|
|
சந்நிதியான் ஆச்சிரமத்தின் ஞானச்சுடர் 303 ஆவது மலர் வெளியீடு!
[Saturday 2023-04-01 18:00]
|
சந்நிதியான் ஆச்சிரமத்தின் ஞானச்சுடர் 303வது இதழ் வெளியீடு நேற்று 31/03/2023 சந்நிதியான் ஆச்சிரமத்தில் மிக சிறப்பாக இடம் பெற்றது. சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப் பேரவையினரால் மாதாந்தம் வெளியிடப்படும் பங்குனி மாதத்திற்க்கான ஞானச்சுடர் இதழாக 303 ஆவது மலராக வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.
|
|
|
மன்னார் சின்னவலையன்கட்டு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி!
[Saturday 2023-04-01 06:00]
|
மன்னார் சின்னவலையன்கட்டு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி 30.03.2023 ( வியாழக்கிழமை ) அன்று மாணவர்களினால் விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டு மங்கல விளக்கேற்றலுடன் நிகழ்வு ஆரம்பமானது.
|
|
|
பண்டத்தரிப்பு உயர்தர பெண்கள் கல்லூரியின் இல்ல மெய்வல்லுனர் போட்டி!
[Saturday 2023-04-01 06:00]
|
யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு உயர்தர பெண்கள் மகளிர் கல்லூரியின் வருடாந்த இல்ல மை வல்லுனர் போட்டி நேற்றைய தினம் நடைபெற்றது. விருந்தினர்களுக்கு மாலை அணிவித்து மேற்கத்திய இசைவாத்தியத்துடன் விருந்தினர்கள் அழைத்துவரப்பட்டனர்.
|
|
|
கிளிநொச்சி பாடசாலையில் வன்முறைச் சம்பவம் - வெடித்தது போராட்டம்!
[Saturday 2023-04-01 06:00]
|
கிளிநொச்சி பாடசாலை விளையாட்டுப் போட்டி நிகழ்வில் நுழைந்து தாக்குதல் சம்பவத்தை கண்டித்து போராட்டம் ஒன்று நேற்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டம் நேற்று காலை 8 மணியளவில் சாந்தபுரம் கலைமகள் வித்தியாலயம் முன்பாக இடம்பெற்றது.
|
|
|
சந்நிதியான் ஆச்சிரமத்தால் அச்சுவேலி - சுதேச மருந்து உற்பத்திப்பிரிவுக்கு பொதியிடல் இயந்திரம் வழங்கல்!
[Thursday 2023-03-30 19:00]
|
சந்நிதியான் ஆச்சிரமத்தால் அச்சுவேலி - சுதேச மருந்து உற்பத்திப்பிரிவுக்கு ரூபா 92,000 பெறுமதியான பொதியிடல் இயந்திரம் இன்று வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
|
|
|
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று கவனயூர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்!
[Thursday 2023-03-30 19:00]
|
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று கவனயூர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த போராட்டம் இன்று காலை 11 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்க அலுவலகம் முன்பாக ஏ9 வீதியில் இடம்பெற்றது. குறித்த போராட்டத்தில் கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்தும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கலந்து கொண்டனர்.
|
|
|
கரைச்சி புளியம் பொக்கணை நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவ பெருவிழா ஆரம்பம்!
[Thursday 2023-03-30 19:00]
|
கரைச்சி புளியம் பொக்கணை நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவ பெருவிழா ஆரம்பமானது. பங்குனி உத்திர பொங்கல் விழா விளக்கு வைப்புடன் இன்று இனிதே ஆரம்பமானது. விசேட பூசை நிகழ்வுகள் நடைபெற்று பிரம்பு வழங்கும் வைபவமும் நடைபெற்றதுடன், அதனை தொடர்ந்து பாரம்பரிய முறையில் மாட்டு வண்டில்களில் பிரம்பு ஆலயத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டது.
|
|
|
யேர்மனி தமிழ்ப் பெண்கள் அமைப்பினரால் என்னப்பெற்றால் நகரில் நடாத்தப்பட்ட வாகைமயில் 2023!
