|
|
பிராங்போட் தமிழலாய பொங்கல் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது: - நாடுகடந்த தமிழீழ அரசாங்க பிரதிநிதிகள் பங்கெடுப்பு !
[Thursday 2016-01-28 23:00]
|
ஜேர்மன் பிராங்போட் தமிழலாயலம் முன்னெடுத்திருந்த பொங்கல் விழா வெகுசிறப்பாக இடம்பெற்றுள்ளது. தமிழர்களின் கலை
|
|
|
வ/ஒலுமடு அ.த.க.பாடசாலையின் இல்ல திறனாய்வு போட்டி:
[Thursday 2016-01-28 22:00]
|
வவுனியா வடக்கு ஒலுமடு அ.த.க.பாடசாலையின் வருடாந்த இல்ல திறனாய்வு போட்டி பாடசாலையின் அதிபர் திரு.விமலேந்திரன் தலைமையில் 28.01.2016 அன்று நடைபெற்றது.
இந்த நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்கள் செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் லிங்கநாதன், தியாகராசா, இந்திரராசா, நெடுங்கேணி பிரதேச செயலாளர் திரு.சத்தியசீலன், நெடுங்கேணி பிரதேசசபையின் முன்னாள் உறுப்பினர்கள் பூபாலசிங்கம், செந்தூரன், வவுனியா வடக்கு பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தின் முன்னாள் தலைவரும், மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவருமான தேவராசா, கோட்டக்கல்வி அதிகாரி, அதிபர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், பாடசாலையின் நலன்விரும்பிகள் எனப்பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
|
|
|
[Thursday 2016-01-28 19:00]
|
இத்தாலி பலேர்மோ மாநகரில் 24/01/2016 ஞாயிறு மாலை 4:00 மணியளவில் தைப்பொங்கல் சிறப்பு நிகழ்வு ஆரம்பமாகியது. ஆரம்ப நிகழ்வாக மண்டபத்திற்கு வெளியே மிகச் சிறப்பாக தமிழ்க்கலாச்சார முறைப்படி தைப்பொங்கல் இடம்பெற்றது. பின்னர் மண்டபத்தில் அரங்க நிகழ்வுகள் தமிழீழ தேசியக்கொடியே ற்றலோடு அருட்தந்தை மற்றும் ஆலய பூசகர்கள்,தமிழ்த் தேசிய கட்டமைப்பின் பிரதிநிதிகள்,தமிழ்ச்சோலை,கலைப்பள்ளி பொறுப்பாசிரியர்கள் மங்கள விளக்கை ஏற்றிவைக்க நிகழ்வுகள் ஆரம்பமாகியது. பாடல்கள்,நடனங்கள்,கவிதைகள் சிறப்புரைகள் என்பன இடம்பெற்றன .இந்நிகழ்வில் பெருந்திரளான மக்கள் கலந்து சிறப்பித்தார்கள்.
|
|
|
கிளிநொச்சி - செஞ்சோலையின் மூன்றாம் ஆண்டு நிறைவுவிழா:
[Monday 2016-01-25 22:00]
|
கிளிநொச்சியில் அமைந்துள்ள செஞ்சோலை சிறுவர் இல்லம் ஆரம்பிக்கப்பட்டு மூன்றாம் ஆண்டை பூர்த்தி செய்து பல நிறைவுகளைக் கண்டு கம்பீரமாகவும், மகிழ்வுடனும் பொலிவு தருகின்றது. இதன் மூன்றாம் ஆண்டு நிறைவை கொண்டாடும் முகமாக செஞ்சோலை குடும்பத்தினரால் இன்று நிறைவுவிழா நிகழ்வுகள் செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் இடம்பெற்றது. இன்று காலை 10.30 மணியளவில் ஆரம்பமான நிகழ்வில் முதலில் விளக்கேற்றி, மாலை அணிவித்து விருந்தினர்கள் வரவேற்கப்பட்டனர். இந்நிகழ்வில்
இல்ல தந்தையும் NERDO நிறுவனத்தின் செயலருமான திரு.செ.பத்மநாதன் அவர்களும்,
பிரதம விருந்தினராக திரு.T.விஸ்வரூபன் (ஆணையாளர்- நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம்)
|
|
|
ஸ்ரார்ஸ்பூர்க் மாநகரில் சிறப்பாகக் கொண்டாடப்பட்ட தமிழர் புத்தாண்டு 2047
[Saturday 2016-01-23 20:00]
|
