|
|
தியாக தீபம் அன்னை பூபதி அவர்களின் 35 வது ஆண்டு நினைவு!
[Thursday 2023-04-27 06:00]
|
தியாக தீபம் அன்னை பூபதி அவர்களின் 35 வது ஆண்டு நினைவும் நாட்டுப்பற்றாளர் தினமும் வூப்பெற்றால் நகரில் நினைவு கூரப்பட்டது.
நிகழ்வில் பொதுச்சுடரினை நாட்டுப்பற்றாளர் அன்ரனி சுரேஸ்குமார் அவர்களின் மகன் செல்வன். ஆதவியன் சுரேஸ்குமார் அவர்கள் ஏற்றிவைத்தார். தொடர்ந்து, தமிழீழத் தேசியக்கொடி ஏற்றிவைக்கப்பட்டது.
|
|
|
முன்னாள் சபா நாயகர் கரு ஜயசூரிய கலந்துகொண்ட நிகழ்வு!
[Thursday 2023-04-27 06:00]
|
யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் கம்பஹா மாவட்ட, இரண்டாம் மொழிக் கற்கை நிலைய மாணவர்களது புத்தாண்டு கொண்டாட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை, கம்பஹா மாவட்டத்தில் உள்ள சூரிய அறக்கட்டளை கல்வி நிலையத்தில் நடைபெற்றது.
|
|
|
செல்வநாயகத்தின் 46 ஆவது சிரார்த்ததினம்!
[Thursday 2023-04-27 06:00]
|
தமிழ்த்தேசிய இனத்தின் தந்தை செல்வா மூதறிஞர் சா.ஜே.வே செல்வநாயகத்தின் 46 ஆவது சிராத்த நினைவேந்தல் தினம் நேற்று யாழ்ஹ துரையப்பா விளையாட்டு அரங்கிற்கு அருகாமையில் உள்ள தந்தை செல்வா நினைவேந்தல் தூபியில் இடம்பெற்றது.
அதன்போது தந்தை செல்வாவின் தூபிக்கு மலர்மாலை அணிவித்து நினைவஞ்சலி செலுத்தப்பட்டதுடன் அமரரின் கல்லறையில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் சிறப்புரைகளும் நிகழ்த்தப்பட்டன.
|
|
|
ஊடகவியலாளர் அமரர் ரூபனின் 13ஆவது ஆண்டு நினைவேந்தல்!
[Thursday 2023-04-27 06:00]
|
ஊடகவியலாளர் அமரர் செ.ரூபனின் 13 ஆவது ஆண்டு நினைவேந்தல் நேற்று முன்தினம் [25] பொன்னாலை வெண்கரம் படிப்பகத்தில் நடைபெற்றது. ஊடகவியலாளர் பண்டிதர் ம.ந.கடம்பேசுவரன் தலைமையில் இந்த நினைவேந்தல் நடைபெற்றது.
|
|
|
பாடசாலைகள் பூட்டு!
[Thursday 2023-04-27 06:00]
|
சிங்கள பேரினவாத அரசாங்கம் தமிழர் தாயகத்தில் மேற்கொள்ளும் சட்டரீதியற்ற காணி அபகரிப்பு, பௌத்த மயமாக்கல் , சைவக் கோவில்கள் அழிப்பு , தொல்லியல்களை மாற்றியமைத்தல் போன்ற செயற்பாடுகளை நிறுத்தக் கோரியும் பயங்கரவாத தடை சட்டத்தை நீக்குவதுடன் உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை மீளப் பெறுமாறும் கோரி நேற்று யாழ் வர்த்தகர்கள், மற்றும் தனியார் தொழில் நிலையஊழியர்கள் பூரண ஹர்த்தலை முன்னெடுத்துள்ளனர்.
|
|
|
கப்பல் திருவிழா சிறப்பாக நடைபெற்றது!
[Tuesday 2023-04-25 18:00]
|
அருள்மிகு ஶ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் மூன்றாம் நாள் கப்பல்த்திருவிழா இன்று இடம்பெற்றது.
|
|
|
கம்பஹா அணிகளை வீழ்த்தி கயிறு இழுத்தலில் வெற்றி மகுடம் சூடிய யாழ். அணிகள் - இரண்டாக அறுந்த கயிறு!
