|
|
குமுதினி படுகொலையின் 38வது ஆண்டு நினைவேந்தல்!
[Monday 2023-05-15 20:00]
|
குமுதினி படுகொலையின் 38ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று திங்கட்கிழமை காலை 9 மணிக்கு நெடுந்தீவில் இடம்பெற்றது. குமுதினி படகில் படுகொலை செய்யப்பட்ட 36 பேரின் நினைவாக நெடுந்தீவு இறங்குதுறையிலுள்ள நினைவாலய வளாகத்தில் நினைவேந்தல் இடபெற்றது.
|
|
|
இராணுவத்தினரால் நடாத்தப்பட்ட கரையோர கரப்பதந்தாட்ட போட்டியில் அம்பன் பிங் பொங் வெற்றியீட்டியது!
[Monday 2023-05-15 20:00]
|
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு தாளையடியில் 55 வது காலால் படையணியின் பகுதிக்கு உட்பட்ட கடற் கரையோரத்தை சேர்ந்த 22 விளையாட்டுக் கழகங்களுக்கு கடற்கரையோர கரப்பந்து பயிற்சி 12/01/2023 அன்று ஆரம்பிக்கப்பட்டு கடந்த 12/05/2023 அன்றிலிருந்து தெரிவு போட்டிகள் நடாத்தப்பட்டு நேற்றைய தினம் 14/05/2023 இறுதிப் போட்டி இடம் பெற்றது.
|
|
|
குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தில் அஞ்சலி நிகழ்வு!
[Sunday 2023-05-14 19:00]
|
இன்றையதினம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால், மனித படுகொலை இடம்பெற்ற யாழ். குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் நடைபெற்றது.
|
|
|
பொத்துவிலில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்!
[Sunday 2023-05-14 19:00]
|
வடக்கு கிழக்கு தழுவியரீதியில் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்றிட்டமானது இன்று பிற்பகல் 2 மணியளவில் பொத்துவில் பகுதியில் இடம்பெற்றது. பொத்துவில் சாலம்பையடி பிள்ளையார் ஆலயத்தின் முன்பாக முள்ளிவாய்க்கால் கஞ்சி ஆக்கப்பெற்று வழங்கப்பட்டது.
|
|
|
அம்பாறை மாவட்டத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்திட்டம் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் முன்னெடுப்பு!
[Sunday 2023-05-14 18:00]
|
வடக்கு கிழக்கு தழுவியரீதியில் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால், மே 18 இனப்படுகொலையினை அடுத்த சந்ததிக்கு நினைவூட்டுமுகமாக, இறுதியுத்தத்தில் பொதுமக்களின் பசியாற்றிய முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்திட்டம் இன்று காலை 9 மணியளவில் அம்பாறை திருக்கோயில் பிரதான சந்தைவளாகத்தில் அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தினருடன் இணைந்து முன்னெடுக்கப்பட்டது.
|
|
|
முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாம்!
[Sunday 2023-05-14 18:00]
|
மே 18 முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை முன்னிட்டு பல்வேறு செயற்றிட்டங்கள் தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
|
|
|
யாழ். மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்!
[Sunday 2023-05-14 08:00]
|
யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால் வடக்கு கிழக்கு மாகாணம் தழுவியரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்றிட்டம் கிழக்கு பல்கலைக்கழக கலைகலாசார பீட மாணவர் ஒன்றியத்துடன் இணைந்து மட்டக்களப்பின் பல்வேறு பகுதிகளிலும் நேற்றைய தினம் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.
|
|
|
முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு!
[Sunday 2023-05-14 08:00]
|
நேற்றைய தினம் யாழ்ப்பாணம், முலவைச் சந்தியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரித்து வழங்கப்பட்டது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தினை முன்னிட்டு, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரின் வட்டார அமைப்பாளர் இரத்தினம் சதீஸ் வழங்கப்பட்டது தலையில் இந்த முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.
|
|
|
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் அனுஷ்டிப்பு!
[Friday 2023-05-12 19:00]
|
தமிழினப் படுகொலையை குறிக்கும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் இன்று யாழ்ப்பாணப் பல்கலைகழகத்தில் ஆரம்பமானது. இதில் பல்கலைக்கழக மாணவர்கள் கலந்துகொண்டு நினைவேந்தலையும், அஞ்சலியும் செலுத்தினர்.
|
|
|
சர்வதேச தாதியர் தின நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது!
[Friday 2023-05-12 19:00]
|
சர்வதேச தாதியர் தின நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வு இன்று காலை 10 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.
|
|
|
யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்!
[Friday 2023-05-12 19:00]
|
யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால், வடக்கு கிழக்கு தலைநகரில் முன்னெடுக்கப்பட்டு வரும் மக்கள் பங்களிப்புடனான முள்ளிவாய்க்கால் நினைவுக்கஞ்சியினூடாக அடுத்த சந்ததிக்கு வரலாற்றினை எடுத்து செல்லுகின்ற செயற்திட்டம் இன்று காலை 8:30 மணியளவில் திருகோணமலை சிவன்கோவிலடி பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.
|
|
|
பிரித்தானியாவில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை மக்கள் மயமாக்கும் நடவடிக்கைகள்!
[Thursday 2023-05-11 19:00]
|
2009ம் ஆண்டில் முள்ளிவாய்க்காளிலே எம் ஆயுதம் மௌனிக்கப்பட்ட பின்னர் அரசியல் போராட்டத்தின் மூலம் எம் சுதந்திர தமிழீழத்தை வென்றேடுப்பதற்காக 2010ம் ஆண்டு மே மாதம் 18ம் நாள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உருவாக்கப்பட்டது.
|
|
|
வவுனியாவில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு!
[Thursday 2023-05-11 19:00]
|
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் முன்பாக முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்றிட்டம் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் முன்னெடுக்கப்பட்டது.
|
|
|
மன்னாரில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு!
[Thursday 2023-05-11 19:00]
|
மக்கள் பங்களிப்புடன் மன்னார் மாவட்டத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செற்றிட்டம் இன்று காலை 8 மணிக்கு மன்னார் மாவட்ட வைத்தியசாலை முன்பாக இடம்பெற்றது. இதன் பொழுது மன்னார் மாவட்டத்தில் உள்ள வர்த்தக நிலையங்கள் வீடுகளிற்கு சென்று அரிசி விறகு என்பன திரட்டப்பட்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி ஆக்கப்பெற்று பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது.
|
|
|
மின்னமைப்பினால் உருவாகிய இந்து தெய்வங்கள்!
[Thursday 2023-05-11 19:00]
|
இந்திரவிழா வரலாற்றில் மட்டுமல்ல, இலங்கையிலே இதுவரையில் எந்தவொரு மின்னமைப்பினாலும் கட்டமைக்கப்படாத, இந்து தெய்வங்களின் உருவங்களை மிகவும் பிரமாண்டமாக மின்னலங்காரங்களால் கட்டமைத்து வரலாற்றுச்சாதனை இடம்பெற்றுள்ளது. வல்வெட்டித்துறை இந்திரவிழாவில் இது இடம்பெற்றது.
|
|
|
இராணுவத்தினர் காணொளி எடுத்து அச்சுறுத்தல்!
[Thursday 2023-05-11 19:00]
|
யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால் வடக்கு கிழக்கு தழுவியரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்றிட்டம் சாவகச்சேரி பகுதியில் இராணுவத்தினர் புகைப்படமெடுத்து அச்சுறுத்தும் பாணியில் ஈடுபட்டனர்.
|
|
|
காரைநகரில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு!
