக இருந்தாலும் முதல் ஆளாக சென்று செய்பவர்.
|
|
|
ஆண்களின் விந்தணுக்களில் ஆபரணங்கள் தயாரிக்கும் கனேடிய பெண்!
[Friday 2022-09-02 19:00]
|
கனடாவை சேர்ந்த அமாண்டா பூத் என்ற பெண்மணி ஆண்களின் விந்தணு, தாய்ப்பால், உயிரிழந்தவர்களின் சாம்பல் ஆகியவற்றை கொண்டு நகை செய்து விற்பனை நடத்தி வருகிறார். மோதிரங்கள், செயின்கள், வளையல்கள் என அனைத்து ஆடம்பர மற்றும் அலங்கார நகைகள் உலக மக்கள் அனைவராலும் விருப்பத்துடன் வாங்கப்பட்டு அணியப்படுகிறது.
|
|
|
|