|
|
நெடுந்தீவில் பன்றி தாக்கி மூதாட்டி பலி!
[Sunday 2024-08-25 07:00]
|
பன்றியால் குத்திக் குதறித் தாக்கப்பட்ட வயோதிபப் பெண், சிகிச்சையின்போது உயிரிழந்துள்ளார்.
|
|
|
மட்டு. கல்லடியில் பொது வேட்பாளருக்கு ஆதரவாக திரண்ட மக்கள்!
[Wednesday 2024-09-18 05:00]
|
மட்டக்களப்பு கல்லடி பகுதியில் தமிழ்ப்பொதுவேட்பாளர் பா. அரியநேத்திரனை ஆதரித்து மாபெரும் பொதுக்கூட்டம் நேற்று மாலை இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யோகேஸ்வரன், சிறிநேசன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினர்.
|
|
|
பொது வேட்பாளருக்கு ஆதரவாக எழுச்சி கொண்ட மலையகம்!
[Wednesday 2024-09-18 05:00]
|
மலையகம் அக்கரப்பத்தனையில் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு ஆதரவாக நேற்று மாபெரும் பொது கூட்டம் இடம்பெற்றது. இதில் மலையகத்தை சேர்ந்த பல புத்திஜீவிகள் அரசியல் பிரமுகர்கள் முன்னாள் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் மற்றும் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் என பல்லாயிரக் கணக்கில் மக்கள் கலந்து கொண்டனர். வரலாற்றில் முதல் முறையாக ஒருமித்த தமிழ் இனமாக அனைத்து தமிழர்களும் ஒன்றிணைந்து நிற்பது சிறப்பம்சம் ஆகும்.
அனந்தி சசிதரன் சிறப்பு பேச்சாளராக பங்கேற்றிருந்தார்.
|
|
|
இன்று பிரசாரத்திற்கு கடைசி நாள் - நல்லூரில் பொது வேட்பாளரின் கூட்டம்!
[Wednesday 2024-09-18 05:00]
|
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான பிரசார நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவடையவுள்ள நிலையில், கொழும்பு, நுகேகொடை மற்றும் பிலியந்தலை ஆகிய பகுதிகளில் பிரதான வேட்பாளர்களின் இறுதி பிரசாரக் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
|
|
|
அனுரவின் ஆட்சி காணி, பொலிஸ் அதிகாரங்களை வழங்காது!
[Wednesday 2024-09-18 05:00]
|
இலங்கைக் குடியரசு பௌத்த மதத்திற்கு முதன்மையான இடத்தை வழங்கும் என்று கூறுகின்ற அரசியலமைப்பின் 9 ஆவது சரத்தை எதிர்கால தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் மாற்றாது என தேசிய மக்கள் சக்தி உறுதியளித்துள்ளது.
|
|
|
ஜெனிவா தீர்மானம் ஒரு வருடத்துக்கு காலநீடிப்பு! - அனுசரணை நாடுகளின் வரைவு கூறுகிறது.
[Wednesday 2024-09-18 05:00]
|
இலங்கை தொடர்பில் பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகளால் தயாரிக்கப்பட்டு, எதிர்வரும் 19 ஆம் திகதி உறுப்புநாடுகளின் பங்கேற்புடன் ஆராயப்படவுள்ள முதல் வரைபில், இலங்கை தொடர்பில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட 51/1 தீர்மானத்தின் ஊடாக ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு வழங்கப்பட்ட ஆணையை நீடிக்குமாறு ஐ.நா மனித உரிமைகள் பேரவையிடம் கோரப்பட்டுள்ளது.
|
|
|
கலைக்கப்படுகிறதா நாடாளுமன்றம்?
[Wednesday 2024-09-18 05:00]
|
இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவுசெய்யும் தேர்தல் எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெற உள்ள நிலையில், இன்று நள்ளிரவுடன் பிரச்சார நடவடிக்கைகள் நிறைவடைவதால் பிரதான வேட்பாளர்கள் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
|
|
|
30 இலட்சம் ரூபா கைமாறியது - விலைபோன தலைவர்கள்!
[Wednesday 2024-09-18 05:00]
|
தமிழரசு கட்சியினுடைய தலைவர் மாவை சேனாதிராஜா அவருடைய மகன் கலைஅமுதன் தென்னிந்திய நகைச்சுவை நடிகர் வடிவேல் பாணில் செயல்படுவதாக அடக்கு முறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் தம்பி தம்பிராஜா குற்றச்சாட்டினார்.
யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
|
|
|
பொதுவேட்பாளரை ஆதரித்து தமிழரசின் வட்டுக்கோட்டை கிளையின் பொதுக்கூட்டம்!