திருவள்ளுவர் ஆண்டு 2047 தைத்திருநாள் ஸ்ரார்ஸ்பூர்க் மாநகரில் 17.01.2016 அன்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. பொங்கல் பொங்கி கதிரவனுக்கு நன்றி செலுத்தி நடைபெற்ற விழாவில் ஸ்ரார்ஸ்பூர்க் மாநகர உதவி நகரபிதா, ஸ்ரார்ஸ்பூர்க் ஐரோப்பிய அபிவிருத்திக் குழு உப தலைவி, ஐரோப்பிய பெண்கள் அமைப்புத் தலைவி, மற்றும் அருட்தந்தை ஜெரார்ட் அவர்களுடன் வேற்றின மக்களின் அமைப்பு பிரதிநிதிகள், தமிழ்ச் சோலை மாணவர்கள் மற்றும் ஆசிரியரும் மங்கள விளக்கேற்றிச் சிறப்பித்திருந்தனர். தமிழீழ மண்மீட்புப் போரில் வீரச்சாவடைந்த மாவீரர் மற்றும் பொதுமக்களுக்காக அக வணக்கம் செலுத்தி கலைநிகழ்வுகள் தொடக்கப்பட்டன. அந்தவகையில் எழுச்சி நடனங்கள், பரதநாட்டியம், காவடி, கும்மி, கோலட்டம், நாடகம், வயலின் இசை மற்றும் மேலைத்தேய நடனங்களுடன் கவிதை, பேச்சு, எழுச்சி கானங்கள் என்பனவும் இடம்பெற்றன.
|
|
|
பசுமை நிறைந்த நிகழ்வுகளை பகிர்ந்து கொள்ள 1973 ஆம் ஆண்டு பேராதனை பல்கலைகழக கலைப்பிரிவு மாணவர்களின் ஒன்று கூடல்:
[Friday 2016-01-22 23:00]
|
வவுனியா குருமன் காட்டில் அமைந்துள்ள ஹோட்டல் பிரின்சஸ் றோஸ் இல் கடந்த
ஞாயிற்று கிழமை 1973 ஆம் ஆண்டு பேராதனை பல்கலைகழக கலைப்பிரிவின் மாணவர்களின் பசுமை நிறைந்த நிகழ்வுகளை பகிர்ந்து கொள்ளும் ஒன்று கூடல் நிகழ்வு சிறப்பாக இடம் பெற்றது இந்நிகழ்வில் கனடா.அவுஸ்ரேலியா,லண்டன் இலங்கை ஆகிய நாடுகளில் வசிக்கும் 56 மாணவர்களில் 26க்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.இந் நிகழ்வில் கலந்து கொண்ட பழைய மாணவர்கள் அனைவரும் பேராசிரியர்களாகவும் ,விரிவுரையாளராகவும் தொழில் அதிபர்களாகவும், கல்விமான்களாகவும் விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.இந்நிகழ்வு வரலாற்று நிகழ்வாகவே பார்க்கப்படுகின்றது.கலந்து கொண்டவர்கள் தாங்கள் கல்வி பயிலும் காலத்தில் தங்களுக்கு ஏற்பட்ட பசுமையான நிகழ்வுகளையும் நிறைவேறமுடியாத ஆசைகளையும் தமது இலட்சியங்களையும் தாங்கள் அடைந்த வெற்றிகளையும் பல்கலைகழக பகிடிவதை அனுபவங்களையும் எடுத்து கூறினார். அவர்களுடைய பகிர்வுகள் மிகவும் சுவாரஷ்யமாக இருந்தது.
|
|
|
அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை மொரிசியஸ் நாட்டு எதிர்கட்சித் தலைவருடன் சந்திப்பு:
[Thursday 2016-01-21 21:00]
|
மௌரிசியஸ் நாட்டில் அனைத்துலக ஈழத் தமிழர் அவையின் அங்கத்துவ அமைப்பான மௌரிசியஸ் தமிழ் கோயில்களின் கூட்டமைப்பின் ஒழுங்கமைப்பில் மௌரிசியசில் இருக்கும் அனைத்து தமிழ் அமைப்புக்களும் ஒருங்கிணைந்து நடாத்திய தமிழர் திருநாள் தை பொங்கலை யொட்டி மலேசியா சிங்கப்பூர் தமிழ் நாடு ஆகிய இடங்களில் இருந்து வந்த நூற்றுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கு பற்றிய தமிழ் கலை காலாச்சார பொங்கு தமிழ் நிகழ்வில் அனைத்துலக ஈழத் தமிழர் மக்கள் அவையின் வெளிவிவகார இணைப்பாளர் திரு திருச்சோதி அவர்கள் பிரான்சில் இருந்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.தமிழ் மக்களின் பூர்வீகம் கலை கலாச்சாரத்தை மையப்படுத்தி நிகழ்சிகள் நடைபெற்றன.
|
|
|
இலண்டனில் நடைபெற்ற பொங்கல் விழா !