[Sunday 2023-04-23 08:00]
|
நேற்றைய தினம் யாழ்ப்பாண ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினருக்கும் கம்பஹா ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளுக்கும் இடையே தனித்தனியே நடைபெற்ற கயிறு இழுத்தல் போட்டியில் கம்பஹா அணிகளை வீழ்த்தி யாழ். அணிகள் வெற்றி மகுடம் சூடின. யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட சூரிய அறக்கட்டளையின், இலவச சிங்கள வகுப்பு மாணவர்கள் கடந்த 19ஆம் திகதி சுற்றுலா பயணத்தினை மேற்கொண்டனர்.
|
|
|
யாழ். பெரிய மொஹிதின் ஜூம்மா பள்ளிவாசலில் ரம்ழான் பெருநாள்!
[Sunday 2023-04-23 08:00]
|
உலக வாழ் இஸ்லாமியர் இன்று ரம்ழான் பெருநாளினை கொண்டாடு கின்றனர்.அவ் நாளினை முன்னிட்டு யாழ் பெரிய மொஹிதின் ஜூம்மா பள்ளிவாசலில் ரம்ழான் பெருநாள் தொழுகை இடம்பெற்றது.
|
|
|
கிளி பாதர் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு நேற்று இடம்பெற்றது!
[Friday 2023-04-21 06:00]
|
தமிழ் மக்களின் மனங்களில் என்றும் வாழும் படுகொலை செய்யப்பட்ட கிளிபாதர் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு உணர்வு பூர்வமாக நடைபெற்றது. 20.04.2008 அன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி வன்னிவிளாங்குளம் அம்பாள்புரம் 6 ம் கட்டை பகுதியில் ஸ்ரீலங்கா இராணுவத்தினரின் ஆழ ஊடுருவும் அணியின் கிளைமோர் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட சேவியர் கருணாரட்ணம் (கிளி பாதர்) அவர்களின் 15ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று வவுனிக்குளம் அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தில் இடம்பெற்றிருந்தது.
|
|
|
யாழ்ப்பாணத்தவர்களுக்காக 350 வருடம் பழமை வாய்ந்த கொழும்பு கோவிலில் விசேட பூஜை வழிபாடு!
[Friday 2023-04-21 06:00]
|
நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தவர்களுக்காக, 350 வருடத்திற்கும் மேற்பட்ட பழமை வாய்ந்த கொழும்பு கோவிலில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. சூரிய நிறுவகத்தின் நிதி அனுசரணையில் யாழ்ப்பாணத்திலும், கிளிநொச்சியிலும் இலவச சிங்கள கற்கை நிலையங்கள் இயங்கி வருகின்றன.. அந்தவகையில் யாழ்ப்பாணத்தில் நான்கு கல்வி நிலையங்களும் கிளிநொச்சியில் ஒரு கல்வி நிலையமும் இயங்கி வருகின்றது.
|
|
|
கதவடைப்பு போராட்டத்திற்கு யாழ்ப்பாண வணிக கழகம் பூரண ஆதரவு!
[Wednesday 2023-04-19 20:00]
|
தமிழ் தேசிய கூட்டமைப்பின் அழைப்பில் எதிர்வரும் 25ஆம் திகதி இடம்பெற உள்ள வடக்கு கிழக்கு தழுவிய கடை அடைப்பு போராட்டத்திற்கு யாழ்ப்பாண வணிகர் கழகமும் தனது ஆதரவை தெரிவித்துள்ளது.
|
|
|
தமிழ்த் தேசிய இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் அன்னைபூபதி நினைவேந்தல் நிகழ்வு!
