|
|
தமிழக வெற்றி கழக கட்சி கொடி நாளை அறிமுகம்!
[Wednesday 2024-08-21 17:00]
|
தமிழக வெற்றி கழகத்தின் கட்சி கொடியை அக்கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய் நாளை அறிமுகம் செய்கிறார். நடிகர் விஜய் தமிழக வெற்றி கழக கட்சியை தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். அவர் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார். அவர் மக்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை செய்தும், மாணவ மாணவியருக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கி சிறப்பித்தும் வருகிறார்.
|
|
|
வள்ளலார் தெய்வ நிலைய நிலம் ஆக்கிரமிப்பு: 269 பேரையும் எதிர்மனுதாரராக சேர்க்க உத்தரவு!
[Thursday 2024-09-19 18:00]
|
வடலூரில் சர்வதேச வள்ளலார் மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், ஆதரவு தெரிவித்தும் பல்வேறு வழக்குகள் சென்னை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனை நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் சவுந்தர் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வருகிறது.
|
|
|
பிரசவத்தின் போது வயிற்றில் துணிவைத்து தைத்த மருத்துவர்கள்!
[Thursday 2024-09-19 18:00]
|
பிரசவத்தின் போது வயிற்றில் துணிவைத்து மருத்துவர்கள் தைத்ததால் மூன்று மாதங்களுக்கு பிறகு அதனை அகற்றியுள்ளனர். இந்திய மாநிலமான மத்திய பிரதேசம், அம்லா பகுதியில் காயத்ரி ராவத் என்ற பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர், கடுமையான வயிற்று வலி காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
|
|
|
சென்னையில் பயங்கரம்: பெண்ணை துண்டு துண்டாக வெட்டி சூட்கேஸில் அடைத்த இளைஞர்!
[Thursday 2024-09-19 18:00]
|
சென்னை துரைப்பாக்கத்தில் இன்று அதிகாலை பெண் ஒருவரை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்து அடைக்கப்பட்ட சூட்கேஸ் கிடைத்துள்ளது. சென்னை துரைப்பாக்கம் குமரன் குடில் குடியிருப்பு அருகே துர்நாற்றம் வீசிய சூட்கேஸ் ஒன்று கிடந்துள்ளது. மேலும் அதில் இருந்து ரத்தம் வழிந்தோடியதால் அங்கிருந்த பொதுமக்கள் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
|
|
|
திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு: சந்திரபாபு நாயுடு பகீர் குற்றச்சாட்டு!
[Thursday 2024-09-19 18:00]
|
ஜெகன்மோகன் ஆட்சியில் திருப்பதி லட்டு பிரசாதத்தில், விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இந்திய மாநிலமான ஆந்திர பிரதேசத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்து 100 நாட்கள் நிறைவடைந்துள்ளது. இதனால் சந்திரபாபு நாயுடு தலைமையிலான சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டமானது மங்களகிரியில் நடைபெற்றது.
|
|
|
வக்ஃப் போர்ட்டின் புதிய சேர்மன் யார்?
[Thursday 2024-09-19 06:00]
|
தமிழ்நாடு வஃக் போர்டின் புதிய சேர்மனாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் நவாஸ்கனியை நியமிக்க தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது. நவாஸ்கனி, ராமநாதபுரம் எம்.பி.யாக இருக்கிறார். தலைவராக இருந்த அப்துல் ரஹ்மான் ராஜினாமா செய்ததை அடுத்து புதிய தலைவராக திமுகவை சேர்ந்த ஒரு முஸ்லீம் பிரமுகருக்கு தர வேண்டும் திமுக தலைமையிடம் காய்கள் நகர்த்தப்பட்டிருந்தன.
|
|
|
பள்ளி மாணவிக்கு பிறந்த குழந்தை இறந்தது: போலீசார் தேடிய வாலிபர் கைது!