[Tuesday 2023-03-28 21:00]
|
யேர்மனியில் ஆண்டுதோறும் வாகைமயில் எனும் நடனப்போட்டியினை தமிழ்ப் பெண்கள் அமைப்பு- யேர்மனி, நடாத்திவருவது யாவரும் அறிந்ததே. கொரோனா விசக்கிருமியின் தாக்கம் காரணமாக கடந்த இரண்டுவருடங்கள் இப்போட்டி நடைபெறாதிருந்தது. இம்முறை 25.3.2023 சனிக்கிழமை பத்து ஆண்டுகளை நிறைவு செய்தபடி வாகைமயில் யேர்மனியில் தோகைவிரித்தாடியது.
|
|
|
நாவலர் வரலாற்று கண்காட்சியும் விற்பனையும்!
[Tuesday 2023-03-28 21:00]
|
நாவலர் பெருமானின் வரலாற்று கண்காட்சியம் விற்பனையும் யாழ். நாவலர் வீதியில் அமைந்துள்ள நாவலர் மண்டபத்தில் இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்டது. இந்து சமய கலாச்சார அலுவலர்கள் திணைக்களம் மற்றும் மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இணைந்து ஏற்பாடு செய்த குறித்த நிகழ்வு நாளை புதன்கிழமையுடன் நிறைவடைய உள்ளது.
|
|
|
காலநிலை மாற்றம் காரணமாக அதிக வெப்பநிலைக்கு எற்ப குளிர்மையினை எற்படுத்தும் பழவகை வியாபாரம் சூடுபிடிப்பு!
[Tuesday 2023-03-28 21:00]
|
காலநிலை மாற்றம் காரணமாக அதிக வெப்பநிலைக்கு எற்ப சந்தைப்பகுதிக்கு அருகாமையில் வெள்ளரிப்பழத்தின் வியாபாரம் இன்று மும்முரமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. குறிப்பாக யாழ். பண்ணை பகுதிகளிலும் மற்றும் திருநெல்வேலி மரக்கறிக்கடைத்தொகுதி வெளிப்புறங்களிலும் விற்பனை செய்வதை அவதானிக்க முடிகின்றது.
|
|
|
யாழ். தொழில்நுட்பக் கல்லூரியின் வைரவிழா!
[Tuesday 2023-03-28 06:00]
|
யாழ். தொழில்நுட்பக் கல்லூரியின் வைரவிழா நிகழ்வானது நேற்று (27) காலை 9 மணிக்கு கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ். சிறீ சற்குணராசாவும் சிறப்பு விருந்தினராக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் சிவபாலசுந்தரனும் கலந்து சிறப்பித்தனர்.
|
|
|
நீர்வளங்கள் சார் களப்பயணம்!
[Tuesday 2023-03-28 06:00]
|
பூம்புகார் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையின் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருடனான நீர் சார்ந்த உரையாடல் ஞாயிற்றுக்கிழமை அன்று இடம்பெற்றது. களப்பயணத்தை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் WASPAR செயற்றிட்டம் ஊடாக உருவாகிய வடக்கின் நீர் உரையாடல் மன்றம் மற்றும் Young Water Professional North இணைந்து ஒழுங்கமைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
|
|
|
ஆதிலிங்கேஷ்வரர் ஆலய விவகாரம் - யாழில் வெடித்தது போராட்டம்!
[Tuesday 2023-03-28 06:00]
|
நெடுங்கேணி வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலயத்தில் விக்கிரகங்கள் உடைக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று மாலை உருத்திரசேனை மற்றும் சிவசேனை அமைப்பினரால் யாழ். இந்துக் கல்லூரி மைதானத்திற்கு அண்மையில் எதிர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
|
|
|
அகில இலங்கை ரீதியில் யாழ். ஊடக கற்கைகள் துறை முதலிடம்!
[Tuesday 2023-03-28 06:00]
|
அகில இலங்கை ரீதியில் பல்கலைக் கழகங்களிடையே நடைபெற்ற ஊடகப் படைப்பாக்கப் போட்டிகளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை முதலாம் இடத்தைக் பெற்றுள்ளது. எட்டுப் பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில், நாற்பது இடங்களில் 25 இடங்களை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை வென்று சாதனை படைத்துள்ளது.
|
|
|
வெடுக்குநாறி மலையில் மாதவெறியர்களின் அட்டகாசம் பிடிங்கி வீசப்பட்ட ஆதி லிங்கேஸ்வரர் ஏனைய சிலைகளும் தகர்ப்பு - நீதிமன்ற உத்தரவை மீறி அட்டகாசம்!