[Tuesday 2023-05-09 20:00]
|
முள்ளிவாய்க்கால் படுகொலை வாரம் ஆரம்பித்துள்ள நிலையில், முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குறித்த நிகழ் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகி உள்ளது. அந்தவகையில் காரைநகர் இந்துக் கல்லூரிக்கு முன்னால் இன்று மதியம் முள்ளிவாய்க்கால் கஞ்சியும், முள்ளிவாய்க்கால் நினைவு துண்டுப் பிரசுரமும் வழங்கப்பட்டது.
|
|
|
முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல் ஆரம்பம்!
[Tuesday 2023-05-09 20:00]
|
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் எற்பாட்டில் (09/05/2023) திகதி முதல் வரும் 14ம் திகதிவரை தமிழர் தாயகம் எங்கும் பயணித்து முள்ளிவாய்கால் கஞ்சியினை எமது உறவுகளுடன் பரிமாறி எமது இனம் இனவழிப்புக்கு உள்ளான வரலாற்றினையும் வலிகளையும் எமது இளைய தலைமுறையினருக்கு கடத்தும் செயற்பாட்டினை முன்னேடுக்கவும் வகையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு வல்வெட்டித்துறை, ஆலடிச் சந்தியில் இன்று காலை இடம்பெற்றது.
|
|
|
வல்வையில் இந்திரவிழா!
[Monday 2023-05-08 06:00]
|
யாழ் வல்வெட்டித்துறை முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவின் கொடியிறக்க திருவிழாவின் இந்திரவிழா உற்சவம் (05.05.2023) அன்று இரவு 07 மணியளவில் மிகசிறப்பாக இடம்பெற்றது. இதில் முத்துமாரியம்மன், விநாயகர், முருகன், வள்ளி, தெய்வானை ஆகிய தெய்வங்களை முத்துப்பல்லாக்கில் பக்தர்கள் சுமந்தவண்ணம் வீதி உலா வந்தனர்.
|
|
|
சந்நிதியான் ஆச்சிரமத்தால் ஏழு மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கிவைப்பு!
[Monday 2023-05-08 06:00]
|
யாழ்ப்பாணம் வடமராட்சி செல்வச் சந்நிதியான் ஆச்சிரமத்தால் 357,000 ரூபா பெறுமதியான துவிச்சக்கர வண்டிகள் ஏழு மாணவர்களுக்கு (05/5/2023) அன்று வழங்கப்பட்டுள்ளது. சந்நிதியான் ஆச்சிரமத்தால் வாராந்தம் நடாத்தப்படும் சிறப்பு சொற்பொழிவு நிகழ்வில் வைத்தே திவிச்சக்கர வண்டிகள் வழங்கிவைக்கப்பட்டன.
|
|
|
வெசாக்தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாண சிறைச்சாலையில் இருந்து 14 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்!
[Saturday 2023-05-06 08:00]
|
வெசாக் தினத்தை முன்னிட்டு நாடு பூராகவும் பொது மன்னிப்பில் சிறைச்சாலையில் உள்ள கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாண சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறு குற்ற செயல்களோடு தொடர்புள்ளோர் மற்றும் தண்டப்பணம் செலுத்த தவறி நீதிமன்ற உத்தரவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 14 ஆண் கைதிகள் ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் வெசாக் தினத்தை முன்னிட்டு விடுதலை செய்யப்பட்டனர்.
|
|
|
அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபடலாம் - மல்லாகம் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
[Friday 2023-05-05 06:00]
|
தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு அண்மையில் உள்ள காணியில் இருந்து அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபடலாம் என மல்லாகம் நீதிமன்றம் அறிவித்துள்ளது. குறித்த விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்றையதினம் தையிட்டி விகாரைக்கு அண்மையில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது இராணுவம் மற்றும் பொலிஸாரால் வீதிமறியல் போடப்பட்டது. ஆகையால் வெளியே உள்ளவர்கள் உள்ளே போகமுடியாத, உள்ளே உள்ளவர்கள் வெளியே வர முடியாத நிலை காணப்பட்டது.
|
|
|
பல்வேறு உதவித் திட்டங்கள் வழங்கி வைப்பு!
