Untitled Document
September 19, 2024 [GMT]
ஊரடங்கு பிறப்பிக்கத் திட்டமா?
[Friday 2024-09-13 17:00]

அடுத்த வாரம் ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு நடைபெறவுள்ள நிலையில் ஊரடங்கு சட்டத்தை பிறப்பிப்பது குறித்து சிந்திக்கவில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக தெரிவித்துள்ளார்.


தமிழ் தேசிய பொது கட்டமைப்பின் வெற்றியை உடைப்பதற்கு பல சக்திகள் முயற்சி!
[Friday 2024-09-13 17:00]

தமிழ் பொது வேட்பாளர் என்ற ரீதியில் தன்னை எந்த பிரதான கட்சித் தலைவர்களும் பேசுவதற்காக அழைக்கவில்லை. அவ்வாறு அவர்கள் அழைத்தாலும் தான் செல்லப்போவதில்லை எனவும் தான் எடுத்த இந்த முடிவில் இறுதி வரை பயணித்தே தீருவேன் என தமிழ் பொது வேட்பாளர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் தெரிவித்தார்.


கஜேந்திரன் எம்.பி கைதாகி விடுதலை!
[Friday 2024-09-13 17:00]

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டப்பட்ட நிலையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.


யார் வென்றாலும் இணைந்து செயற்படுவோம்!
[Friday 2024-09-13 17:00]

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் இலங்கையில் ஜனாதிபதியாக யார் தெரிவானாலும் அவருடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாகவும், இலங்கையின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு மதிப்பளிப்பதில் எப்போதும் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் சீனா உறுதிப்படுத்தியுள்ளது.


காணி வாங்க கனடாவில் இருந்து சென்றவர் 85 இலட்சம் ரூபாயை தரகரிடம் பறிகொடுத்தார்!
[Friday 2024-09-13 17:00]

கனடாவில் இருந்து யாழ்ப்பாணத்தில் காணி வாங்குவதற்காக வந்தவரின் 85 இலட்ச ரூபாய் பணம் காணி தரகரால் அபகரிக்கப்பட்டுள்ளது.


கனடாவில் தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரனுக்கு ஆதரவுக் கூட்டம்! Top News
[Friday 2024-09-13 17:00]

தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரனுக்கு ஆதரவு தெரிவிக்கும் கூட்டம் கனடாவில் எதிர்வரும் 15ஆம் திகதி நடைபெறவுள்ளது.


அவசரமாக வடக்கு ரயில் பாதையை திறக்க முயற்சி- தேர்தலுக்காக மக்களை பலியிட தயாராகும் அரசாங்கம்!
[Friday 2024-09-13 17:00]

வடக்கு புகையிரத மார்க்கத்தின் அனுராதபுரம் முதல் மஹவ வரையிலான புகையிரத பாதையைத் திருத்தும் பணிகளை உரிய முறையில் பூர்த்தி செய்யாமல், அதை திறப்பதை இடைநிறுத்துமாறு கோரி லொகோமோட்டிவ் இயக்குநர்கள் பொறியியலாளர்கள் சங்கம், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.


தமிழ்ப் பொது வேட்பாளரின் தேர்தல் அறிக்கையை கனடிய தமிழர் தேசிய அவை வரவேற்பு!
[Friday 2024-09-13 17:00]

இலங்கைத் தீவில் நடைபெறவுள்ள சனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள தமிழ்ப் பொது வேட்பாளரால் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையை, கனடிய தமிழர் தேசிய அவை வரவேற்று அதற்கான முழுமையான ஆதரவையும் தெரிவிக்கிறது.


நாட்டின் ஒருமைப்பாட்டை நாமலால் மாத்திரமே பாதுகாக்க முடியும்!
[Friday 2024-09-13 17:00]

நாட்டின் ஒருமைப்பாட்டை நாமல் ராஜபக்ஷவால் மாத்திரமே பாதுகாக்க முடியும். தாய்நாட்டின் மீது பற்றுக் கொண்டுள்ள முற்போக்கான மக்கள் நாட்டின் எதிர்காலத்தை கருத்திற் கொண்டு தீர்மானம் எடுக்க வேண்டும். அரசியலுக்காக கொள்கைகளை காட்டிக் கொடுக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.