[Tuesday 2023-03-28 06:00]
|
வவுனியா நெடுங்கேணி வெடுக்குநாறி மலையில் பி்ரதிஸ்டை செய்யப்பட்டிருந்த ஆதிலிங்கம் கழற்றி வீசப்பட்டுள்ளதுடன், ஏனைய விக்கிரகங்களும் மாயமாகியுள்ளமை பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. வவுனியா நெடுங்கேணி வெடுக்குநாறி மலையில் வழிபாடுகளை மேற்கொள்வதற்கு தொல்பொருட் திணைக்களமும், நெடுங்கேணி பொலிசாரும் பல்வேறு தடைகளை ஏற்படுத்தி வந்ததுடன் தொல்பொருள்கள் சார்ந்த சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் கடந்த 2021 ஆம் ஆண்டு வவுனியா நீதவான் நீதிமன்றில் வழக்கினையும் தாக்கல் செய்திருந்தனர்.
|
|
|
நாட்டின் பொருளாதார நெருக்கடியால் வியாபாரத்தில் வீழ்ச்சி - வர்த்தகர்கள் கவலை!
[Sunday 2023-03-26 17:00]
|
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக தமது விற்பனை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக பல்பொருள் வாணிப உரிமையாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
|
|
|
வேம்படி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய கும்பாபிஷேகம்!
[Saturday 2023-03-25 19:00]
|
சுதுமலை தெற்கு வேம்படி ஸ்ரீ ஞானவைரவர் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவில் பிரதம அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். குறித்த ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக நிகழ்வு நேற்றையதினம் இடம்பெற்றது.
|
|
|
பெண் தலைவர்களின் ஏற்பாட்டில் வன்முறையற்ற மகிழ்ச்சியான குடும்பங்களை கட்டியெழுப்பும் நிகழ்வு!
[Saturday 2023-03-25 19:00]
|
பெண் தலைவர்களின் ஏற்பாட்டில் வன்முறையற்ற மகிழ்ச்சியான குடும்பங்களை கட்டியெழுப்பும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. குறித்த நிகழ்வு இன்று காலை 9 மணியளவில் பொன்னகர் கிராம அபிவிருத்தி சங்க மண்டபத்தில் இடம்பெற்றது.
|
|
|
புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி எய்திய மாணவர்களை கௌரவிப்பு நிகழ்வு!
[Saturday 2023-03-25 19:00]
|
புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி எய்திய, யா/ காட்டுப்புலம் அ.த.க பாடசாலை மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்றையதினம் (24) பாடசாலையின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. கடந்த 35 ஆண்டுகளின் பின்னர் தொடர்ச்சியாக 2020, 2021, 2022 ஆகிய மூன்று வருடங்களாக மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேலே பெற்று சித்தியடைந்து வருகின்றனர்.
|
|
|
குருநகர் கடலில் 5 வருடங்களின் பின் திருப்பாடுகளின் சிலுவைப்பாதை தியானம்!
[Saturday 2023-03-25 19:00]
|
குருநகர் கடலில் 5வருடங்களின் பின் திருப்பாடுகளின் சிலுவைப்பாதை தியானம் நேற்று (24.03.2023) வெள்ளிக்கிழமை குருநகர் கடலில் நடபெற்றது. குருநகர் பங்கிலே முதன்முதலில் அருட்பணி ம. இம்மானுவேல் பயஸ் அடிகளாரின் காலத்திலே (1973-1976) கடலில் மின்னொளியில் சிலுவைப்பாதை காட்சிப்படுத்தப்பட்டது.
|
|
|
புத்தரிசி வழங்கும் நிகழ்வு!