[Wednesday 2016-01-20 13:00]
|
இலண்டன் தமிழர் முன்னேற்றக் கழகமும், திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளியும் இணைந்து இந்த ஆண்டு ஜனவரி 16ஆம் நாள், தமிழர் திருநாளாகிய பொங்கல் விழாவினை மிகவும் சிறப்பாக கொண்டாடினர். உழவுத் தொழிலையும், இயற்கையையும் போற்றும் தமிழரின் தனி அடையாளமான உழவர் திருநாள் விழாவினை ஒவ்வொரு ஆண்டும் இலண்டனில் கொண்டாடி வருகின்றனர். தமிழர் முன்னேற்றக் கழகமும் திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளியும் துவங்கப்பட்டு நாற்பது ஆண்டுகள் நிறைவையொட்டி இந்த ஆண்டு பொங்கல் விழா மிகக் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
|
|
|
கனடியத் தமிழர் தேசிய அவை(NCCT) தமிழக முதலமைச்சர் நிவாரண நிதியினுடாக 21,000 கனடிய டொலர்களை நேரடியாக கையளித்தார்கள்.
[Tuesday 2016-01-19 18:00]
|
எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே என்பதையும் உலகில் எங்கு தமிழர்கள் துயருற்றாலும் உலகெங்கும் வாழும் தமிழர்கள் துடித்தெழுவார்கள் என்பதையும் கடந்த காலங்களில் உணர்வாகவும் செயலாகவும் நிரூபித்து காட்டியவர்கள் அன்னைத் தமிழக உறவுகள்.
ஈழ தமிழ் மக்களின் துயர் கண்டு துடி துடித்து உயிர் துறக்கும் ஈகைகள் வரை தமிழக உறவுகள் கை கொடுத்தாற்றிய கால கடன்களை மறவாமல் நன்றியுணர்வோடு அவர்கள் இடர் களைய கடனாற்ற உலகெங்கும் வாழும் ஈழத் தமிழ் உறவுகள் முதன் முதலாக முன்வந்த நிகழ்வாக அண்மையில் வந்த வெள்ள இடர் களைவு பணி அமைந்தது.
|
|
|
[Tuesday 2016-01-19 12:00]
|
தமிழ் நாட்டின் திருச்சி மாநகரிலிருந்து வெளிவரும்
|
|
|
"வட்டுக்கோட்டை தீர்மானம் 40 " வரலாற்று சிறப்பு மிக்க ஆண்டில் பேர்லின் நகரில் நடைபெற்ற தமிழர் திருநாள் 2016
[Monday 2016-01-18 18:00]
|
"வட்டுக்கோட்டை தீர்மானம் 40 " வரலாற்று சிறப்பு மிக்க ஆண்டில் பேர்லின் நகரில் தமிழ்க் கல்விக் கழகத்தின் தமிழாலய பொங்கல் விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது .
தமிழர் திருநாள் அரங்க நிகழ்வுகள் ஆரம்பிக்கும் முன்னர் தமிழ் மக்களின் இருப்புக்காக தம்முயிரை தியாகம் செய்த உன்னத செல்வங்களுக்கு ஈகச்சுடர் ஏற்றி மலர் மாலை அணிவித்து அகவணக்கம் செய்யப்பட்டது . புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் தமிழின அடையாளத்தையும் , தமிழ் மொழியையும் ,தமிழர் பண்பாட்டையும் , கலை கலாசாரத்தையும் அழிந்து விடாமல் பாதுகாக்கும் வகையில் தமிழர் திருநாள் மிகவும் சிறப்பாக தமிழ் கல்விக் கழகத்தின் வழிநடத்தலில் பேர்லின் தமிழாலய நிர்வாகத்தின் ஒழுங்கமைப்பில் ,. தமிழாலய மாணவர்களின் ஆற்றலில் அமைந்திருந்தது.
|
|
|
பாரிசில் மிகவும் சிறப்பாக இடம்பெற்ற தமிழர் திருநாள் பொங்கல் விழா நிகழ்வு!