[Thursday 2024-09-19 06:00]
|
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியில் உள்ள ஒரு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அருகாமை கிராமத்தைச் சேர்ந்த ஒரு மாணவி பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 15 ந் தேதி மாலை வீட்டில் இருந்த மாணவிக்கு திடீர் வயிற்றுவலி ஏற்பட்டதால் அவரது தாயார் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்துள்ளனர். விரைந்து சென்ற 108 ஆம்புலன்ஸில் ஏற்றிக் கொண்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு விரைந்தனர்.
|
|
|
விஏஓ கொலை வழக்கு: நீதிமன்றத்தை நாடிய குற்றவாளிகள்!
[Thursday 2024-09-19 06:00]
|
கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் கொலை செய்யப்பட்ட வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளிகளின் ஜாமீன் மற்றும் தண்டனை ரத்து செய்யக்கோரிய மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அடுத்துள்ள முறப்பநாடு கோவில்பத்து கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்த லூர்து பிரான்சிஸ் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அலுவலகத்திலேயே வைத்து கொடூரமாகத் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார்.
|
|
|
"உதயநிதிக்கு பிறகு இன்பநிதி என தெரிந்தது தான்" - சீமான் காட்டம்!
[Wednesday 2024-09-18 17:00]
|
தமிழகத்தின் துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்கவுள்ளார் என்று தகவல் பரவி வருவது தொடர்பாக சீமான் கருத்து தெரிவித்துள்ளார். தமிழக விளையாட்டுத் துறை மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தின் துணை முதலமைச்சராக பதவியேற்பார் என்று சில மாதங்களாக தகவல்கள் பரவி வருகிறது. இதனை சில திமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் அமைச்சர்களும் கூறி வருகின்றனர்.
|
|
|
‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டம் - மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
[Wednesday 2024-09-18 17:00]
|
'ஒரே நாடு; ஒரே தேர்தல்' தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை தர முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 2 ஆம் தேதி சிறப்புக் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்திருந்தது. இந்தக் குழு மக்களவை மற்றும் சட்டசபைத் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது குறித்து ஆய்வு செய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதே சமயம் ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்துவது குறித்து விரைவாக அறிக்கை அளிக்க இக்குழுவிற்கு மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது. இதற்கான கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் 18,626 பக்கங்கள் கொண்ட அறிக்கையைக் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவிடம், முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு சமர்ப்பித்தது.
|
|
|
இஸ்ரோவின் அடுத்த இலக்கு - ரெட் சிக்னல் கொடுத்த மத்திய அமைச்சரவை!
[Wednesday 2024-09-18 17:00]
|
இந்தியா சார்பில் நிலவின் தென் பகுதியை ஆராய கடந்த ஆண்டு ஜூலை 14 ஆம் தேதி விண்ணில் பாய்ந்த சந்திரயான்-3 நிலவின் ஈர்ப்பு விசைக்குள் செலுத்தப்பட்டு தொடர் முயற்சியால் இறுதிக்கட்டத்தை எட்டி, திட்டமிட்டபடி நிலவின் தென் துருவத்தில் 14/09/2023 அன்று இறங்கி சாதனை படைத்தது. இதனால் நிலவில் தென் துருவத்தில் முதன் முதலில் கால் பதித்து சாதித்து காட்டியது இஸ்ரோ.
|
|
|
அம்பானி வீட்டு திருமணத்திற்கு வர நடிகர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டாதா?
[Wednesday 2024-09-18 17:00]
|
இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானியின் வீட்டு திருமணத்தில் கலந்துகொள்ள நடிகர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதா என்ற கேள்விக்கு நடிகை பதில் அளித்துள்ளார். முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் ஜூலை 12 -ம் திகதி ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் உள்ள பிரமாண்ட வளாகத்தில் திருமணம் நடைபெற்றது.
|
|
|
ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது!
[Wednesday 2024-09-18 07:00]
|
ஜம்மு காஷ்மீரில் மொத்தம் உள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் முதல் கட்ட வாக்குப்பதிவு செப்டம்பர் 18ஆம் தேதியும், அதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு செப்டம்பர் 25ஆம் தேதியும், மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு அக்டோபர் 1ஆம் தேதியும் நடைபெற உள்ளது எனத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதில் பதிவான வாக்குகள் அக்டோபர் 8ஆம் தேதி எண்ணப்படுகின்றன.
|
|
|
பள்ளி மாணவிக்கு ஆண் குழந்தை: வாலிபருக்கு வலைவீச்சு!
[Wednesday 2024-09-18 07:00]
|
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியில் உள்ள ஒரு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த ஒரு மாணவி ஒருவர் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 15ஆம் தேதி மாலை வீட்டில் இருந்த போது மாணவிக்கு திடீர் வயிற்றுவலி எனத் துடித்துள்ளார். அப்போது மாணவியின் பெற்றோர் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து 108 ஆம்புலன்ஸில் மாணவியை ஏற்றிக் கொண்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு விரைந்தனர்.
|
|
|
“2026ஆம் ஆண்டு தேர்தல் தான் நம்முடைய இலக்கு” - முதல்வர் மு.க. ஸ்டாலின்!
[Wednesday 2024-09-18 07:00]
|
திமுக தொடங்கி 75 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி பவள விழாவும், ஆண்டுதோறும் கொண்டாடப்படும் முப்பெரும் விழாவும் சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் (17.09.2024) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திமுக முப்பெரும் விழாவில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் மூலம் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் உரையாற்றினார். இதனையடுத்து தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், பெரியார் விருது பாப்பம்மாளுக்கும், அண்ணா விருது அறந்தாங்கி 'மிசா' இராமநாதனுக்கும், பாவேந்தர் விருது கவிஞர் தமிழ் தாசனுக்கும், பேராசிரியர் விருது வி.பி. ராசனுக்கும், கலைஞர் விருது எஸ். ஜெகத்ரட்சகனுக்கும், மு.க. ஸ்டாலின் விருது எஸ்.எஸ். பழனிமாணிக்கத்திற்கும் வழங்கினார்.
|
|
|
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா!
[Tuesday 2024-09-17 18:00]
|
டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பாகப் பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையாலும், சி.பி.ஐ.யாலும் கைது செய்யப்பட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. அதன் பேரில், கடந்த 13ஆம் தேதி திகார் சிறையில் இருந்து கெஜ்ரிவால் வெளியே வந்தார். இதையடுத்து ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் பேசிய கெஜ்ரிவால் இரண்டு நாட்களில் தன்னுடைய முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாகவும், நவம்பர் மாதம் நடைபெறும் மகாராஷ்டிரா தேர்தலுடன் டெல்லி தேர்தலும் நடக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்த திடீர் அறிவிப்பு, ஆம் ஆத்மி கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
|
|
|
திமுக முப்பெரும் விழா தொடங்கியது!
[Tuesday 2024-09-17 18:00]
|
தி.மு.க. தொடங்கி 75 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி பவள விழாவும், ஆண்டுதோறும் கொண்டாடப்படும் முப்பெரும் விழாவும் சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் இன்று (17.09.2024) மாலை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பெரியார் விருது பாப்பம்மாளுக்கும், அண்ணா விருது அறந்தாங்கி 'மிசா' இராமநாதனுக்கும், பாவேந்தர் விருது கவிஞர் தமிழ் தாசனுக்கும் வழங்க உள்ளார்.
|
|
|
ஆசிய சாம்பியன்ஷிப் ஹாக்கி தொடர்: இந்திய அணி சாம்பியன்!
[Tuesday 2024-09-17 18:00]
|
ஆசிய சாம்பியன்ஷிப் ஹாக்கி தொடரின் இறுதிப்போட்டியில் சீனாவை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. சீனாவில் ஆசிய சாம்பியன் ஷிப் ஹாக்கி தொடர் நடைபெற்று வந்தது. இந்த தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா - சீனா அணிகள் மோதின. அதன்படி நடைபெற்ற இறுதிப்போட்டியில் சீனாவை 1க்கு 0 என்ற கணக்கில் வீழ்த்தி, இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இந்த போட்டியின் போது வெற்றிக்கான கோலை இந்தியாவின் ஹாக்கி வீரர் ஜுக்ராஜ் சிங் அடித்து அசத்தினார்.
|
|
|
வெளிப்புற நோயாளிகள் சிகிச்சை பிரிவில் ஒரே ஒரு மருத்துவர்? - நோயாளிகள் அவதி!