[Wednesday 2023-04-19 20:00]
|
தமிழ்த் தேசிய இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் அன்னைபூபதி நினைவேந்தல் நிகழ்வு இன்று இடம்பெற்றது. குறித்த நிகழ்வு இன்று காலை 10 மணியளவில் கூட்டுறவு சபை மண்டபத்தில் முன்னாள் கரைச்சி பிரதேச சபை உப தவிசாளர் வடிவேல் தகுலேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.
|
|
|
தமிழ் கல்விக்கழகம் – யேர்மனி, 33 ஆவது அகவை நிறைவு விழா, யேர்மனி, 2023 என்னப்பெற்றால்!
[Wednesday 2023-04-19 06:00]
|
யேர்மனியில் 120 துக்கும் மேற்பட்ட தமிழாலயங்களின் ஒருங்கிணைப்பு நடுவமாகிய தமிழ்க் கல்விக் கழகத்தின் 33 ஆவது ஆண்டு நிறைவுவிழா 15.4.2023 சனிக்கிழமை யேர்மனி என்னப்பெற்றால் நகரில் மண்டபம் நிறைந்த மக்களுடன் மிகச்சிறப்பாக இடம்பெற்றது. தாயகனின் சிந்தனைக்குச் செயல்வடிவம் கொடுத்ததன் விளைவாக மொழியோடு கலை, பண்பாடு, விளையாட்டு எனப் பன்மைப் பரிமாணங்களினூடாகத் தமிழ்ச் சிறார்களை அணியப்படுத்தி ஆற்றலுடையோராய் வளர்த்தெடுப்பதை நோக்காகக் கொண்டியங்கும் தமிழ்க் கல்விக் கழகம் 33ஆவது அகவை நிறைவு விழாவைச் சிறப்போடு தொடங்கியுள்ளது. இவ்வாண்டும் ஐந்து அரங்குகளில் நடாத்துவதற்குத் திட்டமிட்டவாறு முதலாவது அரங்கம் 15.04.2023 சனிக்கிழமை மத்திய மாநிலத்தின் என்னப்பெற்றால் (Ennepetal) நகரிலே நடைபெற்றது.
|
|
|
யாழ் பல்கலையிலும் அன்னை பூபதிக்கு அஞ்சலி!
[Tuesday 2023-04-18 06:00]
|
இந்தியப் படைகளால் தமிழர் தாயகத்தில் வலிந்து திணிக்கப்பட்ட போரையும் அடாவடிகளையும் நிறுத்த வலியுறுத்தி மட்டக்களப்பு மண்ணில் உண்ணாவிரத அறப்போர் புரிந்து காந்தி தேசத்திற்கே அகிம்சையைப் போதித்து தன்னுயிர் நீத்த அன்னை பூபதியின், உண்ணாவிரத அறப்போராட்டத்தின்இறுதி வார நினைவேந்தல் நேற்று முன்தினம் (17.04.2023) ஞாயிற்றுக்கிழமை , பல்கலை மாணவர்களால் உணர்வுபூர்வமாக நினைவேந்தப்பட்டது.
|
|
|
புத்தாண்டு சைக்கிள் ஓட்டம் வெற்றியாளருக்கு சைக்கிள் வழங்கிய ஆளுநர்!
[Tuesday 2023-04-18 06:00]
|
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற சைக்கிள் ஓட்ட போட்டியில் நவாலியைச் சேர்ந்த பாலசிங்கம் கிருஷ்ணா முதல் இடத்தை பெற்றார். வட மாகாண ஆளுநர் செயலகம் யாழ். மாவட்ட செயலகம் 51 வது காலால் படைப்பிரிவு ஆகிய இணைந்து ஏற்பாடு செய்த சித்திரை புத்தாண்டு சைக்கிள் ஓட்ட நிகழ்விலே முதல் இடத்தை பெற்றார்.
|
|
|
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு பத்து மில்லியன் ரூபாய்கள் பெறுமதியான மருந்துகள் கனடியத் தமிழர்களால் நன்கொடை!