ஏறாவூர் விபத்தில் இளைஞன் பலி!
[Friday 2024-09-13 17:00]

ஏறாவூர் - புன்னக்குடா வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஏறாவூர் தளவாய் பிரதேசத்தை சேர்ந்த 28 வயதுடைய அஜீத்குமார் என்பவர் உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிள் சிறிய ரக உழவு இயந்திரத்தில் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.


வடக்கு, கிழக்கு இணைப்பு, காணி, பொலிஸ் அதிகாரங்களை கிடைக்காது!
[Friday 2024-09-13 05:00]

பொதுஜன பெரமுனஅரசாங்கத்தின் கீழ் வடக்கு மற்றும் கிழக்கு இணைக்கப்படாது, அதேவேளை பொலிஸ் அல்லது காணி அதிகாரங்கள் இந்தப் பகுதிகளுக்கு வழங்கப்படாது என அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


அதிரடியாக தடைகளை அறிவித்தார் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர்!
[Friday 2024-09-13 05:00]

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்புக்கு இன்னும் ஒன்பது நாட்களே இருக்கின்ற நிலையில், வாக்களிப்பை நடத்துவதற்கான ஏற்பாடுகள் பூர்த்தி அடைந்துள்ளது எனத் தெரிவித்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க, வாக்களிப்பு நிலையங்களுக்கு கையடக்க தொலைபேசிகளை எடுத்துச் செல்வது தடை செய்யப்பட்டுள்ளது என்றார்.


இராணுவமயமாக்கப்பட்ட வடக்கு கிழக்கு - சிங்களமயமாகும் திருகோணமலை!
[Friday 2024-09-13 05:00]

யுத்தத்தின் பின்னர் கடந்த 15 ஆண்டுகளாக தொடர்ந்தும் இராணுவக் கண்காணிப்பின் கீழ் இருக்கும் திருகோணமலை மாவட்டத்தில் சிங்கள மக்களின் ஆதிக்கம் விரிவடைந்து வருகின்றது.


51/1 தீர்மானத்தை காலநீடிப்புச் செய்வது குறித்து ஒக்ரோபர் 7ஆம் திகதி முடிவு!
[Friday 2024-09-13 05:00]

இலங்கை தொடர்பில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டு, நடைமுறையில் இருக்கும் 51/1 தீர்மானத்தை மேலும் ஒன்று அல்லது இரண்டு வருடங்களுக்குக் காலநீடிப்புச் செய்வது குறித்து ஆராயப்பட்டுவரும் நிலையில், எதிர்வரும் ஒக்டோபர் 7 ஆம் திகதி பேரவையில் அதுகுறித்த தீர்மானம் எட்டப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.


நாமல் வென்றால் மகிந்தவே பிரதமர்!
[Friday 2024-09-13 05:00]

ஜனாதிபதித் தேர்தலில் தான் வெற்றி பெற்றால், பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


சஜித்துக்கே ஆதரவு என்கிறார் சத்தியலிங்கம்!
[Friday 2024-09-13 05:00]

ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்க மேற்கொண்ட தீர்மானத்தில் மாற்றங்கள் இல்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் அறிக்கையொன்றின் மூலம் இதனைத் தெரிவித்துள்ளார்


பெற்ற மகளை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்திய தந்தை கைது!
[Friday 2024-09-13 05:00]

யாழ்ப்பாணத்தில் தனது மகளை பலமுறை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி கர்ப்பமாக்கிய தந்தைகைது செய்யப்பட்டுள்ளார். 53 வயதான குறித்த தந்தை தனது மகளான 23 வயதுடைய யுவதியை பல தடவைகள் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார். இந்நிலையில் குறித்த யுவதியும் கர்ப்பமடைந்த நிலையில் 4 மாதங்களுக்கு முன்னர் கர்ப்பம் கலைக்கப்பட்டுள்ளது.


முட்டை வியாபாரிக்கு 6 மாத கடூழியச் சிறைத்தண்டனை!
[Friday 2024-09-13 05:00]

அதிக விலைக்கு முட்டையை விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட குருநாகல், மாதவ பிரதேசத்தைச் சேர்ந்த முட்டை வியாபாரி ஒருவருக்கு 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 06 மாத கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பிலெஸ்ஸ நீதவான் நீதிமன்றத்தினால் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது


10 வருட விசாவுடன் தப்பியோடத் தயார் நிலையில் ரிரான் அலஸ்!
[Friday 2024-09-13 05:00]

எந்தவொரு நாட்டிலும் பத்து வருடங்கள் வாழ தான் விசா வைத்திருப்பதாகவும், ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு விசா பெற வேண்டிய அவசியமில்லை என்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் தெரிவித்துள்ளார்.


