|
|
ஃபார்முலா 4 கார் பந்தயம் நிறைவு!
[Monday 2024-09-02 06:00]
|
இந்த ஆண்டுக்கான ஃபார்முலா 4 கார் பந்தயம் இந்தியாவில் 5 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதில் 2வது சுற்று போட்டி நேற்று (31-08-24) சென்னை தீவுத்திடலில் தொடங்கியது. அதன்படி, ஃபார்முலா 4 கார் பந்தய பயிற்சி போட்டி நேற்று இரவு நடைபெற்றது. இதனை தொடர்ந்து, தகுதி சுற்றுக்கான போட்டி இன்று நடைபெற்றது. இந்த பந்தயத்தை காண ஏராளமான ரசிகர்களும், பிரபலங்களும் வந்தனர். சென்னையில் நடைபெற்ற கார் பந்தயம் நிறைவடைந்துள்ளது.
|
|
|
செவிலியரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நோயாளி: அதிரும் மேற்கு வங்கம்!
[Monday 2024-09-02 06:00]
|
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் அரசு மருத்துவமனையில் முதுகலை இரண்டாம் ஆண்டு பயிலும் பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் ஆகஸ்ட் 9 ஆம் தேதி பணியில் இருந்த போது பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது சிபிஐ தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று நாடுமுழுவதும் உள்ள மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
|
|
|
“நமது மாநில பாடத்திட்டம் மோசமாக உள்ளது” - தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி!
[Monday 2024-09-02 06:00]
|
சென்னை சேத்துப்பட்டில் உள்ள தனியார் பள்ளியில் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். இந்த விழாவில் அவர் பேசியதாவது, “2047 ஆம் ஆண்டு இந்தியா முழுமையாக வல்லரவு பெற்று விளங்கும். பாடத்திட்டத்தை தாண்டி மாணவர்கள் யோசிக்க வேண்டும்.
|
|
|
“விளையாட்டுத் துறை அமைச்சராக இருங்கள், விளையாட்டு அமைச்சராக இருக்காதீர்கள்” - சீமான்!
[Sunday 2024-09-01 18:00]
|
சென்னையில் ஃபார்முலா 4 பந்தயம் போட்டிகள் நடைபெற்று வருகிறது. நேற்று இரவு போட்டிகள் தொடங்கி நடைபெற்ற நிலையில் இன்றும் இரண்டாவது நாளாக போட்டி நடைபெற இருக்கிறது. சென்னையில் நடைபெறும் இந்த கார் பந்தயத்துக்கு நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
|
|
|
'நிலுவையில் கிடக்கும் மனு': த.வெ.க-விற்கு கிடைக்குமா அனுமதி?
[Sunday 2024-09-01 18:00]
|
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியைத் தொடங்கியதோடு, தொடர்ந்து அடுத்தடுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி அண்மையில் பனையூரில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகம் செய்யப்பட்டது. அதேபோல் கட்சிக்கான பாடலும் வெளியிடப்பட்டிருந்தது. சிகப்பு, மஞ்சள் நிறத்தில் இருந்த கொடியின் மத்தியில் யானைகள் வாகைப்பூ, 28 நட்சத்திரங்கள் எனப் பல அடையாளங்களும், குறியீடுகளும் இடம்பெற்றிருந்தன.
|
|
|
தண்டவாளத்தில் அமர்ந்து கேம் விளையாடிய சிறுவர்கள்: அடுத்து நேர்ந்த பயங்கரம்!
[Sunday 2024-09-01 18:00]
|
இந்திய மாநிலம் சத்தீஷ்கரில் சிறுவர்கள் இருவர், தண்டவாளத்தில் அமர்ந்து செல்போனில் கேம் விளையாடியபோது ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. சத்தீஷ்கர் மாநிலம் டிரக் மாவட்டத்தில் உள்ள ரிசலி பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவர்கள் வீர் சிங், புரன் ஷகு. இவர்கள் இருவரும் அப்பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் அமர்ந்து செல்போனில் கேம் விளையாடியுள்ளனர்.
|
|
|
மகன் பாடசாலை செல்லாததால் தாய் எடுத்த அதிர்ச்சி முடிவு!
[Sunday 2024-09-01 18:00]
|
தமிழக மாவட்டம் தூத்துக்குடியில் பெண்ணொருவர், தனது மகன் பாடசாலை செல்லாததால் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தூத்துக்குடி மாவட்டம் அக்கநாயக்கன்பட்டி வடக்கு தெருவைச் சேர்ந்த ஜோதிமணி என்பவரின் மனைவி இசக்கியம்மாள் (35). இவர்களின் மகன் அதே ஊரில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
|
|
|
சிதம்பரத்தில் காங்கிரஸ் பேரணி: மகிளா காங்கிரஸ் மாநிலத் தலைவர் பங்கேற்பு!