[Wednesday 2024-09-18 05:00]
|
இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதிக்கிளையின் ஏற்பாட்டில், தமிழ் பொது வேட்பாளரது மாபெரும் பரப்புரை கூட்டமானது நேற்று மூளாய் வேரம் பகுதியில் இடம்பெற்றது.
|
|
|
அனுரவும் ரணிலும் தோற்கடிக்க சூழ்ச்சி! - சஜித் புலம்பல்.
[Wednesday 2024-09-18 05:00]
|
ரணில் விக்கிரமசிங்கவும், அனுரகுமார திசாநாயக்கவும் தன்னை தோற்கடிக்கும் சதியில் ஈடுபட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கேகாலையில் இடம்பெற்ற மக்கள் பேரணியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
|
|
|
ரணில் பக்கம் சாய்ந்தாரா சார்ள்ஸ்?- மக்களின் முடிவே தனது முடிவு என்கிறார்.
[Wednesday 2024-09-18 05:00]
|
மன்னார் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைக்காக வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனை அவரது இல்லத்தில் நேற்று சந்தித்திருந்தார்.
|
|
|
தனிவிரல் எழுச்சிக்கு தமிழர்கள் அடம்பன் கொடியாய் திரண்டிட வேண்டும்!
[Tuesday 2024-09-17 17:00]
|
"நமக்காக நாமே" என்று வேற்றுமையில் ஒற்றுமை கண்டு இனமாக ஓரணி நின்று, தனிவிரல் எழுச்சிக்கு தமிழர்கள் அடம்பன் கொடியாய் திரண்டிட வேண்டும் என குரலற்றவர்களின் குரல் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
|
|
|
திலீபனின் தியாக ஒளி சுடர் அரசியல் இருளகற்றும்!
[Tuesday 2024-09-17 17:00]
|
பச்சோந்தி அரசியலில் குளிர்காய்வோர், வல்லாதிக்க அரசியலுக்குள் எம்மை இழுத்து செல்வோர் தோல்வி காண்பர். அதுவரை எமது இலக்கு நோக்கி இலட்சியத்தோடு பயணிப்போம் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.
|
|
|
தரம் 5 புலமைப்பரிசில் வினாத்தாள் கசிந்தது- 6 பேர் கைது!
[Tuesday 2024-09-17 17:00]
|
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் வினாத்தாளை கையடக்கத் தொலைபேசி மூலம் பகிர்ந்ததாக கூறப்படும் அனுராதபுரத்தில் உள்ள பரீட்சை நிலையமொன்றில் உள்ள பாடசாலை அதிபர் உட்பட 6 ஆசிரியர்கள் பரீட்சை திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
|
|
|
மூன்று பிரதான வேட்பாளர்களையும் அதிகாரப்பகிர்வு குறித்த வாக்குறுதியைக் கொடுக்க வைத்திருக்கிறோம்!
[Tuesday 2024-09-17 17:00]
|
இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் போட்டியிடும் மூன்று பிரதான வேட்பாளர்களையும் அதிகாரப்பகிர்வு குறித்த வாக்குறுதியைக் கொடுக்க வைத்திருக்கிறோம். எனவே மூவரில் எந்த வேட்பாளர் வென்றாலும், தீர்வினைப் பெற்றுக்கொடுப்பதை முன்னிறுத்திய நடவடிக்கைகளில் தமிழரசுக்கட்சி தொடர்ந்து ஈடுபடும் என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
|
|
|
ரணில் பக்கம் பாய்ந்தார் சசிகலா!
[Tuesday 2024-09-17 17:00]
|
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர்களான சசிகலா ரவிராஜ் மற்றும் கலைஅமுதன் சேனாதிராஜா ஆகியோர் யாழ் தேர்தல் பிரசாரத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து, வடமாகாண அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடினர் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
|
|
|
நாளை போராட்டத்தில் குதிக்கும் மருத்துவர்கள்!
[Tuesday 2024-09-17 17:00]
|
நாடளாவிய ரீதியிலுள்ள வைத்தியசாலைகளை இலக்கு வைத்து நாளை புதன்கிழமை தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
|
|
|
வாக்குப் பெட்டிகள் அனுப்பி வைப்பு!
[Tuesday 2024-09-17 17:00]
|
ஜனாதிபதித் தேர்தலில் வாக்குப் பெட்டிகளுக்கு பயன்படுத்தப்படவுள்ள அட்டைப் பெட்டிகள் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து தேர்தல் அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
|
|
|
நாளை நள்ளிரவுடன் பிரசாரங்கள் முடிவு!
[Tuesday 2024-09-17 17:00]
|
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அனைத்து தேர்தல் பிரச்சாரங்களும் புதன்கிழமை நள்ளிரவு 12.00 மணிக்கு பின்னர் முடிக்கப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
|
|
|
சம்மாந்துறையில் ஒருவர் சுட்டுக்கொலை!