[Saturday 2023-03-25 06:00]
|
புத்தரிசி வழங்கும் நிகழ்வு நிகழ்வு நேற்று காலை 10 மணியளவில் பளை கமநல சேவைகள் நிலையத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்விலன் பிரதம விருந்தினராக கிளிநொச்சி பிராந்திய விவசாய ஆராய்ச்சி அபிவிருத்தி நிலையத்தின் பிரதி பணிப்பாளர் சோ.சிவநேசன், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக திணைக்கள உதவித்திட்டமிடல் ணிப்பாளர் எம்.மாலதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
|
|
|
சிறு தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் விற்பனை சந்தை!
[Saturday 2023-03-25 06:00]
|
சிறு தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் விற்பனை சந்தை நேற்று ஆரம்பமானது. வடக்கு மாகாண தொழிற்துறை திணைக்களத்தின் ஏற்பாட்டில் பசுமை பூங்கா வளாகத்தில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த சந்தை, இன்றும் நாளையும் இடம்பெறவுள்ளது.
|
|
|
யாழ்ப்பாணக் கல்லூரியின் 200வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஈருருளிப் பவனி!
[Saturday 2023-03-25 06:00]
|
யாழ்ப்பாணக் கல்லூரியின் 200வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, கல்லூரியின் நிர்வாகத்தால் பல்வேறு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் நேற்றையதினம் கல்லூரி நிர்வாகத்தால் துவிச்சக்கர வண்டிப் பவனி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
|
|
|
சிலுவைப் பாதை பவனி நிகழ்வு!
[Saturday 2023-03-25 06:00]
|
சற்கோட்டை பங்கில் அமைந்துள்ள பொலிகண்டி குழந்தை யேசு ஆலய மக்களினால் வலயங்களுக்கு இடையிலான சிலுவைப் பாதைபவனி நேற்று காலை சிறப்பாக இடம்பெற்றது.
|
|
|
திருவருள்மிகு பாலமரத்தடி ஸ்ரீ முத்துமாரி அம்பாள் தேர் வெள்ளோட்டம்!
[Thursday 2023-03-23 21:00]
|
ஈழத்தின் முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளம் பகுதியில் அமைந்துள்ள திருவருள்மிகு பாலமரத்தடி ஸ்ரீ முத்துமாரி அம்பாள் தேர் வெள்ளோட்டம் இன்றைய தினம் 23-03-2023 இடம்பெற்றது.
|
|
|
சர்வதேச நீர்தினம் அனுஷ்டிப்பு!
[Thursday 2023-03-23 21:00]
|
நேற்று சர்வதேச நீர்தினம் மூளாய் சைவப்பிரகாச வித்தியாசாலையில் சிறப்பாக இடம்பெற்றது. இந்நிகழ்வை மூளாய் சைவப்பிரகாச வித்தயாசாலை சுற்றாடல் கழகமும், எதிர்கால சுற்றுச்சூழல் கழகமும் இணைந்து நடத்தியிருந்தது.
|
|
|
பாடசாலை மாணவர்களுக்கு இலவச சீருடை துணி வழங்கும் வேலை திட்டம் ஆரம்பம்!
[Thursday 2023-03-23 21:00]
|
சீன அரசாங்கத்தின் நன்கொடையின் கீழ் இலங்கை பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படுகின்ற இலவச சீருடை துணி வழங்கும் வேலைத்திட்டம் வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் இன்று வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. மத்திய கல்வி அமைச்சின் சுற்று நிருபத்திற்கு அமைய இச்செயற்றிட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
|
|
|
சந்நிதியான் ஆச்சிரமத்தால் இன்றும் பல்வேறு உதவிகள்!
[Thursday 2023-03-23 21:00]
|
சந்நிதியான் ஆச்சிரமத்தால் இன்றும் பல்வேறு செயற்றிட்டங்களுக்கு ரூபா 290,000 நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. திருகோணமலை மாவட்டம் - செல்வநாயகபுரம் பிரதேசத்தில் உள்ள உதயபுரி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு முத்துக்குமாரசுவாமி அறநெறிப் பாடசாலைக்கு மூன்றாவது தடவையாக ரூபா 100,000ம் வழங்கப்பட்டுள்ளதுடன் மொத்தம் 150000/- வழங்கப்பட்டுள்ளது.
|
|
|
|