[Sunday 2024-09-01 06:00]
|
சிதம்பரத்தில் கடலூர் தெற்கு மாவட்டம் தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் சார்பில் பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை வலியுறுத்தி பேரணி இன்று (31-08-24) நடைபெற்றது. சிதம்பரம் காந்திசிலை அருகே நடைபெற்ற இந்த பேரணியை தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் மாநிலத் தலைவர் சையது அசினா தலைமை வகித்து தொடங்கி வைத்தார். பேரணி தொடங்கி எஸ்.பி.கோயில்தெரு, போல் நாராயணன் தெரு, மாலைகட்டித்தெரு, உமையாள்சந்து வழியாக கீழரதவீதியில் உள்ள காமராஜர் சிலையை அடைந்தது.
|
|
|
‘தொழுகைக்கான இடைவெளி ரத்து’ - அசாம் முதல்வர் விளக்கம்!
[Sunday 2024-09-01 06:00]
|
அசாம் மாநிலத்தில், முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இவர் அவ்வப்போது, இஸ்லாமியர்கள் அவதூறாகவும், கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இந்த நிலையில், அசாம் மாநில சட்டசபையில் வெள்ளிக்கிழமை தொழுகைக்கான 2 மணி நேர இடைவேளை ரத்து செய்யப்படுவதாக அம்மாநில சபாநாயகர் பிஸ்வஜித் அறிவித்துள்ளார்.
|
|
|
பாரா ஒலிம்பிக்: தொடர் பதக்கங்களை வெல்லும் இந்திய அணி!
[Sunday 2024-09-01 06:00]
|
சர்வதேச விளையாட்டுத் திருவிழாவான 33வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் கோலாகலமாக நடைபெற்றது. கடந்த ஜூலை மாதம் 26ஆம் தேதி தொடங்கிய ஒலிம்பிக் விளையாட்டு திருவிழா ஆகஸ்ட் 11ஆம் தேதியுடன் 17 நாட்கள் நடைபெற்று நிறைவடைந்தது. இந்த போட்டியில் இந்தியா சார்பில் 117 வீரர், வீராங்கனை களமிறங்கினர். இந்த ஒலிம்பிக்கில் ஒட்டுமொத்தமாக ஒரு வெள்ளி, 5 வெண்கலம் என 6 பதக்கங்களை இந்திய அணி வென்றது.
|
|
|
அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு தமிழக முதலமைச்சர் கொடுத்த பரிசுப்பொருட்கள் என்னென்ன?
[Saturday 2024-08-31 16:00]
|
அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தடம் பெட்டகத்தை பரிசாக அளித்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள கைவினை கலைஞர்களால் உருவாக்கப்பட்ட கைவினை பொருட்களை ஸ்டார்ட்அப் தமிழ்நாடு திட்டத்தின்கீழ் நவீன சமுதாயத்தில் அறிமுகம் செய்வதற்காக உருவாக்கப்பட்ட திட்டம் தான் தடம் திட்டம்.
|
|
|
தாயை கொலை செய்துவிட்டு இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட மகன்!
[Saturday 2024-08-31 16:00]
|
இந்திய மாநிலம் குஜராத்தில் 21 வயது இளைஞர் ஒருவர் தனது தாயைக் கொன்றுவிட்டு, சமூக வலைத்தளத்தில் மன்னிப்பு கேட்டு பதிவிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் ராஜ்கோட்டைச் சேர்ந்தவர் நிலேஷ் (21). இவரது தந்தை 20 ஆண்டுகளுக்கு முன்பே குடும்பத்தை பிரிந்துவிட்டார். இதனால் நிலேஷ் தனது தாயுடன் வசித்து வந்தார்.
|
|
|
கல்லூரி விடுதிகளில் கஞ்சா புழக்கம்: 500 பொலிஸார் குவிப்பு!
[Saturday 2024-08-31 16:00]
|
தனியார் கல்லூரியை சுற்றிள்ள விடுதிகளில் கஞ்சா புழக்கம் இருப்பதாக தகவல் வந்த நிலையில் 500க்கும் மேற்பட்ட பொலிஸார் சோதனையில் இறங்கியுள்ளனர். தமிழக மாவட்டமான செங்கல்பட்டு, பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரியை சுற்றி இருக்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் தங்கியுள்ள விடுதிகளில் போதை மாத்திரைகள், கஞ்சா உள்ளிட்ட போதை புழக்கம் இருப்பதாக பொலிஸாருக்கு தகவல் ஒன்று கிடைத்தது.
|
|
|
கோலாகலமாக நடைபெறும் பார்முலா 4 கார் பந்தயம்!
[Saturday 2024-08-31 16:00]
|
சென்னையில் இன்று பார்முலா 4 கார் பந்தயம் நடைபெறவுள்ள நிலையில் அமைச்சர் உதயநிதிக்கு கமல் ஹாசன் மற்றும் ஏ.ஆர்.ரகுமான் வாழ்த்து தெரிவித்துள்ளனர். சென்னையில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தனியார் அமைப்பு ஆகியவை இணைந்து பார்முலா 4 கார் பந்தயம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, இன்று மற்றும் நாளையும் சென்னை தீவுத்திடலைச் சுற்றி 3.5 கிலோமீட்டர் தூரத்துக்கு பார்முலா 4 கார் பந்தயம் நடைபெறவுள்ளது.
|
|
|
அடுத்த 3 மணி நேரம்: 4 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!
[Saturday 2024-08-31 07:00]
|
வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ள நிலையில் வரும் நாளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் பரவலாக பல இடங்களில் மழை பொழிந்து வரும் நிலையில் தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் நான்கு மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
|
|
|
இரண்டு குழந்தைகளுடன் தாய் எடுத்த விபரீத முடிவு: பொள்ளாச்சியில் சோகம்!
[Saturday 2024-08-31 07:00]
|
கணவருடன் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக மனைவி தன்னுடைய இரண்டு குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோவையில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார். கூலி வேலை செய்து வைத்த அருண்குமார் மனைவி சுகன்யாவிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
|
|
|
ரூ. 822 கோடியில் பிராட்வே பேருந்து நிலையம்: தமிழக அரசு நிர்வாக அனுமதி!
[Saturday 2024-08-31 07:00]
|
சென்னை மாநகராட்சி மூலம் சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தில் குறளகத்தை உள்ளடக்கிய பல்வேறு போக்குவரத்து இணைப்புகளுடன் கூடிய ஒருங்கிணைத்த வசதிகளைக் கொண்ட பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து பேருந்து வளாகம் ரூ.822.70 கோடி மதிப்பீட்டில் அமைக்கத் தமிழக அரசின் நிர்வாக அனுமதி வழங்கி ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
|
|
|
அண்ணாமலை இல்லாததால் கட்சியை பார்த்துக்கொள்வது யார்?
[Friday 2024-08-30 18:00]
|
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமல வெளிநாடு சென்றிருப்பதால், கட்சி பணிகளை கவனிக்க ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் சார்பில் சர்வதேச அரசியல் படிப்புக்காக இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 12 பேரில் அண்ணாமலையும் ஒருவர் ஆவார்.
|
|
|
வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி: 13 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
[Friday 2024-08-30 18:00]
|
வடக்கு வங்கக்கடலில் நேற்று புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. அடுத்த 36 மணி நேரத்தில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசாவை நோக்கி நகரக்கூடும். இதையடுத்து, தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
|
|
|
தலைகுனிந்து சிவாஜியிடம் மன்னிப்பு கேட்கிறேன்: சிலை இடிந்ததற்கு மோடி வேதனை!
[Friday 2024-08-30 18:00]
|
சத்ரபதி சிவாஜி சிலை 8 மாதங்களிலேயே இடிந்து விழுந்த நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மன்னிப்பு கோரியுள்ளார். இந்திய மாநிலமான மஹாராஷ்டிரா, சிந்துதுர்க்கில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் சிலையை இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டில் திறந்து வைத்தார். இந்த சிலையின் உயரம் 35 அடியாகும். சிந்துதுர்க்கில் கனமழை பெய்தும், சூறாவளி காற்றும் வீசி வருகிறது. இந்நிலையில், மோடி திறந்து வைத்த சத்ரபதி சிவாஜி முழுமையாக உடைந்து கீழே விழுந்தது. இதில், தலை, கை, கால் என அனைத்து பாகங்களும் விழுந்து சிதறின.
|
|
|
தன்னை கடத்தியவரை விட்டு பிரிய முடியாமல் கதறி அழும் குழந்தை!
[Friday 2024-08-30 18:00]
|
கடத்தியவரிடம் இருந்து பிரிய மனமில்லாமல் குழந்தை கதறும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்திய மாநிலமான ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள சங்கனேர் சதர் காவல் நிலையத்திற்கு 14 மாதங்களுக்கு முன்பு குழந்தை காணாமல் போனதாக புகார் வந்தது. தன்னுடைய 11 மாத கால பிருத்வி என்ற குழந்தையை காணவில்லை என்று தாய் புகார் அளித்தார். பின்னர், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார் விசாரணை மேற்கொண்டனர்.
|
|
|
“முதலீட்டாளர் மாநாட்டுக்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறேன்” - முதல்வர் ஸ்டாலின்!
[Friday 2024-08-30 06:00]
|
தமிழகத்திற்கான தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, 15 நாட்கள் அரசு முறைப் பயணமாகத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சென்றுள்ளார். சான்ஸ்பிரான்ஸ்கோ விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினை, சான்ஸ்பிரான்ஸிஸ்கோவின் இந்தியாவிற்கான துணைத் தூதர் சிரிகர்ரெட்டி மலர்க்கொத்து கொடுத்து வரவேற்றார். தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, திமுகவின் சுற்றுச்சூழல் அணியின் மாநிலச் செயலாளரும் அயலக தமிழர் நலவாரிய தலைவருமான கார்த்திகேய சிவசேனாதிபதி மற்றும் அமெரிக்கா வாழ் தமிழர்கள் ஆகியோர் உற்சாக வரவேற்பை அளித்தனர்.
|
|
|
ஃபார்முலா - 4 கார் பந்தய விவகாரம்: உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
[Friday 2024-08-30 06:00]
|
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தனியார் அமைப்பு ஒன்றின் சார்பில் சென்னையில் ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்தப்படவுள்ளது. கார் பந்தயத்திற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இத்தகைய சூழலில் தான் ஃபார்முலா 4 கார் பந்தயத்திற்குத் தடை விதிக்கக்கோரி தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
|
|
|
தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்: மாணவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைப்பு!
[Friday 2024-08-30 06:00]
|
நாடு முழுவதும் சமீப காலமாகப் பள்ளிகளுக்குத் தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு அங்கு வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்ததில் அது புரளி எனத் தெரியவருகிறது. அந்த வகையில் இன்றும் (29.08.2024) பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.
|
|
|
நாம் தமிழர் சீமான் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு!
[Thursday 2024-08-29 19:00]
|
குறிப்பிட்ட சமூகத்துடன் பெயரை வசைச் சொல்லாகப் பயன்படுத்திய வழக்கில், நாம் தமிழர் சீமான் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது சர்ச்சைக்குரிய வார்த்தையைப் பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது.
|
|
|
ஐசிசி தலைவராக தேர்வாகியுள்ள ஜெய்ஷாவின் சொத்து மதிப்பு எவ்வளவு?
[Thursday 2024-08-29 19:00]
|
ஐசிசி தலைவராக போட்டியின்றி தேர்வாகி இருக்கும் ஜெய்ஷாவின் சொத்துமதிப்பு எவ்வளவு என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். கடந்த 2019 -ம் ஆண்டு முதல் பிசிசிஐ செயலாளராக ஜெய்ஷா இருந்து வருகிறார். ஐசிசியின் தலைவராக நியூஸிலாந்தைச் சேர்ந்த 62 வயதான கிரேக் பார்க்லே என்பவர் தொடர்ச்சியாக இருமுறை பதவி வகித்த வந்த நிலையில், அவரது பதவிக்காலம் வரும் நவம்பர் மாதத்தில் நிறைவு பெறுகிறது.
|
|
|
வடக்கு நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு பகுதி!
[Thursday 2024-08-29 19:00]
|
வடக்கு வங்கக்கடலில் இன்று காலை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை மையம் கூறியதாவது.., காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்துச்செல்லும். இது ஆகஸ்ட் 30ஆம் திகதி நாளை மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவக்கூடும்.
|
|
|
20 ஆண்டுகளுக்கு பின் இந்தியாவை உலுக்கப்போகும் சண்டிபுரா வைரஸ்!
[Thursday 2024-08-29 19:00]
|
இந்தியாவில் 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது சண்டிபுரா வைரஸ் பாதிப்பு இருப்பதாக WHO சமீபத்தில் கூறியுள்ளது. உலகளாவிய சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, ஜூன் தொடக்கத்தில் இருந்து ஆகஸ்ட் 15 வரை, சுகாதார அமைச்சகம் 82 இறப்புகள் உட்பட 245 AES வழக்குகளைப் பதிவு செய்துள்ளது. இந்தியாவில் மொத்தம் 43 மாவட்டங்களில் தற்போது AES வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில், 64 பேருக்கு சண்டிபுரா வைரஸ் (CHPV) தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
|
|
|
|