[Tuesday 2024-09-17 18:00]
|
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான உள் மற்றும் வெளி நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் வெளி நோயாளிகள் பிரிவில் நேற்று(16.09.2024) ஒரே ஒரு மருத்துவர் இருந்ததாகவும், அதனால் சிகிச்சைக்காக வந்த வெளிப்புற நோயாளிகள் (பொதுமக்கள்) நீண்ட வரிசையில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
|
|
|
“சாதிப் பெயர்கள் வேண்டாம்” - கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்!
[Tuesday 2024-09-17 06:00]
|
சென்னை எழும்பூரில், நெல்லை - தூத்துக்குடி நாடார் மகிமை பரிபாலன சங்கத்தின் சார்பில் வியாபாரிகளுக்கான கட்டட திறப்பு விழா விடுதிக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு மற்றும் பெருந்தலைவர் காமராஜர் சிலை திறப்பு நிகழ்ச்சி ஆகியவை இன்று (16.09.2024) நடைபெற்றது. இதில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி திமுக எம்.பி.யுமான கனிமொழி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
|
|
|
முதல்வர் ஸ்டாலினுக்கு ஆ. ராசா எம்.பி. கடிதம்!
[Tuesday 2024-09-17 06:00]
|
அருந்ததியர் மக்களுக்குப் பட்டா வழங்கிட வருவாய் அலுவலக நிர்வாக அலகு அமைக்கத் தனி மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் போதுமான வட்டாட்சியர்கள் உள்ளடக்கிய குழு அமைத்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நீலகிரி திமுக எம்.பி. ஆ.ராசா கோரிக்கை விடுத்துள்ளார்.
|
|
|
‘கலைஞர் பூங்கா’ கட்டண வசூல் விவகாரம் குறித்து மாநகராட்சி ஆணையர் விளக்கம்!
[Tuesday 2024-09-17 06:00]
|
புதுக்கோட்டை நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள கலைஞர் பூங்காவில் நுழைவுக் கட்டணம் குறித்து "நுகர்வோர் நலன் மக்கள் விழிப்புணர்ச்சி மற்றும் ஊழல் தடுப்பு இயக்கம் தமிழ்நாடு" புதுக்கோட்டைக் கிளை சார்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு மாநகராட்சி பொது தகவல் அலுவலர் 11 ந் தேதி கொடுத்துள்ள பதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
|
|
|
ராகுல் காந்தியின் நாக்கை அறுப்பவருக்கு ரூ.11 லட்சம் பரிசு: பிரபலத்தின் அறிவிப்பால் சர்ச்சை!
[Monday 2024-09-16 18:00]
|
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியின் நாக்கை அறுப்பவருக்கு ரூ.11 லட்சம் பரிசு என்று எம்.எல்.ஏ ஒருவர் அறிவித்துள்ளார். சமீபத்தில் ராகுல் காந்தி அமெரிக்க பயணம் மேற்கொண்டிருந்தார். அங்கு அவர் பேசுகையில், "இந்திய நாடானது அனைவருக்கும் வாய்ப்பு வழங்கும் நாடாக இருக்குமானால் இட ஒதுக்கீட்டை நிறுத்துவது குறித்து காங்கிரஸ் கட்சி யோசிக்கும்.
|
|
|
சாலையை சீரமைப்பதற்காக சேற்றில் படுத்து கோரிக்கை வைத்த பெண்!
[Monday 2024-09-16 18:00]
|
சாலையை சீரமைப்பதற்காக சேறு நிறைந்த சாலையில் படுத்துக்கொண்டும், கும்பிட்டும் பெண் ஒருவர் கோரிக்கை வைத்துள்ளார். இந்திய மாநிலமான மத்திய பிரதேசம், ஷியோபூர் மாவட்டத்தில் ஒரு பழங்குயின பெண் சேறு நிறைந்த சாலையில் படுத்து கும்பிட்டு செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
|
|
|
அரசு அதிகாரியின் வேலைக்கு வினையான ரீல்ஸ் வீடியோக்கள்!