[Saturday 2023-04-15 06:00]
|
கனடியத் தமிழர்கள் பத்து மில்லியன் ரூபாய்கள் பெறுமதியான உயிர் காக்கும் மருந்துப் பொருட்களை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளனர். கடந்த ஆண்டு கனடியத் தமிழர் பேரவையினால் (Canadian Tamil Congress - CTC) ஒழுங்கு செய்யப்பட்ட நிதிசேர் நடையூடாக திரட்டப்பட்ட நிதியின் இரண்டாவது நன்கொடை இதுவாகும், கடந்த ஆண்டு முதலாவது நன்கொடைத் தொகுதி தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையிடம் கையளிக்கப்பட்டது. கனடியத் தமிழர் பேரவை தமது வருடாந்த நிதிசேர் நடையூடாக வருடந்தோறும் பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடைகளை வழங்கி வருகின்றது.
|
|
|
சிறைச்சாலைக்குள் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பிள்ளையார் ஆலயம் பிரதிஷ்டை!
[Saturday 2023-04-15 06:00]
|
யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குள் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பிள்ளையார் ஆலயமானது கும்பாபிஷேகத்துடன் பிரதிஷ்டை செய்யப்பட்டு விசேட வழிபாடுகள் இடம்பெற்றது. பிறந்துள்ள சோபகிருது ஆண்டான நேற்று (14/04/2023), சிறைப்பட்டு இருக்கும் காலத்தில் கூட தங்கள் இறை வழிபாடுகளை தடையின்றி மேற்கொள்ளும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது.
|
|
|
மாந்தை கிழக்கில் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் விற்பனை சந்தை!
[Tuesday 2023-04-11 06:00]
|
முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு பிரதேச செயலக வளாகத்தில் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களமும்,மாந்தை கிழக்கு பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் அபிமானி விற்பனை சந்தை நேற்று இடம்பெற்றிருந்தது.
|
|
|
இணுவில் பொது நூலகம் மற்றும் சனசமூக நிலையத்தின் ஆண்டு நிறைவு விழா!
[Tuesday 2023-04-11 06:00]
|
இணுவில் பொது நூலகம் மற்றும் சனசமூக நிலையத்தின் ஆண்டு நிறைவு விழாவும் பரிசில் வழங்கல் நிகழ்வும் 09-04-2023 ஞாயிற்றுக்கிழமை மாலை இணுவில் நூல்நிலைய கலாசார மண்டபத்தில், தலைவர் சிவலிங்கம் புரந்தரா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
|
|
|
கிளிநொச்சி மாவட்டத்தில் பல பகுதிகளிலும் உயிர்த்த ஞாயிறு வழிபாடுகள்!
[Sunday 2023-04-09 20:00]
|
கிளிநொச்சி மாவட்டத்தில் பல பகுதிகளிலும் உயிர்த்த ஞாயிறு வழிபாடுகள், விசேட திருப்பலி வழிபாடுகள் இடம்பெற்றன. அந்தவகையில் கிளிநொச்சி ஜெபாலய மிசன் தேவாலயத்தில் விசேட வழிபாட்டில் மக்கள் கலந்துகொண்டனர். முறிகண்டி தென்னிந்திய திருச்சபையில் விசேட நற்கருணை வழிபாடு இடம்பெற்றது.
|
|
|
மாபெரும் மரதன் மற்றும் சைக்கிள் ஓட்டப் போட்டி!
[Sunday 2023-04-09 20:00]
|
அராலி சிறீ முருகன் சனசமூக நிலையத்தின் 83வது ஆண்டு விழாவினை முன்னிட்டு இன்றையதினம் மாபெரும் மரதன் ஓட்டப் போட்டிகள் மற்றும் சைக்கிள் ஓட்டப் போட்டி என்பன நடைபெற்றன. மரதன் ஓட்டப் போட்டிகளானது நான்கு பிரிவுகளாக நடைபெற்றன.
|
|
|
உயிர்த்தஞாயிறு கூட்டுத்திருப்பலி!
[Sunday 2023-04-09 20:00]
|
இலங்கைவாழ் கிறிஸ்தவர்கள் இன்று உயிர்த்த ஞாயிறு மகிமையின் கூட்டுத்திருப்பலியில் ஈடுபட்டுவருகின்றனர். இவ் கூட்டுத்திருப்பலியினை முன்னிட்டு யாழ். மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கிறிஸ்தவதேவாலயங்களில் கூட்டுத்திருப்பலிஆராதனைகள் இடம்பெற்று வருகின்றன.
|
|
|
சர்வதேசியவாதி க. பத்மநாபாவின் சிலை திறப்பு!