[Tuesday 2024-09-17 17:00]
|
வீடொன்றில் ஏற்பட்ட துப்பாக்கி சூட்டில் இளம் குடும்பஸ்தர் மரணமடைந்த சம்பவம் ஒன்று சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.
|
|
|
புறாவினால் பதற்றமடைந்த அனுர!
[Tuesday 2024-09-17 17:00]
|
தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திஸாநாயக்கவினை புறா ஒன்றின் மூலம் பதற்றமடைய காரணமான இருவர் எச்சரிக்கை செய்யப்பட்டு சம்மாந்துறை பொலிஸாரினால் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
|
|
|
கிளிநொச்சியில் ஆயிரக்கணக்கில் அணிதிரண்ட மக்கள்!
[Tuesday 2024-09-17 05:00]
|
கிளிநொச்சியில் நேற்று நடந்த நமக்காக நாம் பொது வேட்பாளர் அரியநேத்திரனுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில், ஆயிரக்கணக்கான மக்கள் பெரும் எழுச்சியுடன் கலந்து கொண்டனர்.
|
|
|
யாழ்ப்பாணத்தில் பொது வேட்பாளருக்கு ஆதரவாக திரண்ட மக்கள் கூட்டம்!
[Tuesday 2024-09-17 05:00]
|
தமிழ்ப் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு ஆதரவாக தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட பரப்புரை பொதுக்கூட்டம் நேற்று மாலை 4.00 மணிக்கு இடம்பெற்றது.
|
|
|
இலட்சியத்துக்காக அணிதிரண்டுள்ள உங்களைப் போன்று என்னுடைய வாக்கினையும் அளிப்பேன்!
[Tuesday 2024-09-17 05:00]
|
தமிழின விடுதலைக்கான இலட்சியத்துக்கான பயணத்தில் அணிதிரண்டுள்ள பெருந்தொகையான உங்களைப்போன்று என்னுடைய வாக்கினையும் அளிப்பேன் என்ற உறுதிப்பாட்டுடன் தெரிவிக்கின்றேன் என்று இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா தெரிவித்தார்.
|
|
|
தேசியத் தலைவரின் மண்ணில் பொது வேட்பாளர்!
[Tuesday 2024-09-17 05:00]
|
தமிழ்ப் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் வடமராட்சிக்கு நேற்று சென்று, வல்வெட்டித்துறையில் தேசியத் தலைவரின் இல்லம் அமைந்திருந்த இடத்திற்கு சென்று பார்வையிட்டதுடன், அங்கு அமைக்கப்பட்டள்ள தியாகதீபம் திலீபன் நினைவுப் பந்தலில் மலர் தூவி வணக்கம் செலுத்தினார்.
|
|
|
சங்குக்கு வாக்களித்து எமது சங்கையை காப்பாற்றுவோம்!
[Tuesday 2024-09-17 05:00]
|
தமிழர்களாகிய நாம் அனைவரும் சங்குக்கு வாக்களித்து எமது சங்கையை காப்பாற்றுவோம் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் காரைதீவு பிரதேச தலைவரும், முன்னாள் தவிசாளருமான கலாநிதி கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தெரிவித்தார்.
|
|
|
தயார் நிலையில் முப்படைகள்!
[Tuesday 2024-09-17 05:00]
|
எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின் போது அவசரநிலை ஏற்பட்டால் துரித கதியில் செயற்பட முப்படைகளும் தயாராகியுள்ளன.
|
|
|
மந்துவில் படுகொலைகளின் 25ஆம் ஆண்டு நினைவேந்தல்!
[Tuesday 2024-09-17 05:00]
|
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு, மந்துவில் படுகொலையின் 25 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று முன்தினம் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டது.
|
|
|
தமிழர்களை ஏமாற்ற முடியாது என்பதை இந்தத் தேர்தலில் காண்பிக்க வேண்டும்!
[Tuesday 2024-09-17 05:00]
|
தமிழ் மக்கள் பொதுவேட்பாளருக்கு வாக்களிப்பதும், ஒற்றையாட்சியை வலியுறுத்தும் சிங்கள வேட்பாளருக்கு வாக்களிப்பதும் ஒன்றுதான். பொதுவேட்பாளருக்கு வாக்களிக்கும் பட்சத்தில், தேர்தலுக்குப் பின்னர் தமிழ்த்தேசிய அரசியலை ஒற்றையாட்சிக்குள் முடக்குவதற்கான சகல சதித்திட்டங்களும் முன்னெடுக்கப்படும் என எச்சரித்துள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், எனவே தமிழ்த்தேசியக் கொள்கைக்கு உண்மையாக இருப்பதற்கான வாய்ப்பு எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலைப் பகிஷ்கரிப்பதன் மூலமாக மாத்திரமே சாத்தியமாகும் எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.
|
|
|
|