[Monday 2024-09-16 18:00]
|
வேலையில் கவனம் செலுத்தாமல் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்த அரசு அதிகாரியின் வேலைக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்திய மாநிலமான ஹிமாச்சல பிரதேசம், காங்க்ரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஓஷின் ஷர்மா. இவர் தனது பள்ளிப்படிப்பை சிம்லாவில் முடித்தார். இவரது பெற்றோர் இருவருமே அரசு பணியில் இருந்தவர்கள். ஓஷின் ஷர்மாவுக்கு மருத்துவராக வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால், அவர் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் வேதியியலில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
|
|
|
நிபா தொற்றுக்கு ஒருவர் மரணம்!
[Monday 2024-09-16 18:00]
|
தென்னிந்தியாவின் கேரளா மாநிலத்தில் நிபா வைரஸால் 24 வயது மாணவர் ஒருவர் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த மாணவருடன் தொடர்புடைய 151 பேர்கள் தற்போது தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் மருத்துவ அதிகாரிகள் தரிவித்துள்ளனர். ஜூலை மாதத்திற்கு பின்னர் நிபா பாதிப்பு காரணமாக கேரளாவில் இது இரண்டாவது மரணம் என்றே கூறப்படுகிறது.
|
|
|
‘விநாயகர் சிலைகள் அமைதியான முறையில் கரைக்கப்பட்டன’ - சென்னை காவல்துறை!
[Monday 2024-09-16 06:00]
|
சென்னையில் விநாயகர் சிலைகள் அமைதியான முறையில் கரைக்கப்பட்டதாகச் சென்னை மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாகச் சென்னை மாநகர காவல் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “கடந்த 07.09.2024 அன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள், காவல்துறை அனுமதி பெற்று, சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பொது இடங்களில் 1,524 விநாயகர் சிலைகளை நிறுவி உரிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைப்பிடித்து வழிபாடு செய்து வந்தனர்.
|
|
|
முதல்வர் ஸ்டாலினை சந்திக்கிறார் தொல். திருமாவளவன் எம்.பி.!
[Monday 2024-09-16 06:00]
|
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி அமெரிக்கா சென்றடைந்தார். இந்த பயணத்தின் போது பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதோடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அமெரிக்காவில் உள்ள புலம்பெயர் தமிழர்கள், தமிழ்ச் சங்கத்தைச் சேர்ந்தவர்களுடன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு கலந்துரையாடலிலும் ஈடுபட்டார். அதே சமயம் முதல்வரின் இந்த அமெரிக்கப் பயணத்தில் மொத்தமாகத் தமிழகத்திற்கு 7,616 கோடி ரூபாய் தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தது.
|
|
|
‘சமூகநீதி நாள் உறுதிமொழி’ ஏற்பு நிகழ்ச்சி - திமுக அறிவிப்பு!
[Monday 2024-09-16 06:00]
|
தந்தை பெரியார் பிறந்தநாளை (செப்டம்பர் 17) முன்னிட்டு திமுக சார்பில் அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் ‘சமூகநீதி நாள் உறுதிமொழி’ நாளை மறுநாள் (17.09.2024) ஏற்கப்பட உள்ளதாக திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. இது குறித்து திமுக தலைமைக் கழகத்தின் சார்பில் இன்று (15.09.2024) வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “தந்தை பெரியாரின் ஒவ்வொரு பிறந்த நாளும் ‘சமூகநீதி நாளாக’ கடைப்பிடிக்கப்படும் என்றும்; அப்பிறந்தநாள் அன்று ‘சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்க வேண்டும்’ எனத் தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கடந்த 6.9.2021 அன்று சட்டப்பேரவையில் அறிவித்தார்.
|
|
|
|