[Thursday 2023-04-06 06:00]
|
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈபிஆர்எல்எவ்)யின் ஸ்தாபகத் தலைவரும் அதன் முதலாவது செயலாளர் நாயகமுமான க.பத்மநாபாவின் திருவுருவச் சிலை 05.04.2023 புதன்கிழமை அன்று திரைநீக்கம் செய்யப்பட்டது. வவுனியா மணிக்கூண்டு கோபுரத்திற்கு எதிரில் தந்தை செல்வாவின் சிலைக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள க. பத்மநாபாவின் சிலையினை ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் க. சுரேஷ் பிரேமச்சந்திரன்; திரைநீக்கம் செய்து திறந்துவைத்தார்.
|
|
|
ஆன்மீக அறக்கட்டளை உதவித் திட்டம் வழங்கல்!
[Thursday 2023-04-06 06:00]
|
நேற்றைய தினம் வழக்கம்பரை ஆன்மீக அறக்கட்டளை மற்றும் சித்தங்கேணி ஆன்மீக அறக்கட்டளை ஆகியன இணைந்து நடாத்திய உதவித்திட்டங்கள் வழங்கும் நிகழ்வு வழக்கம்பரை அம்மன் ஆலய மண்டபத்தில் நடைபெற்றது.
|
|
|
இலங்கை மீனவர்கள் இருவர் இந்தியாவில் கைது!
[Wednesday 2023-04-05 06:00]
|
நேற்றைய தினம் இலங்கை மீனவர்கள் இருவர் இந்திய எல்லைக்குள் உள் நுழைந்ததால் இந்திய கடற்படையினரால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது அவர்கள் பயணித்த படகுகள் இரண்டும் பறிமுதல் செய்யப்பட்டது.
|
|
|
கிளிநொச்சி மகாவித்தியாலய பிரதான வீதியில் காணப்படும் ஆபத்தான 18 மரங்களை அகற்றவும் முடிவு!
[Tuesday 2023-04-04 06:00]
|
கிளிநொச்சி மகாவித்தியாலய பிரதான வீதியில் காணப்படும் ஆபத்தான 18 மரங்களை அகற்றவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த பாடசாலை வளாகத்திலும், பாடசாலைக்கு முன்பாகவும் நேற்றைய தினம் முறிந்து விழுந்த மரங்களை அகற்றுவதற்கான நடவடிக்கை மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையத்தினால் முன்னெடுக்கப்பட்டது.
|
|
|
கலாநிதி ஆறு திருமுருகன் அவர்கள் கலந்துகொண்ட, போதைப்பொருள் விழிப்புணர்வு ஓவியக் கண்காட்சி!
[Tuesday 2023-04-04 06:00]
|
"விழித்தவரெல்லாம் பிழைத்துக் கொள்வார்" என்ற தொனிப்பொருளிலான போதைப்பொருள் விழிப்புணர்வு ஓவியக் கண்காட்சி நேற்றைய தினம் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் சோமசுந்தரப் புலவர் மண்டபத்தில் நடைபெற்றது.
|
|
|
யாழ் உயர்கல்விக் கண்காட்சி ஆரம்பமாகியது!
[Saturday 2023-04-01 18:00]
|
வடமாகாணகல்வி அமைச்சு, யாழ். இந்தியா உதவித்தூதரகம் ஆகியவற்றின் எற்பாட்டில், கல்விபொதுத்தராதர சாதாரணதரம், உயர்தரம் ஆகிய கல்வித்தரத்தில் இருந்து இடைவிலகிய வடமாகாண மாணவர்களின் தொழில்தகமைக்கான சான்றிதழ்களை பெறும்வகையில் சிறந்த உயர்கல்வி கற்கைநெறியினை கற்பதற்காக, இரண்டாவது தடவையாக எற்பாடு செய்யப்பட்ட யாழ். உயர்கல்விக் கண்காட்சி இன்று யாழ். தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்றது.
|
|
|
|