[Friday 2023-05-05 06:00]
|
நேற்றைய தினம் சித்தங்கேணி ஆன்மீக அறக்கட்டளையும் வேலணை ஆன்மீக அறக்கட்டளையும் இணைந்து, வேலணை பகுதியில் பல்வேறு உதவித் திட்டங்களை முன்னெடுத்திருந்தன.
|
|
|
வெசாக் தினத்திற்காக இராணுவத்தினர் துரிதகதி - அலங்கார பௌத்தசின்ன கொடிகள் மற்றும் வெசாக் தோரண பந்தல்கள் அமைப்பு!
[Friday 2023-05-05 06:00]
|
சிங்கள மக்களால் நாளையதினம் புனித முழுமதி பௌர்ணமி செவாக் தினத்தினை முன்னிட்டு இன்று யாழ். மாவட்டத்தில் உள்ள அனைத்துபௌத்த விகாரைகளிலும் மற்றும் பாதுகாப்பு படைத்தலைமைய பிரிவுகளின் அமைவிடங்களிலும் பௌத்தசின்னகொடிகள் மற்றும் வெசாக் தோரணபந்தல்களை அலங்கரிக்கும் பணிகளை யாழ். மாவட்ட பாதுகாப்பு படைத்தலைமைய இராணுவத்தினர் முன்னெடுத்துள்ளனர்.
|
|
|
கதலி வாழைக்குலைகள் டுபாய்க்கு ஏற்றுமதி செய்யும் திட்டம் யாழில் ஆரம்பம்!
[Thursday 2023-05-04 07:00]
|
கதலி வாழைப்பழத்தை பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் திட்டம் யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த வாழைக்குலைககளானது பதப்படுத்தி டுபாய்க்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளது. இந்த திட்டத்திற்கு 700 விவசாயிகளகடமிருந்து வாழைக்குலைககள் எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில் தற்போது 300 விவசாயிகளிடமிருந்தே வாழைக்குலைககள் கிடைப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
|
|
|
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்!
[Tuesday 2023-05-02 22:00]
|
2261வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், உழைக்கும் பராயத்தில் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளிற்கு நீதி கோரி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, மே நாளான நேற்று அதற்கான எதிர்ப்பை வெளியிட்டும், சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.
|
|
|
தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் மே தினம்!
[Tuesday 2023-05-02 22:00]
|
நேற்று திங்கட்கிழமை (01.05.2023) நல்லூரில் எழுச்சி பூர்வமாக தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் செம்பசுமை மேதினப் பொதுக் கூட்டம் இடம்பெற்றது. நல்லூர் இளங்கலைஞர் மன்ற மண்டபத்தில் நடைபெற்ற இப்பொதுக் கூட்டத்துக்குத் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் இணைப்பாளர் நா. பார்த்தீபன் தலைமை தாங்கினார்.
|
|
|
கனகராஜன்குளம் மகா வித்தியாலய நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மரதனோட்டம் மற்றும் நூறு பானை பொங்கல் விழா!
[Sunday 2023-04-30 20:00]
|
வவுனியா மாவட்டத்தின் வவுனியா வடக்கு கல்வி வலயத்துக்குட்ப்பட்ட கனகராஜன்குளம் மகாவித்தியாலயம் இந்த ஆண்டு நூறாவது ஆண்டில் கால் பதிக்கிறது அந்தவகையில் நூற்றாண்டு விழாவை பாரிய அளவில் கொண்டாட பாடசாலை சமூகம் ஏற்ப்பாடுகளை செய்துவருகிறது. அந்தவகையில் நூற்றாண்டு விழாவை ஒட்டி பல்வேறு போட்டி நிகழ்வுகளை ஏற்ப்பாடு செய்துள்ளனர் அதன் ஒரு அங்கமாக நேற்றையதினம் (29) மாபெரும் மரதனோட்ட போட்டியும் நூறு பானைகளில் பொங்கல் பொங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
|
|
|
|