[Monday 2016-01-18 18:00]
|
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு பிரான்சு , செந்தனி தமிழ்ச்சங்கம் 93 இணைந்து நடாத்திய பொங்கல் விழா செந்தனி போர்த்துபறி பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சவினி சுர் ஓர் மாநகர சபை உறுப்பினர் டேவிட் பாப்ர் (David Fabre) மற்றும் பிரான்சு மூதாளர் அவை உறுப்பினர், தமிழ்ச் சங்க உறுப்பினர்கள் என அனைவரும் இணைந்து பொங்கலை ஆரம்பித்துவைத்தமை கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமான பொங்கல் நிகழ்வைத்தொடர்ந்து பிரமுகர்கள் அனைவரும் வாத்திய இசையுடன் வரவேற்கப்பட்டனர். தொடர்ந்து அரங்க நிகழ்வுகள் ஆரம்பமாகின. அரங்கில் மங்கள விளக்கேற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டது. தொடர்ந்து தவில் நாதசுர வாத்திய இசைக்கச்சேரி நிகழ்வை அலங்கரித்திருந்தன.
|
|
|
பிரான்சு ஆர்ஜெந்தே தமிழ் சங்கம், ஆர்ஜெந்தே மாநகர சபை இணைந்து நடாத்திய தமிழர் திருநாள் பொங்கல் நிகழ்வு:
[Monday 2016-01-18 09:00]
|
பிரான்சு ஆர்ஜெந்தே தமிழ் சங்கம், ஆர்ஜெந்தே மாநகர சபை இணைந்து நடாத்திய தமிழர் திருநாள் பொங்கல் நிகழ்வு ஆர்ஜெந்தே தமிழ்ச் சங்க மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. இந்நிகழ்வில் மங்கள விளக்கினை ஆர்ஜெந்தே தமிழ்ச்சோலை பழைய மாணவர்கள் ஏற்றிவைக்க, பிரெஞ்சு தேசியப் பேரவை உறுப்பினர் பிலிப் டுசே(Phlippe doucet - Conseil national), ஆர்ஜெந்தே நகரபிதா ஜோர்ஜ் மொந்ரோ (Georges motiron - maire d'argenteui) ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு பொங்கல் நிகழ்வை பானைவைத்து ஆரம்பித்துவைத்தனர்.
|
|
|
பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பின் 6து வருட தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல்ப் பெரு விழா:
[Sunday 2016-01-17 19:00]
|
தை 1 அன்று தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா. மகரத்திருநாளாக தமிழர்களால தமிழீழம்,தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, மொரிசியசு என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. இவ்விழா சமயங்கள் கடந்து அனேகத் தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாகக் கொண்டாடப்படுகிறது.
|
|
|
தரணியெங்கும் தமிழர்களால் கொண்டாடப்பட்ட தைப்பொங்கல்!
- ஆலயங்களில் விசேட வழிபாடுகள்
[Friday 2016-01-15 19:00]
|
தரணி எங்கும் வாழும் தமிழர்களால் இன்று தைப்பொங்கல் கொண்டாடப்படுகின்றது. இலங்கையில் பல்வேறு பகுதிகளிலும் இன்று காலை முதலே மக்கள் உற்சாகத்துடன் பொங்கல் பொங்கி அயலவர்கள், சுற்றத்தினருடன் பகிர்ந்து கொண்டனர். அத்துடன் வெடிகள் கொளுத்தியும் மகிழ்ந்தனர். தைப்பொங்கல் தினமான இன்று ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றன. அவற்றிலும் மக்கள் கலந்து கொண்டனர்.
|
|
|
மலையக தோட்டங்களில் தை பொங்கல் கொண்டாட்டமும் ராமர் பஜனையும்:
[Friday 2016-01-15 13:00]
|
தை திருநாளாம் தை பொங்கல் இன்று (15) உலகளாவிய ரிதியில் இந்துமக்கள் கொண்டி வரும் வேலையில் பெருந்தோட்ட மக்களும் அதில் இணைந்து கொள்கின்றார்கள். மலையகத்தில் காணப்படும் அனைத்து தோட்ட ஆலயங்களிலும் இன்று விஷேட பூஜைகளும் ஆராதனைகளும் நடைபெற்றது. அதன் ஒரு கட்டமாக புஸ்ஸல்லாவ மெல்போட் தோட்டத்தில் தை பொங்களும் ராமர் பஜனையை முன்னிட்டு ராமர் தேர் பவனியும் நடைபெற்றது. இதில் பெரும் திறலான பக்த்தர்கள் கலந்துக் கொணட்டதுடன் ராமர் பக்த்தர்கள் ராமர் பாடல்களை பாடி மகிழ்ந்தனர்.
|
|
|
யேர்மனியின் நூர்பேர்க் நகரில் நடைபெற்ற புத்தாண்டுக்கலைவிழா:
[Tuesday 2016-01-12 19:00]
|
யேர்மனியின் நூர்பேர்க் நகரில் கடந்த 09.01.2016 சனிக்கிழமை அன்று தமிழர்கலாச்சார ஒன்றியத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் புத்தாண்டுக்கலைவிழா இளையோர்களால் சிறப்பாக நடாத்தப்பட்டது . இதில் விடுதலை கானங்களுடன், இசைக்கச்சேரி,விடுதலை நடனங்கள், திரையிசை நடனங்கள்.பரதக்கலை நடனங்கள் சுதந்திரம் நோக்கிய அரசியற்பார்வையுடனான சிறப்புரை,நூர்பேர்க் அரசியல் பிரமுகர்கள் பலரும் ,பல்லினமக்கள் , கலாச்சார ஒன்றியப்பொறுப்பாளர்கள் விருந்தினர்களாக வருகைதந்து எமது இனத்தின் விடுதலை-.சுதந்திரம்- பெறவேண்டும் என்றும் அத்தோடு தமிழ் இளையோர்களின்
செயற்பாட்டை கண்டுவியந்து வாழ்த்திச் சென்றனர். அத்தோடு இவ் நிகழ்வின் ஊடாக தாயக மக்களின் நலனுக்காக சிறிய நன்கொடையும் பெற்றெடுக்கப்பட்டது.
|
|
|
தாயக உறவுகளை வலுப்படுத்த தொடரும் வாழ்வாதார உதவிகள்!
[Friday 2016-01-08 19:00]
|
தமிழின அழிப்பு கொடிய போரினால் பாதிக்கப்பட்ட எமது தாயக உறவுகளை வலுப்படுத்த யேர்மனியில் இயங்கும் Help for Smile அமைப்பு பல்வேறான உதவித்திட்டங்களை தொடர்ச்சியாக செய்து வருகின்றது. அந்தவகையில், அவசர நிவாரண உதவிகள் , சுயதொழில் செய்வதுக்கான உதவித்திட்டம் , சிறுவர்களுக்கான உதவித்திட்டம் என பல்வேறு உதவிகளை மேற்கொண்டு வருகின்றது.
|
|
|
பாட நூல்கள் வழங்கும் தேசிய நிகழ்வு!
[Wednesday 2016-01-06 19:00]
|
2016 ஆம் ஆண்டு பாடசாலை மாணவர்களுக்கான பாட நூல்கள் வழங்கும் தேசிய நிகழ்வு கொழும்பு ஆனந்தா கல்லூரியில் நடைபெற்றது. இதில் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் உட்பட அமைச்சின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
|
|
|
கனடா உறங்கா விழிகள் அமைப்பினால் கல்வி உபகரணங்கள் அன்பளிப்பு:
[Tuesday 2016-01-05 19:00]
|
கனடாவில் இருந்து இயங்கும் தன்னார்வ தொண்டு நிறுவனமான உறங்காவிழிகள் அமைப்பின் அனுசரணையுடன் அறிவொளி கல்வி வளர்ச்சிக் கழக மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வும் கல்வி நிலைய ஆசிரியர் கௌரவிப்பு நிகழ்வும் மாணவர்களது ஆளுமைகளை வெளிப்படுத்தும் நூல்வெளியீடு மற்றும் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான இலவச கல்விச் சேவையை வழங்கி வரும் அறிவொளி கல்வி நிலையத்தில் கல்வி பயிலம் 276 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் சிறுவர் நூல் வெளியீடும், கலைநிகழ்வுகளும் வவுனியா கனகராயன்குளம் மகாவித்தியாலய கணேசன் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (03-01-2016) இடம்பெற்றது.
|
|
|
தமிழ் இசைக் கலைஞர்களை ஊக்குவிக்க IDEAL ISAI INC. நிறுவனம் உதயம்!
[Monday 2016-01-04 08:00]
|
கனடா ரொறண்டோ பெரும்பாகப் பகுதியிலுள்ள தமிழ் இசைக் கலைஞர்களை ஊக்குவிப்பதன் மூலம் இசைக் கலையினை வளர்க்கும் வகையில் முன்னணிக் கலைஞர்கள் ஒன்று கூடி IDEAL ISAI INC. என்ற நிறுவனத்தினை உருவாக்கி உள்ளனர். இதன் அங்குரார்ப்பணக் கூட்டம் இன்று ஞாயிறு (03-01-2016) பிற்பகல் ஸ்காபுறோவிலுள்ள துஊ டீயஙெரநவ ர்யடட மண்டபத்தில் நடைபெற்றது. இந்த ஊடக வியலாளர் மகாநாட்டில் பத்திரிகைகள் தொலைக் காட்சிகள்இ இணையத்தளங்கள் வானொலிகள் ஆகியவற்றினை சேர்ந்த ஊடகவியலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
|
|
|
கரவெட்டி பிரதேச வைத்தியசாலைக்கு பல்லூடக எறியீ கையளிப்பு:
[Sunday 2016-01-03 22:00]
|
யாழ். கரவெட்டி பிரதேச வைத்தியசாலைக்கு பல்லூடக எறியீ (அரடவiஅநனயை pசழதநஉவழச) வழங்கும் நிகழ்வு நேற்று (02.01.2016) இடம்பெற்றது.
வைத்தியக்கலாநிதி சுதாகுமார் அவர்களது தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் புளொட் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்துகொண்டு பல்லூடக எறியீ இனை வைத்தியசாலை நிர்வாகத்திடம் கையளித்தார்.
|
|
|
'ஊடகவியலாளர்களின் நட்பினால் தான் நான் இன்று உயிருடன் உள்ளேன்" -
பத்திரிகையாளர் மாநாட்டில் கலைஞர் ஜெயபாலன் வேண்டுகோள்.
[Friday 2016-01-01 00:00]
|
'ஊடகவியலாளர்களின் நட்பினால் தான் நான் இன்று உயிருடன் உள்ளேன். பிரச்சனையான கால கட்டத்தின் போது அவர்கள் எனக்காக குரல் கொடுத்தார்கள். எழுபதாம் ஆண்டு காலத்தில் வெளிநாடுகளின் பிரதிநிதிகள் இலங்கைக்கு வந்து பத்திரிகையாளர்களை சந்தித்தனர். 1971ம் ஆண்டு இனக்கலவரம் ஏற்பட்ட போது சகல பல்கலைக் கழகங்களினதும் மாணவ கழகத் தலை வர்களும் தமக்கிடையே தொடர்புகளை வைத்திருந்தனர். நாம் செய்த முதற் பணி யாழ் பல்க லைக் கழகத்தில் இருந்த சிங்கள மாணவர்களுக்கு பாதுகாப்பு வழங்கி யது தான். அதே போன்று கொழும்பு பல்கலைக் கழகத்தில் இருந்த தமிழ் மாணவர்களுக்கு சிங்கள மாணவர் கள் பாதுகாப்பு வழங்கினார்கள். 1956,58,77ம் ஆண்டுகளில் இனக்கலவரத்தின் போது தமிழ் மக்கள் அதிகள வில் கொன்றழிக்கப் பட்டார்கள். 1980ம் ஆண்டு தமிழர்களுக்கு சர்வதேச தொடர்புகள் ஏற்பட்டன. அதற்கு ஈழ விடுதலைப் போராட்டம் ஒரு காரணமாகும். 1983 இனக் கலவரத்தின் போது தமிழ் நாடு கொதித்து எழுந்தது. இன்று புலம் பெயர்ந்த தமிழர்கள் தமிழ் நாட்டு தமிழர்களுடன் மிக நெருக்கமாகப் பழகி வருவது வரவேற்கத் தக்கது."
|
|
|
சுழிபுரத்தில் மீன் சந்தையை திறந்து வைத்தார் அனந்தி!
[Thursday 2015-12-31 18:00]
|
வலிகாமம் மேற்கு பிரதேசசபைக்குட்பட்ட சுழிபுரம் பகுதியில் 27.693 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட நவீன மீன் சந்தை இன்று வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. 25.456 மில்லியன் ரூபாய் புறநெகும மூலமும், 5 இலட்சத்து 87 ஆயிரத்து 150 ரூபாய் மக்களின் பங்களிப்புடனும் மிகுதி 1.65 மில்லியன் ரூபாய் சபை நிதியிலும் இந்தக் சந்தைக் கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது.
|
|
|
தமிழ்க்கைதிகளின் விடுதலையினை வலியுறுத்துமாறு பிரித்தானிய பிரதமருக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை மனு!
[Wednesday 2015-12-30 23:00]
|
சிறிலங்காவின் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள போர்க்கைதிகளின் விடுதலைக்கு வலியுறுத்துமாறு பிரித்தானிய பிரதமர் அவர்களுக்கு கோரிக்கை மனுவொன்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் கையளிக்கப்பட்டுள்ளது. ஏலவே கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டங்களையும், தபால் அட்டைப் பரப்புரையொன்றினையும் மேற்கொண்டு வரும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயல்முனைப்பின் ஓர் அங்கமாக இந்த மனு கையளிக்கப்பட்டுள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது கோரிக்கை மனுவிi நா. தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள் பிரித்தானிய பிரதமர் அலுவலகத்திடம் முறையாக டிச 29 திங்கட்கிழமை கையளித்துள்ளனர்.
|
|
|
கொழும்பில் சிறப்பாக நடந்த ஹீலர் பாஸ்கரின் செவி வழி தொடுகை சிகிச்சை பயிற்சி முகாம்!
[Wednesday 2015-12-30 00:00]
|
இலங்கை வந்து உள்ள உலக பிரசித்தி வாய்ந்த செவி வழி தொடுகை சிகிச்சை நிபுணர் ஹீலர் பாஸ்கர் கடந்த வாரம் கொழும்பில் ஒரு நாள் பயிற்சி முகாம் நடத்தினார்.
பம்பலப்பிட்டி கதிரேசன் மண்டபத்தில் இடம்பெற்ற இச்சிகிச்சை முகாமில் நூற்றுக் கணக்கான நோயாளர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். குறிப்பாக சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு இம்முகாம் வரப்பிரசாதமாக அமைந்தது. இதே போல எதிர்வரும் 03 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் துர்க்கா மணி மண்டபத்தில் ஒரு நாள் பயிற்சி முகாம் ஒன்றை நடத்துகின்றார் ஹீலர் பாஸ்கர். ஆர்வலர்கள் 0773023492 என்கிற தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்பு கொண்டு விபரங்களை அறிய முடியும்.
|
|
|
கனடிய தமிழர் தேசிய அவையின் 7ம் கட்ட தாய்த் தமிழ் நாடு வெள்ள நிவாரணப் பணி:
[Monday 2015-12-28 22:00]
|
7ம் கட்டமாக தமிழ் நாட்டு வெள்ள அனர்த்தத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட ஆதி திராவிட, இஸ்லாமிய மக்களை அதிகமாக கொண்ட ஆலம்பூர் மாவட்டத்தில் கனடிய தமிழர் தேசிய அவையினர் தமது பணிகளை டிசெம்பெர் மாதம் 26ம் திகதி காலை 11 மணியிலிருந்து மாலை 1 மணி வரை மேற்கொண்டிருந்தனர். 1130 குடும்பங்களுக்கு அம்மக்களின் தேவையைத் தெரிந்து படுப்பதற்குரிய பாய், போர்வை உட்பட அரிசி பொதியும் வழங்கப்பட்டது. இவ்விசேட நிகழ்வில் கனடிய தமிழர் தேசிய அவையின் உறுப்பினரும், தமிழ் ஊடக பேச்சாளரான தேவா சபாபதியும் மற்றும் பழ நெடுமாறன் ஐயா, ம. நடராஜன் ஐயா, கவிஞ்சர் காசி ஆனந்தன், மணியரசன், ஓவியர் வீர சந்தானம், வணிக சங்கத் தலைவர் வெள்ளையன், தயாரிப்பாளர் மணிவண்ணன், கவிஞ்சர் சிநேகன், இயக்குனர் கௌதமன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். இன்நிகழ்விற்கு தமிழகத்திலிருந்து 10 ற்கும் அதிகமான ஊடகங்கள் வருகை தந்திருந்தனர்.
|
|
|
|