எரிபொருள் விலையை பாதியாக குறைப்பதாக வாக்குறுதி!
[Friday 2024-09-13 05:00]

ஜனாதிபதி வேட்பாளரும் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சருமான ரொஷான் ரணசிங்க எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தாம் தெரிவு செய்யப்பட்டால் எரிபொருள் விலையை 50 வீதத்தால் குறைப்பதாக உறுதியளித்துள்ளார்.


அனுர முன்னணியில் - ரணில் செல்வாக்கும் அதிகரிப்பு!
[Thursday 2024-09-12 16:00]

தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளருக்கு 36 வீத ஆதரவு காணப்படுகின்றது,ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளருக்கு 32 வீத ஆதரவு காணப்படுகின்றது,ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவிற்கு 28 வீத ஆதரவு காணப்படுகின்றது .


இன்று எமக்குள்ள ஒரே வழி பொதுவேட்பாளர் தான்!
[Thursday 2024-09-12 16:00]

இந்த நாட்டில் தமிழர்கள் அழிவுப்பாதைக்கு கொண்டு செல்லப்படுகின்றார்கள்.இந்த நாட்டில் தமிழ் மக்களுக்கு நடந்த அநீதிகளை சர்வதேசத்திற்கு கொண்டு செல்வதற்கு இன்று எமக்குள்ள ஒரே வழி பொதுவேட்பாளராகும்.வேறு யாருக்கும் வாக்களிப்பதன் மூலம் அதனை அடையமுடியாது என மட்டக்களப்பு மாவட்ட ஜேசு சபை துறவி அருட்தந்தை ஜோச்மேரி தெரிவித்தார்.


சஜித்தை ஆதரிக்கும் முடிவில் மாற்றம் இல்லை - தமிழரசு கட்சி வீம்பு!
[Thursday 2024-09-12 16:00]

ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கின்ற முடிவில் எந்த மாற்றங்களும் இல்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சி மீண்டும் அறிவித்துள்ளது.


பெண்கள் மேம்பாட்டுக்கென ஒன்ராறியோ 6.9 மில்லியன் டொலர் முதலீடு! Top News
[Thursday 2024-09-12 16:00]

பல்வேறு துறைகளில் பெண்களுக்கான அத்தியாவசிய திறமைகள் மற்றும் பாதுகாப்பான வேலைகளை உருவாக்கி உதவுவதற்காக ஒன்ராறியோ அரசு 6.9 மில்லியன் டொலர்களை ஒதுக்கியுள்ளது.


ஒக்டோபர் 26இல் குட்டித் தேர்தல்!
[Thursday 2024-09-12 16:00]

எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒக்டோபர் 26ஆம் திகதி நடைபெறவுள்ளது. எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 9ஆம் திகதி ஆரம்பமாகி வியாழக்கிழமை (12) நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்தது.


காணாமலாக்கப்பட்டோரின் பிரச்சினைக்கு 3 வருடங்களுக்குள் நிரந்தரத் தீர்வு!
[Thursday 2024-09-12 16:00]

வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் பிரச்சினைக்கு எதிர்வரும் 3 வருடங்களுக்குள் நிரந்தரத் தீர்வு வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.


18ஆம் திகதிக்குப் பின் வன்முறை வெடிக்கும்?
[Thursday 2024-09-12 16:00]

செப்டம்பர் 18-ம் திகதி பிரச்சார நடவடிக்கைக்கான காலக்கெடு முடிவடைந்த பிறகு, எதிர்க்கட்சியினர் தங்கள் சதிகாரர்களை தேசிய மக்கள் சக்தியினராக பாவித்து வன்முறை சம்பவங்களை உருவாக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாக தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.


வவுனியா டிப்போ ஊழியர்கள் போராட்டம் - முடங்கியது பஸ் சேவை!
[Thursday 2024-09-12 16:00]

தமது ஊழியர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலை ஊழியர்கள் இன்று பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Ambikajewellers-01-08-2021-seithy
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Airlinktravel-2020-01-01
NKS-Ketha-04-11-2021
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
Rajeef sebarasha 2023/04/19
Mahesan-Remax-169515-Seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா